MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 12
கெளதம் நான் கொல்லி வைப்பதாக கூறி கொண்டு அங்கு வந்து நிற்கிறான். அதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்தனர். ஆறுதலாய் சாய்ந்து அழுவதருக்கு தோள் இல்லாமல் தவித்த சௌந்தர்யா கெளதமின் வருகையால் தான் அநாதை இல்லை என்று எண்ணினாள்.
கண்களின் கண்ணீர் வற்றி தான் இருந்தது அவளுக்கு. இருந்தாலும் கெளதமை பார்த்ததும் கண்ணீர் கண்களில் பெருக்கெடுத்தது. அருகில் ஓடி சென்று அவனது முன் நின்று,
“பாத்தீங்களா.. பாட்டி என்ன விட்டுட்டு போய்ட்டாங்க.. நான் அநாதை ஆகிட்டேன் மறுபடியும். எனக்கு இருந்த சொந்தம் எல்லாம் என்ன விட்டுட்டு போயிட்டே இருக்காங்க..” என்று விம்மலும் அழுகையுமாக பேசுகிறாள்.
அவள் பேசுவதை கெளதமை தவிர வேறு எவருக்கும் புரியவும் இல்லை புரிந்து விடபோவதும் இல்லை. அவன் ஆதரவாய் அவளது கைகளை ஏந்தி,
“நான் இருக்கேன்... நானும் உனக்கு சொந்தம் தான், நீ தனி ஆள் இல்ல..
நான் உன்னை கட்டிக்க போறவன் தான...? அப்பறம் என்ன கவலை உனக்கு.. காலம் முழுக்க நான் உன் கூட இருப்பேன்.
பாட்டி உன்னை விட்டுட்டு போகல... உன்னோட தான் எப்போவும் இருப்பாங்க... அவுங்க பக்கத்துல இல்லையேன்னு நீ கவலை படாத.. உனக்கு சந்தோசத்த குடுக்குற தெய்வமா பக்கத்துல இருப்பாங்க..
நான் யாரும் இல்லாத தனி ஆளா நின்னப்போ, பாட்டி என்னை தன்னோட பேரன்னு சொன்னாங்க... அந்த பேரன் இருக்கான் அவுங்களுக்கும் உனக்கும்.. நான் உங்கள தனியா விட மாட்டேன்.”
“இப்போ யாரு தான் கொல்லி வைக்க போறீங்க..?” என்று ஒருவர் கேக்கிறார்.
கெளதம் அவளது கைகளில் இருந்து தன் கைகளை விடுத்து முன் சென்று, “நான் தான் வைக்க போறேன்... அவுங்களுக்கு நான் பேரன்...”
“சரிப்பா... நீ போய் தலைக்கு தண்ணி ஊத்திட்டு வா, வந்து வாய்க்கரிசி போடு...”
கெளதம் சடங்குகளை செய்தான். சடலத்தை தூக்கி சென்றனர்.
சௌந்தர்யாவுடன் சேர்ந்து சுந்தரியும் வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கினர்.
இடுகாட்டிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். சௌந்தர்யா விளக்கே ஏற்றி முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வந்தவர்கள் குளித்து முடித்து விட்டு வந்தனர், சுந்தரி சென்று சௌந்தர்யா எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி கெளதமை சாப்பிட வைக்க சொல்லுகிறார்.
கெளதம் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து அவளை சமாதன படுத்தினான். அவனுக்காக எழுந்து சகஜ நிலைக்கு வந்தவள் போல் பேசினாள். ஆனால் அவளுக்கு சோகம் கண்ணீராய் வந்து கொண்டே தான் இருந்தது.
அப்போது தேவன் அங்கு வருகிறான். தேவனை பார்த்ததும் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கௌதம் சென்று அவனை உள்ளே அழைத்து வந்தான்.
சைமன் கெளதமை பார்த்து, “நீ எப்டி கெளதம் வெளில வந்த..?” என்று சந்தேகத்தில் கேட்டான். அது வரை யாருக்கும் அதை கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் எல்லாரும் அவனிடம் அதையே கேக்கின்றனர். அவனது பதிலுக்காக எல்லாரும் எதிர் பார்த்து கொண்டிருந்தனர்.
“நான் தான் கூட்டிட்டு வந்தேன், நான் ஒரு வக்கீல்... அதுவும் பரோல்ல தான் கூட்டிட்டு வந்துருக்கேன்... அவன் நைட்க்குள ஜெயிலுக்கு ரிட்டர்ன் போகணும்..” என்று தேவன் கூறுகிறான்.
