பிரெஞ்சு விண்டோ டைப் ரூம்..அதன் ஓரத்தில் பாத்ரூம் ...பெரிய மெத்தை இல்லை..அழகான காம்பக்ட் மெத்தை.. அருகில் குட்டி நைட் லாம்ப்.. மேலே இரண்டு ஆணிகள் போட்டோ இல்லாமல் இருந்தது..சுவரில் மத்த இடத்தில அழகான ப்ரேம் இருந்தது.. மயில் தொகை போல வரைந்திருந்தது அதில் ஆர்யனின் சிறு வயது முதல் இப்போது இருபது வரை உள்ள போட்டோ அழகான சைஸில் ஓட்ட பட்டிருந்தது...அதே போல இன்னொரு மயிலில் ஏதும் இல்லாமல் இருந்தது..
அவள் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி ஒரு கண்ணாடி கதவை திறந்து வெளியே சென்றாள்.. பெரிய பால்கனி குட்டி குட்டி செடிகளை ஓரமாய் தொட்டியில்இருந்தது.. இன்னொரு ஓரம் ரோஸ் செடி இருந்தது நடுவில் ஒரு ஊஞ்சலும்.. ஓரத்தில் ஒரு பீன் பேக்கும் இருந்தது..
“சச் எ ரொமாண்டிக் பிளேஸ்..”
அவள் சொல்லி முடிக்க ...”நம்ம ரூம் அப்டி தான இருக்கும் கண்மணி...”
அவன் பேச்சில் முகம் வெட்கத்தில் சிவந்தாலும் அதை காட்டிக்கொள்ள வில்லை..
உள்ளே அறைக்குள் வந்ததும்...அந்த ஆணியை பார்த்து அவனிடம் கேட்க வாயை திறக்கும் முன் அவனே கூறினான்.. “அது நம்ம கல்யாண போட்டோ போடறதுக்கு விட்டு வச்சிருக்கேன்.. அப்பறோம் இந்த மயில் ல உன்னோட போடோஸ் போடணும்.. கடைல குடுத்ருகேன் வந்தரும் கொஞ்ச நாள்ல..”
“நான் பேசவே தேவை இல்ல போல..”திரும்பி அவனை பார்த்து அவள் பேச அவனும் திரும்ப .. அவர்களின் நெருக்கத்தை உணர்ந்தாள்.. திக்குமுக்காடி தான் போனாள்..”நீ பேசவே வேணாம்..என் கூட இருந்த போதும்..இப்டி” என்ற அவர்களின் நெருக்கத்தை சுட்டி காட்டினான்..
அழகிய கண்கள் என்று சொல்வதை விட..கண்ணியமான கண்கள் என்று சொல்ல தோணியது அவளுக்கு... கூர் நாசி உதட்டிற்கும் கண்ணிற்கும் ஏத்தார் போல அமைந்திருந்தது.. அவனின் இதழ்கள் எந்த பழக்கமும் இல்லாததை தெரிவிக்க பிங்க் கலரில் இருக்க மெதுவாய் கண்களை உயர்த்தினாள்..அவனோ அவள் கண் போன திக்கை பார்த்து அவனின் இதழில் மெல்லிய சிரிப்பு வர அவள் விலகினாள்..
“தம்பி சாப்பாடு ரெடி ஆச்சு வரிங்களா ரெண்டு பெரும்..”என பாக்கியம் கேட்க...அந்த இடைஞ்சல் அவளுக்கு தேவையானதாக இருக்க அவள் முதல் ஆளாக வெளியே சென்றாள்..
“என்ன மா.. உங்க தம்பிக்கு தான் சாப்பாடா.. எனக்கு இல்லையா “..அவள் பக்கியத்தின் மேல் கை போட்டு கொண்டு கீழே இறங்கினாள்..
“உனக்கு இல்லாமலா கண்ணு..”
எல்லோருடனும் சகஜமாய் பழகுவது அவனை மேலும் கவர்ந்தது.. புது இடம் புது ஆட்கள் என்றுலாம் அவள் பார்கவில்லை.. சிக்கனை ஒரு புடி புடித்தாள்..
