• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen Penne! - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 2

முதல் நாள் வகுப்பிற்குள் நுழைந்த எழில்விழி திகைத்துத்தான் போனாள்.. மொத்தம் எண்பது மாணவ,மாணவிகள் இருப்பார்கள்.. வகுப்பின் உள்ளே நுழைந்த எழில்விழி மாணவிகளுடன் முதல் வரிசையில் அமர்ந்துக் கொள்ள, அவர்கள் பேச்சு சத்தம் அந்த வகுப்பறையே அதிர்ந்தது..

அடுத்த பெல் அடிக்கவும் எல்லோரும் சென்று இறைவணக்கம் செலுத்திவிட்டு அறைக்குள் வர எழில்விழி அருகில் அமர்ந்திருந்தவள், “நீ இந்த கிளாசிக்கு புதுசா..? உன்னோட பெயர் என்ன..?” என்றாள்

“என்னோட பெயர் எழில்விழி..” என்று அவள் புன்னகையுடன் சொல்ல, அவளைப் பார்த்து புன்னகை செய்தவள், “என்னோட பெயர் ஆஷா..” என்று தன்னையும் அறிமுகம் செய்துக் கொண்டாள்..

இப்படி இருவரும் பேசியபடியே தோழியாக எழில்விழிக்கு ஆஷாவை மிகவும் பிடித்து போனது.. அன்றிலிருந்து இருவரும் இணைபிரியாத தோழிகளாக மாறிப்போயினர். மதியம் சாப்பிட அழைத்தாள் எழில்விழி

“இன்னைக்கு உங்களின் வீட்டில் என்ன சாப்பாடு..?” என்று எழில்விழி கேட்டதும், “யாருக்கு தெரியும்..?” என்று ஆஷா சொல்ல,

“என்ன..?” என்று அதிர்ச்சியில் கேட்டாள்..

“இல்ல அம்மா சமையல் செய்யும் பொழுது நான் பள்ளிக்கூடம் கிளம்பிக் கொண்டிருந்தேன் அதுதான் கவனிக்கவில்லை..” என்று சொல்லி எழில்விழியை சமாளித்தாள் ஆஷா.

எழில்விழி டிப்பனைத் திறந்ததும் அதில் மணக்க மணக்க மீன் குழம்பு பார்த்தும் ஆஷாவிற்கு நாக்கில் எச்சில் ஊறியது.. அவள் அதை ஆஷாவிற்கு கொடுக்க, ஆஷா டிப்பனைத் திறந்தால் மணக்க மணக்க கத்திரிக்காய் புளிக்குழம்பு.

மணத்தை முகர்ந்தவள், “அம்மா சமையலுக்கு மணமே தனிதான்..” என்று சொல்லி அவளிற்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு சாப்பிட, அவர்கள் பேச்சு பழைய பள்ளியை நோக்கித் திரும்பியது.. இருவரும் தங்களுக்கு பிடித்தது எல்லாம் பகிர நேரம் சரியாக இருந்தது..

மதியம் சாப்பிட பிரதாப் அன்புவை அழைக்க, அன்புவோ அவனின் கையில் பணத்தைக் கொடுத்து, “வெஜிடபிள் பிரியாணி வாங்கிட்டு வாடா..” என்று கேண்டீனில் சாப்பாடு வாங்கிவரச் சொல்ல பிரதாப்பும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்..

அவன் சென்றதும் தன்னுடைய டிப்பனைத் திறந்துப் பார்க்க அது எப்பொழுது காலியாகத்தான் இருந்தது..

அன்புவிற்கு சந்தேகம், ‘காலையில் என்னோட கண் முன்னே தான் அம்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு ஊற்றிக் கொடுக்க, நான் தான் அதை பள்ளிக்கு எடுத்து வந்தேன். இப்பொழுது அது எப்படி காணாமல் போனது..?’ என்று தனக்கு தானே கேட்டுகொண்டான்..

இது இன்று நடப்பது அல்ல தொடர்ந்து ஒரு மூன்று வருடமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்படி காலியாகிறது என்ற விந்தை மட்டும் இன்னும் அவனுக்கு தெரியவில்லை..

