MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 15
அந்த கொலையாளி யார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது அங்கு இருந்த அனைவருக்கும். நீதிபதியும் ஆவலாக, “யாருன்னு சொல்லுப்பா..?” என்று கேட்கிறார். ஆனால் அதை சொல்ல சூர்யாவுக்கு தான் பயமாக இருந்தது. சொல்லவே அதிகம் நேரம் எடுத்தான், அனைவரின் ஆவலையும் கோபத்தையும் சேர்த்து கொண்டு. ஒரு வழியாக மூச்சை இழுத்து விட்டு தைரியத்தோடு சொல்கிறான்.
“அது வந்து சார்... அது... சிவசங்கர் ஐயா தான்.”
அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. சிலருக்கு அது நாம கணிச்சது சரியா தான் போச்சு என்று இருந்தது. ஆனால் காதம்பரி அதை எதிர் பார்க்கவில்லை. அவள் வேகமாக அருகில் திரும்ப அங்கு சிவசங்கர் இல்லை. தேடினாள், கொஞ்சம் தள்ளி நின்று எங்கையோ பார்த்தவாறு திமிராக இருந்தார். இப்படி நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தவர் போல யாரையும் கண்டு கவலை கொள்ளாமல், முகத்தில் எந்த பதற்றமும் இன்றி இருந்தார்.
சைமன் சௌந்தர்யாவை பார்த்தான். அவள் ஆம் என்பது போல் தலை அசைத்தாள். சௌந்தர்யா முருகன் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு இதற்காக தான் சொல்லிருக்கா என்பது சைமனுக்கு அப்போது தான் புரிந்தது. அதுவும் சைமனுக்கு ஏற்கனவே கொலை இவர் தான் செய்திருப்பாரோ என்று சந்தேகம் இருந்தது. இன்று அது நிரூபணமானது.
கெளதமுக்கு இதை கேட்டதும் கோபமாக வந்தது. இப்போ முருகன் இங்க வராம இருக்குறதுக்கு இது தான் காரணம் போல என்று நினைத்து வருந்தினான். சிவசங்கர் மீது இருந்த மரியாதை போய்விட்டது.
காதம்பரியால் ஏற்க முடியவில்லை. அழுது கொண்டே அப்பாவுக்கு அருகில் எழுந்து செல்கிறாள். அதை கவனித்த வுடன், அங்கிருந்து நகர்ந்து முன் இருந்த போலீஸ் அருகில் சென்றார். யாராலும் அருகில் செல்ல முடியவில்லை.
நீதிபதி, “எங்க இருக்காரு சிவசங்கர்..?” என்றார். உடனே சிவசங்கரும், “நான் இங்க தான் இருக்கேன் சார்...” என்று தைரியமாக துணிச்சலாக கூறினார்.
நீதிபதி, “நீங்க இந்த குற்றசாற்ற ஒப்புகொள்றீங்களா..? இங்க கூண்டுல வந்து ஏறி சொல்லுங்க..” என்றார்.
சிவங்கர் கூண்டில் ஏறி நிற்கிறார்.
“ஆமாம் நான் தான் இந்த கொலைய பண்ணேன்.”
தேவன் அருகில் விசாரிக்க செல்கிறான்.
“அப்போ முருகன கடத்தினதும் நீங்க தானா..?”
“ஆமாம் நான் தான்...”
அதை கேட்டதும் அனைவருக்கும் அவர் மேல் கோபம் கொந்தளித்தது. இப்படி இரக்கமற்றவனா இவன் என்று வயதுக்கு மரியாதை குடுக்காமல் அவரை சிறியவர் முதல் பெரியார் வரை அனைவரும் திட்டினர். காதம்பரிக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள்.
சந்தோஷ், சைமன், தேவன் அனைவரும் அவரை பார்த்த பார்வையே அவரை அழித்து விடும் அளவுக்கு இருந்தது. பார்வையிலே கோப கனல் தெறித்தது.
கெளதம் அவரை குழப்ப பார்வையோடு பார்த்தான். வாழ்வு தந்தவர்கள் என்றுமே கடவுள் தான் என்று எண்ணம் மனதில் தோன்றியது. நம்பிக்கை துரோகிகள் என்றுமே கடவுளும் இல்லை, நல்லவர்களும் இல்லை என்ற எண்ணமும் வந்தது. ஆனால் முருகனை கடத்தியது தான் அவனுக்கு தாங்க முடியாமல் இருந்தது.