அனைவருக்கும் அவன் சொல்லுவது புரிந்தாலும் சந்தேகம் தான் வந்தது. ‘தேவன் ஏற்கனவே கெளதமை கொலைகாரன் என்று கோர்ட்டில் கூறினான், அப்படி இருக்கும் போது அவன் எப்படி வெளியே கூட்டி கொண்டு வந்தான் என்று குழம்பி கொண்டிருந்தனர்.
அதேபோல் அவன் சென்னையில் இருக்கிறான், அப்படி இருக்க இங்கு நடப்பது எப்படி தெரியும்..? எப்படி அதுவும் சரியான நேரத்துக்கு இங்கு கூட்டி கொண்டு வந்தான்.
ஒருவேளை அவன் பொய் சொல்லுகிறானா..?! இல்லை கெளதமை கொலை செய்யும் நோக்கத்தில் எதுவும் வெளியே கொண்டு வந்தானா..?!’
என்று எண்ணி பயந்து போனால் சௌந்தர்யா.
இதே போல சந்தேகம் மற்றவர்கள் மனதிலும் இருந்தது. முருகன் சந்தேகத்தை கேட்டுவிட்டான்.
“கெளதம் நிஜமாவே தேவ் தான் உன்னை கூட்டிட்டு வந்தானா..? இல்லை அது பொய்யா..?”
சைமனும், “அவனுக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..?” கேட்டான்.
கெளதம் தேவனின் அருகில் சென்று அவனது கைகளை பிடித்து, “தேவ் என்னை புரிஞ்சுகிட்டான். நிஜமாவே அவன் தான் என்னை வெளில கூட்டிட்டு வந்தான்..
நீங்க நினைக்கிற மாதிரி வேற எதுவும் இல்ல..” என்று கெளதம் கூறுகிறான்.
இருந்தாலும் அவர்களது சந்தேகம் இன்னும் முழுவதுமாக தீரவில்லை என்பதால் அவர்கள் எல்லாரும் தேவனை ஏற்று கொள்ளவில்லை.
பின் தேவனே அவர்களது சந்தேகத்திற்கு விடை அளித்தான்.
“எனக்கு புரியுது, உங்களுக்கு இத ஏத்துக்க முடியாதுன்னு. இருந்தாலும் அது தான் உண்மை.
நான் கடைசியா வந்து அன்னைக்கு கோர்ட்ல கெளதம்க்கு எதிரா சாட்சி சொன்னேன்... அதுக்கு அப்பறம் நான் வீட்டுக்கு போனப்போ தான் அம்மா சொன்னாங்க கெளதம் நிஜமாவே எந்த கொலையும் பண்ணலன்னு..”
சௌந்தர்யா முகத்தில் அப்போது ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘அன்று கெளதம் நான் தான் கொலைகாரன் நான் தண்டிக்க பட வேண்டியவன் தான்னு குற்ற உணர்ச்சில பேசிட்டு இருந்தாரு, இப்போ இந்த விஷயம் கேட்ட பின்னாடி அவருக்கு இருந்த குற்ற உணர்ச்சி போய் மன கஷ்டம் குறைஞ்சுருக்கும்’ என்று எண்ணி சந்தோஷ பட்டாள்.
“அன்னைக்கு கெளதம் மாதவ்க்கு கொடுத்த தண்ணி அவனோட வாயிலே தான் இருந்துச்சாம், அத அவன் குடிக்கவும் இல்ல, அதனால அவன் சாகவும் இல்ல..
இத டாக்டர் அம்மா கிட்ட சொல்லிருக்காங்க. அதுனால தான் அம்மா அந்த கேஸ் வேணாம்ன்னு வித்ட்ரா பண்ணிருக்காங்க..”
எல்லாருக்கும் உண்மை தெரிந்ததும் சந்தோஷத்தில் கெளதமின் அருகில் சென்று அவனை கட்டி தழுவி மகிழ்ந்தனர்.
முருகன், “எனக்கு தெரியும் நீ கொலை பண்ணிருக்க மாட்டன்னு.. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.. அது இன்னைக்கு தெரியவும் வந்துருச்சு.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று சந்தோஷ பூரிப்பில் பேசினான்.
தேவ், “இனி சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்... நான் இந்த கேசுல கெளதமுக்காக வாதடுறேன். அவன கண்டிப்பா இதுல இருந்து வெளில கொண்டு வந்துருவேன். நீங்க எல்லாரும் நம்பிக்கையா இருங்க..”
