Meghna suresh
நாட்டாமை
பகுதி – 10
காலங்கள் யாருக்கும் காத்திருப்பதில்லை. கண் இமைக்கும் நொடியில் காட்சிகளை மாற்றிப் போட்டு, ‘மாறாதது மாற்றம் மட்டுமே’ என்ற தத்துவம் சொல்லி நிற்கும்.
சூரியின் வாழ்விலும் அப்படி ஒரு மாற்றமே வந்திருந்தது. முகிலன் அதிரடியாய் சூரியின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டு நின்றிருந்தான். அவள் தன் தோழிகளிடம் கூட தான் காதலுற்ற கதையை அப்போது விளம்பி இருக்கவில்லை.
முகிலனின் பதவி, படிப்பு, குடும்ப பின்னணி தங்களுக்கு ஏற்புடையதாய் இருக்க சூரியின் வீட்டில் உடனே திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். விவரம் அறிந்த அவள் தோழிகள் முதலில் அவளிடம் முகம் திருப்பி இருந்த போதும், பின்பு அவளின் மகிழ்ச்சி கண்டு தாங்களும் அவளோடு இணைந்து மகிழ்ந்தனர்.
புருவம் நெறித்து விஸ்வாமித்திரனாய் நடமாடிய முகிலன், இவர்கள் திருமண நிச்சயம் முடிந்த நாளில் இருந்து காதல் மன்னனாய் உருமாறி இருந்தான்.
இவளுக்கு திருமணம் என்றதும் எழுந்து அமர்ந்த, சூரியின் தாத்தாவிடம், காதல் வசனங்கள் கேட்டு, அதை அவள் தோழியர் முன் பேசிக் காட்டி அவளை சிவக்க வைத்து மற்றவர் அனைவரையும் நகைக்க வைத்தான்.
இவர்கள் நிச்சயம் முடிந்து இரு மாதங்கள் கழிந்தே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆகா சென்னையில் ஜோடி புறாக்களாய் இருவரும் காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தனர்.
வழமையாய் தன் பணி நேரம் முடியவும், சூரி நேராய் முகிலனின் இல்லம் சென்றுவிடுவாள். அங்கு நித்திக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, அவளோடு சேர்ந்து சமைக்கிறேன் பேர்வழி என்று மொத்த சமையல் அறையையும் குப்பை செய்து வைத்திருக்கும் போது முகிலன் வருவான்.
மூவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி முடித்து, மூர்த்தி அண்ணாவோடு அமர்ந்து உணவருந்தி முடித்து, நித்தியை உறங்க வைத்த பின்னே, முகிலன் சூரியை அவள் அறைக்கு கொண்டு வந்து விடுவான்.
நீளும் அந்த இரண்டு மைல் தொலைவின் இரு சக்கரப் பயணமே இவர்களின் காதல் நாள் காட்டி. முகிலன் பொறுப்பான காவல் அதிகாரியாய் எந்த அளவிற்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருந்தானோ, அதற்கு நேர்மாறாய் காதலில் மிகச் சிறந்த கள்வனாய் இருந்தான்.
சூரி எதிர்பார்க்கா தருணங்களில் அவளிடமிருந்து முத்தம் திருடுவதில் சிறந்த கள்வன் அவன். விடிய விடிய இவனிடம் அலைபேசியில் கதை அளந்துவிட்டு, பல நாட்கள் அலுவலகத்தில் தூங்கி விழுந்தாள்.
வார இறுதி நாட்களில், சூரியோடு, அவள் தோழிகளையும் முகிலன் வெளியே அழைத்து செல்வான். அன்றைக்கு இவர்கள் செய்யும் செலவு அத்தனையும் அவனுடையதே. அந்த வார இறுதி நாளில் எத்தனை விதமான வஸ்துகளை வயிற்றுக்குள் தள்ளலாம் என்பதே ராவியின் பெரும் திட்டமாய் இருக்க, மற்ற தோழிகள் அவளை கேலி செய்வதைப் போல அவள் வாங்கி அடுக்கும் பண்டங்களில் பாதியை காலி செய்வர்.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது என்ற நிலையில், முகிலனின் அக்கா அவனின் இல்லம் வந்து சேர்ந்தார். அதனால் அவர்களின் தினசரி சந்திப்பு பாதிப்பிற்கு உள்ளானது. முகிலனின் அக்காவிற்கு பெரிதாய் இந்த சம்மந்தத்தில் விருப்பம் இல்லை என்பது அவர் நடவடிக்கைகளில் அப்பட்டமாய் தெரியும்.
