Saranya
அமைச்சர்
Ada paavi muthu ninnu pesinathuku ipadiya adipa..
appadi than akka adikiraan..Ada paavi muthu ninnu pesinathuku ipadiya adipa..
தேங்க்ஸ் ரதி and லக்ஷ்மி சிஸ்டர்Nice
thanks sis.. avan appadithan sis...very nice epi.....
Muthu seriyana rock pols ipdi adichirukkan...........
Enathu ponna ipd adichutane pavi ezhil kutty epd valichurukum ???அவள் புத்தகம் எடுத்து அமருவதைப் பார்த்து, “ஏய் எழில்..” என்று கத்தியதும் அவனின் குரல் கேட்டு நடுங்கியவண்ணம் அவனின் முன்னே வந்தவள்,
“என்னங்க அண்ணா..?!” என்று கேட்டதும், அவனுக்கு கோபம் வர “ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் ரோட்டில் ஒரு பையனுடன் நின்று பேசிட்டு இருப்பாய்.. அதுவும் மாலை மயங்கும் நேரத்தில் உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று கேட்டதும், அவளுக்கு கைகள் சில்லென்று ஆக, அவளின் கண்களில் நிறைந்து நின்ற கண்ணீர் வழியும் நிலையில் இருக்க,
“அண்ணா..” என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்னே, அவளைத் தவறாகப் புரிந்து கொண்டு, பிரம்பை எடுத்து விளாசி விட்டான்..
அவன் அடிக்க அடிக்க, “அண்ணா வேண்டாம் அண்ணா.. எனக்கு ரொம்ப வலிக்குது அண்ணா.. நான் எந்த தப்பும் செய்யல.. என்னை அடிக்காதே அண்ணா..” என்று கதறினாள்..
அப்பொழுதுதான் உள்ளே வந்த பார்வதி தனது பெரிய மகன் தன்னுடைய மகளை அடிப்பதைப் பார்த்து, “டேய் முத்து எதுக்குடா அவளை இந்த அடி அடிக்கிறாய்..? அவள் ரொம்பவே பாவம் டா.. அவளை விடுடா..” என்று அவர்களுக்கு இடையில் புகுந்து அடிவாங்கும் மகளைப் பாதுகாக்க நினைக்க அது அவரால் முடியாமல் போனது..
வீட்டிற்குள் வந்த சுந்தரம் மனைவியின் குரல் கேட்டு, “என்ன பார்வதி என்ன..?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவர் மகள் இருந்த நிலையைக் கண்டு அவரின் கண்கள் கலங்கியது..
அவள் அவனின் அடியில் உடம்பு முழுக்க ரத்தக்கட்டு தழும்புடன் இருக்க, பூ போன்றே மகளைப் பார்த்து பழகிய அந்த தந்தையின் உள்ளம் வலிக்க அவனின் கையில் இருந்த பிரம்பைப் அவனிடம் இருந்து வாங்கியவர்,
அவனது அடியில் மயங்கிய நிலையில் எழில் கீழே சரிய மகளைத் தாங்கிப் பிடித்த பார்வதி, “ஹையோ என்னோட பிள்ளையைக் கண்ணுமண்ணு தெரியாம அடித்திருக்கிறானே.. பாவி.. பாவி..” என்று திட்டியபடியே அவளை அழைத்துச் சென்றார்..
பார்வதி திட்டுவதைப் பார்த்து, “நீ போய் மகளைப் பாரும்மா.. நான் என்ன என்று கேட்கிறேன்..” என்று மனைவியை அனுப்பியவர்,
“என்னடா தப்பு பண்ணினாள் எழில்..?” என்று கேட்டதும், அவரை நிமிர்ந்துப் பார்த்த முத்துக்குமார்,
“அவள் ரோட்டில் யாருடனோ நின்று பேசிக்கொண்டிருக்கிறாள்.. இதை யாராவது பார்த்தால் நம்மளோட குடும்ப மானம் என்ன ஆவது.. நாளைக்கு நான் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்..?” என்று கேட்ட மகனைப் பார்த்தவர்,
“ஓ.. அதுதான் தங்கையைக் கண்டிக்கிறாய் இல்லையா..?” என்று ஒருவிதமானக் குரலில் கேட்டார் அவர்.. அவரின் முகத்தைப் பார்த்தவன்,
“ஏன் நான் கண்டிக்க கூடாதா..?” என்று கேட்டதும் அவருக்கு கோபம் எல்லைக்கடந்தது..
“உன்கூட பிறந்த தங்கை அவள் அவளை கண்டிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனால் அவள் அந்த தவறை செய்தால் கண்டிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது..” என்று அழுத்தமாக அவர் சொல்லவும் அவனுக்கு கோபம் வந்தது..
