PrakEshwari
புதிய முகம்
- Joined
- Oct 15, 2019
- Messages
- 13
- Reaction score
- 13
ஹாய் ப்ரண்ட்ஸ்
வணக்கம் இது எனது முதல் கதை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு பிடித்த விதமாக எழுதுகின்றேன் எதும் தவறு இருந்தால் கூறுங்கள் ஏற்றுக்கொள்கின்றேன்.
முடிந்தளவு எனக்கு ஆதரவு அளியுங்கள்....
இதயத்தின் தேவதையே 1
அழகிய விடிதலின் எழிலை ரசித்தவாறு துயில் கலைந்து தன் அறையின் சன்னல் வழியே சூரியோதயத்தை ரசித்துக் கொண்டிருந்த பவியின் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டடிப்பார்த்தது தினமும் தவறாமல் உதயமாகி உலகை பிரகாசிக்க செய்யும் சூர்யோதயம் தன் வாழ்வின் காணல் நீர் போல் தான் ஆகிவிடுமோ என்று சிந்தனையை கலைத்தது பால்வண்டியின் ஒலி.
பாலை வாங்கி வைத்து விட்டு அன்றாட வேலைகளில் இறங்கினாள் பவித்ரா.
குளித்து முடித்து கோலமிட்டு பூஜைக்கு தேவையான மலர்களை பறித்து மாலை தொடுத்தவள் பூஜையறையில் தயார் செய்தவள் தனது இஷ்டதெய்வமான் சாய்பாபாவின் முன் கண்மூடி நின்றவள் தானது இனிய தேன்குரலில் மிகவும் மெதுவாக பாடஆரம்பித்ததாள்.
அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய் உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி அம்மா உன் மடிமீது நாள் தோறுமே நான் கண்ட பேரின்பம் இது போதுமே ஆயிரம் ஜென்மத்து வசனம் விட்டேன் பூரணம் தரும் சாயி அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ அந்தந்த காலத்தில் தந்தாயே நீ காத்திடும் அம்மா காலடி கிடந்தேன் ஆனந்த இது சாயி மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
கண்களை மூடி பாடி முடித்தள் எப்பொழுதும் போல் எவ்வளவு துன்பம் என்றாலும் எனக்கு கொடு ஆனா என் சக்திக்கு எந்த துன்பமும் கொடுத்து விடாதே இறைவா என்று தனது தாய் மாமனின் மகனும் ஆருயிர் தோழனும் ஆன சக்தி கிருஷ்ணாவுக்காக மட்டடுமே வேண்டிக்கொள்பவளின் மனக்கண்ணின் முன் இன்று வந்து சிரித்தது அந்த முகம்....
அந்த முகம் வழக்கமாக அவளை அழைக்கும் பெயரை கூறி அழைக்கவே திடுக்கிட்டாள்...
கடவுளிடம் ஏன் இந்த சோதனை என்றூ கலங்கியவளின் சிந்தையை கலைத்தது அந்த குரல்..
அடியேய் தரித்திரம் புடிச்சவளே மணி ஆறாக போகுது எங்கடி என் பெட்காபி என்று இன்றைய அர்ச்சனையை ஆரம்பித்த தனது அத்தை சந்திராவின் குரலில் சுயஉணர்வுப் பெற்றவள் இதோ எடுத்துட்டு வர்ரேன் என்று அடுத்த 5 வது நிமிடம் ஆவிபறக்கும் பில்டர் காபியுடன் தன் அத்தையையின் முன் நின்றவளை கோபமாக பார்த்த சந்திரா பீடை ஒரு காபிகூட நேரத்திற்க்கு கொடுக்க முடியாத சனியன் சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு இல்லை தொலச்சிடுவேன் என்று வழக்கம் போல் வாழ்த்தி அனுப்பினாள்..
கண்களில் தோன்றிய கலக்கத்தை மறைத்தவாறு தனது பாட்டியின் அறைக்கு சென்றவளை கரகரத்த குரலில் பவி என்று அழைத்த. தாய்மாமன் சேதுபதி குரலில் திரும்பி பார்த்தவள் மாமனின் முகத்தை பார்த்து அத்தை பேசியதை கேட்டு விட்டார் என்று அறிந்துக்கோண்டவள் ப்ளீஸ் மாமா அத்தை பேசியதை சக்திகிட்ட சொல்ல வேண்டாம் என்று கேட்கவும் கலங்கிய கண்களை மறைத்துக்கொண்டு சரிடா கண்ணம்மா என்று அவள் தலையைவருடி விட்டு அவள் கொடுத்த காபியை ரசித்து குடித்தவர் உன் கையால காபி குடிச்சா அந்த நாள் புல்லா அந்த டேஸ்ட் நாக்க விட்டு போகாதுடா என்று தினமும் கூறுவதை கூறிவிட்டு நடைபயிற்ச்சிக்கு கிளம்பி விட்டார் ...