தேவன் கோபமாக, “முருகன் உங்க கூட பிறந்த அண்ணனோட பையன். அதுவும் அவன அவுங்க அப்பா, தாத்தா எல்லாரும் இறந்த பின்னாடி இத்தனை வருசமா வளத்துருக்கீங்க.. அப்டி இருந்தும் உங்களால எப்டி இத பண்ண முடிஞ்சது. எதுக்கு இந்த கொலை, கடத்தல் எல்லாம் பண்ணுனீங்க..? சொல்லுங்க..”
“இது எல்லாம் எதிர்பாராம நடந்துருச்சு.”
“பிளான் பண்ணி கொலை பண்ணி அத மறைக்கவும் செஞ்சுருக்கீங்க, ஆனா இது எதிர்பாராம நடந்ததா..? இத நாங்க நம்புவோமா..? உண்மை தான் எங்களுக்கு தேவை.”
“நான் என்ன நடந்ததுன்னு சொல்லுறேன். என்னோட பணமும் சேர்ந்து தான் பாலு கிட்ட இருந்தது. அவனோட மறைமுகமா நானும் சேர்ந்து இந்த வட்டி விடுற வேலை பண்ணேன். என் கிட்ட வேலை பார்த்த அழகேந்திரனோட பையன் அப்டின்னு தான் அந்த தேவேந்திர முருகன பாலு கிட்ட வேலை க்கு சேர்த்தேன்.
அவுங்க அப்பா மாதிரி அவனும் நல்லவனா விசுவாசமா இருப்பான்னு தான் நினைச்சேன். ஆனா அவன் எங்களோட பணத்த எங்க கிட்ட இருந்து திருடினான், அதுவும் எங்களுக்கு தெரியாம.
அது தெரியவந்ததும் அதிக கோபம் வந்தது.
அந்த கோபத்துல தெரியாம நான் கொலை பண்ணிட்டேன். அப்போ அங்க முருகன் வந்ததுனால அவன் பார்த்துருப்பானோனு கடத்த சொன்னேன்.
மற்றபடி வேற எதுவும் இல்ல..”
“ஆனா ஆக்சிடென்டா நீங்க மாத்தினத பார்த்தா அவசரப்பட்டு செஞ்ச கொலை மாதிரி இல்லையே..?” என்று கேள்வியால் துளைத்தான் தேவன் சிவசங்கரை.
“நாங்க மாட்டிக்க கூடாதுன்னு நினைச்சு அப்டி பண்ணிட்டோம். மற்ற படி வேற எந்த நோக்கமும் இல்லை.”
“சரி, கொலை தான் எதிர்பாராம பண்ணிட்டீங்க.. முருகன் அந்த கொலையா பார்க்கலன்னு தெரிஞ்சும் ஏன் அவன வெளில விடல..? அதுவும் அவன கோர்ட்ல வச்சு கொலை பண்ணவும் ட்ரை பண்ணிருக்கீங்க.. இதுக்கு என்ன சொல்லுறீங்க..?”
“அப்போ இங்க கேஸ் நடந்துட்டு இருந்துச்சு. அதுவும் கெளதம் தான் கொலை பண்ணினதா கேஸ் இருந்தது. நாங்க தப்பிக்கனும்னு தான் முருகன் வெளில விடாம வச்சுருந்தோம். அன்னைக்கு கோர்ட்ல நாங்க முருகன கொலை பண்ணனும் ன்னு நினைக்கல. அவன் தப்பிச்சா உண்மை எல்லாம் வெளில கொண்டு வந்துருவானோ அப்டின்னு பயந்து அவன அடிச்சு கோர்ட்க்கு போய் சாட்சி சொல்ல விடாம பண்ண தான் நினைச்சோம்.”
“நீங்க சொல்லுறது எல்லாம் எப்டி நம்புறது..?”
“நாங்க தான் கொலை, கடத்தல் பண்ணினதா ஒத்துகிட்டோம்ல, அப்பறம் என்ன..?” என்று கொஞ்சம் திமிராக கேட்டார் சிவசங்கர்.
தேவன் பதிலுக்கு, எதுக்கு பண்ணுனீங்கன்னு உண்மைய நான் வரவழைக்கிறேன் என்று நினைத்து கொண்டே சூர்யா பக்கம் சென்று, “நீங்க அன்னைக்கு அவுங்க பேசினத எதையாது கேட்டீங்களா..?”
“இல்ல சார்.. எனக்கு அவுங்க பேசினது எதுவும் கேக்கல.”
சூர்யா எதுவும் கேக்கவில்லை என்று சொல்லவும் சிறிது ஏமாற்றமாய் தான் இருந்தது தேவனுக்கு. இருந்த போதிலும் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என்று மறுபடியும் சென்று பாலுவை விசாரித்தார்.
