Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
15 வருடங்களுக்கு பிறகு...
9
8
7
6
நேரம் குறைந்து கொண்டே வர நிற்காமல் ஓடினாள்.
5 விநாடிகள்.
"ஏய் தமிழச்சி... அதை தூக்கி போடு"
4 "ஏய்... தூக்கி போடிறிறிறிறி"
3 விநாடிகள்தான். கரத்திலிருந்த பாமை கைப்பற்றி தூக்கி வீசினான்.
அது வானுயர பறந்து சென்று கடல் நீரில் வீழ்ந்து வெடிக்கவும், அலறியவள் படுக்கையில் இருந்து சுருண்டுவிழப் பார்த்த போது கெட்டியாய் இரும்பினை ஒத்த ஒரு கரம் அவளை விழாமல் தாங்கிக் கொண்டது.
பதட்டத்தோடு விழித்து பார்க்க அவன் உறக்கத்திலேயே அவளை நெருக்கமாய் இழுத்து அணைத்தவன் "கண்டதை நினைக்காம தூங்குடி... " என்றான்.
அவள் மெல்ல அந்த மோசமான நினைவுகளிலிருந்து மீண்டவள், அவன் புறம் திரும்பி படுத்தாள்.
அதற்குள்ளாக மீண்டும் அவன் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றிருந்தான்.
எத்தனை அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவளை விழ விடாமல் தாங்கிக் கொள்வது, இத்தனை வருடக் காலமாய் அவனுக்கு பழகிய விஷயமாய் மாறியிருந்தது.
அதுவே அவனின் ஆழமான காதலுக்கும் எடுத்துக்காட்டு.
அன்று மட்டும் தான் பாம் வெடித்து இறந்து போயிருந்தால்...
இப்படியொரு வாழ்க்கையை வாழமுடியாத துர்பாக்கியசாலியாய் இறந்து போயிருப்பேனே என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் விழியின் முன்னே அதே கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த அவன் முகம். அவனின் மீசை முடியில் எட்டிப் பார்க்கும் அந்த நரையும் கூட அவனின்
கம்பீரத்தை பெருக்கியதென்றே சொல்ல வேண்டும்.
அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் பல நூறு வருடகாலங்கள் கூட சலிக்காமல் அவனுடன் வாழலாம்.
இந்த எண்ணங்களை சுமந்தபடி உறக்கம் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.
வீரேந்திரன் ஐந்து வருடங்களுக்கு முன்பு கமிஷனராய் பதிவு உயர்வு பெற்றிருந்தான்.
அதே சமயம் தமிழச்சியின் பத்திரிக்கையும் நல்ல வளர்ச்சி பெற்று அவளுக்கென்ற சிறப்பான அங்கிகாரத்தை பெற்று தந்திருந்தது.
ஆதியின் பத்திரிக்கையும் அந்தளவுக்கு வளர்ச்சியை பெற்ற போது இரு தோழிகளும் சேர்ந்து தங்கள் பத்திரிக்கைகளை இணைத்து வீரதமிழச்சி என்று ஒரே பத்திரிக்கையாய் மாற்றி அதனை நிர்வாகம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களின் நம்பகமான பத்திரிக்கையாய் வீரதமிழச்சி வாரஇதழ் மாறியிருந்தது.
இரு தோழிகளுக்கும் அது பேறும் புகழையும் அளவில்லமால் பெற்று தந்திருந்தது.
அதே சமயம் ராஜசிம்மன் அரண்மனையை செந்தமிழ் தொல்பொருள்துறைக்கு அளித்ததன் விளைவாக அது நம் தமிழனின் கௌரவத்தையும் அவனின் கட்டிட கலையின் திறமையையும் பறைசாற்றும் வண்ணம் இன்றளவிலும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது.
நம் நாட்டு மக்களும் பல வெளிநாட்டு பயணிகளும் சிம்மவாசலில் அமைந்துள்ள நம் பாரம்பரிய அரண்மனையை தினமும் பார்வையிட்டு பெருமிதப்பட்டு கொண்டிருந்தனர்.