“இவ இன்னைக்கு எவனோடோ நின்று பேசுவாள்.. இதைப் பார்த்துக் கொண்டு என்னை சும்மா இருக்க சொல்றீங்களா..?” என்று அவன் கேட்டதும்,
“அவள் பேசினாள் என்றால் அவள் வந்ததும் அவளை அழைத்து என்ன விவரம் என்று கேட்டு அவள் தப்பு செய்து நீ அடித்திருந்தால் நான் உன்னை கேள்வியே கேட்க மாட்டேன்.. ஏன் என்றால் அதுதான் ஒரு அண்ணன் தனது தங்கையைக் கண்டிக்கும் முறை..” என்று அவர் பொறுமையாக அவனுக்கு விளக்கவும்,
“நாளைக்கு அவனையே இழுத்துக் கொண்டு ஓடுவாள். அதுக்கும் நான் அவளை அழைத்து என்னம்மா காரணம் என்று விளக்கம் கேட்டு அப்புறம் அடிக்க சொல்றீங்களா..? இவளை எல்லாம் முதலிலேயே கண்டிக்க வேண்டும்..” என்று முத்து கோபத்துடன் கூறியதும், அவரின் பொறுமை பறந்து, அவனின் கன்னத்தில் ‘பளார்..’ என்று அறைந்தார் சுந்தரம். அவரின் கைகள் அவனின் கன்னத்தைப் பதம் பார்த்தது..
அவன் அதிர்ந்து தனது தந்தையை நிமிர்ந்துப் பார்க்க, “என்னடா சொன்ன அவள் உன்னோடு பிறந்தால் என்பதற்காக நீ என்ன பேசினாலும், செய்தாலும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பேன் என்று நினைத்தாயா..?” என்று அவனின் முன்னே விரலை நீட்டி,
“கொன்றுவிடுவேன் சாக்கிரதை..” என்று கர்ஜித்தவர், எந்த தப்பும் செய்யாமல் அவளை அடித்த அவனை பிரம்பால் விளாசிவிட்டார் சுந்திரம்..
அவரின் ஒவ்வொரு அடிக்கும் மரம் போல நின்றவன் நெஞ்சில் இந்த சம்பவம் முள்ளேன்று தைத்தது.. அது நல்ல முள்ளாக இருந்தால் தங்கை மீது பாசம் வந்திருக்கும் அவனுக்குள் விஷமுள் வேர்விட இந்த சம்பவம் காரணமாக மாறியது..
அவனது அடியில் அப்படியே சுருண்டு விழுந்தவள் கண்விழிக்க மூன்று நாள் ஆனது! அந்த மூன்று நாளும் அவளின் பெற்றோர் துடித்துப் போயினர்..
அதுவும் பார்வதி கண்களில் கண்ணீர் மழையாக பொழிந்தது.. அந்த சம்பவம் நடந்து பிறகு மூன்று நாளும் அவளுக்கு மயக்கத்திலேயே சாப்பாடு ஊட்டிவிட்டாள் பார்வதி.. அதன்பிறகு அவள் பள்ளிக்கு செல்ல ஒரு வாரம் ஆனது..!
இங்கே இந்த நிலை என்றால், அன்று வீட்டிற்கு சென்ற அன்பரசன் செய்த முதல் காரியம், “அம்மா எனக்கு நாளையில் இருந்து இரண்டு டிப்பன் பாக்ஸில் சாப்பாடு கொடுங்கள்..” என்று சொல்ல,
“என்னடா உனக்கு சாப்பாடு பத்துவது இல்லையா..?” என்று கேட்ட சுமித்ராவைப் பார்த்தவன் உண்மையைச் சொல்லாது,
“இல்லம்மா மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது.. அதனால் மாலையில் சாப்பிட சாப்பாடு இருந்தால் இன்னமும் நல்ல இருக்கும் என்று யோசித்தேன்..” என்று சொல்ல, தனது சின்ன மகன் மூலம் விவரம் அறிந்த சுமித்ரா,
‘என்னோட மனம் கஷ்டப்பட கூடாது என்று எப்படி போய் சொல்கிறான் பாரு..’ என்று மனதில் நினைத்தவர், “நாளையில் இருந்து கொடுக்கிறேன்..” என்று சொல்லவும், அவனும் தலையசைத்துவிட்டு சென்றான்..
அடுத்த நாளில் இருந்து ஆஷாவிற்கும் எடுத்து வந்தான்.. அவள் அவள் டிப்பனை எடுத்துச் சென்று சாப்பிட்டு முடிக்க அவளின் பார்வை வட்டத்திற்குள் அமர்ந்திருந்த அன்பரசன் தனது அம்மாவின் சமையலை ருசித்து சாப்பிட,
‘அவனின் டிப்பனை நாம் எடுத்து வந்த பிறகு இவன் எப்படி டிப்பனில் சாப்பிடுகிறான்..?’ என்ற சந்தேகம் அவளைத் தொற்றிக் கொள்ள, அதற்கு விடைதேட ஆரமித்தாள் ஆஷா..
Mm pavamEnathu ponna ipd adichutane pavi ezhil kutty epd valichurukum ???