unga comment pakkum pothu.., enaku avlo santhosama irukku....Thanks you so much sangeetha sister.....@ORANGE pradeepa dear what a lovely voice da... அமைதியான அதே சமயம் அழுத்தமான குரல்
வீணையடி நீ எனக்கு உங்கள் பார்வையில்...அருமை....ஹாய் சஷிஜி
அழகான நாவல் அழகான நிறைவு சசிஜி இந்த நாவல் ஆரம்பத்தில் ஒரு சாதாரண கதையாகத் தான் ஆரம்பம் ஆனால் அதை நீங்கள்கொண்டு சென்று எழுதிமுடித்தவிதம் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை கண்டு ரசித்த உணர்வைத்தந்தது என்று சொன்னால் மிகையாகாது ஓவ்வொரு கதாபாத்திரங்களும் எங்கள் கண்முன்னே வந்துசென்றது என்றே சொல்லலாம்.
ஹீரோ ஷ்யாம் கதை ஆரம்பத்தில் மேலோட்டமான அவன் அறிமுகத்தில் அவன் பழக்கவழக்கங்கள் தொழிலுக்கான அவன் செயல்பாடுகள் எங்கள் எல்லோர் மனதிலும் இவன் தான் ஹீரோவா என்ற எண்ணத்தை தான் தந்தான் அப்படி ஒரு எண்ணம் மஹாவை கடத்தி சென்றதோடு மட்டுமல்லாமல் அவன் அவளை காக்க நினைக்கும் அவன் அண்ணனுக்கு கொடுக்கும் நெருக்கடி பணஉதவி எதையும் அவனுக்கு கிடைக்கவிடாமல் செய்யும் செயல் என்ற அவனோட கருப்பு பக்கங்கள் அதிகரித்தது என்றே சொல்லலாம் இதெல்லாம் அவனோட ஒருபக்க முகம் அவனுக்குள்ளும் ஒரு மென்மையான மனிதன் மறைந்துள்ளான் என்பதை கதாநாயகி மஹா மட்டுமல்ல நாங்களும் அவனை அறிந்து கொண்டது மஹாவை கடத்திச் சென்று கஸ்ட்டடியில் அவன் அவளிடம் வாய் பேசினாலும் செயலில் அவனிடம் தவறை காண முடியவில்லை என்றே சொல்லலாம் அதன்பின் அவன் ஒவ்வொரு செயலும் மஹாவை மட்டுமல்ல நம்மையும் ஈர்த்து விட்டது என்றே சொல்லலாம் பொறுக்கி என்று மஹாவால் கூறப்பட்ட ஷ்யாம் அவளை கஸ்ட்டடி எடுத்து வந்து ரொம்ப ஓவரா பேசுவான் நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா என்ற விதத்தில் அதே ஷ்யாம் தான் பின்னாடி நீயில்லையென்றால் நானில்லை என்று நீங்களே சொல்லியிருந்ததைகூட எங்களால் நம்ப முடியவில்லை என்றே சொல்லலாம் அந்த மாதிரி கதாப்பாத்திரத்தை இன்று எங்கள் எல்லோராலும் மிகவும் ரசிக்கக்கூடிய நாயகனாக மாற்றியது உங்கள் எழுத்தின் வலிமையே என்றே சொல்லலாம் அப்படி படைத்திருந்தீர்கள் அருமை
கதாநாயகி மஹாவேங்கடலக்ஷ்மி பின்விளைவை பற்றி யோசிக்காத ஒரு நிமிர்வான பெண் ஆனால் இடம் பொருள் பொறுமை சிறிதும் இல்லாத ஒரு வாயாடி அவசரக்குடுக்கை என்றே சொல்லலாம் ஆனால் நேர்மை நியாயம் கருணை எச்சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் துணிவுமிக்க பெண் என்றே சொல்லலாம் பெண்ணை போகப் பொருளாக மட்டும் நினைத்த ஹீரோவையும் ஆட்டி வைக்கும் ஒரு கானக்குயில் தன் இனிமையான குரல்வளத்தால் அவனை வசீகரித்தது மட்டுமல்லாமல் அவனை தன் பேச்சாலும் செயலாலும் நியாமான