Mathithilak
மண்டலாதிபதி
Waiting for ur new novel sister All the best
Waiting ..வணக்கம்!
என்னுடைய பதினொன்றாவது நாவல்... அவனின்றி ஓரணுவும்... முன்னுரை
இதுவரை நான் எழுதி நீங்கள் பார்த்திராத ஒரு புது கதைக்களமாகவே இதுவும் இருக்க போகிறது. எனக்கும் உங்களுக்குமான ஒரு புது அனுபுவமாக முற்றிலும் புதிய முயற்சியாக... எதார்த்தத்திலிருந்து சற்றே விலகி...
கற்பனை குதிரையின் கடிவாளத்தை பற்றி கொண்டு கொஞ்சம் புதுவிதமாக பறந்து பாரப்போமா?!
அதாவது நான் இதுவரை கையாளாத Fantasy Genre...
பொய்யிற்கும் உண்மைக்குமான ஓர் மாய கண்ணாடி திரை! நம்முடைய இயல்பான உணர்வுகள் சோகம் கோபம் இன்பம் அதிர்ச்சி இவையெல்லாம் தாண்டி ஓர் ஆச்சர்ய உணர்வை உருவாக்கும் என் புதிய முயற்சியில்...
வெற்றி தோல்விக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு இதையும் செய்து பார்த்துவிடுவோமே என்ற ஓர் குருட்டு நம்பிக்கை!
அதுவும் வாசகர்களாகிய நீங்கள் இதுவரை தந்துள்ள தைரியத்திலும் ஆதரவிலும்தான் நான் இப்படி ஏதாவது அசட்டுத்தனமா ஒவ்வொரு கதையிலும் முயற்சி செய்றேன்.
நான் தவறே செய்தாலும் என்னை செல்லமாக கொட்டி தட்டி ஒவ்வொரு முறையும் தயங்காமல் என்னை புதிதாக ஏதேனும் தேடி எழுத வைத்து கொண்டிருக்கும் என் வாசகர்கள் கொடுக்கும் நம்பிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
மற்றும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்... எல்லா கதையும் போல இந்த கதையும் நல்லதா இருக்கும் என்று ரொம்ப நம்பிக்கையெல்லாம் வைக்காம ஒரு புது எழுத்தாளரோட கதையை எப்படி பயபக்தியோட படிப்பீங்களோ அப்படியே படிங்க... புது முயற்சிகள் எப்போதும் நமக்கு கை கொடுக்கும்னு சொல்லவே முடியாது... ஆதலால் நானும் ரொம்பவும் பயபக்தியோடுதான் இந்த Genreல காலடி எடுத்து வைக்க போகிறேன்.
View attachment 12855
கதையை பற்றி ஒரு சில வரிகள்...
'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும்... இந்த பணத்தை தின்ன முடியாது என்று'
இன்னும் கதையை பற்றிய தகவல்களோடு
விரைவில்....
நன்றியுடன்
மோனிஷா