“நீங்க சொல்லுங்க பாலு.. எதுக்கு நீங்க கொலை பண்ணதா ஒத்துகிட்டீங்க..?”
பாலு பதில் பேசாமல் நின்றார். சிவசங்கரே அவருக்கு பதில் பேசினார்.
“நாங்க ரொம்ப நல்ல நண்பர்கள். அதான் நண்பன காட்டி குடுக்காம அப்டி பேசிட்டான்.”
“கொலை பண்ணுறவங்க எல்லாம் நட்பு பாசம்ன்னு பார்த்து, உண்மைய சொல்லாம இருப்பாங்களா..? இத நாங்க எப்டி சார் நம்புறது..? உண்மைலே நீங்க அதுக்கு தான் அப்டி பண்ணுணீங்களா..? இல்ல சிவசங்கர் எதுவும் உங்கள மிரட்டினாரா..?”
பாலு வேகமாக, “இல்ல சார் அவர் சொல்லுறது தான் உண்மை.”
“பாலு..! நீங்க அவருக்கு பினாமியா..?”
“இல்ல சார்...”
சிவசங்கர் கோபமாக, “என்ன சார் தேவை இல்லாம நிறையா கேக்குறீங்க..?
தேவனுக்கும் கோபமாக வர, “நீங்க செஞ்ச கொலைய எதுக்கு பன்னிருப்பீங்கன்னு வேறமாதிரி விசாரிக்கிறேன். அது எங்க வேலை..”
நீதிபதி, “இங்க பாருங்க நீங்க கேக்குற கேள்வி அதிகபடியா இருக்கு தேவன், நீங்க இத தவிர வேற என்ன காரணம் இருக்கும்ன்னு நினைகிறீங்க..?”
தேவன் பேசுவதற்குள் முந்தி கொண்டு சிவசங்கர், “நிஜமாவே நாங்க அவன திருடிட்டான் ன்னு தான் கொலை பண்ணிட்டோம்.. மற்றபடி வேற எந்த நோக்கமும் இல்ல...” என்று சத்தமாக சொல்லுகிறார்.
அப்போது திடீரென்று ஒரு குரல், “பொய், பொய் பொய்..! அந்த ஆளு சொல்லுறது எல்லாம் பொய்...” என்று சொல்ல அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். அங்கு முருகன் நிற்கிறான்.
அந்த கொலையாளி யார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது அங்கு இருந்த அனைவருக்கும். நீதிபதியும் ஆவலாக, “யாருன்னு சொல்லுப்பா..?” என்று கேட்கிறார். ஆனால் அதை சொல்ல சூர்யாவுக்கு தான் பயமாக இருந்தது. சொல்லவே அதிகம் நேரம் எடுத்தான், அனைவரின் ஆவலையும் கோபத்தையும் சேர்த்து கொண்டு. ஒரு வழியாக மூச்சை இழுத்து விட்டு தைரியத்தோடு சொல்கிறான்.
“அது வந்து சார்... அது... சிவசங்கர் ஐயா தான்.”
அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. சிலருக்கு அது நாம கணிச்சது சரியா தான் போச்சு என்று இருந்தது. ஆனால் காதம்பரி அதை எதிர் பார்க்கவில்லை. அவள் வேகமாக அருகில் திரும்ப அங்கு சிவசங்கர் இல்லை. தேடினாள், கொஞ்சம் தள்ளி நின்று எங்கையோ பார்த்தவாறு திமிராக இருந்தார். இப்படி நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தவர் போல யாரையும் கண்டு கவலை கொள்ளாமல், முகத்தில் எந்த பதற்றமும் இன்றி இருந்தார்.
சைமன் சௌந்தர்யாவை பார்த்தான். அவள் ஆம் என்பது போல் தலை அசைத்தாள். சௌந்தர்யா முருகன் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு இதற்காக தான் சொல்லிருக்கா என்பது சைமனுக்கு அப்போது தான் புரிந்தது. அதுவும் சைமனுக்கு ஏற்கனவே கொலை இவர் தான் செய்திருப்பாரோ என்று சந்தேகம் இருந்தது. இன்று அது நிரூபணமானது.
கெளதமுக்கு இதை கேட்டதும் கோபமாக வந்தது. இப்போ முருகன் இங்க வராம இருக்குறதுக்கு இது தான் காரணம் போல என்று நினைத்து வருந்தினான். சிவசங்கர் மீது இருந்த மரியாதை போய்விட்டது.
