அது இல்லன்னா இதுன்னு நினைக்கல பா.. சின்ன வயசுல இருந்து கூடவே வளர்ற கயல் அவனுக்கு ரொம்பவே புடிக்கும் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யறவன். அவளோட மனசு வாடக்கூடாதுன்னு யோசிப்பான் இல்லையா...
முக்கியமா வெற்றி மனசு அவனுக்கு தெரியாது... அது தெரிஞ்சிருந்தா கயலுக்கு அவன்தான் பொருத்தம்னு கயலை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் வச்சிருப்பான்
அப்படி இல்லாத பட்சத்தில கயலை மறுக்க என்ன காரணம் சொல்லுவான். கூடிய மட்டும் கல்யாணப் பேச்சை தவிர்க்கறான். இதுதான சாதாரண மனிதனின் யதார்த்தம்...
ஆனா என்ன பண்றது? அவன் மனசு தேடறது நித்திலா... அதையும் அவனால தவிர்க்க முடியல... ஆனா அந்தப் பொண்ணுக்கு தான் பொருத்தமில்ல... தன் வாழ்வியல் சூழலுக்கு அவள் பொருந்த மாட்டாங்கறதால அவகிட்ட இருந்து விலகியே நிக்கறான்...
இன்னும் அவன் மனசு தெளியாம இருக்கறதாலதான் ஆயா கேக்கும் போது கல்யாண பேச்சை தவிர்க்கறான்... இதுவே நித்திலா அவன் மனசுல இல்லைன்னா கயலை விரும்பலைன்னாலும் அவளோட ஆசைக்காகவும் ஆயாவோட ஆசைக்காகவும் கல்யாணம் பண்ணியிருப்பான்ல...
நீங்க பாரியோட இடத்துல ஒரு பொண்ணை வச்சி யோசிங்க... இப்படி தப்பா தோனாது....