நன்றி ஸ்ரீமதிSuper starting
நன்றி ஸ்ரீமதிSuper starting
நன்றி சிஸ்...Nice
நன்றி அக்கா....Kavi Nila natpu romba arumai... kaviyin kathirvelan kanavu kathal interesting.....
Parahh sema kanavu polaiye???அவனின் உருவம் அவளின் அனுமதி இன்றியே அவளின் மனதில் ஓவியமாக பதிந்தது.. அவனின் பார்வையைப் பார்த்து தனது உதட்டைக் கடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
“மலர் உனது உதட்டில் இருக்கும் மச்சம் அழகாக இருக்குடீ!” என்று உரிமையுடன் அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தான் கதிர்நிலவன்..
“நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை.. இந்த இடம் உனக்கு பிடித்திருக்கிறதா..?” அவளின் காதருகே குனிந்து ரகசியம் கேட்டான்
“ம்ம்.. ரொம்ப பிடித்திருக்கிறது..!” என்று வெக்கத்துடன் கூறினாள் கவிமலர். வெக்கத்தில் அவளின் கன்னங்கள் சிவக்க,அவனின் முகத்தில் ரசனைக் கூடியது.. அவன் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தலை குனிந்தாள்..
“எனது நெருக்கத்தைத் தானே சொல்கிறாய்..?!” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான் அவன்..
இடமும் வலமும் தலையசைத்து, “ஹும்ம்!” என்று போய் கூறினாள் கவிமலர்.. அவளின் குரலில் இருந்த உண்மையை உணர்ந்தவன்..
“பொய் சொல்ல கூடாது காதலி.. பொய் சொன்னாலும் நீயே என் காதலி..” என்று மெல்லிய குரலில் பாடினான்.. அவனிடம் அவளின் மனம் மயங்கியது.. அவனின் பாடலை மனதிற்குள் ரசித்தாள் கவிமலர்..
‘அவனை அன்று தான் பார்க்கிறோம்..’ என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அவனின் முகம் நிமிர்ந்துப் பார்த்தவள், அவனின் கண்களில் தெரிந்த காதலில் கரைந்து போனாள்..
அவனின் அருகில் தனது மனம் தனது வசம் இல்லை என்று தெரிந்தவுடன் பட்டென எழுந்தாள்.. பூங்காவில் எழுந்தவள் தனது படுக்கை அறையில் எழுந்து அமர்ந்தாள்..
கண்விழித்தால் அனைத்தும் கனவு என்று அறிந்தவுடன், அவளின் மனம் படபடப்பாக இருந்தது.. மனம் இனிமையாகப் படபடத்தது.. படுக்கையில் எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து மணியைப் பார்த்தாள் கவிமலர்.. மணி நான்கு என்று காட்டியது..
‘இந்த கனவு பழிக்கக்கூடாது கடவுளே..!’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு அமைதியாக படுக்கையில் அமர்ந்தாள்.. தூக்கம் முழுவதும் கலைந்தது.. அருகில் இருந்த ஜன்னலின் வழியே வானில் உலா வரும் நிலவைப் பார்த்தாள்.
“என் பெயர் கதிர்நிலவன்..” என்று கூறிய அவனின் குரல் தனது மனதின் வழியே ஒலித்தது..
“லூசு!” என்று தனது பின் தலையைத் தட்டிக்கொண்டு புன்னகைத்தாள் கவிமலர்..
அந்தநொடி அவனை விரும்ப ஆரமித்தது அவளின் மனம்..
“கனவில் வந்தாய் காதல் தந்தாய்!
கன்னியின் மனதில் உந்தன் நினைவுகள்!
கனவில் வந்த கள்வனே..!
என்று கரம் பிடிப்பாய் என்னை!”
என்று தனது முதல் கனவின் சுவடுகளை கவிதையாக வரைந்தாள் கவிமலர்.. அவளின் கண்கள் ரசனையுடன் வானில் வந்த கதிரவனின் வரவைப் பார்த்தது..