நடந்த அனைத்தையும் கவனித்தவாறே அங்கு வந்த பாட்டி அன்னலெட்சுமியைப்பார்த்து சிரித்துக்கொண்டே இரு பாட்டி உனக்கு காபி எடுத்துட்டு வாரேன் என்றவளை தடுத்து நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு நான் எடுத்துக்கிறேன் டா ராஜாத்தி நீ காலேஜ்க்கு கிளம்புடா என்ற பாட்டியிடம் சக்திக்கு காபி கொடுத்தூட்டு டிபன் ரெடி பண்ணிட்டு கிளம்புறேன் என்ற பேத்தியை நிறுத்தி சமையலுக்கு காவேரி இருக்கும் போது உனக்கு என்ன வேலை என்று காவேரியை அழைத்தப் பாட்டி பவியை கிட்சன் பக்கமே விடகூடாது அப்படி அவளை பார்த்தேன் சக்திகிட்ட சொல்லிடுவேன் என்ற மிரட்டலோடு புஜையறை சென்று விடவே சிறு புன்னகையுடன் ஓகே அன்னம் நா கிட்சன் பக்கம் போக மாட்டேன் நீ அந்த தடியன்ட போட்டு கொடுத்துடாதே நா இப்போ அவனுக்கு காபி கொடுத்து எழுப்பப்போறேன் என்று கூறிவிட்டு செல்லூம் பேத்தியை பார்த்து பெருமூச்சுடன் கடவுளிடம் தஞ்சமடைந்தார் தனது பேத்திக்காக...
காபியுடன் தனது மாமன் மகனின் அறையில் நுழைந்தாள் பவித்ரா...
தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டிருந்தான் சக்தி என்று அழைக்கப்படும் சக்தி கிருஷ்ணா பவிக்கு எப்பொழுதும் சகி.
காபியை டேபிளின் மேல் வைத்தவாறு டேய் தடியா எழுந்திரி டா டைம் ஆச்சு இன்னைக்கு எனக்கு யுன்வர்சிட்டி எக்ஸாசாம் சீக்கிரம் போகணும் ட்ராப் பண்ணுடா எருமை ....நம்ம சக்தி கிட்ட நோ ரியாக்ட்சன் விடுவாள நம்ம பவி மத்தவங்களுக்கு தான் அவ சைலண்ட் பவி நம் சக்திக்கு எப்போதும் வைலண்ட் பவி.
டேய் தண்ணிய தலைல கொட்டிடுவேன்டா நோ நோ ரியாக்ட்சன் தண்ணிய தலைல கொட்டியும் நோ நோ நோ ரியாக்ட்சன் அப்போதான் நம்ம பவிக்கு பெட் ஷீட்ட எடுத்து பாக்க தோனுச்சு உள்ள பவி அவனுக்கு ப்ரசண்ட் பண்ண டெடி பியர் தூங்கிட்டு இருந்துச்சு (பசங்க தானே பொண்ணுங்களுக்கு டெடி பியர் ஃப்ரசண்ட் பண்ணுவாங்க பொண்ணுங்க தானே டெடியோட தூங்குவாங்க ....ஹி ஹி ஹி நம்ம பவியும் சகியும் டிப்ரண்ட் பா)....
பின்னால் கேட்ட சிரிப்பொலியில் முறைத்தவாறே திரும்பினால் பவியின் காபியை ரசித்து குடித்துக்கொண்டு நின்றான் சகி...
போடா எரும காலையிலேயே என்னை சீட் பண்ணிட்டல்ல போ நா உன்னோட டூ என்று சிறு பிள்ளை போல் முகம் திருப்பிய பவியை புன்னகையுடன் பார்த்த சக்திக்கு அவள் என்றுமே குழைந்தைதான் சிறு வயதில் இருந்தே அவள் அறியாத தாயின் அன்பை வாரி வழங்கும் அவளின் தாயும் தந்தையுமானவன் அவளின் சக்தி. சக்திக்காக உயிரை கொடுக்கவும் தயங்காதவள் அவனுக்காக அவளை உயிருக்கும் மேலாக நேசித்த உறவை உதறி தள்ளியவள்.....