சாப்பிட்டுவிட்டு வெளியே உலாவி கொண்டிருந்தால்..அவளின் வீடு நியாபகம் சுத்தமாக மறந்தே விட்டாள்..
“லேட் ஆச்சு வீட்டுக்கு போனும்ல..”அவனை பார்த்து கேட்க..
“போய் ஆகணுமா கண்மணி” அவளின் அருகாமை சென்றான்..
அவள் விலகவும் இல்லை தோணவும் இல்லை..சரியா தப்பா என்று கூட தெரியவில்லை.. பதிலே இன்றி அமைதியாய் நின்றாள்..
அவள் விலகி இருந்திருந்தால் அவனும் விட்டுருபான்.. “சாஷினி..”
“சொல்லுங்க..”மெல்லிய குரல் வெளி வந்தது..”ஒரு டைம் பேரு சொல்லி கூப்டேன்..”
தலையை முடியாது என்பது போல இருபுறம் ஆடினாள் .. “அப்போ இன்னைக்கு இங்க தான் இருக்கனும் நான் கூட்டிட்டு போக மாட்டேன்..”
“இல்ல போகணும்.. “குரல் உள்ளிழுக்க அவனுக்குள் எதோ செய்ய தொடங்கியது..
“சாஷினி ..”
“வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..”தலையை நிமிர்த்தாமல் அவள் பதில் கூற.. அவன் கன்னத்தை ஏந்தினான்..
சில்லென இருந்த கைகளில் அவன் எந்த அவள் சிலிர்த்து தான் போனாள்...
“இங்க பாரு..”தாழ்த்திய கண்களை உயர்த்தினாள்..”உனக்கு ஏதும் புடிக்கலனா சொல்லிடு..லவ் இஸ் அபௌட் போத் ஆப் அஸ்..”
“ம்ம்...”அதுவே பதிலாய் அமைந்தது.. அவனின் குளிர்ந்த கரங்களும்..அவளின் கதகதப்பான முகமும் இருவருக்கும் இதமளித்தது..
“ஒரு தடவ பேரு சொல்லேன் ப்ளீஸ்..”
“மாட்டேன்..”என்றவள் கண்களை தாழ்த்த..
“என்னோட கண்ண பாரு சாஷினி.. எனக்காக ஒரு டைம் சொல்லேன்..”
அமைதியாய் இருந்தவள்.. சற்று யோசித்து..சொல்ல நினைத்து அவனை ஆழமாய் பார்த்தாள்..”ஆ.ர்.ய.ன் “ அவ்வளவுதான் ஒரு வெட்க சிரிப்போடு சொல்லி முடித்தவள் அவன் கையிலிருந்து விடுபட எண்ணி திரும்பினாள்..
அவன் தான் அவளை விடுவதாய் இல்லையே .. அவள் கையை பிடித்து இழுக்க..அவன் மேல் சாய போவதை உணர்ந்தவள்..அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்துக்கொண்டாள்...சற்று இடைவெளியே இருவருக்கும்..அவளின் இடையை சுற்றியவன் அவளை மேலும் இழுக்க அவன் பின்னேறினாள் ஆனாலும் ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை அவள் சுயம் இன்றி கை விட்டாள்.. அவன் கண்ணும் கண்ணும் பக்கத்தில் இருக்க ..கண்கள் காதலை மாறி மாறி பருகி கொண்டனர்..தடையாய் இருந்த அவளின் கைகள் தளருவதை உணர்ந்தவன் மெல்ல இழுத்தான் .. இதழ் பக்கம் அவனின் கண்கள் போவதை உணர்ந்தவள் மெல்ல கண்ணை இறுக மூடினாள்..
நீண்ட நேரம் நீடித்த அந்த முத்தத்தை இருவரும் அனுபவித்தனர்... நீண்ட மௌனமே நிலவியது.. சாஷினிக்கு அவனின் முகம் காணவே சங்கடமாய் இருந்தது...
“கிளம்பலாமா .. இல்ல இங்க இருக்கியா..”சற்று நக்கலாய் அவன் கேட்க..