அவன் காலையில் வருகையில் அவனின் அம்மா அவனுக்கு சாப்பாடு அவனின் கண்முன்னேதான் போடுவார்கள். ஆனால் இங்கே மதியம் டிப்பனைத் திறந்தால் சாப்பாடு மட்டும் இருக்காது..

ஆனால் அவன் அதை வீட்டில் சொல்லவே இல்லை.. இந்த மூன்று வருடமும் அவனின் மதிய சாப்பாடு கேண்டீனில் தான்.. பிறகு பிரதாப் வந்ததும் அவனுடன் இணைத்து சாப்பிட்டவன், அடுத்த வகுப்பிற்கு சென்றான்..

அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் அவனின் அம்மா சுமித்ரா, “என்ன கண்ணா இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது..?” என்று கேட்டுக் கொண்டே அவனின் பேக்கை வாங்க,

“நான் எங்கே சாப்பிட்டேன்.. அதுதான் மாயமாக மறைந்து போகிறதே..” என்று முணுமுணுப்பாகச் சொல்ல, “என்ன..?” என்று அவனின் அம்மா அதிர்வுடன் கேட்டதும்,

“இல்லம்மா நல்ல சாப்பிட்டேன்.. கத்திரிக்காய் புளிக்குழம்பு சூப்பர்..” என்று சொல்லிவிட்டு ப்ரஷ் ஆக அவனின் அறைக்கு சென்றான்..

அவன் ட்ரஸ் மாற்றி வருவதற்குள் அவனிக்கு பிடித்த கிழங்கை செய்து வைத்திருந்தார் அவனின் அம்மா சுமித்ரா.. அவன் அதை சாப்பிட்டுவிட்டு வெளியே அவனின் அறைக்கு படிக்க சென்றான்.. இரவு உணவை சமைக்க சுமித்ரா சமையல் அறைக்கு சென்றார்..

அப்பொழுது விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அறிவுமதி, ““அம்மா அண்ணா எங்கே..?” என்று கேட்டவண்ணம் சமையல் அறைக்குள் நுழைந்தான்.

“நீ இப்பொழுது தான் வருகிறாயா..?” என்று கேட்டதும், “ம்ம் தங்கையைப் பாட்டியின் வீட்டில் விட்டுவிட்டு அப்படியே விளையாட சென்றவன், இப்பொழுதுதான் வருகிறேன்..” என்று அவருக்கு பதில் கூறியவன்,

“அண்ணா எங்கே என்று சொல்லுங்கள்..” என்று சொல்ல, “எதுக்குடா வந்தும் வராதுமாக அவனைத் தேடுகிறாய்..” என்று கேட்டதும்,

“அண்ணாவிடம் ஒருவிஷயம் கேட்க வேண்டும்..” என்று அவன் சொல்லவும், “எனக்கு தெரியாமல் அப்படி என்ன விஷயம்..?” என்று கேட்டார் சுமித்ரா

“அதுவா நீங்க போட்டுக்கொடுக்கும் சாப்பாடு தினம் காணாமல் போகிறது.. ஆனால் அண்ணா இந்த விஷயத்தை நீங்கள் வருத்தப்படுவீங்க என்று உங்களிடம் உண்மையைச் சொல்லாமல் இருக்கிறான்..” என்று சொல்லவும்,

தனது மகனின் பக்கம் திரும்பிய சுமித்ரா, “இது எப்பொழுதில் இருந்து நடக்கிறது..?” என்று கேட்டதும், “அது மூன்று வருடமாக நடக்கிறது..” என்று அவன் சாதரணாமாக சொல்ல பெற்றமனம் பதறியது..

“என்னடா மூன்று வருடமாக இவன் மதிய சாப்பாடே சாப்பிடாமல் இருக்கிறானா..?” என்று பதறிய வண்ணம் கேட்ட அன்னையைப் பார்த்த அறிவுமதி,

“பார்த்தீங்களா எப்படி பதறீங்க அதுதான் அண்ணா உங்களிடம் ஒன்னும் சொல்லாமல் இருக்கிறான்.. கவலை பாடாதீங்க அண்ணா மதியம் சாப்பிடுகிறான்.. அந்த குட்டிசாத்தான் யார் என்று தெரியட்டும் அப்புறம் இருக்கு..” என்று கருவியவன்,

