Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
மகிழும் ஜென்னியும் கடற்மணலில் நடந்தபடி வந்து கொண்டிருந்தனர்.
அவளோ உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு அழுத்தமாய் இருக்க,
மகிழ் பொறுமையிழந்தான்.
"அப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்ல மாட்ட ?" என்று அவன் கோபமான தொனியில் கேட்க,
அவள் நின்றபடி அவன் முகத்தை பார்த்து, "அப்படி எல்லாம் இல்ல மகிழ்... எனக்கு ஒரு ஆக்ஸிடென்டாயிடுச்சு... டேவிட்தான் என்னை காப்பாத்தினாரு... தலையில அடிப்பட்டு மெமரி லாஸாயிடுச்சு... அந்த டைம்ல நான் ஜென்னித்தாவா இருந்தேன்... ஞாபகம் வந்த பிறகும் நான் ஜென்னித்தாவாவே இருந்துட்டேன்... அவ்வளவுதான்" என்று மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்க, அவன் சத்தமாய் சிரித்தான்.
"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க ?" அவள் கடுகடுத்து கேட்க,
"இல்ல... இந்த இங்கிலீஷ் க்விஷ்ன் பேப்பர் ஹ்ன்ட்ஸ் கொடுத்துட்டு ஸ்டோரியை எழுத சொல்லுவாங்க... அப்படி இருக்கு நீ சொல்றது... " என்றான்.
"நான் ஒண்ணும் கதை சொல்லல மகிழ்"
"நீ இதை கதையா சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்"
"நம்பாட்டி போங்க... ஆனா இதுதான் நிஜம்"
"சரி நம்பிறேன்... நீ பழசை எல்லாம் மறந்துட்ட... உன்னை டேவிட் காப்பாத்தினாரு... இல்லையா ?!" என்றவன் கேட்டு கூர்மையாய் அவள் பார்க்க,
"ஆமாம்" என்றாள் ஜென்னி.
"டேவிட் ஒண்ணும் சாதாரணமான ஆளில்ல சாக்ஷி... அவரூ மட்டும் நினைச்சிருந்தா உன் டீடைல்ஸை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆயிருக்க போகுது" என்றதும்,
அவள் தடுமாறி "அது" என்று யோசிக்க,
அவன் மேலும் "இன்னொரு விஷயம் இருக்கு... நீ போட்டிருந்த வாட்ச் டாலரெல்லாம் வேறொரு பொண்ணு எப்படி போட்டிருக்க முடியும் ? நீ உயிரோட இருக்கன்னா அந்த பொண்ணு யாரு? எதுக்கு இந்த டிராமா ? யாருக்காக இந்த டிராமா ?" வரிசையாய் அவன் கேள்விகளை அடுக்க, அவள் எப்படி பதிலுரைப்பது என திணறிக் கொண்டிருந்தாள்.
மேலும் அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்து வண்ணம்,
"நீ ஜென்னித்தா விக்டரா இருக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஆனா சாக்ஷிங்கிறவ எங்கே தொலைஞ்சி போனா ?!! அதுதான் எனக்கு தெரியனும்" என்றவன் வினவ,
அவள் அவனை ஏறிட்டு "தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க மகிழ்?" என்று அலட்சியமாய் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நமக்குள்ள இந்த நிமிஷம் எந்த உறவும் இல்லாம இருக்கலாம்... ஆனா உன்னை பத்தி தப்பா பேசிறதை என்னால எப்படி கேட்டிட்டிருக்க முடியும் ?" என்று அவன் சொன்ன நொடி அவன் புறம் திரும்பியவள்,
"தப்பாவா... யாரு ?" என்று குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தாள்.
அவன் நடந்ததை சொல்ல துணிவில்லாமல் மௌனமாய் நின்றான்.
ஜென்னி அவன் முன்னே வந்து, "மகிழ் பேசுங்க" என்க,
அவன் தயங்கி தயங்கி வேந்தனை சந்தித்து அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் கைகலப்பையும் உரைக்க,
கைகட்டியபடி ஒரு எள்ளலான புன்னகையோடு பார்த்தவள், "அவர் ரொம்ப ஒழுக்க சீலர்... என்னை சொல்ல வந்துட்டாராக்கும்" என்று சொல்லியவள் அதோடு நிறுத்தாமல்
மகிழை விழி இடுங்க பார்க்க, அவன் பதிலின்றி நின்றிருந்தான்.
"ஏன் மகிழ் ? சந்தேகம் அவருக்கு மட்டும்தானா ? இல்ல உங்களுக்குமா ?" என்று கேட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்க்க,
அவன் தீயை தொட்டவன் போல "சாக்ஷி" என்று துடித்து போனான்.
