• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்...

தாமதத்திற்கு வருந்துகிறேன்... ஆழி சூழ் நித்திலமே நாவலின் 3வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

ஆழி 3(அ)

ஆழி 3(ஆ)

மீனவர்கள் பற்றிய சில தகவல்கள் :


சென்னைக்குள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மட்டும் தான் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியும்.

மீனவர்கள் ‘பாயின்ட்’ கணக்கில் தூரத்தைச் சொல்கிறார்கள்.

அதன்படி அந்தமான் எண்பத்தி ஐந்தாவது பாய்ண்ட்டில் இருக்கிறது. கடலுக்குள் தெற்கில் காரைக்கால், பாண்டிசேரி, மேற்கில் விசாகபட்டினம், காக்கிநாடா மற்றும் தென்கிழக்கில் அந்தமானை நோக்கி 3௦௦ கடல்மைல் வரைக்கும் வழக்கமாக செல்கிறார்கள்.

எந்த துறைமுகத்திலிருந்து ஒரு படகு கிளம்புகிறதோ, அதே துறைமுகத்திற்கு தான் திரும்பி வரவேண்டும்.
இன்ஜின் கோளாறு மற்றும் எதிர்பாராத வேறு பிரச்சனை என்றால் தான் மற்ற துறைமுகங்களில் ஒதுங்குகிறார்கள்.

இது போக, கிளம்பிய துறைமுகத்தில் மட்டும் தான் பிடித்த மீன்களை விற்க முடியும் என்கிற விதிமுறையும் இருக்கிறது.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 5 சங்கங்கள் இருக்கிறது. அந்த 5 சங்கங்களும் செல்வாக்கு மிக்கது, அவர்களின் விதிமுறைகளுக்கு எல்லோரும் கட்டுப்படும் வழக்கமிருக்கிறது.

அங்கிருக்கும் நிறைய படகு உரிமையாளர்கள் மீனவர்களாக இருந்து முன்னேறியவர்களே.

பணம் இருக்கிறதென்று படகை வாங்கி, இதை தொழில்முறையாக தெரிந்துக் கொள்ளாமல் செய்ய வந்த பலரும் நஷ்டபட்டு திரும்பி சென்றுவிட்டார்கள்.

இப்போது மீனவர்களாகவும், படகு உரிமையாளர்களாகவும் இருப்பவர்களிள் சிலரின் தந்தைகளும் மீனவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சிறுவயதிலேயே கடலுக்கு சென்றிருக்கிறார்கள். மற்றவர்களில் பெரும்பாலானோர் முதலில் கரையில் வேலைக்கு சேர்ந்து, பின்னர் கடலுக்கு சென்றிருக்கிறார்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top