*********
விடியலை தொட்ட அந்த நாளில் நேரம் கடந்து கொண்டே போனது.
அலறிய அலாரத்தை அடக்கிவிட்டு விஷ்வா உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆதி அவன் போர்வையை இழுத்துவிட்டு "எழுந்திருடா" என்று சத்தமாய் கத்தவும் "லீவு நாளில் கூட ஏன்டி இப்படி டார்ச்சர் பன்ற ?" என்று சொல்லியவன் மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டான்.
"லீவா.. டே இன்னைக்கு ஸ்கூலுக்கு போகனும்.. ஓபன் டே" என்றாள்.
விஷ்வா அதிர்ந்தபடி விழித்து பார்த்தவன் முகத்தை பரிதபமாய் மாற்றிக் கொண்டு, "ப்ளீஸ்டி... நீயே போயிட்டு வந்துடிறியா..." என்று கேட்டான்.
"அதெல்லாம் முடியாது... என்னை தனியா போய் திட்டு வாங்க சொல்றியா... நெவர்" என்றாள்.
"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டி... இந்த ஒரே தடவை விட்டிறேன்" என்று கெஞ்சலாய் பார்த்தவனை மிரட்டலாய் பார்த்தாள்.
அந்த பார்வைக்கு சரணடைந்தவன்
"சரி சரி... முறைக்காதே வர்றேன்" என்று விஷ்வா சொல்ல "சீக்கிரம்" என்றவள், உடனே திரும்பி விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.
'இரண்டு மூணு வைச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கேன்... ஒண்ணே ஒண்ணு வைச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே' என்று புலம்பியபடியே புறப்படத் தயாரானான்.
அந்த உயரமான பள்ளிக்கட்டிடத்தின் முன்னே நின்ற காரின் பின் இருக்கையின் கதவை திறந்து ஆதி வெளியே வர, விஷ்வா வாகன நிறுத்தம் நோக்கி காரை நகர்த்தி சென்று நிறுத்தினான்.
காட்டன் புடவையில் கம்பீரமாய் ஆதி உள்ளே சென்று கொண்டிருக்க, விஷ்வா தன் மகனை திரும்பி பார்த்து "விக்ரமா... இந்த தடவை என்னெல்லாம் சேட்டை பண்ணி வைச்சிருக்க" என்று
தன்னுடைய தோற்ற சாயலிலயே வசீகரமாய் நின்றிருந்த தன் மகன் விக்கிரமாதித்தியனை கேட்டான்.
"இல்லப்பா... நான் இந்த தடவை எந்த சேட்டையும் பண்ணல... வேண்ணா என் ப்ரண்ட்டு சிம்மாவை கேட்டுப் பாருங்க"
"அவன் அப்படியே உன்னை விட்டுக் கொடுத்திட்டாலும்"
இப்படியே பேசிக் கொண்டபடி
எட்டாம் வகுப்பு ஏ என்றிருந்த வகுப்பறையை வாசலை இருவரும் அடைந்திருந்தனர்.
ஏற்கனவே ஆதி அவனின் வகுப்பாசிரியை முன்பு அமர்ந்திருந்தாள். அவர் கொடுத்த அந்த அட்டையை பொறுமையாய் பிரித்து அவள் பார்த்திருக்க, ஆதித்தியன் முகத்திலோ அச்சத்தின் சாயல்.
ஆதி தயங்கி நின்ற தன் கணவனை உள்ளே அழைத்தாள்.
விக்ரமை பள்ளியில் சேர்த்த நாள் முதற் கொண்டு அவனை கடிந்து கொள்ளாத ஆசிரியர்களே கிடையாது.
அவன் செய்த சேட்டைகளில் வேலையை விட்டுச் சென்ற ஆசிரியர்கள் கூட உண்டு.
அத்தனை சேட்டைக்காரன்!