"இப்ப ஏன் இவ்வளவு டென்ஷாகிறீங்க ? நத்திங் ராங் இன் இட்... சந்தேகப்படிறது அக்னி பரிட்சை செய்றது இதெல்லாம் கடவுளுக்கே உண்டுன்னும் போது... நம்மெல்லாம் ஆஃப்டிரால்... சாதாரணமான மனிஷங்கதானே மகிழ்" என்று அவள் ரொம்பவும் இயல்பாக சொல்லவும், அந்த வார்த்தை சற்று கடுமையாகவே அவனை தாக்கியது.
"ஏ ... என்ன நீ? உன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிட்டிருக்க... நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு இப்ப சொன்னனே" என்க,
"அந்த எண்ணம் இல்லாமலா என்னை நீங்க இங்க வரவைச்சீங்க ?!" என்று அவள் கேட்க,
"வேண்டாம் சாக்ஷி... வார்த்தையை விடாதே" என்று அவளை விரல் நீட்டி எச்சரித்தான்.
அவளின் அலட்சியப் பார்வையில் தன்னை அவள் நம்பவில்லை என்பதை தெளிந்து கொண்டவனுக்கு விழிகளில் நீர் கோர்த்தது.
"யார் யாரோ சொன்னாங்கன்னு நீ என் காதலை சந்தேகப்பட்டிருக்கலாம்... ஆனா அந்த கடவுளே வந்து சொன்னாலும் உன்னை நான் சந்தேகப்பட மாட்டேன் சாக்ஷி..." என்று நிறுத்தியவன் மீண்டும்,
"ஏன்னா அந்தளவுக்கு உன்னை நான் காதலிச்சேன் டி" என்று அவன் கனத்த மனதோடு உரைக்க,
அவன் வார்த்தை அவள் மனதையும் கனக்க செய்தது.
அதை காட்டிக் கொள்ளாமல் அவள் திரும்பியே நின்றிருந்தாள்.
அந்த நிராகரிப்பு அவனை ரொம்பவும் காயப்படுத்திவிட, "பைஃன்... நான் கிளம்பிறேன்... இதுவே நம்மோட லாஸ்ட் லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... இன்னொரு தடவை உன்னை பார்க்கிற சக்தி எனக்கில்லை... குட் பை..." என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென அகல, அவன் சென்ற பின்னரே அவள் பார்வை அவன் செல்லும் திசையின் புறம் திரும்பியது.
கடலில் வீழ்ந்த பல துளிகளில் ஒரு சில துளிகளில் மட்டுமே சிற்பிக்குள் வீழ்ந்து முத்தாகும். அப்படி முத்தாய் மாறினாலும் அவை எல்லாம் அணிகலனாய் மாறி போற்றுதலுக்குரிய மதிப்பை அடைந்து விடுகிறதா என்ன ?
அப்படி விழுந்த துளிதான் அவன் தன் மீது கொண்ட காதல். ஆனால் அது அணிகலனாய் மாறாமல் சிற்பிக்குள்ளேயே மூடிக்கிடக்க வேண்டும் என்பது விதியாகிய பட்சத்தில் யார் என்ன செய்ய முடியும் ?
இருப்பினும் அவன் காதல் விலைமதிப்பற்றதுதான் என்று எண்ணிக் கொண்டவள், அவன் சென்ற பாதையை ஏக்கமாய் பார்த்து, பெரூமுச்சொன்றை வெளிவிட்டவள் சோர்வாக நடந்து சென்று கார் நின்ற இடத்தை அடைந்தாள்.
அழுத்தமான மௌனத்தோடு டேவிட் அருகில் அவள் நிற்க, சோகத்தின் மொத்த குவியலாகவே கிடந்தது அவள் முகம்.
அவள் அப்படி நிற்பதை பார்த்து மிரட்சியடைந்தவன் "ஜென்னி" என்றழைக்க,
அவள் பதிலில்லாமல் எங்கேயோ வெறித்துக் கிடந்தாள்.
அவள் அருகாமையில் வந்து "ஜென்னி என்ன ?" என்று கேட்டு அவள் தோள்களை குலுக்க, அவள் அத்தனை நேரம் கட்டுக்குள் வைத்திருந்த அவள் உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக் கொண்டன.
அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கேவி அழத்தொடங்கினாள்.
அந்த நொடி அவள் மனநிலை என்ன நிலையில் இருந்திருக்கும் என்பதை அவனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் உணர்வுகளை அவனிடம் கொட்டித் தீர்த்து கொண்டிருக்க,
எந்தவிதத்திலும் அவளை இடையூறு செய்யாமல் அவள் அமைதிபெறும் வரை பொறுமையாய் நின்றுகொண்டிருந்தான் ஓர் தூணை போல.