தன் பவிக்காக தான் தாயின் முகத்தை 5 வருடமாக நிமிர்ந்து பார்த்தது பேசாதவன்.
பவி அவனது குட்டி இளவரசி இதயத்தில் குடியிருக்கும் நட்பின் தேவதை தன உயிருக்கும் மேலான உயிர் தோழி...
அடுத்த ஒரு மணி நேரத்தில் பவியை அழைத்துக்கொண்டு கல்லூரி வளகத்தில் நுழைந்து வண்டியை நிறுத்தும் நேரம் பவிவிவிவி செல்லம் என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் அணு பல்லவி Lkg ல் இருந்து M.sc., வரை தொடர்ந்து வரும் நட்பு என்றால் தன்னை சிறிதும் கண்டுக்கொள்ளாத சக்தியின் மேல் தாறுமாறாக பொங்கி வழியும் காதலை மனதிற்க்குள்ளேயே வைத்து பூஜிக்கும் கள்ளி..
அவளின் வருகையை பார்த்த சக்தி ஆபத்தது ஆடி கார்ல முன்னடியே வந்துடுச்சு போலவே இவ லந்து தாங்காது மா நமக்கு நா கிளம்புறேன் என்று முனுமுனுத்தது தெளிவாகவே கேட்டது.
ஹல்லோ ஆபிஸர் மைன்ட் வாய்ஸ்ணு நினச்சிட்டு சத்தமா பேசிட்டிங்க என்று வாரியவளை முறைத்து விட்டு பவியிடம் 500 ரூபாய் தாளை நீட்டியவன் செலவுக்கு வச்சிக்கோ டா ந ஈவ்னிங் பிக் அப் பண்ண வரேன் பை என்று கூறி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு பவியை பார்த்துக்கோ டீ பல்தேவி என்று அவளை வெறுப்பேற்றிவிட்டு சென்றான்.பல்லவியை வெறுப்பேற்ற எப்போழுதும் பல்தேவி என்று அழைப்பான் ...
அவனின் பல்தேவியில் காளிதேவி ஆகி நின்றால் பல்லவி...கல்லூரி மணியடிக்கவே சாந்திதேவியை உதவிக்கு அழைத்தவாறை தேர்வறை நோக்கி பவியுடன் சென்றால்...
துடிக்கும்
வணக்கம் இது எனது முதல் கதை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு பிடித்த விதமாக எழுதுகின்றேன் எதும் தவறு இருந்தால் கூறுங்கள் ஏற்றுக்கொள்கின்றேன்.
முடிந்தளவு எனக்கு ஆதரவு அளியுங்கள்....
இதயத்தின் தேவதையே 1
அழகிய விடிதலின் எழிலை ரசித்தவாறு துயில் கலைந்து தன் அறையின் சன்னல் வழியே சூரியோதயத்தை ரசித்துக் கொண்டிருந்த பவியின் கண்களில் ஒரு துளி கண்ணீர் எட்டடிப்பார்த்தது தினமும் தவறாமல் உதயமாகி உலகை பிரகாசிக்க செய்யும் சூர்யோதயம் தன் வாழ்வின் காணல் நீர் போல் தான் ஆகிவிடுமோ என்று சிந்தனையை கலைத்தது பால்வண்டியின் ஒலி.
பாலை வாங்கி வைத்து விட்டு அன்றாட வேலைகளில் இறங்கினாள் பவித்ரா.
குளித்து முடித்து கோலமிட்டு பூஜைக்கு தேவையான மலர்களை பறித்து மாலை தொடுத்தவள் பூஜையறையில் தயார் செய்தவள் தனது இஷ்டதெய்வமான் சாய்பாபாவின் முன் கண்மூடி நின்றவள் தானது இனிய தேன்குரலில் மிகவும் மெதுவாக பாடஆரம்பித்ததாள்.
அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய் உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி அம்மா உன் மடிமீது நாள் தோறுமே நான் கண்ட பேரின்பம் இது போதுமே ஆயிரம் ஜென்மத்து வசனம் விட்டேன் பூரணம் தரும் சாயி அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ அந்தந்த காலத்தில் தந்தாயே நீ காத்திடும் அம்மா காலடி கிடந்தேன் ஆனந்த இது சாயி மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி சரணம் சரணம் சீரடி சாயி அபயம் அபயம் துவாரகா மாயி
கண்களை மூடி பாடி முடித்தள் எப்பொழுதும் போல் எவ்வளவு துன்பம் என்றாலும் எனக்கு கொடு ஆனா என் சக்திக்கு எந்த துன்பமும் கொடுத்து விடாதே இறைவா என்று தனது தாய் மாமனின் மகனும் ஆருயிர் தோழனும் ஆன சக்தி கிருஷ்ணாவுக்காக மட்டடுமே வேண்டிக்கொள்பவளின் மனக்கண்ணின் முன் இன்று வந்து சிரித்தது அந்த முகம்....