விக்ரம் பயங்கொள்ளவது ஆதியை பார்த்தால் மட்டும்தான். அவள் கிடைக்கும் ஆயுதத்தில் எல்லாம் விரட்டி விரட்டி அடித்து பார்த்துவிட்டாள்.
ஆனால் அடி வாங்கிய அடுத்த நொடியே அவற்றை எல்லாம் துடைத்துபோட்டுவிட்டு தன் லீலைகளை தொடங்கவிடுவான்.
இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில்...
நினைக்கும் போதே உள்ளம் பதறும் அவளுக்கு !
அதற்கு காரணம் ஆதி செல்லம்மாவிற்கு ஒரே மகள். விஷ்வாவும் சாரதாவிற்கு ஒரே மகன். பாட்டிகள் இருவரின் படுச்செல்லம். ஒற்றை பேரன் வேறு.
அவனை சமளிக்கவே ஆதிக்கு நேரம் சரியாய் இருக்க இன்னொரு குழந்தையா?
கனவிலும் அப்படி ஒன்றை அவள் எண்ணவும் தயாராக இல்லை.
அவனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கிப் பார்த்தான் விஷ்வா.
வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். அது ஒண்ணும் புதிய செய்தி அல்ல. படிப்பில் அவன் அதிபுத்திசாலிதான்.
விக்ரமின் ஆசிரியர் அவர்கள் இருவரை நோக்கி தன் கதாக.காலட்சபத்தை ஆரம்பித்தார்.
"மிஸ்டர் & மிஸஸ். விஷ்வா... சொல்றேனே தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க சன் ரொம்ப ரொம்ப நாட்டி... எந்த டீச்சரையும் க்ளாஸ் எடுக்கவே விடாம சதா கமென்ட் பாஸ் பன்றான்... இட்ஸ் ஸோ இரிடேட்டிங்... எல்லா சப்ஜக்ட் டீச்சர்ஸும் இதே கம்பிளைன்ட்தான்... எவ்வளவோ வார்ன் பண்ணியாச்சு... ஹ்ம்ம்ம்... கொஞ்சங் கூட மாறவே மாட்டிறான்" என்று இறுகிய முகத்தோடு உரைக்க, ஆதி சினம் பொங்க தன் மகனை நோக்கினாள்.
'போட்டு கொடுத்திட்டியே பத்மா... உனக்கு இருக்கு' என்று ஆசிரியை மனதிற்குள் வைதாலும் வெளியே
அமைதியின் சொரூபமாய் நின்றபடி "சாரி மிஸ்... இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்" என்று சொல்லி அத்தனை பரிதாபமாய் பார்த்தான்.
ஆசியருக்கு அவனின் முகப்பாவனையை பார்க்க வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருந்தது.
விக்ரமின் நடிப்பெல்லாம் ஆதியின் முன்னிலையில்தான். அவள் அந்தப்புரம் போனால் இவன் இந்தப்புரம் தன் சேட்டையை துவங்கிவிடுவான்.
அவர்கள் பேசி முடித்துவிட்டு வெளியேறிய சமயம், செந்தமிழ் அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்றாள்
அவள் பின்னோடு அவள் மகன் சிம்ம பூபதி வந்து கொண்டிருந்தான்.
அமைதியோடு கூடிய தேஜஸான புன்னகையே அவனின் சிறப்பம்சம். அதை தாண்டி ஒரு ராஜகளை அவன் பார்வையிலும் நடையிலும்!
சிறு வயதினன் எனினும் நடவடிக்கைகளிலும் செயலிலும் அதீத முதிர்ச்சி.
நம் தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கியங்களை எல்லாம் அந்த வயதிலேயே கற்று கைத்தேர்ந்தவனாயிருந்தான்.
அத்தகைய அறிவு கூட அவன் முதிர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
விக்ரமும் சிம்மாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் வேற்று குணம் படைத்தவர்கள் எனினும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகவே வளர்ந்திருந்தனர்.
