அப்பா என்றுமே நாம் விரும்பும் ஆண், உந்துதல் சக்தி, ஹீரோ.. எல்லா அப்பாக்களுக்கும் இது சமர்பணம் ???
இரண்டு கவிதைகள் அப்பாவிற்காக???
@sandhiya sri unakaga baby??
"அப்பா ஒரு குடத்திலிட்ட விளக்கு
அனைவராலும் உணர இயலாது
அவரது தன்னலமற்ற அன்பினை!!
நாம் உயிர் பெற்ற நாள்முதல்
நம் நலன் கருதி
நொடி பொழுதும் சிந்திக்கும் நல் ஆத்மா!!
தந்தையின் தாய்மையை நாமறிவதில்லை
தான் காணாவிடில் தெய்வம் பொய்யாகுமா ?!!
நான் நடை பழக உன் வேகம் தளர்த்தினாய்
நான் பள்ளி செல்ல நீ உன் பணிகளை கூட்டினாய்
நான் பட்டம் பெறும் போது ஆனந்த கூத்தாடினாய்
கன்னிகாதானம் செய்து ஆனந்த நீர் சொரிந்தாய்!!
என்றும் என் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியை வேண்டினாய்
கணவன் என்னும் நண்பனை பரிசளித்தாய்
தூரமிருந்தாலும் என்னுள் உள்ள தாயுமான எந்தையே!!
என்றும் பெறுமையுடன் சொல்வேன் உன் மகளென்று!!"
??????????
"
உயிரணுவோடு தொடங்கிய பந்தம்..
புறம் சுமக்கவில்லை
அகத்தில் சுமக்க ஆரம்பித்ததை இன்னும் இரக்கவில்லை..
எனக்காகவே செதிக்கினாய் உன்னை
உழி அடிகள் வலித்ததோ??
அருகில் இல்லை , கொஞ்சல் இல்லை என்று நான் கேவிய நாட்கள் பல..
நீ அதை நினைத்து கேவினாயோ?
தந்தை என்றால் தாயுமானவன்..
வலி பொறுத்த உன்னால் என்
விழி நீர் பொறுக்கவில்லையே..
என்றும் நானே பட்டத்து இளவரசி
நான் தடி ஊன்றும் பொழுதிலும் கூட..
அப்பா அப்பா அப்பா உன்னை திடமும் தேடுகின்றேன்..
நாம் பேசிய நாட்கள் சில உணர்ந்த நாட்கள் பல..
மிஷின்களோடு வாழ்ந்து வந்தாய்..
அலுப்புகளை மறைத்து எங்களுக்கு அமைதி தந்தாய்..
நான் நானாகி இன்று நிற்க காரணம் நீ அப்பா..
என்றும் பெருமையுடன் சொல்வேன் நான் சங்கரனின் செல்வமென்று ???"