சரி இன்னும் பத்து நாட்கள் தானே பொருத்துக் கொள்வோம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்திருக்க, அடுத்த இரண்டாம் நாள் வார இறுதி நாளாய் வந்தது.
இருவரின் திருமண உடைகள் ஏற்கனவே இரு வீட்டு பெரியவர்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு இருக்க, முகிலன் சூரியின் தோழிகளுக்கு புத்தாடை வாங்கித் தர விரும்பினான்.
மறுத்த அவர்களிடம், “நீங்க எல்லாரும் எனக்கு தங்கச்சி மாதிரி. உங்க அண்ணன் கல்யாணம். உரிமையா வந்து ட்ரெஸ் எடுத்துக்கோங்க. சரியா..?’’ என்று மிரட்ட, அனைவரும் வராத ஆனந்தக் கண்ணீரோடு வெளியே செல்ல கிளம்பினர்.
முகிலன் நித்தியை அழைத்து வந்திருக்க, இவர்கள் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் துணிகளை கலைத்துப் போட்டு தங்கள் தேடுதலை துவக்கினர். ஆனால் சூரியும், முகிலனும் மட்டும் தங்களுக்கான காதல் உலகத்தில் அமிழ்ந்து இருந்தனர்.
முகிலன் தங்கள் ரகசிய குறியீட்டின் படி, அவளிடம் முத்தம் வேண்ட, அவளோ அதே ரகசிய குறியீட்டின் படி, அவனுக்கு பதில் கொடுத்து அவனை பித்தம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் கலைந்த துணிகளை வேடிக்கைப் பார்த்த நித்தி, எதற்காக மாமனும், அத்தையும் தங்கள் சுண்டு விரலை மோதி மோதி விளையாடிக் கொண்டுடிருக்கின்றனர் என்பது புரியாமல் அருகில் இருந்த ரம்யாவை அழைத்து நடந்து கொண்டிருந்த நாடகத்தை கண்பித்தாள்.
இவர்களின் லீலையை கண்டு தலையில் அடித்துக் கொண்ட ரம்யா, “வர வர இதுக ரொமான்ஸ் தாங்க முடியலைடா சாமி. சீக்கிரம் நமக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடனும் வீட்ல.’’ என்று மனதிற்குள் நினைந்துக் கொண்டவள், நித்தியை தூக்கிக் கொண்டு சூரி, மற்றும் முகிலன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் சென்று நின்றாள்.
இவள் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் அவர்கள் தொடர்ந்து தங்கள் உலகில் மூழ்கி இருக்க, ரம்யா முதலில் செருமினாள். அதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றதும், “ஹெலோ..’’ என்று உரத்த குரலில் கத்தினாள்.
அவளின் அக்குரலுக்கு மொத்த கடையும் அமைதியாகி, இவர்கள் புறம் கேள்வியாய் திரும்ப, தங்களை சூழ்ந்திருந்த மொத்த ஒலியும் அடங்கிய காரணம் அறிய, இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.
தங்களின் அருகே கொலை வெறிப் பார்வையோடு நின்றிருந்த ரம்யாவையும், ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்த நித்தியையும் கண்டவர்கள், ஒரு அசட்டு சிரிப்போடு தங்கள் சுண்டு விரல்களை பிரித்துக் கொண்டனர்.
நிலைமையை சமாளிக்க வேண்டிய அவசியம் உணர்ந்த முகிலன், “ஹாய் குட்டி..! உங்களுக்கு இப்ப ஐஸ்கிரீம் பசிச்சு இருக்குமே..! வாங்க நாம பக்கத்துல இருக்க ஐஸ்கிரீம் லேண்ட் போலாம். ஆன்டிங்க எல்லாம் ட்ரஸ் எடுத்துட்டு வரட்டும்.’’ என்று அங்கிருந்து நழுவ முயன்றான்.