அந்த நண்பர்கள் இருவரும் பார்த்த மாத்திரத்தில் பார்வையாலயே தங்கள் நட்பை பரிமாறிக் கொண்டு புன்னகையித்து கொள்ள, ஆதி தமிழை பார்த்தத கணம் புன்னகையோடு "வா தமிழ்... இப்பதான் உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன்" என்று உரைத்தாள்.
"நானும் நீ வந்திட்டியான்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றவள் விஷ்வாவை பார்த்து "எப்படி இருக்கீங்க விஷ்வா சார் ?" என்று நலம் விசாரித்தாள்.
"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்மா"
"நீ, விக்ரமா ?" என்று விக்ரமின் தலையை தமிழச்சி கோத "சூப்பரா இருக்கேன் ஆன்டி" என்று பதிலுரைத்தான்.
"அவன் சூப்பராதான் இருப்பான்... நாங்கதான் அவன்கிட்ட பாடாத படுறோம்" என்றாள் ஆதி.
விக்ரமின் முகம் களையிழந்து போனது.
"ஏன்டி அப்படி சொல்ற ?" என்று தமிழ் கேட்க, ஆதி அவனின் ஆசிரியை வாசித்த பாராட்டு மடலை வார்த்தை மாறாமல் ஒப்புவித்தாள்.
இதை கேட்ட சிம்ம பூபதி முந்திக் கொண்டு "விக்ரம் அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி" என்று சொல்லி ஆதியை நோக்கினான்.
அப்போது ஆதியும் விஷ்வாவும் ஒருவர் ஒருவர் முகத்தை பார்த்து பெருமிதம் கொண்டனர். இந்த வயதிலேயே தவறி கூட இருவரும் ஒருவரையொருவர் விட்டு கொடுத்திராமல் இருப்பது அவர்களின் நட்பின் பெருமையை பறைசாற்றியது.
ஆதி அப்போதுதான் கவனித்தாள்.
"ஏ தமிழ்... எங்கடி உன் பொண்ணு தமிழச்சியை காணோம்" என்றதும் விக்ரமும் வியப்போடு "அதானே எங்க அந்த கேடி?" என்றான்.
தமிழச்சி செந்தமிழின் இரண்டாவது மகள். சிம்ம பூபதியைவிட இரண்டு வயது சிறியவள். முதல் குழந்தை ஆணாய் பிறந்து தமிழ் தன் சவாலில் வென்றுவிட்டாலும் வீரேந்திரன் அத்தனை சீக்கிரத்தில் தோல்வியை ஏற்பானா? எப்படியோ அவனின் ஆசை இரண்டாவது முயற்சியிலேயே கிட்டிவிட்டது.
தமிழச்சி எங்கே என்று கேட்டதும் தமிழ் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிம்மபூபதியை நோக்கி "எங்கடா உன் தங்கச்சியை காணோம் ?" என்று வினவினாள்.
"நீங்க வீட்டுக்கு வா... வைச்சுக்கிறேன்னு சொன்னதுதான்... மேடம் அப்பவே
தாத்தாகிட்ட அடம்பிடிச்சி இழுத்துட்டு போயிட்டாங்க" என்று அவன் சொல்லவும் மகனை புருவத்தை சுருக்கி முறைத்தாள்.
"சாரிம்மா... நீங்க முன்னாடி போகும் போதே பின்னாடி ஸ்டியர் கேஸ் வழியா போயிட்டா? நான் உங்ககிட்ட சொன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்னு மிரட்டிறா மா" என்றான்.
ஆதி தன் தோழியின் புறம் திரும்பி "நீ ஊரையே ஏமாத்துவ... உன்னையே ஏமாத்திறா...உன் பொண்ணு... உன்னை விட பெரிய தில்லாலங்கடிதான்" என்றாள்.
9
8
7
6
நேரம் குறைந்து கொண்டே வர நிற்காமல் ஓடினாள்.
5 விநாடிகள்.
