அத்தியாயம் – 9
மறுநாள் காலை எழுந்த இனியா தனது அன்னைக்கு போன் செய்து, “அம்மா அண்ணா இங்கே ஒரு வாரம் இருக்கட்டும்..” என்று சொல்ல,
“இனியா அண்ணனுக்கு கவுன்சிலிங் லெட்டர் வந்ததும் அவனை ‘லா’ காலேஜ் சேரனும் கண்ணா.. அன்புவை இங்கே அனுப்பிவிடும்மா..” என்று அவர் சொல்ல,
“இந்த வருடம் ஊர் திருவிழாவிற்கு அண்ணா வந்திருக்கிறான்.. இன்னும் இரண்டு நாள் கழித்து அனுப்புகிறேன் அம்மா..” என்று அவளும் செல்லம் கொஞ்சினாள்..
அன்னையிடம் இருந்து போனை வாங்கிய அறிவு, “உனக்கு சின்ன அண்ணா முக்கியம் அல்ல.. பெரிய அண்ணாவை மட்டும் அங்கே வரச்சொல்லி விட்டு இப்பொழுது செல்லம் கொஞ்சுகிறாயா..?” என்று கோபம் போல கேட்டது அவனின் அருகில் வந்து அமர்ந்த தியாகராஜன்,
“டேய் அவளை திட்டாதே.. உனக்கு இது பன்னிரண்டாம் வகுப்பு அதில் கவனம் செலுத்து மற்றதை அப்புறம் பார்க்கலாம்..” என்று கூறியவர், அலைபேசியை அவனிடம் இருந்து வாங்கினார்..
“இனிய செல்லம் உன்னோட அண்ணா அங்கே இருக்கட்டும்.. ஆனால் கவுன்சில் லெட்டர் வந்ததும் அவனை இங்கே அனுப்பனும்..” என்று சொல்ல,
“என்னோட ஸ்வீட் டாடி.. தேங்க்ஸ் அப்பா.. கவுன்சில் லெட்டர் வந்தும் சொல்லுங்க அண்ணாவை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியவள்,
“அப்பா சின்ன அண்ணா பாவம் அவனை திட்டாதீங்க.. அவனும் அன்பு அண்ணா போல என்மேல் பாசம் அதிகம் வைத்திருக்கிறான்.. அண்ணா கோபத்தில் சொல்லியிருக்காது.. அண்ணாவிற்கு என்னை பார்க்க வர முடியவில்லை என்று வருத்தம் அதுதான்..” என்று சொல்ல அவள் சொல்வதை கேட்ட அறிவுமதி,
“இனியா செல்லம் அண்ணா விளையாட்டு அப்படி சொன்னேன்.. உன்மேல் எனக்கு என்னம்மா கோபம்..?” என்று பாசத்துடன் கேட்ட மகனைப் பார்த்த பெற்றோர் முகமும் மனமும் நிறைந்தது..
தங்களின் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் இருப்பதை நினைத்து அவர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.. பிறகு பாட்டியிடம் பேசியவன் போனை வைக்க பெரியவர்கள் தங்களின் வேலையை கவனித்தனர்..
இனியா தான் சொன்னது படியே அவளின் அன்னையிடம் பேசி கோவில் திருவிழாவிற்கு அண்ணனை அங்கேயே இருக்க வைத்தாள்..
ஆஷா அன்று ஒருநாள் மட்டும் எழில்விழி வீட்டில் தாங்கியவள் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு கிளம்பியவள்,
“ஆஷா கிளம்புகிறாயா..?” என்று வருத்ததுடன் கேட்டவளின் அருகில் வந்த ஆஷா, “எழில் வருத்தபடாமல் இரு.. நான் இங்கே கோயம்புத்தூர் ‘லா’ காலேஜில் தான் சேரப் போகிறேன்.. முடிந்த வரை உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன்..” என்று சொல்லி அவளை தேற்றியவள்,
“இது என்னோட மொபைல் நம்பர்.. என்னிடம் நீ எப்பொழுது வேண்டுமாலும் பேசு சரியா..?” என்று கூற அவளும் மலர்ந்த முகத்தோடு தலையசைக்க,
“சரி எழில் நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவள் தனது பையைத் திறந்து ஒரு பரிசு பொருளை கொடுத்தாள் அதை வாங்கியவள்,
“இதில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டதும், “பிரித்துப் பார் உனக்கே தெரியும்..” என்று சொல்ல, அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு மொபைல் போன் இருக்க,
“இது எதுக்கு எனக்கு..?” என்று கேட்டவளின் தலையில் கொட்டியவள், “இது உனக்கு கண்டிப்பாகத் தேவை.. நீ இதைப் பத்திரமாக வைத்துக் கொள் எழில்.. உனக்கு நான் பேசணும் என்றால் இதில் தான் பேசுவேன்.. இதை உன்னோட அண்ணன் கையில் மட்டும் கொடுத்துவிடாதே..” என்று எச்சரித்தவள், தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு சென்றுவிட்டாள்..
