• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

EPISODE 15(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kasthuri

மண்டலாதிபதி
Joined
Jul 6, 2018
Messages
200
Reaction score
332
Age
26
Location
chennai
“பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா பேசுறிங்க.. ஆமா பா.. நான் தான் அவன் பின்னாடி அலைஞ்சேன்.. ஆனா அவன ஏதோ பன்னிருகிங்க.. என்ன தான உங்க ஆள் வச்சி கொல்லனும் ..எல்லாம் தெரிஞ்சி ஏன் தப்பு பண்ணுரிங்க..” தங்கவேலு முன் யாரும் கை நீட்டி பேச மாட்டார்..முடியவும் முடியாது.. சத்யா கையை நீட்டி பேச..பொண்ணா கணவனா என்ற குழப்பத்தில் கணவனின் பக்கம் சென்ற சௌந்தர்யா.. அவள் அருகில் சென்று பளார் என்று கன்னத்தில் ஒரு அரை விட்டார்...

கன்னத்தை பிடித்துக்கொண்டு அவள் கண்கள் சிவக்க தாயை முறைத்தாள்.”என்ன டி..எவனும் உன் அப்பா முன்னாடி கை நீட்டி பேசமாட்டான்..நீ எவ்ளோ தைரியம் இருந்தா பேசுவ..”சொல்லிகொண்டே கை ஒங்க..சத்யா கோபத்தின் உச்சத்தையே அடைத்தாள்..

“என்ன அடிக்க போறியா.. உன் புருஷன பேசுனா கோவம் வருதுல ..அதே தான் .. கார்த்திக்க பத்தி பேசுன எனக்கும் கோபம் வரும்.. அமைதியா இருமா.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”அவள் தாயை அதட்டிவிட்டு தங்கவேலு பக்கம் திரும்பினாள் .

“கார்த்திக்க என்ன பண்ணுனிங்க சொல்லுங்க...”அவள் அழாத குறையாய் கேட்டாள்..

“என்னமா இவ்ளோ நேரம் ரவுடி மாதிர அப்பா அம்மாவை மெரட்டிட்டு இப்போ கண்ணீர் வடிகிற..”அவர் இன்னும் நக்கலாய் கேட்க..

“கொலையோ தற்கொலையோ செய்றது பாவம் ..அதான் அத பண்ணிட கூடாதுன்னு அழுறேன்...”அவள் இன்னும் அழுத்தமாய் கூற மீண்டும் ஒரு அரை விழுந்தது.. சௌந்தர்யா அல்ல தங்கவேலு விட்டார்...

“ப்பா.. அடிச்சி கொன்னாலும் நான் கார்த்திக் பொண்டாட்டியா தான் சாவேன்.. உங்க பொண்ணா இல்ல..”

அவளின் உறுதியை அவர் அறிந்தவர் தான் ..சொல்வதை செய்யும் துணிவு அதிகம் அவளுக்கு என்பதை நினைவில் கொண்டவர் சற்று அமைதியானார்..ஆனால் அவள் விடுவதாய் இல்லை..

“கார்திக்க என்ன பா பன்னுனிங்க..”அவள் கிட்டதட்ட கெஞ்சியே விட்டாள்.. சற்று சாந்தம் அடைந்தவர்..ஏதும் நடவாதது போல முகத்தை வைத்துக்கொண்டு..வெளியே செல்ல எழுந்தார்..

சோபாவில் இருந்து எழுந்தவள்.. கத்தினால்...”சொல்லுங்க பா..எங்க என் கார்த்திக்.”

அவள் சொல்லில் சிரித்தவர்..”ஓ.எம்.ஆர். ரோட்ல அனாதையா கிடக்கறான்.. அவன் அம்மாவை பொறுகிக்க சொல்லு..போ..”என்றவர் வாசலுக்கு செல்ல..”வீட்டு வாசல தாண்டுன.. அவன் உடம்புல இருக்ற உசுரும் உடனே போயிரும்.. “அவளை மிரட்டியவர் சௌந்தர்யவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றுவிட்டார்..

அவள் தந்தையின் வார்த்தையில் அவளுக்கு என்ன ஆனது என்பது அவளுக்கே தெரியவில்லை.. தன் வாழ்வின் மீதி அவனே என்ற நினைப்பில் வாழ்ந்தவள் அவனுக்கு ஒன்று என தெரிந்தும் அவளால் செல்ல முடியவில்லை என்பதை உணரந்தவள் தன்னையே வெறுத்தாள்..