சௌந்தர்யா, “ரொம்ப நல்லது பண்ணுறீங்க.. ரொம்ப நன்றிங்க..”
“நீங்க எனக்கு நன்றி சொல்லி என்ன பிரிச்சுடாதீங்க.. கெளதம் என்னோட ப்ரெண்ட். நான் அவனுக்காக இத பண்ண மாட்டேனா..”
சைமன் குறுக்கிட்டு, “உனக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..? அதுவும் சரியான நேரத்துக்கு கௌதம இங்க கூட்டிட்டு வந்த..?”
“நான் கௌதம பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு போக தான் வந்தேன்.. இன்னைக்கு நான் இங்க வந்தப்போ தான் கேஸ் டீட்டைல்ஸ் தெரிய வந்தது. அதுவும் இங்க நடந்ததும் தெரிய வந்தது.
இங்க கெளதம் தேவைன்னு எனக்கு தோனுச்சு.. அதான் அவன பரோல்ல கூட்டிட்டு வந்தேன்..
இவன இங்க அனுப்பிட்டு எனக்கு அங்க சில வேலை இருந்துச்சு அத முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு...”
“நீ இன்னைக்கு இவன இங்க கூட்டிட்டு வந்து ரொம்ப நல்லது பண்ணிருக்க...
நாங்க எப்டி தான் சௌந்தர்யாவ சமாதன படுத்துறதுன்னு முழிச்சுட்டு இருந்தோம்... கெளதம் இருந்தா இந்த பிரச்சனை இருந்துருக்காதுன்னு நினைச்சுட்டு இருக்கேள கௌதம நீ இங்க அனுப்பிவச்சுட்ட...
அதுவும் சரியான நேரத்துக்கு இங்க அனுப்பி ரொம்ப பெரிய நல்லது பண்ணிட்ட..” என்றான் முருகன்.
“எனக்கு நன்றி எல்லாம் தேவை இல்ல... நீங்க எல்லாரும் என் கூட மறுபடியும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆனா போதும். அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷ்ம்.”
கெளதம் நான் கொல்லி வைப்பதாக கூறி கொண்டு அங்கு வந்து நிற்கிறான். அதை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் அதிர்ந்தனர். ஆறுதலாய் சாய்ந்து அழுவதருக்கு தோள் இல்லாமல் தவித்த சௌந்தர்யா கெளதமின் வருகையால் தான் அநாதை இல்லை என்று எண்ணினாள்.
கண்களின் கண்ணீர் வற்றி தான் இருந்தது அவளுக்கு. இருந்தாலும் கெளதமை பார்த்ததும் கண்ணீர் கண்களில் பெருக்கெடுத்தது. அருகில் ஓடி சென்று அவனது முன் நின்று,
“பாத்தீங்களா.. பாட்டி என்ன விட்டுட்டு போய்ட்டாங்க.. நான் அநாதை ஆகிட்டேன் மறுபடியும். எனக்கு இருந்த சொந்தம் எல்லாம் என்ன விட்டுட்டு போயிட்டே இருக்காங்க..” என்று விம்மலும் அழுகையுமாக பேசுகிறாள்.
அவள் பேசுவதை கெளதமை தவிர வேறு எவருக்கும் புரியவும் இல்லை புரிந்து விடபோவதும் இல்லை. அவன் ஆதரவாய் அவளது கைகளை ஏந்தி,
“நான் இருக்கேன்... நானும் உனக்கு சொந்தம் தான், நீ தனி ஆள் இல்ல..
நான் உன்னை கட்டிக்க போறவன் தான...? அப்பறம் என்ன கவலை உனக்கு.. காலம் முழுக்க நான் உன் கூட இருப்பேன்.
பாட்டி உன்னை விட்டுட்டு போகல... உன்னோட தான் எப்போவும் இருப்பாங்க... அவுங்க பக்கத்துல இல்லையேன்னு நீ கவலை படாத.. உனக்கு சந்தோசத்த குடுக்குற தெய்வமா பக்கத்துல இருப்பாங்க..
நான் யாரும் இல்லாத தனி ஆளா நின்னப்போ, பாட்டி என்னை தன்னோட பேரன்னு சொன்னாங்க... அந்த பேரன் இருக்கான் அவுங்களுக்கும் உனக்கும்.. நான் உங்கள தனியா விட மாட்டேன்.”