காலையிலேயே மாரியம்மன் கோவிலில் திருவிழா சாட்டப்பட்டு அடுத்தடுத்து கோவிலில் வேலைகள் நடக்க அந்த ஊரில் பெரிய குடும்பம் என்ற சார்பில் ஜெயந்தியம்மாவும் கோவிலில் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்..
மூன்று நாள் கழித்து கோவில் திருவிழா நாளும் அழகாக விடிந்தது.. அன்புவிற்கு எழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் இன்னும் அங்குதான் இருக்கிறாளா..? இல்லை வேறு ஊரில் படிகிறாளா..? என்று மனதில் ஆயிரம் குழப்பங்களை சுமந்த வண்ணம் இருந்தான்..
இனியா மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தாள்.. அன்பு பட்டு வேஷ்டி, சிவப்பு கலர் சர்ட்டி பார்க்க மாப்பிள்ளை போல இருந்தான்.. இனியா கேட்கவே வேண்டாம் பட்டுப்பாவாடை தாவணியில் அழகு தேவதை போல இருந்தாள்..
ஜெயந்தியம்மா தனது பேரன் பேத்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.. அங்கே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட, எல்லோரும் குழவை இட்டு பொங்கல் வைக்க எல்லா மாமன் முறை பசங்களும் அத்தை பொண்ணை சைட் அடிக்கவே திருவிழாக்கு வந்திருந்திருந்தனர்..
காலையில் கோவில் திருவிழாவிற்கு கிளம்பிய எழில்விழி, அண்ணனின் வீட்டிற்கு சென்று, “அண்ணி நீங்க கோவிலுக்கு வரீங்களா..?” என்று கேட்டதும் வெளியே வந்த தனம்,
“இல்லடா அண்ணி வரலடா.. நீ போயிட்டு வா..” என்று சொல்லியவள், “மஞ்சுவை என்னிடம் கொடுத்துவிட்டு போடா..” என்று சொல்ல,
“இல்லங்க அண்ணி அண்ணா வந்த இவளையும் அடித்தாலும் அடிப்பான்.. நானே அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “மாமா எங்கே எழில்..?” என்று கேட்டாள் தனம்..
“அப்பா உரம் வாங்க போயிருக்கிறார் அண்ணி..” என்று கூறியவள், “சரிங்க அண்ணி கோவிலில் பொங்கல் வைக்க நேரம் ஆச்சு.. நான் போயிட்டு வருகிறேன் அண்ணி..” என்று கூறியவள்
மஞ்சுவை அழைத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்க அவளைப் பார்த்த தனம் அவளின் தலையில் பூவில்லாது கண்டு வீட்டின் உள்ளே சென்று கட்டிவைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து வந்து, “எழில் கொஞ்சம் நில்லும்மா..” என்று கூற அண்ணியின் குரல் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள் எழில்விழி..
அவளின் பின்னோடு ஓடிவந்த தனம், “இந்த கோவிலுக்கு போற பிள்ளை தலைக்கு பூ வைக்காமல் போகிறாயே..” என்று அவளின் தலையில் மல்லிகை பூவை வைத்துவிட்டு அவளை திருப்பி நிறுத்து அழகு பார்த்தவள்,
“ஐயோ என்னோட கண்ணே பட்டுவிடும் போல..” என்று அவளுக்கு தனம் அவளுக்கு திஷ்டிப் போட்டு வைத்துவிட்டு மஞ்சுவின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளும் தனத்திற்கு முத்தம் பதித்துவிட்டு,
“எழில் கொஞ்சம் பார்த்து சூதனாக இருக்கணும்.. அடுப்பு எரியும் பொழுது முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிட்டு வேலையைப் பாரு.. சாமியை நல்ல வேண்டிக்க, மஞ்சுவையும் பத்திரமாக பார்த்துக் கொள்.. நீ வீடு வரும் வரையில் எனக்கு பதட்டமாக இருக்கும் பார்த்து பத்திரமாக போயிட்டு வரணும்.. மஞ்சு பத்திரம்.. நீயும் பத்திரமாக இருடா..” என்று எழிலுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள் தனம்..