சிந்தனையாலும் தன் தன்னலமற்ற சேவையாலும் அவன் மனதை கவர்கிறாள் அதுமட்டுமல்ல அவன் அவளிடம் காதலை சொன்ன போது கூட உன் நட்பு மட்டும் போதும் காதல் நம் இருவருக்கும் சரிவராது என்றே சொல்லிவிடுவாள் அவ்வளவு தெளிவான பெண்ணையும் தன் மீதான காதலை வெளிக்கொணர்ந்து எச்சூழ்நிலையிலும் அவளுக்கு துணையிருந்து அவளை கண்ணின் மணி போல் காத்து அவள் மனதை மட்டுமல்ல அவள் அண்ணன், தாய் , தந்தை என்று எல்லோர் மனதையும் கவர்ந்து என்ன பிரச்சனை வந்தாலும் உடனிருந்து அவளை கைப்பிடிக்கும் அவன் செயல் அவன் குணத்திற்கு அவன் மனத்திண்மைக்கு ஒரு சவால் என்றே சொல்லலாம்
மஹா மேல் அவன் வைக்கும் காதல் அவன் வாழ்வில் மட்டுமல்ல அவன் செயல்கள் அனைத்திலும் பிரதிபலிக்கும் நன்று
விஜய் இந்த கதாப்பாத்திரம் ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் இந்த கதை வீணையடி நீ எனக்கு கதை ஓட்டத்திற்கு முக்கிய பங்கு என்றே சொல்லலாம்
கார்த்திக் ஒரு நல்ல அண்ணன் இவன் ஒருவரை நன்கு புரிந்து கொண்டால் அவர்களுக்கு கொள்கைப்பரப்புசெயலாளர் ஆகிவிடுவான் ஷ்யாமை பார்க்கும் வரைக்கும் பார்த்தபின்பும் வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லிக்கொண்டுயிருந்தவன் ஷ்யாமை தனியாக சந்தித்து பேசியபின்பு புரிந்தபின்பு ஷ்யாமிற்கும் கார்த்திக் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி ஷ்யாம் மஹா இருவருக்கும் இடையில் உள்ளதைவிட அதிகம் என்றே சொல்லலாம் நல்ல மகன் நல்ல அண்ணன் நல்ல மனிதன் நல்ல நண்பன் ஒழுக்கத்தின் சிகரம் தங்கைக்கு நல்ல முன்னோடி எல்லாம் இருந்தாலும் நல்ல காதலனா என்று கேட்டால் அதை அவன் மனைவி அண்ட் காதலி பிருந்தாவிடம் தான் கேட்க வேண்டும்
பிருந்தா ஒரு நல்ல பெண் நல்ல தோழி பொறுமையின் சிகரம் நல்ல காதலி நம்மில் ஒருத்தி நம்மை மாதிரி சாதாரண ஆசைகள் கொண்ட ஒரு எளிமையான பெண் பிரச்சனையின் போது தன் காதலனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்வதாகட்டும் பிரச்சனைகளுக்கு சொலுஷன் சொல்வதாகட்டும் அவளுக்கு நிகர் அவளே
பைரவி அம்மா ஒரு நல்ல அம்மா ஒரு நல்ல பெண்மணி தன் பெண்ணுக்கு பிரச்சனையென்றால் நீ எந்த நாட்டுக்கு ராஜாஎன்றாலும் பரவாயில்லை நீ என் மகள் இப்படி செய்வதற்கு காரணம் என்ன? வீரமாக கேள்வி கேட்கும் ஒரு வீரப்பெண்மணி என்றே சொல்வேன் முன்னாடி பீரியட் தாய் என்றால் கணவன் எப்படியிருந்தாலும் நீ தான் அனுசரிச்சு போக வேண்டும் என்று சொல்வார்கள் மகள் தவறே செய்யாவிட்டாலும் மகளைத் தான் குறை சொல்வார்கள் இவர் மருமகனிடம் கேள்வி கேட்பது என்னை கவர்ந்த அம்சம் என்றே சொல்வேன் மத்தபடி கார்த்திக் மஹா அப்பா திரு முருகானந்தம் ஒரு நல்ல தந்தை ஒரு நல்ல மனிதர் தன் மகளுக்கு ஓன்று என்றால் உயிரை தரும் ஒரு அற்புதமான தந்தை நல்ல நண்பர்