"ஏய் தமிழச்சி... அதை தூக்கி போடு"
4 "ஏய்... தூக்கி போடிறிறிறிறி"
3 விநாடிகள்தான். கரத்திலிருந்த பாமை கைப்பற்றி தூக்கி வீசினான்.
அது வானுயர பறந்து சென்று கடல் நீரில் வீழ்ந்து வெடிக்கவும், அலறியவள் படுக்கையில் இருந்து சுருண்டுவிழப் பார்த்த போது கெட்டியாய் இரும்பினை ஒத்த ஒரு கரம் அவளை விழாமல் தாங்கிக் கொண்டது.
பதட்டத்தோடு விழித்து பார்க்க அவன் உறக்கத்திலேயே அவளை நெருக்கமாய் இழுத்து அணைத்தவன் "கண்டதை நினைக்காம தூங்குடி... " என்றான்.
அவள் மெல்ல அந்த மோசமான நினைவுகளிலிருந்து மீண்டவள், அவன் புறம் திரும்பி படுத்தாள்.
அதற்குள்ளாக மீண்டும் அவன் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றிருந்தான்.
எத்தனை அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவளை விழ விடாமல் தாங்கிக் கொள்வது, இத்தனை வருடக் காலமாய் அவனுக்கு பழகிய விஷயமாய் மாறியிருந்தது.
அதுவே அவனின் ஆழமான காதலுக்கும் எடுத்துக்காட்டு.
அன்று மட்டும் தான் பாம் வெடித்து இறந்து போயிருந்தால்...
இப்படியொரு வாழ்க்கையை வாழமுடியாத துர்பாக்கியசாலியாய் இறந்து போயிருப்பேனே என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் விழியின் முன்னே அதே கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த அவன் முகம். அவனின் மீசை முடியில் எட்டிப் பார்க்கும் அந்த நரையும் கூட அவனின்
கம்பீரத்தை பெருக்கியதென்றே சொல்ல வேண்டும்.
அவனுக்காகவும் அவன் காதலுக்காகவும் இன்னும் பல நூறு வருடகாலங்கள் கூட சலிக்காமல் அவனுடன் வாழலாம்.
இந்த எண்ணங்களை சுமந்தபடி உறக்கம் மறந்து அவனையே பார்த்திருந்தாள்.
வீரேந்திரன் ஐந்து வருடங்களுக்கு முன்பு கமிஷனராய் பதிவு உயர்வு பெற்றிருந்தான்.
அதே சமயம் தமிழச்சியின் பத்திரிக்கையும் நல்ல வளர்ச்சி பெற்று அவளுக்கென்ற சிறப்பான அங்கிகாரத்தை பெற்று தந்திருந்தது.
ஆதியின் பத்திரிக்கையும் அந்தளவுக்கு வளர்ச்சியை பெற்ற போது இரு தோழிகளும் சேர்ந்து தங்கள் பத்திரிக்கைகளை இணைத்து வீரதமிழச்சி என்று ஒரே பத்திரிக்கையாய் மாற்றி அதனை நிர்வாகம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களின் நம்பகமான பத்திரிக்கையாய் வீரதமிழச்சி வாரஇதழ் மாறியிருந்தது.
இரு தோழிகளுக்கும் அது பேறும் புகழையும் அளவில்லமால் பெற்று தந்திருந்தது.
அதே சமயம் ராஜசிம்மன் அரண்மனையை செந்தமிழ் தொல்பொருள்துறைக்கு அளித்ததன் விளைவாக அது நம் தமிழனின் கௌரவத்தையும் அவனின் கட்டிட கலையின் திறமையையும் பறைசாற்றும் வண்ணம் இன்றளவிலும் கம்பீரமாய் நின்று கொண்டிருக்கிறது.
நம் நாட்டு மக்களும் பல வெளிநாட்டு பயணிகளும் சிம்மவாசலில் அமைந்துள்ள நம் பாரம்பரிய அரண்மனையை தினமும் பார்வையிட்டு பெருமிதப்பட்டு கொண்டிருந்தனர்.