அவளிடம் அறிவுரை கேட்டவள், “சரிங்க அண்ணி நானும், பாப்பாவும் பத்திரமாகப் போயிட்டு வருகிறோம்..” என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்றாள்..
எழில்விழி ஆரஞ்சு கலர் நிறத்தில் சேலை கட்டி, தலைமுடி இடையோடு இசைந்தாட அந்த கூந்தலில் மல்லிகை பூயும் மலர்ந்து மனம் வீச, கண்ணுக்கு மையிட்டு எழில் அழகிய ஓவியம் போல வர கிராமத்து மனங்கள் அனைத்தும் அவளின் காலடியில் விழுந்தது.. அந்த அளவான ஒப்பனைக்கே இளவட்டங்களின் கண்கள் அவளை வட்டமிட, அந்த விழியலகியோ அவர்கள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை..
அவளும் பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று அவளின் அருகில் மஞ்சுவை அமர வைத்தவள், “மஞ்சு குட்டி சமத்த உட்காத்திருப்பாங்கலாம்.. அக்கா பொங்கல் வைத்து முடித்ததும் இருவரும் சாமி கும்பிட போகலாம் என்று சொல்ல அரிசிப்பல் தெரிய சிரித்தவள்,
“ததி இக்க..” என்று சொல்ல அவளின் கன்னத்தில் முத்தம் இட்டவள் அவளின் அருகில் அமர்ந்து பொங்கல் வைக்க எல்லாம் எடுத்து வைத்தாள்.. அவளின் பின்னோடு வந்த இனியா எழிலைப் பார்த்து,
“எழில் செல்லம் இவ்வளவு அழகாக இருக்கிறாயே..” என்று அவள் பேரு மூச்சு ஒன்றை வெளியிட, அவளை நிமிர்ந்து பார்த்த எழில்,
“எதுக்கும்மா இந்த அளவிற்கு மூச்சை விடுகிறாய்..?” என்று கேட்டுகொண்டே பொங்கல் பானையையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தாள்..
“பெருமூச்சு விடாமல் என்ன செய்ய..? என்னால் அது மட்டும் தான் செய்ய முடியும்.. இப்பொழுது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கிறது..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..
“நான் ஏன் ஆணாகப் பிறக்கவில்லை என்று..” என்று அவள் குறும்பாகக் கண்சிமிட்டிக் கூற, “அடியே இது கோவில்..” என்று எழில் இனியாவின் முதுகில் ஒன்று போட கலகலவென்று சிரித்த இனியா அவளிடம் வம்பிழுத்துக் கொண்டு பொங்கல் வைத்தனர்..
அன்பு நடப்பதை கவனிக்காமல் ஏதோ வந்தோம் கோவிலில் சாமி கும்பிட்டோம் போவோம் என்ற நிலையில் இருந்தான். இனியா பொங்கல் வைக்க நமக்கு இங்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டிருக்க அவனின் அருகில் வந்த ஜெயந்திம்மா,
“என்ன கண்ணா தனியாக நிற்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இங்கே எந்த நட்பு வட்டாரமும் இல்லையே.. அதுதான் பாட்டி வேற ஒன்றும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க,
“இருங்க பாட்டி அப்பா கூப்பிடுகிறார் என்ன என்று கேட்டு வருகிறேன்..” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.. தனது பேரனைப் பார்த்தவர் முகம் அவனுடன் எழிலை ஒப்பிட்டுப் பார்த்தது..