”உனக்கு ஏதும் ஆகும்னு சத்தியமா நான் நினைகள டா.. நானே உனக்கு எமனாயிட்டேனே டா..”அவள் தனியே புலம்ப.. சௌந்தர்யா வேறுபக்கம் நின்று கத்திகொண்டிருந்தால்...

தாயின் பேசும் இம்சையாய் இருக்க..”அமைதியா இரு..இல்ல உன்ன கொன்னுட்டு நானும் செத்துருவேன்” என்றவள் பக்கத்தில் இருந்த பிளவர் வேசை உடைத்து கண்ணாடியை கையில் எடுத்துக்கொண்டாள்..

சௌந்தர்யா வாயடைத்து நின்றாள் தன் மகளின் ருத்ரத்தை கண்டு..கையில் இருந்த கண்ணாடியை வீசி எரிந்து அழுதுகொண்டே அறையை நோக்கி ஓடினாள்..

என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டே அறை முழுவதும் நடந்தவள்..துருவிர்க்கு அழைத்தாள்..

அவனோ கலையிலே வேலைக்கு செல்ல..கார்த்திக் வராததை பார்த்து அவனுக்கு அழைத்து அழைத்து ஒய்ந்தான்..சத்யாவும் சரியாக அழைக்க..

“சொல்லு சத்யா ..அந்த ராஸ்கல் உன்கூட தான் இருக்கான..காலைல இருந்து கால் பண்றேன் எடுக்கவே இல்லை...”

“...”அமைதியாய் அவள் இருக்க..

“சத்யா...என்னாச்சு..”

“..”மீண்டும் அமைதியை தர..

“சொல்லு மா என்னாச்சு..”

“துருவ்.. கார்த்திக்கு ஏதோ ஆச்சு துருவ்.. அவன் ஓ.எம்.ஆர் ல இருக்கான்.. அவனுக்கு என்ன ஆச்சின்னு கூட எனக்கு தெரில.. “அழுதுகொண்டே அவள் கூற..

துருவிற்கு புரிந்தது.. அவள் தந்தை ஏதோ செய்திருக்கார் என்பது..”சரி அழாத சத்யா நான் போய் பாக்றேன்..”

அழைப்பை துண்டித்து அவன் ஓடினான்..அவன் செல்வதுக்குள் யாரோ அம்புலன்ஸ்க்கு அழைத்து ஜி.எட்ச்க்கு அனுப்பி உள்ளனர் என்பதை தெரிந்தவன்...மீண்டும் பறந்தான் இந்திரா காந்தி ஹாஸ்பிடல்க்கு ..அவனை அவசர பகுதியில் சேத்திருப்பதாக அங்கு கூற அவன் வேறு வழி இன்றி காத்திருந்தான்..

காவ்யா தற்செயலாக அவனுக்கு அழைக்க அவன் குரலில் இருந்த தடுமாற்றத்தை உணர்ந்தவள்..

“என்ன மாமா..என்னாச்சு.. பேச்சே சரில்ல..”

“கார்த்திக்கு..கார்த்திக்கு..”

“அண்ணாக்கு என்னாச்சு சொல்லு..”

“அக்சிடென்ட் மா.. இந்திரா காந்தி ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் ...எதுமே சொல்ல மாட்டுகாங்க ..அவன் மூஞ்சிய கூட நான் இன்னும் பாக்கல..வந்து ரொம்ப நேரம் ஆகுது...”உயிர் நண்பனின் நிலை குறித்து வருத்தமாய் அழாத குறைக்கு பேசியவனின் அருகில் இருந்தே ஆகா வேண்டும் என்று எண்ணியவள். வேலையிலிருந்து லீவ் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிட்டாள்..

காவ்யா துருவ்..இருவரும் நிற்க.. டாக்டரும் நர்சும் உள்ளே செல்லவும் வெளியே செல்லவுமாக இருக்க.. யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை..

துருவ் போனை வாங்கி துருவின் மேனேஜருக்கு அழைத்தவள்..

“சசி அண்ணா.. நான் காவ்யா..”

“சொல்லு மா.. துருவ் வந்தான் ஆனா எப்போ போனானே தெரில.. என்னாச்சு மா..”

அவள் விவரம் அனைத்தையும் கூறினாள்..