“என்னோட செல்லம் இல்ல.. இதுக்கு இப்படி வருத்தப்படலாமா..?” என்று அன்னையின் தாடையைப் பிடித்து கொஞ்சியவன், சுமித்ரா முகம் மலரவே அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு,

“அண்ணா இப்பொழுது எங்கே இருக்கிறான்..?” என்று கேட்டதும், “உன்னோட அண்ணா படிக்க அவனது அறைக்கு சென்றுவிட்டான்..” என்று அவனுக்கு பதில் சொல்ல, “சரி நான் அண்ணாவைப் பார்த்துவிட்டு வருகிறேன்..” என்று அண்ணனின் படிக்கும் அறைக்குள் சென்றான் அறிவுமதி

“அண்ணா..” என்று அழைத்துவிட்டு அறைக்குள் சென்றதும் அங்கே அன்பரசன் புத்தகத்துடன் அமர்ந்திருக்க, அவனின் அருகில் சென்று அமர்ந்த அறிவுமதி,

அவனின் அண்ணனிடம் அவன் கேட்ட கேள்வி, “அண்ணா இன்னைக்கும் உன்னோட டிப்பன் பாக்ஸ் காலியா..?” என்று கேலியாகக் கேட்டான்..

அவனின் கேள்வியில் எப்பொழுதும் போல தன்னைத்தானே நொந்துக்கொண்ட அன்பு, அவனின் பக்கம் திரும்பி, “இதுதான் நான் மூன்று வருடமாக சொல்கிறேனே..” என்று அவனும் சலிப்புடன் பதில் கொடுத்தான்..

“அண்ணா இதுக்கே சலித்துக் கொண்டால் எப்படி..?” என்று கேட்டான்..

“வேற என்ன பண்ணும் என்று சொல்கிறாய்..?” என்று கேட்டவன் அடுத்த பக்கத்தைப் புரட்ட, “அண்ணா அது யாரு அண்ணா உன்னோட டிப்பனை மட்டும் திருடித் திங்கும் பிராணி..” என்று சந்தேகம் கேட்டான்

அவனின் தலையில் கொட்டியவன், “அந்த வினோத மிருகத்தின் பெயர் தெரியலடா.. நாளைக்கு எனக்கு முக்கியமான டெஸ்ட் இருக்கு அதுக்கு படிக்கணும்.. அதனால் அந்த வினோத மிருகம் பற்றி அப்புறம் பேசுவோம்..” என்று சொல்ல,

“ஸாரி அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்தவனின் கையைப்பிடித்து அமர வைத்தவன், “உனக்கு இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது..?” என்று கேட்டதும் கிளாசில் நடந்ததை அண்ணனிடம் சொல்ல ஆரமித்தான் தம்பி.

சிறிது நேரம் சென்ற பிறகு, “சரிங்க அண்ணா நீங்க படிங்க..” என்று எழுந்து சென்றவன், “அண்ணா..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் என்ன என்ற கேள்வி மறைந்து இருந்தது..

“இந்த பாட்டி தொல்லை தாங்கல அண்ணா.. நாளைக்கு வரும்பொழுது புக் ஷாப் வந்து இதில் இருக்கும் நாவல் சிலதை வாங்கிட்டு வந்து கொடுத்துவிடு..” என்று சொல்ல சரியென்றான் அன்பரசன்.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த எழில்விழி, வீட்டை கூட்டி பாத்திரம் கழுவி வைத்துவிட்டு மாலைப் படிக்க அமர்ந்தவள், இரவு எட்டுமணி அளவில் அந்த இடத்தை விட்டு எழுந்தவள்

அவர்கள் வீட்டின் பின்னாடி அமர்ந்து அப்பாவிடம் தனது புது தோழியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தவள்.. சிறிது நேரம் தந்தையிடம் பேசிக்கொண்டே அவரின் மடியில் படுத்தவள் அப்படியே உறங்கிவிட, அந்த நிலவொளியில் மகளின் முகத்தைப் பார்த்தவர்,

தன்னுடைய மனைவியிடம், “பார்வதி இவள் இப்படி குழந்தை தனம் மாறாமல் இருக்கிறாள்.. இவளை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும்.. இவளுக்கு பிடித்த ஒருவனின் கையில் இவளைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்..” என்று சொல்ல அவரும் அமைதியாக தலையசைத்தார்..