“இப்போ யாரு தான் கொல்லி வைக்க போறீங்க..?” என்று ஒருவர் கேக்கிறார்.
கெளதம் அவளது கைகளில் இருந்து தன் கைகளை விடுத்து முன் சென்று, “நான் தான் வைக்க போறேன்... அவுங்களுக்கு நான் பேரன்...”
“சரிப்பா... நீ போய் தலைக்கு தண்ணி ஊத்திட்டு வா, வந்து வாய்க்கரிசி போடு...”
கெளதம் சடங்குகளை செய்தான். சடலத்தை தூக்கி சென்றனர்.
சௌந்தர்யாவுடன் சேர்ந்து சுந்தரியும் வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கினர்.
இடுகாட்டிற்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். சௌந்தர்யா விளக்கே ஏற்றி முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வந்தவர்கள் குளித்து முடித்து விட்டு வந்தனர், சுந்தரி சென்று சௌந்தர்யா எதுவும் சாப்பிடவில்லை என்று கூறி கெளதமை சாப்பிட வைக்க சொல்லுகிறார்.
கெளதம் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து அவளை சமாதன படுத்தினான். அவனுக்காக எழுந்து சகஜ நிலைக்கு வந்தவள் போல் பேசினாள். ஆனால் அவளுக்கு சோகம் கண்ணீராய் வந்து கொண்டே தான் இருந்தது.
அப்போது தேவன் அங்கு வருகிறான். தேவனை பார்த்ததும் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கௌதம் சென்று அவனை உள்ளே அழைத்து வந்தான்.
சைமன் கெளதமை பார்த்து, “நீ எப்டி கெளதம் வெளில வந்த..?” என்று சந்தேகத்தில் கேட்டான். அது வரை யாருக்கும் அதை கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் எல்லாரும் அவனிடம் அதையே கேக்கின்றனர். அவனது பதிலுக்காக எல்லாரும் எதிர் பார்த்து கொண்டிருந்தனர்.
“நான் தான் கூட்டிட்டு வந்தேன், நான் ஒரு வக்கீல்... அதுவும் பரோல்ல தான் கூட்டிட்டு வந்துருக்கேன்... அவன் நைட்க்குள ஜெயிலுக்கு ரிட்டர்ன் போகணும்..” என்று தேவன் கூறுகிறான்.
அனைவருக்கும் அவன் சொல்லுவது புரிந்தாலும் சந்தேகம் தான் வந்தது. ‘தேவன் ஏற்கனவே கெளதமை கொலைகாரன் என்று கோர்ட்டில் கூறினான், அப்படி இருக்கும் போது அவன் எப்படி வெளியே கூட்டி கொண்டு வந்தான் என்று குழம்பி கொண்டிருந்தனர்.
அதேபோல் அவன் சென்னையில் இருக்கிறான், அப்படி இருக்க இங்கு நடப்பது எப்படி தெரியும்..? எப்படி அதுவும் சரியான நேரத்துக்கு இங்கு கூட்டி கொண்டு வந்தான்.
ஒருவேளை அவன் பொய் சொல்லுகிறானா..?! இல்லை கெளதமை கொலை செய்யும் நோக்கத்தில் எதுவும் வெளியே கொண்டு வந்தானா..?!’
என்று எண்ணி பயந்து போனால் சௌந்தர்யா.
இதே போல சந்தேகம் மற்றவர்கள் மனதிலும் இருந்தது. முருகன் சந்தேகத்தை கேட்டுவிட்டான்.
“கெளதம் நிஜமாவே தேவ் தான் உன்னை கூட்டிட்டு வந்தானா..? இல்லை அது பொய்யா..?”
சைமனும், “அவனுக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..?” கேட்டான்.
கெளதம் தேவனின் அருகில் சென்று அவனது கைகளை பிடித்து, “தேவ் என்னை புரிஞ்சுகிட்டான். நிஜமாவே அவன் தான் என்னை வெளில கூட்டிட்டு வந்தான்..
நீங்க நினைக்கிற மாதிரி வேற எதுவும் இல்ல..” என்று கெளதம் கூறுகிறான்.
இருந்தாலும் அவர்களது சந்தேகம் இன்னும் முழுவதுமாக தீரவில்லை என்பதால் அவர்கள் எல்லாரும் தேவனை ஏற்று கொள்ளவில்லை.
பின் தேவனே அவர்களது சந்தேகத்திற்கு விடை அளித்தான்.