மறுநாள் காலை எழுந்த இனியா தனது அன்னைக்கு போன் செய்து, “அம்மா அண்ணா இங்கே ஒரு வாரம் இருக்கட்டும்..” என்று சொல்ல,
“இனியா அண்ணனுக்கு கவுன்சிலிங் லெட்டர் வந்ததும் அவனை ‘லா’ காலேஜ் சேரனும் கண்ணா.. அன்புவை இங்கே அனுப்பிவிடும்மா..” என்று அவர் சொல்ல,
“இந்த வருடம் ஊர் திருவிழாவிற்கு அண்ணா வந்திருக்கிறான்.. இன்னும் இரண்டு நாள் கழித்து அனுப்புகிறேன் அம்மா..” என்று அவளும் செல்லம் கொஞ்சினாள்..
அன்னையிடம் இருந்து போனை வாங்கிய அறிவு, “உனக்கு சின்ன அண்ணா முக்கியம் அல்ல.. பெரிய அண்ணாவை மட்டும் அங்கே வரச்சொல்லி விட்டு இப்பொழுது செல்லம் கொஞ்சுகிறாயா..?” என்று கோபம் போல கேட்டது அவனின் அருகில் வந்து அமர்ந்த தியாகராஜன்,
“டேய் அவளை திட்டாதே.. உனக்கு இது பன்னிரண்டாம் வகுப்பு அதில் கவனம் செலுத்து மற்றதை அப்புறம் பார்க்கலாம்..” என்று கூறியவர், அலைபேசியை அவனிடம் இருந்து வாங்கினார்..
“இனிய செல்லம் உன்னோட அண்ணா அங்கே இருக்கட்டும்.. ஆனால் கவுன்சில் லெட்டர் வந்ததும் அவனை இங்கே அனுப்பனும்..” என்று சொல்ல,
“என்னோட ஸ்வீட் டாடி.. தேங்க்ஸ் அப்பா.. கவுன்சில் லெட்டர் வந்தும் சொல்லுங்க அண்ணாவை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியவள்,
“அப்பா சின்ன அண்ணா பாவம் அவனை திட்டாதீங்க.. அவனும் அன்பு அண்ணா போல என்மேல் பாசம் அதிகம் வைத்திருக்கிறான்.. அண்ணா கோபத்தில் சொல்லியிருக்காது.. அண்ணாவிற்கு என்னை பார்க்க வர முடியவில்லை என்று வருத்தம் அதுதான்..” என்று சொல்ல அவள் சொல்வதை கேட்ட அறிவுமதி,
“இனியா செல்லம் அண்ணா விளையாட்டு அப்படி சொன்னேன்.. உன்மேல் எனக்கு என்னம்மா கோபம்..?” என்று பாசத்துடன் கேட்ட மகனைப் பார்த்த பெற்றோர் முகமும் மனமும் நிறைந்தது..
தங்களின் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் இருப்பதை நினைத்து அவர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.. பிறகு பாட்டியிடம் பேசியவன் போனை வைக்க பெரியவர்கள் தங்களின் வேலையை கவனித்தனர்..
இனியா தான் சொன்னது படியே அவளின் அன்னையிடம் பேசி கோவில் திருவிழாவிற்கு அண்ணனை அங்கேயே இருக்க வைத்தாள்..
ஆஷா அன்று ஒருநாள் மட்டும் எழில்விழி வீட்டில் தாங்கியவள் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு கிளம்பியவள்,
“ஆஷா கிளம்புகிறாயா..?” என்று வருத்ததுடன் கேட்டவளின் அருகில் வந்த ஆஷா, “எழில் வருத்தபடாமல் இரு.. நான் இங்கே கோயம்புத்தூர் ‘லா’ காலேஜில் தான் சேரப் போகிறேன்.. முடிந்த வரை உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன்..” என்று சொல்லி அவளை தேற்றியவள்,
“இது என்னோட மொபைல் நம்பர்.. என்னிடம் நீ எப்பொழுது வேண்டுமாலும் பேசு சரியா..?” என்று கூற அவளும் மலர்ந்த முகத்தோடு தலையசைக்க,
“சரி எழில் நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன்..” என்று கூறியவள் தனது பையைத் திறந்து ஒரு பரிசு பொருளை கொடுத்தாள் அதை வாங்கியவள்,
“இதில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டதும், “பிரித்துப் பார் உனக்கே தெரியும்..” என்று சொல்ல, அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு மொபைல் போன் இருக்க,
“இது எதுக்கு எனக்கு..?” என்று கேட்டவளின் தலையில் கொட்டியவள், “இது உனக்கு கண்டிப்பாகத் தேவை.. நீ இதைப் பத்திரமாக வைத்துக் கொள் எழில்.. உனக்கு நான் பேசணும் என்றால் இதில் தான் பேசுவேன்.. இதை உன்னோட அண்ணன் கையில் மட்டும் கொடுத்துவிடாதே..” என்று எச்சரித்தவள், தன்னுடைய மாமாவின் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு சென்றுவிட்டாள்..