இவர்கள் இருவருக்கும் முத்துக்குமார் மீது துளியும் நம்பிக்கை கிடையாது.. இப்பொழுதே அவளிடம் ஒரு வில்லன் ரேஞ்சில் நடந்துக் கொள்ளும் மகனை அவர்கள் அறவே வெறுத்தனர்.

அதன்பிறகு எழில்விழி அவனை சந்திக்கவே இல்லை.. அதேபோல அவனுக்கும் அவளின் நினைவு இல்லை.. இப்படியே இவர்கள் பள்ளிகூட நாட்கள் பறந்து சென்றது.. தினமும் எழிலின் கேள்விக்கு ஆஷாவின் பதில் ‘யாருக்கு தெரியும்..?’ என்றும், அன்புவின் டிப்பன் பாக்ஸ் காலியாவதும் சரியாக நடந்தது..

இது யாருக்கு புதிராக இருத்ததோ இல்லையோ, ஆனால் இருவருக்கும் இதில் சந்தேகம் தீரவே இல்லை ஒன்று அன்பரசன், இரண்டு எழில்விழி. இவர்கள் இருவரையும் பாலம் என்று இணைத்தால் ஆஷா.

இப்படி எழில்விழி அந்த பள்ளியில் சேர்ந்து கிட்டதட்ட எட்டு மாதம் முடிந்துவிட்டது.. ஆனாலும் ஆஷாவின் உண்மையான முகத்தை எழிலால் அறிய முடியவில்லை..

அவர்கள் பள்ளியில் அவளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.. எல்லாவற்றிலும் விளையாட்டாக அதே அளவு மிகுந்த கவனத்துடன் செய்யும் மாணவிகளில் அவளும் ஒருத்தி..

இப்படி இருக்க அவளை சந்தேகப்பட எழிலால் முடியவில்லை.. ஆனாலும் கூட அவளின் கேள்விகளுக்கு விடையறிந்துக் கொள்ள அவளின் பேக்கை எடுத்துப் பார்த்தாள் எழில்விழி

அவள் வந்தும் பார்த்தால் அவளின் பேக்கில் டிப்பன் பாக்ஸ் இல்லை.. அவளும் அமைதியாக அடுத்த வகுப்பைக் கவனிக்க, அடுத்து இன்டர்வெல் முடிந்ததும் அவளின் பேக்கைப் பார்க்க அதில் டிப்பன் பாக்ஸ் இருப்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் மதியம் வரையில் பொறுமையாக இருந்தாள்.

மதியம் சாப்பிட அமர்ந்ததும் எப்பொழும் போல, “ஆஷா இன்னைக்கு உன்னோட அம்மா என்ன செஞ்சாங்க..?!” என்று கேட்டதும், அவளும் எப்பொழுதும் போல யாருக்கு தெரியும்..?” என்று சொல்ல,

“உன்னோட அம்மா சமைத்தால் தானே உனக்கு தெரியும்..?” என்று அவள் கோபத்தோடு சொல்ல அவளை நிமிர்ந்துப் பார்த்தாள் ஆஷா..

“என்னோட அம்மா சமைக்காமல் பக்கத்துவீட்டில் இருப்பவர்களா எனக்கு சமைத்து தருவார்கள்..?” என்று கேட்டவள் சாப்பிட துவங்க, அவளை முறைத்தாள் எழில்விழி.

“இப்பொழுது எதற்காக என்னை முறைக்கிறாய் எழில்..?” என்று நேரடியாகக் கேட்டாள்..

“நான் ஏன் முறைக்கிறேன் என்று உனக்கு சத்தியமாகத் தெரியாது..?!” என்று இவளும் நேரடியாகக் கேட்டதும்,

“எனக்கு தெரியல என்று தான் சொல்கிறேன் உனக்கு புரியுதா..? இல்லை..?” என்று ஆஷாவும் சொல்லவே,

“எனக்கு நல்லாவே புரிது.. புரியாமல் இருக்க நான் ஒன்றும் பைத்தியம் கிடையாது.. உன்னோட அம்மா சமைக்கலை என்று எனக்கு நல்லாவே தெரியும்..?” என்று சொன்ன எழிலை நிமிர்ந்து பார்த்தாள் ஆஷா

“உனக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் கேட்டதும், “உனக்கு அம்மாவே இல்லையே.. இல்லாதவங்க எப்படி உனக்கு சமைத்துக் கொடுக்க முடியும்..?” என்று கேட்டதும், ஆஷாவின் கண்கள் கலங்கியது..