காதம்பரியால் ஏற்க முடியவில்லை. அழுது கொண்டே அப்பாவுக்கு அருகில் எழுந்து செல்கிறாள். அதை கவனித்த வுடன், அங்கிருந்து நகர்ந்து முன் இருந்த போலீஸ் அருகில் சென்றார். யாராலும் அருகில் செல்ல முடியவில்லை.
நீதிபதி, “எங்க இருக்காரு சிவசங்கர்..?” என்றார். உடனே சிவசங்கரும், “நான் இங்க தான் இருக்கேன் சார்...” என்று தைரியமாக துணிச்சலாக கூறினார்.
நீதிபதி, “நீங்க இந்த குற்றசாற்ற ஒப்புகொள்றீங்களா..? இங்க கூண்டுல வந்து ஏறி சொல்லுங்க..” என்றார்.
சிவங்கர் கூண்டில் ஏறி நிற்கிறார்.
“ஆமாம் நான் தான் இந்த கொலைய பண்ணேன்.”
தேவன் அருகில் விசாரிக்க செல்கிறான்.
“அப்போ முருகன கடத்தினதும் நீங்க தானா..?”
“ஆமாம் நான் தான்...”
அதை கேட்டதும் அனைவருக்கும் அவர் மேல் கோபம் கொந்தளித்தது. இப்படி இரக்கமற்றவனா இவன் என்று வயதுக்கு மரியாதை குடுக்காமல் அவரை சிறியவர் முதல் பெரியார் வரை அனைவரும் திட்டினர். காதம்பரிக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள்.
சந்தோஷ், சைமன், தேவன் அனைவரும் அவரை பார்த்த பார்வையே அவரை அழித்து விடும் அளவுக்கு இருந்தது. பார்வையிலே கோப கனல் தெறித்தது.
கெளதம் அவரை குழப்ப பார்வையோடு பார்த்தான். வாழ்வு தந்தவர்கள் என்றுமே கடவுள் தான் என்று எண்ணம் மனதில் தோன்றியது. நம்பிக்கை துரோகிகள் என்றுமே கடவுளும் இல்லை, நல்லவர்களும் இல்லை என்ற எண்ணமும் வந்தது. ஆனால் முருகனை கடத்தியது தான் அவனுக்கு தாங்க முடியாமல் இருந்தது.
தேவன் கோபமாக, “முருகன் உங்க கூட பிறந்த அண்ணனோட பையன். அதுவும் அவன அவுங்க அப்பா, தாத்தா எல்லாரும் இறந்த பின்னாடி இத்தனை வருசமா வளத்துருக்கீங்க.. அப்டி இருந்தும் உங்களால எப்டி இத பண்ண முடிஞ்சது. எதுக்கு இந்த கொலை, கடத்தல் எல்லாம் பண்ணுனீங்க..? சொல்லுங்க..”
“இது எல்லாம் எதிர்பாராம நடந்துருச்சு.”
“பிளான் பண்ணி கொலை பண்ணி அத மறைக்கவும் செஞ்சுருக்கீங்க, ஆனா இது எதிர்பாராம நடந்ததா..? இத நாங்க நம்புவோமா..? உண்மை தான் எங்களுக்கு தேவை.”
“நான் என்ன நடந்ததுன்னு சொல்லுறேன். என்னோட பணமும் சேர்ந்து தான் பாலு கிட்ட இருந்தது. அவனோட மறைமுகமா நானும் சேர்ந்து இந்த வட்டி விடுற வேலை பண்ணேன். என் கிட்ட வேலை பார்த்த அழகேந்திரனோட பையன் அப்டின்னு தான் அந்த தேவேந்திர முருகன பாலு கிட்ட வேலை க்கு சேர்த்தேன்.
அவுங்க அப்பா மாதிரி அவனும் நல்லவனா விசுவாசமா இருப்பான்னு தான் நினைச்சேன். ஆனா அவன் எங்களோட பணத்த எங்க கிட்ட இருந்து திருடினான், அதுவும் எங்களுக்கு தெரியாம.
அது தெரியவந்ததும் அதிக கோபம் வந்தது.
அந்த கோபத்துல தெரியாம நான் கொலை பண்ணிட்டேன். அப்போ அங்க முருகன் வந்ததுனால அவன் பார்த்துருப்பானோனு கடத்த சொன்னேன்.
மற்றபடி வேற எதுவும் இல்ல..”
“ஆனா ஆக்சிடென்டா நீங்க மாத்தினத பார்த்தா அவசரப்பட்டு செஞ்ச கொலை மாதிரி இல்லையே..?” என்று கேள்வியால் துளைத்தான் தேவன் சிவசங்கரை.
“நாங்க மாட்டிக்க கூடாதுன்னு நினைச்சு அப்டி பண்ணிட்டோம். மற்ற படி வேற எந்த நோக்கமும் இல்லை.”