காலையிலேயே மாரியம்மன் கோவிலில் திருவிழா சாட்டப்பட்டு அடுத்தடுத்து கோவிலில் வேலைகள் நடக்க அந்த ஊரில் பெரிய குடும்பம் என்ற சார்பில் ஜெயந்தியம்மாவும் கோவிலில் பொறுப்பெடுத்துக் கொண்டு செய்தார்..
மூன்று நாள் கழித்து கோவில் திருவிழா நாளும் அழகாக விடிந்தது.. அன்புவிற்கு எழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் இன்னும் அங்குதான் இருக்கிறாளா..? இல்லை வேறு ஊரில் படிகிறாளா..? என்று மனதில் ஆயிரம் குழப்பங்களை சுமந்த வண்ணம் இருந்தான்..
இனியா மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்தாள்.. அன்பு பட்டு வேஷ்டி, சிவப்பு கலர் சர்ட்டி பார்க்க மாப்பிள்ளை போல இருந்தான்.. இனியா கேட்கவே வேண்டாம் பட்டுப்பாவாடை தாவணியில் அழகு தேவதை போல இருந்தாள்..
ஜெயந்தியம்மா தனது பேரன் பேத்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.. அங்கே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட, எல்லோரும் குழவை இட்டு பொங்கல் வைக்க எல்லா மாமன் முறை பசங்களும் அத்தை பொண்ணை சைட் அடிக்கவே திருவிழாக்கு வந்திருந்திருந்தனர்..
காலையில் கோவில் திருவிழாவிற்கு கிளம்பிய எழில்விழி, அண்ணனின் வீட்டிற்கு சென்று, “அண்ணி நீங்க கோவிலுக்கு வரீங்களா..?” என்று கேட்டதும் வெளியே வந்த தனம்,
“இல்லடா அண்ணி வரலடா.. நீ போயிட்டு வா..” என்று சொல்லியவள், “மஞ்சுவை என்னிடம் கொடுத்துவிட்டு போடா..” என்று சொல்ல,
“இல்லங்க அண்ணி அண்ணா வந்த இவளையும் அடித்தாலும் அடிப்பான்.. நானே அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்ல, “மாமா எங்கே எழில்..?” என்று கேட்டாள் தனம்..
“அப்பா உரம் வாங்க போயிருக்கிறார் அண்ணி..” என்று கூறியவள், “சரிங்க அண்ணி கோவிலில் பொங்கல் வைக்க நேரம் ஆச்சு.. நான் போயிட்டு வருகிறேன் அண்ணி..” என்று கூறியவள்
மஞ்சுவை அழைத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்க அவளைப் பார்த்த தனம் அவளின் தலையில் பூவில்லாது கண்டு வீட்டின் உள்ளே சென்று கட்டிவைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து வந்து, “எழில் கொஞ்சம் நில்லும்மா..” என்று கூற அண்ணியின் குரல் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள் எழில்விழி..
அவளின் பின்னோடு ஓடிவந்த தனம், “இந்த கோவிலுக்கு போற பிள்ளை தலைக்கு பூ வைக்காமல் போகிறாயே..” என்று அவளின் தலையில் மல்லிகை பூவை வைத்துவிட்டு அவளை திருப்பி நிறுத்து அழகு பார்த்தவள்,
“ஐயோ என்னோட கண்ணே பட்டுவிடும் போல..” என்று அவளுக்கு தனம் அவளுக்கு திஷ்டிப் போட்டு வைத்துவிட்டு மஞ்சுவின் கன்னத்தில் முத்தம் வைக்க அவளும் தனத்திற்கு முத்தம் பதித்துவிட்டு,
“எழில் கொஞ்சம் பார்த்து சூதனாக இருக்கணும்.. அடுப்பு எரியும் பொழுது முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிட்டு வேலையைப் பாரு.. சாமியை நல்ல வேண்டிக்க, மஞ்சுவையும் பத்திரமாக பார்த்துக் கொள்.. நீ வீடு வரும் வரையில் எனக்கு பதட்டமாக இருக்கும் பார்த்து பத்திரமாக போயிட்டு வரணும்.. மஞ்சு பத்திரம்.. நீயும் பத்திரமாக இருடா..” என்று எழிலுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள் தனம்..