“என்ன மா.. ஏதும் உதவி பண்ணனுமா ..”

“ஆமா ணா.. கார்த்திக் அண்ணா வீட்டுக்கு கூப்ட்டு..அவங்களுக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு..வெளியூர் போகணும்..ரெண்டு வாரம் ஆகும்னு சொல்லி வைங்க..ட்ரெஸ் துருவ் வந்து வாங்கிபான்னு சமாளிச்சு வைங்கணா ப்ளீஸ்.. அம்மா பயந்தா அவங்களுக்கு பி.பி. ஏறிடும்..”

அவனுக்கும் அது சரியென பட..”சரி மா.நானே போய் கூட வாங்கிட்டு வரேன்..”

அழைப்பை துண்டித்து துருவின் அருகில் ஆறுதலாய் அமர்ந்தாள் காவ்யா.....

“அண்ணாக்கு ஒன்னும் ஆகாது மா.. நாம பாத்துக்கலாம்..சரியா..”அவனின் கைகளை கோர்த்துக்கொண்டு..ஆறுதலாய் இருந்தாள்..அவனுக்கும் அது தேவையாக இருந்தது..

எல்லாம் முடிந்து டாக்டர் வர.. இருவரும் படபடுத்த படி கேட்டனர்..

“உயிருக்கு ஒன்னும் இல்ல ..ஆனா கால்ல நல்லா அடிபட்டு பிராக்சர் ஆச்சு.. ஒழுங்கா நடக்க ஒரு மாசம் மேல ஆகும்..”

“வேணும்னா ஒரு பிரைவேட்டா ஒரு ஆர்த்தோ கிட்ட போய் பாருங்க..சீக்ரம் நடக்க வைக்கலாம்..இங்க எப்டி ஆனாலும் ஒன் மன்த் ஆகிடும்..” டாக்டர் செல்ல

இருவரும் பேச்சின்றி தவித்தனர்.. இருவரும் என்ன செய்ய என்று தெரியாத நிலையில் இருந்தனர்..

காவ்யாவிற்கும் சரி துருவிர்க்கும் டாக்டர் நண்பர்கள் இல்லை.. எதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருந்த காவ்யாவிற்கு யோசனை தோன்ற அவள் துருவை நோக்கினாள்..

“மாமா ..உனக்கு இது ஓகேவானு தெரில.. அண்ணா வ சீக்ரம் சரிபண்ண வேற வழி தெரில “என்றவள் அவனின் போனில் பிளாக் லிஸ்டில் இருந்த எண்ணிற்கு அழைத்தாள்..

............................................

அன்று சாஷினியை காண அவளின் மணாளன் வந்தும் அவளால் சந்திக்க முடியவில்லை.. அவள் அவசர அழைப்பினால் பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு ஒரு சிகிச்சைக்காக சென்றிருபதாக சொல்ல அவனும் அசராமல் அங்கு சென்றான்.. அவன் செல்ல அப்போதுதான் அவளும் அறுவை சிகிச்சைக்கு கிளம்பிக்கொண்டிருதால் ... அவனை பார்த்தவள் அவள் அருகில் வந்தாள் .

“ஏதும் முக்கியமான விஷயமா..இவ்ளோ தூரம் வந்துருகிங்க..”

அவளுக்கு ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வர அதை ஏற்காமல் அவனை பார்த்து கேட்டாள்..

“அதுலாம் ஒன்னும் இல்ல.. சும்மா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போலாம்னு தான்..”

மீண்டும் மீண்டும் அழைப்பு வர..அழைப்பை ஏற்க சென்றவளை தடுத்தது அந்த மருத்துவமனையின் சீப் டாக்டரின் குரல்..

“இந்தாங்க.. இது யாருன்னு தெரில.. கேட்டுட்டு ..இது மாதிரி எமெர்ஜென்சினு சொல்லுங்க..முடிச்சிட்டு வரேன்.. “என்றவள் போனை அவனின் கையில் திணித்து விட்டு சென்று விட்டாள்..போகும் வரை பார்த்தவன்..மீண்டும் வந்த அழைப்பில் உணர்வுக்கு வந்தவன்...பெயரை பார்த்தான்.. அவனுக்கு வந்தது கோபமா பொறாமையா இல்லை என்ன என்பது அவனுக்கே தெரியவில்லை...

கனவுகள் தொடரும்....................................................
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கஸ்தூரி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top