“சரி, கொலை தான் எதிர்பாராம பண்ணிட்டீங்க.. முருகன் அந்த கொலையா பார்க்கலன்னு தெரிஞ்சும் ஏன் அவன வெளில விடல..? அதுவும் அவன கோர்ட்ல வச்சு கொலை பண்ணவும் ட்ரை பண்ணிருக்கீங்க.. இதுக்கு என்ன சொல்லுறீங்க..?”
“அப்போ இங்க கேஸ் நடந்துட்டு இருந்துச்சு. அதுவும் கெளதம் தான் கொலை பண்ணினதா கேஸ் இருந்தது. நாங்க தப்பிக்கனும்னு தான் முருகன் வெளில விடாம வச்சுருந்தோம். அன்னைக்கு கோர்ட்ல நாங்க முருகன கொலை பண்ணனும் ன்னு நினைக்கல. அவன் தப்பிச்சா உண்மை எல்லாம் வெளில கொண்டு வந்துருவானோ அப்டின்னு பயந்து அவன அடிச்சு கோர்ட்க்கு போய் சாட்சி சொல்ல விடாம பண்ண தான் நினைச்சோம்.”
“நீங்க சொல்லுறது எல்லாம் எப்டி நம்புறது..?”
“நாங்க தான் கொலை, கடத்தல் பண்ணினதா ஒத்துகிட்டோம்ல, அப்பறம் என்ன..?” என்று கொஞ்சம் திமிராக கேட்டார் சிவசங்கர்.
தேவன் பதிலுக்கு, எதுக்கு பண்ணுனீங்கன்னு உண்மைய நான் வரவழைக்கிறேன் என்று நினைத்து கொண்டே சூர்யா பக்கம் சென்று, “நீங்க அன்னைக்கு அவுங்க பேசினத எதையாது கேட்டீங்களா..?”
“இல்ல சார்.. எனக்கு அவுங்க பேசினது எதுவும் கேக்கல.”
சூர்யா எதுவும் கேக்கவில்லை என்று சொல்லவும் சிறிது ஏமாற்றமாய் தான் இருந்தது தேவனுக்கு. இருந்த போதிலும் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் என்று மறுபடியும் சென்று பாலுவை விசாரித்தார்.
“நீங்க சொல்லுங்க பாலு.. எதுக்கு நீங்க கொலை பண்ணதா ஒத்துகிட்டீங்க..?”
பாலு பதில் பேசாமல் நின்றார். சிவசங்கரே அவருக்கு பதில் பேசினார்.
“நாங்க ரொம்ப நல்ல நண்பர்கள். அதான் நண்பன காட்டி குடுக்காம அப்டி பேசிட்டான்.”
“கொலை பண்ணுறவங்க எல்லாம் நட்பு பாசம்ன்னு பார்த்து, உண்மைய சொல்லாம இருப்பாங்களா..? இத நாங்க எப்டி சார் நம்புறது..? உண்மைலே நீங்க அதுக்கு தான் அப்டி பண்ணுணீங்களா..? இல்ல சிவசங்கர் எதுவும் உங்கள மிரட்டினாரா..?”
பாலு வேகமாக, “இல்ல சார் அவர் சொல்லுறது தான் உண்மை.”
“பாலு..! நீங்க அவருக்கு பினாமியா..?”
“இல்ல சார்...”
சிவசங்கர் கோபமாக, “என்ன சார் தேவை இல்லாம நிறையா கேக்குறீங்க..?
தேவனுக்கும் கோபமாக வர, “நீங்க செஞ்ச கொலைய எதுக்கு பன்னிருப்பீங்கன்னு வேறமாதிரி விசாரிக்கிறேன். அது எங்க வேலை..”
நீதிபதி, “இங்க பாருங்க நீங்க கேக்குற கேள்வி அதிகபடியா இருக்கு தேவன், நீங்க இத தவிர வேற என்ன காரணம் இருக்கும்ன்னு நினைகிறீங்க..?”
தேவன் பேசுவதற்குள் முந்தி கொண்டு சிவசங்கர், “நிஜமாவே நாங்க அவன திருடிட்டான் ன்னு தான் கொலை பண்ணிட்டோம்.. மற்றபடி வேற எந்த நோக்கமும் இல்ல...” என்று சத்தமாக சொல்லுகிறார்.
அப்போது திடீரென்று ஒரு குரல், “பொய், பொய் பொய்..! அந்த ஆளு சொல்லுறது எல்லாம் பொய்...” என்று சொல்ல அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். அங்கு முருகன் நிற்கிறான்.