***********
அவளோ உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு அழுத்தமாய் இருக்க,
மகிழ் பொறுமையிழந்தான்.
"அப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்ல மாட்ட ?" என்று அவன் கோபமான தொனியில் கேட்க,
அவள் நின்றபடி அவன் முகத்தை பார்த்து, "அப்படி எல்லாம் இல்ல மகிழ்... எனக்கு ஒரு ஆக்ஸிடென்டாயிடுச்சு... டேவிட்தான் என்னை காப்பாத்தினாரு... தலையில அடிப்பட்டு மெமரி லாஸாயிடுச்சு... அந்த டைம்ல நான் ஜென்னித்தாவா இருந்தேன்... ஞாபகம் வந்த பிறகும் நான் ஜென்னித்தாவாவே இருந்துட்டேன்... அவ்வளவுதான்" என்று மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்க, அவன் சத்தமாய் சிரித்தான்.
"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க ?" அவள் கடுகடுத்து கேட்க,
"இல்ல... இந்த இங்கிலீஷ் க்விஷ்ன் பேப்பர் ஹ்ன்ட்ஸ் கொடுத்துட்டு ஸ்டோரியை எழுத சொல்லுவாங்க... அப்படி இருக்கு நீ சொல்றது... " என்றான்.
"நான் ஒண்ணும் கதை சொல்லல மகிழ்"
"நீ இதை கதையா சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்"
"நம்பாட்டி போங்க... ஆனா இதுதான் நிஜம்"
"சரி நம்பிறேன்... நீ பழசை எல்லாம் மறந்துட்ட... உன்னை டேவிட் காப்பாத்தினாரு... இல்லையா ?!" என்றவன் கேட்டு கூர்மையாய் அவள் பார்க்க,
"ஆமாம்" என்றாள் ஜென்னி.
"டேவிட் ஒண்ணும் சாதாரணமான ஆளில்ல சாக்ஷி... அவரூ மட்டும் நினைச்சிருந்தா உன் டீடைல்ஸை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆயிருக்க போகுது" என்றதும்,
அவள் தடுமாறி "அது" என்று யோசிக்க,
அவன் மேலும் "இன்னொரு விஷயம் இருக்கு... நீ போட்டிருந்த வாட்ச் டாலரெல்லாம் வேறொரு பொண்ணு எப்படி போட்டிருக்க முடியும் ? நீ உயிரோட இருக்கன்னா அந்த பொண்ணு யாரு? எதுக்கு இந்த டிராமா ? யாருக்காக இந்த டிராமா ?" வரிசையாய் அவன் கேள்விகளை அடுக்க, அவள் எப்படி பதிலுரைப்பது என திணறிக் கொண்டிருந்தாள்.
மேலும் அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்து வண்ணம்,
"நீ ஜென்னித்தா விக்டரா இருக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஆனா சாக்ஷிங்கிறவ எங்கே தொலைஞ்சி போனா ?!! அதுதான் எனக்கு தெரியனும்" என்றவன் வினவ,
அவள் அவனை ஏறிட்டு "தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறீங்க மகிழ்?" என்று அலட்சியமாய் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"நமக்குள்ள இந்த நிமிஷம் எந்த உறவும் இல்லாம இருக்கலாம்... ஆனா உன்னை பத்தி தப்பா பேசிறதை என்னால எப்படி கேட்டிட்டிருக்க முடியும் ?" என்று அவன் சொன்ன நொடி அவன் புறம் திரும்பியவள்,
"தப்பாவா... யாரு ?" என்று குழப்பமும் அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தாள்.
அவன் நடந்ததை சொல்ல துணிவில்லாமல் மௌனமாய் நின்றான்.
ஜென்னி அவன் முன்னே வந்து, "மகிழ் பேசுங்க" என்க,
அவன் தயங்கி தயங்கி வேந்தனை சந்தித்து அவர்களுக்குள் நடந்த உரையாடலையும் கைகலப்பையும் உரைக்க,
கைகட்டியபடி ஒரு எள்ளலான புன்னகையோடு பார்த்தவள், "அவர் ரொம்ப ஒழுக்க சீலர்... என்னை சொல்ல வந்துட்டாராக்கும்" என்று சொல்லியவள் அதோடு நிறுத்தாமல்
மகிழை விழி இடுங்க பார்க்க, அவன் பதிலின்றி நின்றிருந்தான்.
"ஏன் மகிழ் ? சந்தேகம் அவருக்கு மட்டும்தானா ? இல்ல உங்களுக்குமா ?" என்று கேட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்க்க,
அவன் தீயை தொட்டவன் போல "சாக்ஷி" என்று துடித்து போனான்.