நாதன் நல்ல மனிதர் தவறு செய்தது தன் மகனே என்றாலும் தட்டிக்கேட்க தயங்காத தந்தை தன் மகனின் நியாயமான ஆசையை நிறைவேற்ற துடிக்கும் தந்தை தன் மகன் தவறு செய்தான் என்று கண்டித்தாலும் மகன் செய்த செயல்களுக்கு மறுபக்கம் உண்டு அறிந்தவுடன் அவனுக்கு ஆறுதலாக உறுதுணையாக இருக்கும் தந்தை அடுத்து ஜோதிஅம்மா ஷ்யாமின் அன்னை சிறுவயதில் ஷ்யாமிற்கு இவர் அருகாமை அதிகம் கிடைக்காதது தான் அவனின் மாறுபாடான நடவடிக்கைக்கு காரணம் என உணர்ந்த அன்னை தன் மகன் தவறே செய்திருந்தாலும் விட்டுக் கொடுக்காத ஒரு சாதாரண தாய் மருமகளையும் மகளாக என்னும் தாய் நல்ல மனைவியாக இருக்க நினைத்து தன் மகனை விடுதியில் சேர்த்தாலும் மகனின் மீது அன்பு குறையாத தாய் மகனின் செயல்களுக்கு வருந்தினாலும் அவன் மேல் துளி நம்பிக்கை குறையாதவர் என்ன தான் மகனை நல்லவனாக சிறந்தவனாக வளர்க்க ஆசைப்பட்டு சிறந்த பள்ளியில் சேர்த்து நல்ல விடுதியில் சேர்த்து கல்வி கற்க வைத்தாலும் தாய் அருகில் வைத்து வளர்க்காதபிள்ளை பாதை மாறிப்போய்விடும் என்பதற்கு ஷ்யாம் ஒரு உதாரணம் மத்தபடி வரும் கேரக்டர்கள் கதை ஓட்டத்திற்கு துணைபுரிபவர்கள் என்றே சொல்லலாம்
தவறான பாதையில் செல்லும் ஒருவனின் வாழ்வில் காதல் வரும் போது அவனின் மாற்றம் பிறரை எப்படி கவரும் என்பதை நீங்கள் சொல்லியிருந்த விதம் அருமை நன்றி சஷிஜி ஒரு அருமையான நாவலை படைத்து எங்களுக்கு வாசிக்க தந்ததற்கு நன்றி ஷ்யாமின் மகா மீதான காதல் அவனின் சிறு செயலையும் அவன் கம்பீரம் ஆளுமை தன்னம்பிக்கை தொழில் தர்மம் நம்புபவர்களுக்கு உண்மையாக இருப்பது காதலுக்கும் காதலிக்கும் உண்மையாக இருப்பது அனைத்தும் எங்களை ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் எனக்கு இதுவே நிறைய ஆகிவிட்டது இன்னும் நம் தோழிகள் வேறு சொல்வார்கள் அதில் பார்த்துக் கொள்ளலாம் நம் தோழிகள் கவிதை கருத்துக்கள் மீம்ஸ்கள் விமர்ச்சனங்கள் என்று அமர்களப்படுத்துவார்கள் மீண்டும் ஒருமுறை நன்றி தோழி சஷிஜி வணக்கம்
???அழகு தமிழ்.. ஆக அழகா தமிழ் சொல்லி தந்துட்டான் உங்களுக்கு...
Sweet voice yakaavசங்கி டர்லிங் இதோ இந்த மங்கி வய்ஸ் அண்ட் பாட்டு ??????டேய் கிண்டல் பண்ணதிங்க டா? ஒகே வா? என்ன பேசனும் தெரியல அது தான் பாட்ட படிட்டேன் கொஞ்சம் நரகமா தான் இருக்கும் குரல் tension +cold kattaiappa குரல் தான் வருது helpless pls adjust da????
https://drive.google.com/open?id=13W8qlACw5oU-rseZsyNSE3mFatfmVgAf
https://drive.google.com/open?id=1h8FsrdKAn1f3J6UQggkLBjUsXCJTiYqo
??Love you premi
Semma