அந்த முகம் வழக்கமாக அவளை அழைக்கும் பெயரை கூறி அழைக்கவே திடுக்கிட்டாள்...
கடவுளிடம் ஏன் இந்த சோதனை என்றூ கலங்கியவளின் சிந்தையை கலைத்தது அந்த குரல்..
அடியேய் தரித்திரம் புடிச்சவளே மணி ஆறாக போகுது எங்கடி என் பெட்காபி என்று இன்றைய அர்ச்சனையை ஆரம்பித்த தனது அத்தை சந்திராவின் குரலில் சுயஉணர்வுப் பெற்றவள் இதோ எடுத்துட்டு வர்ரேன் என்று அடுத்த 5 வது நிமிடம் ஆவிபறக்கும் பில்டர் காபியுடன் தன் அத்தையையின் முன் நின்றவளை கோபமாக பார்த்த சந்திரா பீடை ஒரு காபிகூட நேரத்திற்க்கு கொடுக்க முடியாத சனியன் சீக்கிரம் டிபன் ரெடி பண்ணு இல்லை தொலச்சிடுவேன் என்று வழக்கம் போல் வாழ்த்தி அனுப்பினாள்..
கண்களில் தோன்றிய கலக்கத்தை மறைத்தவாறு தனது பாட்டியின் அறைக்கு சென்றவளை கரகரத்த குரலில் பவி என்று அழைத்த. தாய்மாமன் சேதுபதி குரலில் திரும்பி பார்த்தவள் மாமனின் முகத்தை பார்த்து அத்தை பேசியதை கேட்டு விட்டார் என்று அறிந்துக்கோண்டவள் ப்ளீஸ் மாமா அத்தை பேசியதை சக்திகிட்ட சொல்ல வேண்டாம் என்று கேட்கவும் கலங்கிய கண்களை மறைத்துக்கொண்டு சரிடா கண்ணம்மா என்று அவள் தலையைவருடி விட்டு அவள் கொடுத்த காபியை ரசித்து குடித்தவர் உன் கையால காபி குடிச்சா அந்த நாள் புல்லா அந்த டேஸ்ட் நாக்க விட்டு போகாதுடா என்று தினமும் கூறுவதை கூறிவிட்டு நடைபயிற்ச்சிக்கு கிளம்பி விட்டார் ...
நடந்த அனைத்தையும் கவனித்தவாறே அங்கு வந்த பாட்டி அன்னலெட்சுமியைப்பார்த்து சிரித்துக்கொண்டே இரு பாட்டி உனக்கு காபி எடுத்துட்டு வாரேன் என்றவளை தடுத்து நிறுத்தி நெற்றியில் முத்தமிட்டு நான் எடுத்துக்கிறேன் டா ராஜாத்தி நீ காலேஜ்க்கு கிளம்புடா என்ற பாட்டியிடம் சக்திக்கு காபி கொடுத்தூட்டு டிபன் ரெடி பண்ணிட்டு கிளம்புறேன் என்ற பேத்தியை நிறுத்தி சமையலுக்கு காவேரி இருக்கும் போது உனக்கு என்ன வேலை என்று காவேரியை அழைத்தப் பாட்டி பவியை கிட்சன் பக்கமே விடகூடாது அப்படி அவளை பார்த்தேன் சக்திகிட்ட சொல்லிடுவேன் என்ற மிரட்டலோடு புஜையறை சென்று விடவே சிறு புன்னகையுடன் ஓகே அன்னம் நா கிட்சன் பக்கம் போக மாட்டேன் நீ அந்த தடியன்ட போட்டு கொடுத்துடாதே நா இப்போ அவனுக்கு காபி கொடுத்து எழுப்பப்போறேன் என்று கூறிவிட்டு செல்லூம் பேத்தியை பார்த்து பெருமூச்சுடன் கடவுளிடம் தஞ்சமடைந்தார் தனது பேத்திக்காக...
காபியுடன் தனது மாமன் மகனின் அறையில் நுழைந்தாள் பவித்ரா...
தலையிலிருந்து கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கி கொண்டிருந்தான் சக்தி என்று அழைக்கப்படும் சக்தி கிருஷ்ணா பவிக்கு எப்பொழுதும் சகி.