அவள் கண்கலங்குவதைப் பார்த்து எழிலுக்கும் பாவமாக இருந்தாலும் கூட, தன்னுடைய தோழியை யாரும் தவறாக பேசக்கூடாது என்று நினைத்தாள்..

“என்ன ஆஷா பார்க்கிறாய்..? உன்னோட குட்டு எப்படி உடைந்தது என்றா..? உனக்கு அம்மா இல்லை என்று நீ அடிக்கடி என்னிடம் சொல்வது உண்டு.. அதே போல நீ வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வருவதில்லை என்றும் எனக்கு தெரியும்.. அடுத்தவங்க சாப்பாட்டைத் திருடித் சாப்பிடுகிறாயே அது உனக்கு தப்பாகவே தெரியலையா..?” என்று கேட்டாள்..

அவள் கேட்டதும் கண்களில் கண்ணீர் வழிய, “என்னோட அம்மா நான் பிறந்ததும் இறந்துட்டாங்க எழில்.. என்னோட அம்மா சமையலை நான் சாப்பிட்டதே இல்ல.. அதுதான் தினமும் யாராவது ஒருவரின் டிப்பனை எடுத்து சாப்பிடுவேன்..” என்று தன்னுடைய செயலுக்கு விளக்கம் சொல்ல அவளும் அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள்..

“ஆனால் அவர்களுக்கு என்னோட சாப்பாட்டை வைத்துவிட்டு டிப்பனை எடுத்து வந்து விடுவேன்.. அப்படி ஒருநாள் தான் இங்கே ப்ளஸ் டூ படிக்கும் ஒருவனின் அன்பரசனின் சாப்பாடு எடுத்து சாப்பிட்டேன்.. அது என்னோட அம்மா செய்தது போல இருந்தது.. அதிலிருந்து அவனது டிப்பன் பாக்ஸை எடுத்து வந்துவிடுவேன்..” என்று நடந்ததை அனைத்தும் சொல்ல எழிலுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னோர் பக்கம் அம்மாவின் சமையலுக்கு ஏங்குகிறாள் என்பது புரியவே அவளும் அமைதியாக சாப்பிட,

ஆஷா, “அன்பரசன் ஒன்றும் நம்மை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் கிடையாது.. அவன் அப்பா பெரிய ஜவுளிகடைக்கு முதலாளி. அதனால் அவனுக்கு பணத்தேவை அதிகம் ஏற்படாது.. அதனால் அவனுக்கு மட்டும் நான் காலியான டிப்பன் பாக்ஸை வைப்பேன்..” என்று சொல்ல எழில்விழிக்கு ஆஷா செய்யும் சேட்டை நினைத்து சிரிப்பாதா..? இல்லை அன்பரசன் நிலை நினைத்து அழுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை..

ஆஷாவை நினைத்து மனம் கலங்க, அவள் செய்யும் செட்டையில் தினமும் ஒருவன் சாப்பிடாமல் இருக்கிறான் என்பதும் அவளுக்கு புரிய இதை எப்படி சரிசெய்வது என்று யோசிக்க ஆரமித்தாள்..

அவளைப் பார்த்த ஆஷா, “என்னடி ஒரு யோசனையில் இருக்கிறாய்..?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட, “அந்த அன்பரசனை என்னிடம் நீ காட்டவே இல்லையே அதுதான் அவன் யார் எப்படி இருப்பான் என்று யோசிக்கிறேன்..” என்று அவளிடமே தூண்டில் போட்டாள் எழில்விழி..

“இதுக்குத்தான் இந்த அளவிற்கு யோசித்தாயா..?” என்று கேட்டவள், “அவன் நமக்கு பக்கத்தில் தான் அமர்ந்திருக்கிறான்..” என்று சொல்ல பள்ளி வளாகத்தை சுற்றிலும் பார்த்தாள் எழில்விழி..

“யார் அது..?” என்று கேட்டுக் கொண்டே எழில்விழி பார்வை சுழற்ற, “அதோ அங்கே இருக்கிறான்..” என்று தனது இடது கைகளில் அன்பரசனைச் சுட்டிக் காட்டினாள் ஆஷா.