"இப்ப ஏன் இவ்வளவு டென்ஷாகிறீங்க ? நத்திங் ராங் இன் இட்... சந்தேகப்படிறது அக்னி பரிட்சை செய்றது இதெல்லாம் கடவுளுக்கே உண்டுன்னும் போது... நம்மெல்லாம் ஆஃப்டிரால்... சாதாரணமான மனிஷங்கதானே மகிழ்" என்று அவள் ரொம்பவும் இயல்பாக சொல்லவும், அந்த வார்த்தை சற்று கடுமையாகவே அவனை தாக்கியது.
"ஏ ... என்ன நீ? உன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு பேசிட்டிருக்க... நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு இப்ப சொன்னனே" என்க,
"அந்த எண்ணம் இல்லாமலா என்னை நீங்க இங்க வரவைச்சீங்க ?!" என்று அவள் கேட்க,
"வேண்டாம் சாக்ஷி... வார்த்தையை விடாதே" என்று அவளை விரல் நீட்டி எச்சரித்தான்.
அவளின் அலட்சியப் பார்வையில் தன்னை அவள் நம்பவில்லை என்பதை தெளிந்து கொண்டவனுக்கு விழிகளில் நீர் கோர்த்தது.
"யார் யாரோ சொன்னாங்கன்னு நீ என் காதலை சந்தேகப்பட்டிருக்கலாம்... ஆனா அந்த கடவுளே வந்து சொன்னாலும் உன்னை நான் சந்தேகப்பட மாட்டேன் சாக்ஷி..." என்று நிறுத்தியவன் மீண்டும்,
"ஏன்னா அந்தளவுக்கு உன்னை நான் காதலிச்சேன் டி" என்று அவன் கனத்த மனதோடு உரைக்க,
அவன் வார்த்தை அவள் மனதையும் கனக்க செய்தது.
அதை காட்டிக் கொள்ளாமல் அவள் திரும்பியே நின்றிருந்தாள்.
அந்த நிராகரிப்பு அவனை ரொம்பவும் காயப்படுத்திவிட, "பைஃன்... நான் கிளம்பிறேன்... இதுவே நம்மோட லாஸ்ட் லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... இன்னொரு தடவை உன்னை பார்க்கிற சக்தி எனக்கில்லை... குட் பை..." என்று சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென அகல, அவன் சென்ற பின்னரே அவள் பார்வை அவன் செல்லும் திசையின் புறம் திரும்பியது.
கடலில் வீழ்ந்த பல துளிகளில் ஒரு சில துளிகளில் மட்டுமே சிற்பிக்குள் வீழ்ந்து முத்தாகும். அப்படி முத்தாய் மாறினாலும் அவை எல்லாம் அணிகலனாய் மாறி போற்றுதலுக்குரிய மதிப்பை அடைந்து விடுகிறதா என்ன ?
அப்படி விழுந்த துளிதான் அவன் தன் மீது கொண்ட காதல். ஆனால் அது அணிகலனாய் மாறாமல் சிற்பிக்குள்ளேயே மூடிக்கிடக்க வேண்டும் என்பது விதியாகிய பட்சத்தில் யார் என்ன செய்ய முடியும் ?
இருப்பினும் அவன் காதல் விலைமதிப்பற்றதுதான் என்று எண்ணிக் கொண்டவள், அவன் சென்ற பாதையை ஏக்கமாய் பார்த்து, பெரூமுச்சொன்றை வெளிவிட்டவள் சோர்வாக நடந்து சென்று கார் நின்ற இடத்தை அடைந்தாள்.
அழுத்தமான மௌனத்தோடு டேவிட் அருகில் அவள் நிற்க, சோகத்தின் மொத்த குவியலாகவே கிடந்தது அவள் முகம்.
அவள் அப்படி நிற்பதை பார்த்து மிரட்சியடைந்தவன் "ஜென்னி" என்றழைக்க,
அவள் பதிலில்லாமல் எங்கேயோ வெறித்துக் கிடந்தாள்.
அவள் அருகாமையில் வந்து "ஜென்னி என்ன ?" என்று கேட்டு அவள் தோள்களை குலுக்க, அவள் அத்தனை நேரம் கட்டுக்குள் வைத்திருந்த அவள் உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக் கொண்டன.
அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கேவி அழத்தொடங்கினாள்.
அந்த நொடி அவள் மனநிலை என்ன நிலையில் இருந்திருக்கும் என்பதை அவனால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் உணர்வுகளை அவனிடம் கொட்டித் தீர்த்து கொண்டிருக்க,
எந்தவிதத்திலும் அவளை இடையூறு செய்யாமல் அவள் அமைதிபெறும் வரை பொறுமையாய் நின்றுகொண்டிருந்தான் ஓர் தூணை போல.
***********