*********
விடியலை தொட்ட அந்த நாளில் நேரம் கடந்து கொண்டே போனது.
அலறிய அலாரத்தை அடக்கிவிட்டு விஷ்வா உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆதி அவன் போர்வையை இழுத்துவிட்டு "எழுந்திருடா" என்று சத்தமாய் கத்தவும் "லீவு நாளில் கூட ஏன்டி இப்படி டார்ச்சர் பன்ற ?" என்று சொல்லியவன் மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டான்.
"லீவா.. டே இன்னைக்கு ஸ்கூலுக்கு போகனும்.. ஓபன் டே" என்றாள்.
விஷ்வா அதிர்ந்தபடி விழித்து பார்த்தவன் முகத்தை பரிதபமாய் மாற்றிக் கொண்டு, "ப்ளீஸ்டி... நீயே போயிட்டு வந்துடிறியா..." என்று கேட்டான்.
"அதெல்லாம் முடியாது... என்னை தனியா போய் திட்டு வாங்க சொல்றியா... நெவர்" என்றாள்.
"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டி... இந்த ஒரே தடவை விட்டிறேன்" என்று கெஞ்சலாய் பார்த்தவனை மிரட்டலாய் பார்த்தாள்.
அந்த பார்வைக்கு சரணடைந்தவன்
"சரி சரி... முறைக்காதே வர்றேன்" என்று விஷ்வா சொல்ல "சீக்கிரம்" என்றவள், உடனே திரும்பி விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.
'இரண்டு மூணு வைச்சிருக்கவன் எல்லாம் நிம்மதியா இருக்கேன்... ஒண்ணே ஒண்ணு வைச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே' என்று புலம்பியபடியே புறப்படத் தயாரானான்.
அந்த உயரமான பள்ளிக்கட்டிடத்தின் முன்னே நின்ற காரின் பின் இருக்கையின் கதவை திறந்து ஆதி வெளியே வர, விஷ்வா வாகன நிறுத்தம் நோக்கி காரை நகர்த்தி சென்று நிறுத்தினான்.
காட்டன் புடவையில் கம்பீரமாய் ஆதி உள்ளே சென்று கொண்டிருக்க, விஷ்வா தன் மகனை திரும்பி பார்த்து "விக்ரமா... இந்த தடவை என்னெல்லாம் சேட்டை பண்ணி வைச்சிருக்க" என்று
தன்னுடைய தோற்ற சாயலிலயே வசீகரமாய் நின்றிருந்த தன் மகன் விக்கிரமாதித்தியனை கேட்டான்.
"இல்லப்பா... நான் இந்த தடவை எந்த சேட்டையும் பண்ணல... வேண்ணா என் ப்ரண்ட்டு சிம்மாவை கேட்டுப் பாருங்க"
"அவன் அப்படியே உன்னை விட்டுக் கொடுத்திட்டாலும்"
இப்படியே பேசிக் கொண்டபடி
எட்டாம் வகுப்பு ஏ என்றிருந்த வகுப்பறையை வாசலை இருவரும் அடைந்திருந்தனர்.
ஏற்கனவே ஆதி அவனின் வகுப்பாசிரியை முன்பு அமர்ந்திருந்தாள். அவர் கொடுத்த அந்த அட்டையை பொறுமையாய் பிரித்து அவள் பார்த்திருக்க, ஆதித்தியன் முகத்திலோ அச்சத்தின் சாயல்.
ஆதி தயங்கி நின்ற தன் கணவனை உள்ளே அழைத்தாள்.
விக்ரமை பள்ளியில் சேர்த்த நாள் முதற் கொண்டு அவனை கடிந்து கொள்ளாத ஆசிரியர்களே கிடையாது.
அவன் செய்த சேட்டைகளில் வேலையை விட்டுச் சென்ற ஆசிரியர்கள் கூட உண்டு.
அத்தனை சேட்டைக்காரன்!