“கல்யாணம் பண்ணிகோங்க இங்கேயே இருக்கேன்.. “ அவ்வளவு தான் சொன்னாள்.. அவனின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.. அவன் அதை எதிர் பார்க்கவும் இல்லை...
“சாஷினி .. “
“சொல்லுங்க ..”
“பேர் சொல்லியே கூப்டேன்..”
“ம்ஹும் ..மாட்டேன்..”
“ஏன் டி..”என்றவன் சற்று தயங்க..”டி சொல்லாம்ல..”
“ம்ம்...”
“ஏன் இப்டி ரெண்டு பேரும் ஒரு ஒரு வார்த்தையா பேசறோம்”
“தெரில...வாசுதேவ் மேனன் பேனஸ்ல அப்டி தான் இருப்போம்..”இருவரும் சிரிக்க.. காளியப்பன் வேலையை முடித்து வந்தான்..
“தம்பி கிளம்பறேன் ப்பா..எதுனாலும் கூப்டுங்க அம்மணி..”
“சரி தாத்தா..”அவர் செல்ல..அவள் பக்கம் அவன் திரும்ப
“எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் சாஷினி.. “
“இன்னைக்கு நாளும் ஒகே..”அவள் எதார்த்தமாய் கூற “அப்போ..அதுவும்.....”இழுத்தான்..
“ஐயோ ஆள விடுங்க.. கிளம்பலாம்..”
“சும்மா தான் மா சொன்னேன் ..”
“சரி சரி மன்னிச்சிட்டேன் ..”அவள் நக்கலாய் கூற..”அடிங்க..”அவன் துரத்துவது போல நடிக்க அவள் ஓடி விட்டாள்..”முயல் குட்டி கிட்ட சொல்லிட்டு வரேன் ..டிரஸ் மாத்திட்டு வாங்க..”தூரம் நின்று கத்தினாள்.
“ஹெல்ப் பண்ண வரலாம்ல சாஷினி..”
“ஹான் ..ஆசை தான்.. அம்மாகிட்ட பேசுங்க..இங்கேயே வந்துடறேன்..”
அவனும் ரெடி ஆகி வர.. இவளும் வந்துவிட கிளம்பினர்..
“சீக்ரமா வரேன் தாத்தா..பாக்கியம் அம்மா .. “
இருவரும் மனதார இருவரையும் வாழ்த்திவிட்டு உள்ளே சென்றனர்..
வீடு வரும் வரை தொன தொன என்றே பேசிவர அவனும் அமைதியாய் கேட்டுகொண்டான்..
வீட்டில் இறக்கி விட்டவன்..”உள்ளே வாங்க..” என்றழைக்க.. உள்ளே வந்தான்..சாஷினியின் முகத்தில் பொங்கி வழிந்த சந்தோஷத்திலே உணர்ந்துக்கொண்டார் கிருத்திகா..
“என்ன ப்பா..கல்யாணம் எப்ப வச்சிக்கலாம்..”நக்கலாய் கிருத்திகா கேட்க..
“நாளைக்கே ஆன்டி..”அவனும் விட்டு குடுக்காமல் பேச..”அட பாவிங்களா.நல்ல மாமியார் நல்ல மருமகன்...நான் போறேன்..”திரும்பியவளை நிறுத்தினான்..
கிருத்திகா ஜூஸ் எடுக்க செல்ல..
“சாஷினி..இணைக்கு ஒருநாள் உன் போன் என்கிட்டே இருக்கட்டுமா..”
“அது இருந்தும் ஒன்னு தான் இல்லனாலும் ஒன்னு தான்..நான் அம்மா போன் வச்சிருக்கேன்..எதாச்சும் எமேர்கேன்சி கால் வந்தா மட்டும் சொல்லூங்க ..”ஏன் எதற்கு என்று கேட்காமல் கையில் கொடுத்துவிட்டு அவள் மெல்லிய சிரிப்புடன் மாடியேறினாள் ...