அவனைப் பார்த்தவள் மனதில், ‘ஐயோ இவரா..?’ என்று நினைத்தவள், “ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அவளின் முகத்தைப் புரியாமல் பார்த்தாள் ஆஷா..

“அவனுக்கே தெரியாமல் அவனின் வீட்டு சாப்பாட்டைத் திருடி அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுகிறாயே உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று சொல்ல,

“அப்படியே மைக்கு வைத்து எட்டுப்பட்டி ஊருக்கும் சொல்லிட்டு வா..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்ல, “நீ பண்ணும் திருட்டுத்தனத்தை நான் மைக்கு வைத்து சொல்லணுமா..? எனக்கு ரொம்ப தேவை பாரு..” என்று அவள் சிரிக்க அவளின் சிரிப்பைப் பார்த்த ஆஷா,

“ரொம்ப அழகாக சிரிக்கிறாய் எழில்..” என்று சொல்ல, “ம்ம் சரி நீ சாப்பிடு!” என்று சொல்ல இருவரும் சாப்பிட்டுவிட்டு தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்தனர்..

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் மாலை வீட்டிற்கு சென்றாள் எழில்விழி..
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த எழில்விழி, வீட்டை கூட்டி பாத்திரம் கழுவி வைத்துவிட்டு மாலைப் படிக்க அமர்ந்தவள், இரவு எட்டுமணி அளவில் அந்த இடத்தை விட்டு எழுந்தவள்

அவர்கள் வீட்டின் பின்னாடி அமர்ந்து அப்பாவிடம் தனது புது தோழியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தவள்.. சிறிது நேரம் தந்தையிடம் பேசிக்கொண்டே அவரின் மடியில் படுத்தவள் அப்படியே உறங்கிவிட, அந்த நிலவொளியில் மகளின் முகத்தைப் பார்த்தவர்,

தன்னுடைய மனைவியிடம், “பார்வதி இவள் இப்படி குழந்தை தனம் மாறாமல் இருக்கிறாள்.. இவளை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும்.. இவளுக்கு பிடித்த ஒருவனின் கையில் இவளைப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்..” என்று சொல்ல அவரும் அமைதியாக தலையசைத்தார்..

இவர்கள் இருவருக்கும் முத்துக்குமார் மீது துளியும் நம்பிக்கை கிடையாது.. இப்பொழுதே அவளிடம் ஒரு வில்லன் ரேஞ்சில் நடந்துக் கொள்ளும் மகனை அவர்கள் அறவே வெறுத்தனர்.

அதன்பிறகு எழில்விழி அவனை சந்திக்கவே இல்லை.. அதேபோல அவனுக்கும் அவளின் நினைவு இல்லை.. இப்படியே இவர்கள் பள்ளிகூட நாட்கள் பறந்து சென்றது.. தினமும் எழிலின் கேள்விக்கு ஆஷாவின் பதில் ‘யாருக்கு தெரியும்..?’ என்றும், அன்புவின் டிப்பன் பாக்ஸ் காலியாவதும் சரியாக நடந்தது..

இது யாருக்கு புதிராக இருத்ததோ இல்லையோ, ஆனால் இருவருக்கும் இதில் சந்தேகம் தீரவே இல்லை ஒன்று அன்பரசன், இரண்டு எழில்விழி. இவர்கள் இருவரையும் பாலம் என்று இணைத்தால் ஆஷா.

இப்படி எழில்விழி அந்த பள்ளியில் சேர்ந்து கிட்டதட்ட எட்டு மாதம் முடிந்துவிட்டது.. ஆனாலும் ஆஷாவின் உண்மையான முகத்தை எழிலால் அறிய முடியவில்லை..

அவர்கள் பள்ளியில் அவளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.. எல்லாவற்றிலும் விளையாட்டாக அதே அளவு மிகுந்த கவனத்துடன் செய்யும் மாணவிகளில் அவளும் ஒருத்தி..