காலங்கள் யாருக்கும் காத்திருப்பதில்லை. கண் இமைக்கும் நொடியில் காட்சிகளை மாற்றிப் போட்டு, ‘மாறாதது மாற்றம் மட்டுமே’ என்ற தத்துவம் சொல்லி நிற்கும்.
சூரியின் வாழ்விலும் அப்படி ஒரு மாற்றமே வந்திருந்தது. முகிலன் அதிரடியாய் சூரியின் வீட்டிற்கே சென்று பெண் கேட்டு நின்றிருந்தான். அவள் தன் தோழிகளிடம் கூட தான் காதலுற்ற கதையை அப்போது விளம்பி இருக்கவில்லை.
முகிலனின் பதவி, படிப்பு, குடும்ப பின்னணி தங்களுக்கு ஏற்புடையதாய் இருக்க சூரியின் வீட்டில் உடனே திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர். விவரம் அறிந்த அவள் தோழிகள் முதலில் அவளிடம் முகம் திருப்பி இருந்த போதும், பின்பு அவளின் மகிழ்ச்சி கண்டு தாங்களும் அவளோடு இணைந்து மகிழ்ந்தனர்.
புருவம் நெறித்து விஸ்வாமித்திரனாய் நடமாடிய முகிலன், இவர்கள் திருமண நிச்சயம் முடிந்த நாளில் இருந்து காதல் மன்னனாய் உருமாறி இருந்தான்.
இவளுக்கு திருமணம் என்றதும் எழுந்து அமர்ந்த, சூரியின் தாத்தாவிடம், காதல் வசனங்கள் கேட்டு, அதை அவள் தோழியர் முன் பேசிக் காட்டி அவளை சிவக்க வைத்து மற்றவர் அனைவரையும் நகைக்க வைத்தான்.
இவர்கள் நிச்சயம் முடிந்து இரு மாதங்கள் கழிந்தே திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆகா சென்னையில் ஜோடி புறாக்களாய் இருவரும் காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தனர்.
வழமையாய் தன் பணி நேரம் முடியவும், சூரி நேராய் முகிலனின் இல்லம் சென்றுவிடுவாள். அங்கு நித்திக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, அவளோடு சேர்ந்து சமைக்கிறேன் பேர்வழி என்று மொத்த சமையல் அறையையும் குப்பை செய்து வைத்திருக்கும் போது முகிலன் வருவான்.
மூவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி முடித்து, மூர்த்தி அண்ணாவோடு அமர்ந்து உணவருந்தி முடித்து, நித்தியை உறங்க வைத்த பின்னே, முகிலன் சூரியை அவள் அறைக்கு கொண்டு வந்து விடுவான்.
நீளும் அந்த இரண்டு மைல் தொலைவின் இரு சக்கரப் பயணமே இவர்களின் காதல் நாள் காட்டி. முகிலன் பொறுப்பான காவல் அதிகாரியாய் எந்த அளவிற்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருந்தானோ, அதற்கு நேர்மாறாய் காதலில் மிகச் சிறந்த கள்வனாய் இருந்தான்.
சூரி எதிர்பார்க்கா தருணங்களில் அவளிடமிருந்து முத்தம் திருடுவதில் சிறந்த கள்வன் அவன். விடிய விடிய இவனிடம் அலைபேசியில் கதை அளந்துவிட்டு, பல நாட்கள் அலுவலகத்தில் தூங்கி விழுந்தாள்.
வார இறுதி நாட்களில், சூரியோடு, அவள் தோழிகளையும் முகிலன் வெளியே அழைத்து செல்வான். அன்றைக்கு இவர்கள் செய்யும் செலவு அத்தனையும் அவனுடையதே. அந்த வார இறுதி நாளில் எத்தனை விதமான வஸ்துகளை வயிற்றுக்குள் தள்ளலாம் என்பதே ராவியின் பெரும் திட்டமாய் இருக்க, மற்ற தோழிகள் அவளை கேலி செய்வதைப் போல அவள் வாங்கி அடுக்கும் பண்டங்களில் பாதியை காலி செய்வர்.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது என்ற நிலையில், முகிலனின் அக்கா அவனின் இல்லம் வந்து சேர்ந்தார். அதனால் அவர்களின் தினசரி சந்திப்பு பாதிப்பிற்கு உள்ளானது. முகிலனின் அக்காவிற்கு பெரிதாய் இந்த சம்மந்தத்தில் விருப்பம் இல்லை என்பது அவர் நடவடிக்கைகளில் அப்பட்டமாய் தெரியும்.