காபியை டேபிளின் மேல் வைத்தவாறு டேய் தடியா எழுந்திரி டா டைம் ஆச்சு இன்னைக்கு எனக்கு யுன்வர்சிட்டி எக்ஸாசாம் சீக்கிரம் போகணும் ட்ராப் பண்ணுடா எருமை ....நம்ம சக்தி கிட்ட நோ ரியாக்ட்சன் விடுவாள நம்ம பவி மத்தவங்களுக்கு தான் அவ சைலண்ட் பவி நம் சக்திக்கு எப்போதும் வைலண்ட் பவி.
டேய் தண்ணிய தலைல கொட்டிடுவேன்டா நோ நோ ரியாக்ட்சன் தண்ணிய தலைல கொட்டியும் நோ நோ நோ ரியாக்ட்சன் அப்போதான் நம்ம பவிக்கு பெட் ஷீட்ட எடுத்து பாக்க தோனுச்சு உள்ள பவி அவனுக்கு ப்ரசண்ட் பண்ண டெடி பியர் தூங்கிட்டு இருந்துச்சு (பசங்க தானே பொண்ணுங்களுக்கு டெடி பியர் ஃப்ரசண்ட் பண்ணுவாங்க பொண்ணுங்க தானே டெடியோட தூங்குவாங்க ....ஹி ஹி ஹி நம்ம பவியும் சகியும் டிப்ரண்ட் பா)....
பின்னால் கேட்ட சிரிப்பொலியில் முறைத்தவாறே திரும்பினால் பவியின் காபியை ரசித்து குடித்துக்கொண்டு நின்றான் சகி...
போடா எரும காலையிலேயே என்னை சீட் பண்ணிட்டல்ல போ நா உன்னோட டூ என்று சிறு பிள்ளை போல் முகம் திருப்பிய பவியை புன்னகையுடன் பார்த்த சக்திக்கு அவள் என்றுமே குழைந்தைதான் சிறு வயதில் இருந்தே அவள் அறியாத தாயின் அன்பை வாரி வழங்கும் அவளின் தாயும் தந்தையுமானவன் அவளின் சக்தி. சக்திக்காக உயிரை கொடுக்கவும் தயங்காதவள் அவனுக்காக அவளை உயிருக்கும் மேலாக நேசித்த உறவை உதறி தள்ளியவள்.....
தன் பவிக்காக தான் தாயின் முகத்தை 5 வருடமாக நிமிர்ந்து பார்த்தது பேசாதவன்.
பவி அவனது குட்டி இளவரசி இதயத்தில் குடியிருக்கும் நட்பின் தேவதை தன உயிருக்கும் மேலான உயிர் தோழி...
அடுத்த ஒரு மணி நேரத்தில் பவியை அழைத்துக்கொண்டு கல்லூரி வளகத்தில் நுழைந்து வண்டியை நிறுத்தும் நேரம் பவிவிவிவி செல்லம் என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் அணு பல்லவி Lkg ல் இருந்து M.sc., வரை தொடர்ந்து வரும் நட்பு என்றால் தன்னை சிறிதும் கண்டுக்கொள்ளாத சக்தியின் மேல் தாறுமாறாக பொங்கி வழியும் காதலை மனதிற்க்குள்ளேயே வைத்து பூஜிக்கும் கள்ளி..
அவளின் வருகையை பார்த்த சக்தி ஆபத்தது ஆடி கார்ல முன்னடியே வந்துடுச்சு போலவே இவ லந்து தாங்காது மா நமக்கு நா கிளம்புறேன் என்று முனுமுனுத்தது தெளிவாகவே கேட்டது.
ஹல்லோ ஆபிஸர் மைன்ட் வாய்ஸ்ணு நினச்சிட்டு சத்தமா பேசிட்டிங்க என்று வாரியவளை முறைத்து விட்டு பவியிடம் 500 ரூபாய் தாளை நீட்டியவன் செலவுக்கு வச்சிக்கோ டா ந ஈவ்னிங் பிக் அப் பண்ண வரேன் பை என்று கூறி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து விட்டு பவியை பார்த்துக்கோ டீ பல்தேவி என்று அவளை வெறுப்பேற்றிவிட்டு சென்றான்.பல்லவியை வெறுப்பேற்ற எப்போழுதும் பல்தேவி என்று அழைப்பான் ...
அவனின் பல்தேவியில் காளிதேவி ஆகி நின்றால் பல்லவி...கல்லூரி மணியடிக்கவே சாந்திதேவியை உதவிக்கு அழைத்தவாறை தேர்வறை நோக்கி பவியுடன் சென்றால்...
துடிக்கும்