இப்படி இருக்க அவளை சந்தேகப்பட எழிலால் முடியவில்லை.. ஆனாலும் கூட அவளின் கேள்விகளுக்கு விடையறிந்துக் கொள்ள அவளின் பேக்கை எடுத்துப் பார்த்தாள் எழில்விழி

அவள் வந்தும் பார்த்தால் அவளின் பேக்கில் டிப்பன் பாக்ஸ் இல்லை.. அவளும் அமைதியாக அடுத்த வகுப்பைக் கவனிக்க, அடுத்து இன்டர்வெல் முடிந்ததும் அவளின் பேக்கைப் பார்க்க அதில் டிப்பன் பாக்ஸ் இருப்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் மதியம் வரையில் பொறுமையாக இருந்தாள்.

மதியம் சாப்பிட அமர்ந்ததும் எப்பொழும் போல, “ஆஷா இன்னைக்கு உன்னோட அம்மா என்ன செஞ்சாங்க..?!” என்று கேட்டதும், அவளும் எப்பொழுதும் போல யாருக்கு தெரியும்..?” என்று சொல்ல,

“உன்னோட அம்மா சமைத்தால் தானே உனக்கு தெரியும்..?” என்று அவள் கோபத்தோடு சொல்ல அவளை நிமிர்ந்துப் பார்த்தாள் ஆஷா..

“என்னோட அம்மா சமைக்காமல் பக்கத்துவீட்டில் இருப்பவர்களா எனக்கு சமைத்து தருவார்கள்..?” என்று கேட்டவள் சாப்பிட துவங்க, அவளை முறைத்தாள் எழில்விழி.

“இப்பொழுது எதற்காக என்னை முறைக்கிறாய் எழில்..?” என்று நேரடியாகக் கேட்டாள்..

“நான் ஏன் முறைக்கிறேன் என்று உனக்கு சத்தியமாகத் தெரியாது..?!” என்று இவளும் நேரடியாகக் கேட்டதும்,

“எனக்கு தெரியல என்று தான் சொல்கிறேன் உனக்கு புரியுதா..? இல்லை..?” என்று ஆஷாவும் சொல்லவே,

“எனக்கு நல்லாவே புரிது.. புரியாமல் இருக்க நான் ஒன்றும் பைத்தியம் கிடையாது.. உன்னோட அம்மா சமைக்கலை என்று எனக்கு நல்லாவே தெரியும்..?” என்று சொன்ன எழிலை நிமிர்ந்து பார்த்தாள் ஆஷா

“உனக்கு எப்படி தெரியும்..?” என்று அவள் கேட்டதும், “உனக்கு அம்மாவே இல்லையே.. இல்லாதவங்க எப்படி உனக்கு சமைத்துக் கொடுக்க முடியும்..?” என்று கேட்டதும், ஆஷாவின் கண்கள் கலங்கியது..

அவள் கண்கலங்குவதைப் பார்த்து எழிலுக்கும் பாவமாக இருந்தாலும் கூட, தன்னுடைய தோழியை யாரும் தவறாக பேசக்கூடாது என்று நினைத்தாள்..

“என்ன ஆஷா பார்க்கிறாய்..? உன்னோட குட்டு எப்படி உடைந்தது என்றா..? உனக்கு அம்மா இல்லை என்று நீ அடிக்கடி என்னிடம் சொல்வது உண்டு.. அதே போல நீ வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வருவதில்லை என்றும் எனக்கு தெரியும்.. அடுத்தவங்க சாப்பாட்டைத் திருடித் சாப்பிடுகிறாயே அது உனக்கு தப்பாகவே தெரியலையா..?” என்று கேட்டாள்..

அவள் கேட்டதும் கண்களில் கண்ணீர் வழிய, “என்னோட அம்மா நான் பிறந்ததும் இறந்துட்டாங்க எழில்.. என்னோட அம்மா சமையலை நான் சாப்பிட்டதே இல்ல.. அதுதான் தினமும் யாராவது ஒருவரின் டிப்பனை எடுத்து சாப்பிடுவேன்..” என்று தன்னுடைய செயலுக்கு விளக்கம் சொல்ல அவளும் அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள்..