அவனுக்கு புரிந்தது அவன் மேல் கொண்ட நம்பிக்கையின் அளவு..”கனவுகளில் இல்லாமல் என் நிஜத்திலும் அவள் வர போகிறாள்” என்பதை உள்ளுர அவனுக்குள் சொல்லிகொண்டான்..
கைபேசியை வாங்கியதன் காரணம் தெரிந்து அவளின் நம்பிக்கை நீளுமா...
கனவுகள் தொடரும்..........
அவள் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி ஒரு கண்ணாடி கதவை திறந்து வெளியே சென்றாள்.. பெரிய பால்கனி குட்டி குட்டி செடிகளை ஓரமாய் தொட்டியில்இருந்தது.. இன்னொரு ஓரம் ரோஸ் செடி இருந்தது நடுவில் ஒரு ஊஞ்சலும்.. ஓரத்தில் ஒரு பீன் பேக்கும் இருந்தது..
“சச் எ ரொமாண்டிக் பிளேஸ்..”
அவள் சொல்லி முடிக்க ...”நம்ம ரூம் அப்டி தான இருக்கும் கண்மணி...”
அவன் பேச்சில் முகம் வெட்கத்தில் சிவந்தாலும் அதை காட்டிக்கொள்ள வில்லை..
உள்ளே அறைக்குள் வந்ததும்...அந்த ஆணியை பார்த்து அவனிடம் கேட்க வாயை திறக்கும் முன் அவனே கூறினான்.. “அது நம்ம கல்யாண போட்டோ போடறதுக்கு விட்டு வச்சிருக்கேன்.. அப்பறோம் இந்த மயில் ல உன்னோட போடோஸ் போடணும்.. கடைல குடுத்ருகேன் வந்தரும் கொஞ்ச நாள்ல..”
“நான் பேசவே தேவை இல்ல போல..”திரும்பி அவனை பார்த்து அவள் பேச அவனும் திரும்ப .. அவர்களின் நெருக்கத்தை உணர்ந்தாள்.. திக்குமுக்காடி தான் போனாள்..”நீ பேசவே வேணாம்..என் கூட இருந்த போதும்..இப்டி” என்ற அவர்களின் நெருக்கத்தை சுட்டி காட்டினான்..
அழகிய கண்கள் என்று சொல்வதை விட..கண்ணியமான கண்கள் என்று சொல்ல தோணியது அவளுக்கு... கூர் நாசி உதட்டிற்கும் கண்ணிற்கும் ஏத்தார் போல அமைந்திருந்தது.. அவனின் இதழ்கள் எந்த பழக்கமும் இல்லாததை தெரிவிக்க பிங்க் கலரில் இருக்க மெதுவாய் கண்களை உயர்த்தினாள்..அவனோ அவள் கண் போன திக்கை பார்த்து அவனின் இதழில் மெல்லிய சிரிப்பு வர அவள் விலகினாள்..
“தம்பி சாப்பாடு ரெடி ஆச்சு வரிங்களா ரெண்டு பெரும்..”என பாக்கியம் கேட்க...அந்த இடைஞ்சல் அவளுக்கு தேவையானதாக இருக்க அவள் முதல் ஆளாக வெளியே சென்றாள்..
“என்ன மா.. உங்க தம்பிக்கு தான் சாப்பாடா.. எனக்கு இல்லையா “..அவள் பக்கியத்தின் மேல் கை போட்டு கொண்டு கீழே இறங்கினாள்..
“உனக்கு இல்லாமலா கண்ணு..”
எல்லோருடனும் சகஜமாய் பழகுவது அவனை மேலும் கவர்ந்தது.. புது இடம் புது ஆட்கள் என்றுலாம் அவள் பார்கவில்லை.. சிக்கனை ஒரு புடி புடித்தாள்..
சாப்பிட்டுவிட்டு வெளியே உலாவி கொண்டிருந்தால்..அவளின் வீடு நியாபகம் சுத்தமாக மறந்தே விட்டாள்..
“லேட் ஆச்சு வீட்டுக்கு போனும்ல..”அவனை பார்த்து கேட்க..
“போய் ஆகணுமா கண்மணி” அவளின் அருகாமை சென்றான்..