விக்ரம் பயங்கொள்ளவது ஆதியை பார்த்தால் மட்டும்தான். அவள் கிடைக்கும் ஆயுதத்தில் எல்லாம் விரட்டி விரட்டி அடித்து பார்த்துவிட்டாள்.
ஆனால் அடி வாங்கிய அடுத்த நொடியே அவற்றை எல்லாம் துடைத்துபோட்டுவிட்டு தன் லீலைகளை தொடங்கவிடுவான்.
இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில்...
நினைக்கும் போதே உள்ளம் பதறும் அவளுக்கு !
அதற்கு காரணம் ஆதி செல்லம்மாவிற்கு ஒரே மகள். விஷ்வாவும் சாரதாவிற்கு ஒரே மகன். பாட்டிகள் இருவரின் படுச்செல்லம். ஒற்றை பேரன் வேறு.
அவனை சமளிக்கவே ஆதிக்கு நேரம் சரியாய் இருக்க இன்னொரு குழந்தையா?
கனவிலும் அப்படி ஒன்றை அவள் எண்ணவும் தயாராக இல்லை.
அவனின் ரிப்போர்ட் கார்ட்டை வாங்கிப் பார்த்தான் விஷ்வா.
வகுப்பில் இரண்டாவதாக வந்திருந்தான். அது ஒண்ணும் புதிய செய்தி அல்ல. படிப்பில் அவன் அதிபுத்திசாலிதான்.
விக்ரமின் ஆசிரியர் அவர்கள் இருவரை நோக்கி தன் கதாக.காலட்சபத்தை ஆரம்பித்தார்.
"மிஸ்டர் & மிஸஸ். விஷ்வா... சொல்றேனே தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க சன் ரொம்ப ரொம்ப நாட்டி... எந்த டீச்சரையும் க்ளாஸ் எடுக்கவே விடாம சதா கமென்ட் பாஸ் பன்றான்... இட்ஸ் ஸோ இரிடேட்டிங்... எல்லா சப்ஜக்ட் டீச்சர்ஸும் இதே கம்பிளைன்ட்தான்... எவ்வளவோ வார்ன் பண்ணியாச்சு... ஹ்ம்ம்ம்... கொஞ்சங் கூட மாறவே மாட்டிறான்" என்று இறுகிய முகத்தோடு உரைக்க, ஆதி சினம் பொங்க தன் மகனை நோக்கினாள்.
'போட்டு கொடுத்திட்டியே பத்மா... உனக்கு இருக்கு' என்று ஆசிரியை மனதிற்குள் வைதாலும் வெளியே
அமைதியின் சொரூபமாய் நின்றபடி "சாரி மிஸ்... இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்" என்று சொல்லி அத்தனை பரிதாபமாய் பார்த்தான்.
ஆசியருக்கு அவனின் முகப்பாவனையை பார்க்க வியப்பாகவும் பரிதாபகரமாகவும் இருந்தது.
விக்ரமின் நடிப்பெல்லாம் ஆதியின் முன்னிலையில்தான். அவள் அந்தப்புரம் போனால் இவன் இந்தப்புரம் தன் சேட்டையை துவங்கிவிடுவான்.
அவர்கள் பேசி முடித்துவிட்டு வெளியேறிய சமயம், செந்தமிழ் அந்த வகுப்பறை வாசலில் வந்து நின்றாள்
அவள் பின்னோடு அவள் மகன் சிம்ம பூபதி வந்து கொண்டிருந்தான்.
அமைதியோடு கூடிய தேஜஸான புன்னகையே அவனின் சிறப்பம்சம். அதை தாண்டி ஒரு ராஜகளை அவன் பார்வையிலும் நடையிலும்!
சிறு வயதினன் எனினும் நடவடிக்கைகளிலும் செயலிலும் அதீத முதிர்ச்சி.
நம் தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கியங்களை எல்லாம் அந்த வயதிலேயே கற்று கைத்தேர்ந்தவனாயிருந்தான்.
அத்தகைய அறிவு கூட அவன் முதிர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.