“எனக்கு புரியுது, உங்களுக்கு இத ஏத்துக்க முடியாதுன்னு. இருந்தாலும் அது தான் உண்மை.
நான் கடைசியா வந்து அன்னைக்கு கோர்ட்ல கெளதம்க்கு எதிரா சாட்சி சொன்னேன்... அதுக்கு அப்பறம் நான் வீட்டுக்கு போனப்போ தான் அம்மா சொன்னாங்க கெளதம் நிஜமாவே எந்த கொலையும் பண்ணலன்னு..”
சௌந்தர்யா முகத்தில் அப்போது ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘அன்று கெளதம் நான் தான் கொலைகாரன் நான் தண்டிக்க பட வேண்டியவன் தான்னு குற்ற உணர்ச்சில பேசிட்டு இருந்தாரு, இப்போ இந்த விஷயம் கேட்ட பின்னாடி அவருக்கு இருந்த குற்ற உணர்ச்சி போய் மன கஷ்டம் குறைஞ்சுருக்கும்’ என்று எண்ணி சந்தோஷ பட்டாள்.
“அன்னைக்கு கெளதம் மாதவ்க்கு கொடுத்த தண்ணி அவனோட வாயிலே தான் இருந்துச்சாம், அத அவன் குடிக்கவும் இல்ல, அதனால அவன் சாகவும் இல்ல..
இத டாக்டர் அம்மா கிட்ட சொல்லிருக்காங்க. அதுனால தான் அம்மா அந்த கேஸ் வேணாம்ன்னு வித்ட்ரா பண்ணிருக்காங்க..”
எல்லாருக்கும் உண்மை தெரிந்ததும் சந்தோஷத்தில் கெளதமின் அருகில் சென்று அவனை கட்டி தழுவி மகிழ்ந்தனர்.
முருகன், “எனக்கு தெரியும் நீ கொலை பண்ணிருக்க மாட்டன்னு.. எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.. அது இன்னைக்கு தெரியவும் வந்துருச்சு.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்று சந்தோஷ பூரிப்பில் பேசினான்.
தேவ், “இனி சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்... நான் இந்த கேசுல கெளதமுக்காக வாதடுறேன். அவன கண்டிப்பா இதுல இருந்து வெளில கொண்டு வந்துருவேன். நீங்க எல்லாரும் நம்பிக்கையா இருங்க..”
சௌந்தர்யா, “ரொம்ப நல்லது பண்ணுறீங்க.. ரொம்ப நன்றிங்க..”
“நீங்க எனக்கு நன்றி சொல்லி என்ன பிரிச்சுடாதீங்க.. கெளதம் என்னோட ப்ரெண்ட். நான் அவனுக்காக இத பண்ண மாட்டேனா..”
சைமன் குறுக்கிட்டு, “உனக்கு எப்டி இங்க நடக்குறது தெரியும்..? அதுவும் சரியான நேரத்துக்கு கௌதம இங்க கூட்டிட்டு வந்த..?”
“நான் கௌதம பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு போக தான் வந்தேன்.. இன்னைக்கு நான் இங்க வந்தப்போ தான் கேஸ் டீட்டைல்ஸ் தெரிய வந்தது. அதுவும் இங்க நடந்ததும் தெரிய வந்தது.
இங்க கெளதம் தேவைன்னு எனக்கு தோனுச்சு.. அதான் அவன பரோல்ல கூட்டிட்டு வந்தேன்..
இவன இங்க அனுப்பிட்டு எனக்கு அங்க சில வேலை இருந்துச்சு அத முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு...”
“நீ இன்னைக்கு இவன இங்க கூட்டிட்டு வந்து ரொம்ப நல்லது பண்ணிருக்க...
நாங்க எப்டி தான் சௌந்தர்யாவ சமாதன படுத்துறதுன்னு முழிச்சுட்டு இருந்தோம்... கெளதம் இருந்தா இந்த பிரச்சனை இருந்துருக்காதுன்னு நினைச்சுட்டு இருக்கேள கௌதம நீ இங்க அனுப்பிவச்சுட்ட...
அதுவும் சரியான நேரத்துக்கு இங்க அனுப்பி ரொம்ப பெரிய நல்லது பண்ணிட்ட..” என்றான் முருகன்.
“எனக்கு நன்றி எல்லாம் தேவை இல்ல... நீங்க எல்லாரும் என் கூட மறுபடியும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆனா போதும். அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷ்ம்.”