அவள் விலகவும் இல்லை தோணவும் இல்லை..சரியா தப்பா என்று கூட தெரியவில்லை.. பதிலே இன்றி அமைதியாய் நின்றாள்..
அவள் விலகி இருந்திருந்தால் அவனும் விட்டுருபான்.. “சாஷினி..”
“சொல்லுங்க..”மெல்லிய குரல் வெளி வந்தது..”ஒரு டைம் பேரு சொல்லி கூப்டேன்..”
தலையை முடியாது என்பது போல இருபுறம் ஆடினாள் .. “அப்போ இன்னைக்கு இங்க தான் இருக்கனும் நான் கூட்டிட்டு போக மாட்டேன்..”
“இல்ல போகணும்.. “குரல் உள்ளிழுக்க அவனுக்குள் எதோ செய்ய தொடங்கியது..
“சாஷினி ..”
“வீட்டுக்கு கூட்டிட்டு போங்க..”தலையை நிமிர்த்தாமல் அவள் பதில் கூற.. அவன் கன்னத்தை ஏந்தினான்..
சில்லென இருந்த கைகளில் அவன் எந்த அவள் சிலிர்த்து தான் போனாள்...
“இங்க பாரு..”தாழ்த்திய கண்களை உயர்த்தினாள்..”உனக்கு ஏதும் புடிக்கலனா சொல்லிடு..லவ் இஸ் அபௌட் போத் ஆப் அஸ்..”
“ம்ம்...”அதுவே பதிலாய் அமைந்தது.. அவனின் குளிர்ந்த கரங்களும்..அவளின் கதகதப்பான முகமும் இருவருக்கும் இதமளித்தது..
“ஒரு தடவ பேரு சொல்லேன் ப்ளீஸ்..”
“மாட்டேன்..”என்றவள் கண்களை தாழ்த்த..
“என்னோட கண்ண பாரு சாஷினி.. எனக்காக ஒரு டைம் சொல்லேன்..”
அமைதியாய் இருந்தவள்.. சற்று யோசித்து..சொல்ல நினைத்து அவனை ஆழமாய் பார்த்தாள்..”ஆ.ர்.ய.ன் “ அவ்வளவுதான் ஒரு வெட்க சிரிப்போடு சொல்லி முடித்தவள் அவன் கையிலிருந்து விடுபட எண்ணி திரும்பினாள்..
அவன் தான் அவளை விடுவதாய் இல்லையே .. அவள் கையை பிடித்து இழுக்க..அவன் மேல் சாய போவதை உணர்ந்தவள்..அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்துக்கொண்டாள்...சற்று இடைவெளியே இருவருக்கும்..அவளின் இடையை சுற்றியவன் அவளை மேலும் இழுக்க அவன் பின்னேறினாள் ஆனாலும் ஒரு கட்டத்தில் அந்த முயற்சியை அவள் சுயம் இன்றி கை விட்டாள்.. அவன் கண்ணும் கண்ணும் பக்கத்தில் இருக்க ..கண்கள் காதலை மாறி மாறி பருகி கொண்டனர்..தடையாய் இருந்த அவளின் கைகள் தளருவதை உணர்ந்தவன் மெல்ல இழுத்தான் .. இதழ் பக்கம் அவனின் கண்கள் போவதை உணர்ந்தவள் மெல்ல கண்ணை இறுக மூடினாள்..
நீண்ட நேரம் நீடித்த அந்த முத்தத்தை இருவரும் அனுபவித்தனர்... நீண்ட மௌனமே நிலவியது.. சாஷினிக்கு அவனின் முகம் காணவே சங்கடமாய் இருந்தது...
“கிளம்பலாமா .. இல்ல இங்க இருக்கியா..”சற்று நக்கலாய் அவன் கேட்க..
“கல்யாணம் பண்ணிகோங்க இங்கேயே இருக்கேன்.. “ அவ்வளவு தான் சொன்னாள்.. அவனின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.. அவன் அதை எதிர் பார்க்கவும் இல்லை...
“சாஷினி .. “
“சொல்லுங்க ..”
“பேர் சொல்லியே கூப்டேன்..”