விக்ரமும் சிம்மாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரும் வேற்று குணம் படைத்தவர்கள் எனினும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்களாகவே வளர்ந்திருந்தனர்.
அந்த நண்பர்கள் இருவரும் பார்த்த மாத்திரத்தில் பார்வையாலயே தங்கள் நட்பை பரிமாறிக் கொண்டு புன்னகையித்து கொள்ள, ஆதி தமிழை பார்த்தத கணம் புன்னகையோடு "வா தமிழ்... இப்பதான் உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன்" என்று உரைத்தாள்.
"நானும் நீ வந்திட்டியான்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றவள் விஷ்வாவை பார்த்து "எப்படி இருக்கீங்க விஷ்வா சார் ?" என்று நலம் விசாரித்தாள்.
"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்மா"
"நீ, விக்ரமா ?" என்று விக்ரமின் தலையை தமிழச்சி கோத "சூப்பரா இருக்கேன் ஆன்டி" என்று பதிலுரைத்தான்.
"அவன் சூப்பராதான் இருப்பான்... நாங்கதான் அவன்கிட்ட பாடாத படுறோம்" என்றாள் ஆதி.
விக்ரமின் முகம் களையிழந்து போனது.
"ஏன்டி அப்படி சொல்ற ?" என்று தமிழ் கேட்க, ஆதி அவனின் ஆசிரியை வாசித்த பாராட்டு மடலை வார்த்தை மாறாமல் ஒப்புவித்தாள்.
இதை கேட்ட சிம்ம பூபதி முந்திக் கொண்டு "விக்ரம் அப்படி எல்லாம் இல்ல ஆன்ட்டி" என்று சொல்லி ஆதியை நோக்கினான்.
அப்போது ஆதியும் விஷ்வாவும் ஒருவர் ஒருவர் முகத்தை பார்த்து பெருமிதம் கொண்டனர். இந்த வயதிலேயே தவறி கூட இருவரும் ஒருவரையொருவர் விட்டு கொடுத்திராமல் இருப்பது அவர்களின் நட்பின் பெருமையை பறைசாற்றியது.
ஆதி அப்போதுதான் கவனித்தாள்.
"ஏ தமிழ்... எங்கடி உன் பொண்ணு தமிழச்சியை காணோம்" என்றதும் விக்ரமும் வியப்போடு "அதானே எங்க அந்த கேடி?" என்றான்.
தமிழச்சி செந்தமிழின் இரண்டாவது மகள். சிம்ம பூபதியைவிட இரண்டு வயது சிறியவள். முதல் குழந்தை ஆணாய் பிறந்து தமிழ் தன் சவாலில் வென்றுவிட்டாலும் வீரேந்திரன் அத்தனை சீக்கிரத்தில் தோல்வியை ஏற்பானா? எப்படியோ அவனின் ஆசை இரண்டாவது முயற்சியிலேயே கிட்டிவிட்டது.
தமிழச்சி எங்கே என்று கேட்டதும் தமிழ் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிம்மபூபதியை நோக்கி "எங்கடா உன் தங்கச்சியை காணோம் ?" என்று வினவினாள்.
"நீங்க வீட்டுக்கு வா... வைச்சுக்கிறேன்னு சொன்னதுதான்... மேடம் அப்பவே
தாத்தாகிட்ட அடம்பிடிச்சி இழுத்துட்டு போயிட்டாங்க" என்று அவன் சொல்லவும் மகனை புருவத்தை சுருக்கி முறைத்தாள்.
"சாரிம்மா... நீங்க முன்னாடி போகும் போதே பின்னாடி ஸ்டியர் கேஸ் வழியா போயிட்டா? நான் உங்ககிட்ட சொன்னா அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்னு மிரட்டிறா மா" என்றான்.
ஆதி தன் தோழியின் புறம் திரும்பி "நீ ஊரையே ஏமாத்துவ... உன்னையே ஏமாத்திறா...உன் பொண்ணு... உன்னை விட பெரிய தில்லாலங்கடிதான்" என்றாள்.