சரி இன்னும் பத்து நாட்கள் தானே பொருத்துக் கொள்வோம் என்று இருவரும் சேர்ந்து முடிவு செய்திருக்க, அடுத்த இரண்டாம் நாள் வார இறுதி நாளாய் வந்தது.
இருவரின் திருமண உடைகள் ஏற்கனவே இரு வீட்டு பெரியவர்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டு இருக்க, முகிலன் சூரியின் தோழிகளுக்கு புத்தாடை வாங்கித் தர விரும்பினான்.
மறுத்த அவர்களிடம், “நீங்க எல்லாரும் எனக்கு தங்கச்சி மாதிரி. உங்க அண்ணன் கல்யாணம். உரிமையா வந்து ட்ரெஸ் எடுத்துக்கோங்க. சரியா..?’’ என்று மிரட்ட, அனைவரும் வராத ஆனந்தக் கண்ணீரோடு வெளியே செல்ல கிளம்பினர்.
முகிலன் நித்தியை அழைத்து வந்திருக்க, இவர்கள் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் துணிகளை கலைத்துப் போட்டு தங்கள் தேடுதலை துவக்கினர். ஆனால் சூரியும், முகிலனும் மட்டும் தங்களுக்கான காதல் உலகத்தில் அமிழ்ந்து இருந்தனர்.
முகிலன் தங்கள் ரகசிய குறியீட்டின் படி, அவளிடம் முத்தம் வேண்ட, அவளோ அதே ரகசிய குறியீட்டின் படி, அவனுக்கு பதில் கொடுத்து அவனை பித்தம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் கலைந்த துணிகளை வேடிக்கைப் பார்த்த நித்தி, எதற்காக மாமனும், அத்தையும் தங்கள் சுண்டு விரலை மோதி மோதி விளையாடிக் கொண்டுடிருக்கின்றனர் என்பது புரியாமல் அருகில் இருந்த ரம்யாவை அழைத்து நடந்து கொண்டிருந்த நாடகத்தை கண்பித்தாள்.
இவர்களின் லீலையை கண்டு தலையில் அடித்துக் கொண்ட ரம்யா, “வர வர இதுக ரொமான்ஸ் தாங்க முடியலைடா சாமி. சீக்கிரம் நமக்கும் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடனும் வீட்ல.’’ என்று மனதிற்குள் நினைந்துக் கொண்டவள், நித்தியை தூக்கிக் கொண்டு சூரி, மற்றும் முகிலன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் சென்று நின்றாள்.
இவள் வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் அவர்கள் தொடர்ந்து தங்கள் உலகில் மூழ்கி இருக்க, ரம்யா முதலில் செருமினாள். அதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை என்றதும், “ஹெலோ..’’ என்று உரத்த குரலில் கத்தினாள்.
அவளின் அக்குரலுக்கு மொத்த கடையும் அமைதியாகி, இவர்கள் புறம் கேள்வியாய் திரும்ப, தங்களை சூழ்ந்திருந்த மொத்த ஒலியும் அடங்கிய காரணம் அறிய, இருவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.
தங்களின் அருகே கொலை வெறிப் பார்வையோடு நின்றிருந்த ரம்யாவையும், ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்த நித்தியையும் கண்டவர்கள், ஒரு அசட்டு சிரிப்போடு தங்கள் சுண்டு விரல்களை பிரித்துக் கொண்டனர்.
நிலைமையை சமாளிக்க வேண்டிய அவசியம் உணர்ந்த முகிலன், “ஹாய் குட்டி..! உங்களுக்கு இப்ப ஐஸ்கிரீம் பசிச்சு இருக்குமே..! வாங்க நாம பக்கத்துல இருக்க ஐஸ்கிரீம் லேண்ட் போலாம். ஆன்டிங்க எல்லாம் ட்ரஸ் எடுத்துட்டு வரட்டும்.’’ என்று அங்கிருந்து நழுவ முயன்றான்.