அவளிடம் அறிவுரை கேட்டவள், “சரிங்க அண்ணி நானும், பாப்பாவும் பத்திரமாகப் போயிட்டு வருகிறோம்..” என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்றாள்..
எழில்விழி ஆரஞ்சு கலர் நிறத்தில் சேலை கட்டி, தலைமுடி இடையோடு இசைந்தாட அந்த கூந்தலில் மல்லிகை பூயும் மலர்ந்து மனம் வீச, கண்ணுக்கு மையிட்டு எழில் அழகிய ஓவியம் போல வர கிராமத்து மனங்கள் அனைத்தும் அவளின் காலடியில் விழுந்தது.. அந்த அளவான ஒப்பனைக்கே இளவட்டங்களின் கண்கள் அவளை வட்டமிட, அந்த விழியலகியோ அவர்கள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை..
அவளும் பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று அவளின் அருகில் மஞ்சுவை அமர வைத்தவள், “மஞ்சு குட்டி சமத்த உட்காத்திருப்பாங்கலாம்.. அக்கா பொங்கல் வைத்து முடித்ததும் இருவரும் சாமி கும்பிட போகலாம் என்று சொல்ல அரிசிப்பல் தெரிய சிரித்தவள்,
“ததி இக்க..” என்று சொல்ல அவளின் கன்னத்தில் முத்தம் இட்டவள் அவளின் அருகில் அமர்ந்து பொங்கல் வைக்க எல்லாம் எடுத்து வைத்தாள்.. அவளின் பின்னோடு வந்த இனியா எழிலைப் பார்த்து,
“எழில் செல்லம் இவ்வளவு அழகாக இருக்கிறாயே..” என்று அவள் பேரு மூச்சு ஒன்றை வெளியிட, அவளை நிமிர்ந்து பார்த்த எழில்,
“எதுக்கும்மா இந்த அளவிற்கு மூச்சை விடுகிறாய்..?” என்று கேட்டுகொண்டே பொங்கல் பானையையில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தாள்..
“பெருமூச்சு விடாமல் என்ன செய்ய..? என்னால் அது மட்டும் தான் செய்ய முடியும்.. இப்பொழுது தான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கிறது..” என்று கூறியவளைப் புரியாமல் பார்த்தாள் எழில்விழி..
“நான் ஏன் ஆணாகப் பிறக்கவில்லை என்று..” என்று அவள் குறும்பாகக் கண்சிமிட்டிக் கூற, “அடியே இது கோவில்..” என்று எழில் இனியாவின் முதுகில் ஒன்று போட கலகலவென்று சிரித்த இனியா அவளிடம் வம்பிழுத்துக் கொண்டு பொங்கல் வைத்தனர்..
அன்பு நடப்பதை கவனிக்காமல் ஏதோ வந்தோம் கோவிலில் சாமி கும்பிட்டோம் போவோம் என்ற நிலையில் இருந்தான். இனியா பொங்கல் வைக்க நமக்கு இங்கு என்ன வேலை என்று யோசித்துக் கொண்டிருக்க அவனின் அருகில் வந்த ஜெயந்திம்மா,
“என்ன கண்ணா தனியாக நிற்கிறாய்..?” என்று கேட்டதும், “எனக்கு இங்கே எந்த நட்பு வட்டாரமும் இல்லையே.. அதுதான் பாட்டி வேற ஒன்றும் இல்லை..” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க,
“இருங்க பாட்டி அப்பா கூப்பிடுகிறார் என்ன என்று கேட்டு வருகிறேன்..” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.. தனது பேரனைப் பார்த்தவர் முகம் அவனுடன் எழிலை ஒப்பிட்டுப் பார்த்தது..