“ஆனால் அவர்களுக்கு என்னோட சாப்பாட்டை வைத்துவிட்டு டிப்பனை எடுத்து வந்து விடுவேன்.. அப்படி ஒருநாள் தான் இங்கே ப்ளஸ் டூ படிக்கும் ஒருவனின் அன்பரசனின் சாப்பாடு எடுத்து சாப்பிட்டேன்.. அது என்னோட அம்மா செய்தது போல இருந்தது.. அதிலிருந்து அவனது டிப்பன் பாக்ஸை எடுத்து வந்துவிடுவேன்..” என்று நடந்ததை அனைத்தும் சொல்ல எழிலுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தாலும், இன்னோர் பக்கம் அம்மாவின் சமையலுக்கு ஏங்குகிறாள் என்பது புரியவே அவளும் அமைதியாக சாப்பிட,

ஆஷா, “அன்பரசன் ஒன்றும் நம்மை போல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் கிடையாது.. அவன் அப்பா பெரிய ஜவுளிகடைக்கு முதலாளி. அதனால் அவனுக்கு பணத்தேவை அதிகம் ஏற்படாது.. அதனால் அவனுக்கு மட்டும் நான் காலியான டிப்பன் பாக்ஸை வைப்பேன்..” என்று சொல்ல எழில்விழிக்கு ஆஷா செய்யும் சேட்டை நினைத்து சிரிப்பாதா..? இல்லை அன்பரசன் நிலை நினைத்து அழுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை..

ஆஷாவை நினைத்து மனம் கலங்க, அவள் செய்யும் செட்டையில் தினமும் ஒருவன் சாப்பிடாமல் இருக்கிறான் என்பதும் அவளுக்கு புரிய இதை எப்படி சரிசெய்வது என்று யோசிக்க ஆரமித்தாள்..

அவளைப் பார்த்த ஆஷா, “என்னடி ஒரு யோசனையில் இருக்கிறாய்..?” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட, “அந்த அன்பரசனை என்னிடம் நீ காட்டவே இல்லையே அதுதான் அவன் யார் எப்படி இருப்பான் என்று யோசிக்கிறேன்..” என்று அவளிடமே தூண்டில் போட்டாள் எழில்விழி..

“இதுக்குத்தான் இந்த அளவிற்கு யோசித்தாயா..?” என்று கேட்டவள், “அவன் நமக்கு பக்கத்தில் தான் அமர்ந்திருக்கிறான்..” என்று சொல்ல பள்ளி வளாகத்தை சுற்றிலும் பார்த்தாள் எழில்விழி..

“யார் அது..?” என்று கேட்டுக் கொண்டே எழில்விழி பார்வை சுழற்ற, “அதோ அங்கே இருக்கிறான்..” என்று தனது இடது கைகளில் அன்பரசனைச் சுட்டிக் காட்டினாள் ஆஷா.

அவனைப் பார்த்தவள் மனதில், ‘ஐயோ இவரா..?’ என்று நினைத்தவள், “ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று அவள் சிரிப்புடன் சொல்ல, அவளின் முகத்தைப் புரியாமல் பார்த்தாள் ஆஷா..

“அவனுக்கே தெரியாமல் அவனின் வீட்டு சாப்பாட்டைத் திருடி அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுகிறாயே உனக்கு தைரியம் ஜாஸ்திதான்..” என்று சொல்ல,

“அப்படியே மைக்கு வைத்து எட்டுப்பட்டி ஊருக்கும் சொல்லிட்டு வா..” என்று ஆஷா சிரிப்புடன் சொல்ல, “நீ பண்ணும் திருட்டுத்தனத்தை நான் மைக்கு வைத்து சொல்லணுமா..? எனக்கு ரொம்ப தேவை பாரு..” என்று அவள் சிரிக்க அவளின் சிரிப்பைப் பார்த்த ஆஷா,

“ரொம்ப அழகாக சிரிக்கிறாய் எழில்..” என்று சொல்ல, “ம்ம் சரி நீ சாப்பிடு!” என்று சொல்ல இருவரும் சாப்பிட்டுவிட்டு தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்தனர்..

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் மாலை வீட்டிற்கு சென்றாள் எழில்விழி..
இப்படியுமா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

GREENY31

மண்டலாதிபதி
Joined
Apr 12, 2018
Messages
284
Reaction score
545
Location
Sattur
Hai sis,

Romba arumaiyannae Pathivu Sis. ...:):cool::D:)
Anbu thaen tiffin box edupathu yar endru kandupidipaennae? ... ...Ezhil enna seiya pokirral? ...
eagerly waiting for ur nxt update sis. ...(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top