“ம்ஹும் ..மாட்டேன்..”
“ஏன் டி..”என்றவன் சற்று தயங்க..”டி சொல்லாம்ல..”
“ம்ம்...”
“ஏன் இப்டி ரெண்டு பேரும் ஒரு ஒரு வார்த்தையா பேசறோம்”
“தெரில...வாசுதேவ் மேனன் பேனஸ்ல அப்டி தான் இருப்போம்..”இருவரும் சிரிக்க.. காளியப்பன் வேலையை முடித்து வந்தான்..
“தம்பி கிளம்பறேன் ப்பா..எதுனாலும் கூப்டுங்க அம்மணி..”
“சரி தாத்தா..”அவர் செல்ல..அவள் பக்கம் அவன் திரும்ப
“எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் சாஷினி.. “
“இன்னைக்கு நாளும் ஒகே..”அவள் எதார்த்தமாய் கூற “அப்போ..அதுவும்.....”இழுத்தான்..
“ஐயோ ஆள விடுங்க.. கிளம்பலாம்..”
“சும்மா தான் மா சொன்னேன் ..”
“சரி சரி மன்னிச்சிட்டேன் ..”அவள் நக்கலாய் கூற..”அடிங்க..”அவன் துரத்துவது போல நடிக்க அவள் ஓடி விட்டாள்..”முயல் குட்டி கிட்ட சொல்லிட்டு வரேன் ..டிரஸ் மாத்திட்டு வாங்க..”தூரம் நின்று கத்தினாள்.
“ஹெல்ப் பண்ண வரலாம்ல சாஷினி..”
“ஹான் ..ஆசை தான்.. அம்மாகிட்ட பேசுங்க..இங்கேயே வந்துடறேன்..”
அவனும் ரெடி ஆகி வர.. இவளும் வந்துவிட கிளம்பினர்..
“சீக்ரமா வரேன் தாத்தா..பாக்கியம் அம்மா .. “
இருவரும் மனதார இருவரையும் வாழ்த்திவிட்டு உள்ளே சென்றனர்..
வீடு வரும் வரை தொன தொன என்றே பேசிவர அவனும் அமைதியாய் கேட்டுகொண்டான்..
வீட்டில் இறக்கி விட்டவன்..”உள்ளே வாங்க..” என்றழைக்க.. உள்ளே வந்தான்..சாஷினியின் முகத்தில் பொங்கி வழிந்த சந்தோஷத்திலே உணர்ந்துக்கொண்டார் கிருத்திகா..
“என்ன ப்பா..கல்யாணம் எப்ப வச்சிக்கலாம்..”நக்கலாய் கிருத்திகா கேட்க..
“நாளைக்கே ஆன்டி..”அவனும் விட்டு குடுக்காமல் பேச..”அட பாவிங்களா.நல்ல மாமியார் நல்ல மருமகன்...நான் போறேன்..”திரும்பியவளை நிறுத்தினான்..
கிருத்திகா ஜூஸ் எடுக்க செல்ல..
“சாஷினி..இணைக்கு ஒருநாள் உன் போன் என்கிட்டே இருக்கட்டுமா..”
“அது இருந்தும் ஒன்னு தான் இல்லனாலும் ஒன்னு தான்..நான் அம்மா போன் வச்சிருக்கேன்..எதாச்சும் எமேர்கேன்சி கால் வந்தா மட்டும் சொல்லூங்க ..”ஏன் எதற்கு என்று கேட்காமல் கையில் கொடுத்துவிட்டு அவள் மெல்லிய சிரிப்புடன் மாடியேறினாள் ...
அவனுக்கு புரிந்தது அவன் மேல் கொண்ட நம்பிக்கையின் அளவு..”கனவுகளில் இல்லாமல் என் நிஜத்திலும் அவள் வர போகிறாள்” என்பதை உள்ளுர அவனுக்குள் சொல்லிகொண்டான்..
கைபேசியை வாங்கியதன் காரணம் தெரிந்து அவளின் நம்பிக்கை நீளுமா...
கனவுகள் தொடரும்..........