THAZHAI KANI
அமைச்சர்
"அடுத்த நிமிடம்
என்ன ஆகும் என அறியாத வாழ்க்கையில்
ஆயிரம் சோகங்கள்"
"சோகங்களை எல்லாம் சுற்றி
கடந்திடத்தான் தவிக்கிறேன்
இருப்பினும் இதயத்தில் ஏதோ ஒன்று"
"அழுகையை அறியாத கண்கள் தான்
ஆறாய் மாறிநிற்கிறது அர்த்தமே இல்லாமல்
அதை அறிய முற்படுகையிலே
முன்னின்று தடுக்கிறது இதயத்தில் ஏதோ ஒன்று"
"கண்ணீரை மறைக்கத்தான்
கடினமாய் போராடுகிறேன்
கைகொடுக்கவில்லை என் முயற்சி
கடவுளுக்கு கூட கருணையில்லையென
என் கைகொண்டே
என் கண்களை துடைத்துவிட்டு
சிரித்து சமாளிக்கலாம் சிக்கல்களை என்று
சிந்ததனை கொண்டபோது
சிரமம் தான் அதுவும் என சிக்கிக்கொண்டேன்"
"சில வலிகள்
சிறு சோகங்கள்
வெளிபடுத்த முடியாத பிரச்சனைகள்
வேதனை தரும் நினைவுகள்
முடியாத துயரங்கள்
கடந்து சென்ற காலங்கள்
காற்றில் கரையத்துடிக்கிறேன்
என் துயரங்களை எல்லாம் துடைத்தெறிந்திட
எண்ணம் அது நிறைவேற
தடுக்கிறது தடுப்பணை போட்டு
என் இதயத்தில் ஏதோ ஒன்று"
"சோகம் அது மறையுமா?
சொர்க்கம் அது திறக்குமா?
தோள் சாய்ந்து கதறிடத் தான்
உண்மை உறவு உரிமையுடன் வந்திடுமா?"
"வினாக்களுக்கு எல்லாம் விடை கேட்டேன்
என் இதயத்திடம்
இப்பொழுதும் தோன்றுகிறது என் இதயத்தில் ஏதோ ஒன்று"
"இது பயமா?
பாசமா?
பரிதவிப்பா?
அறியா நெஞ்சின் அழுகுரலா?
ஏக்கங்களின் ஏமாற்றமா?
எண்ணங்களின் வெளிப்பாடா?
காதலா?
காத்திருக்கிறேன் காலம் அது முடியும் முன்
காலனிடம் சேரும் முன் கண்டு கொள்வேன்
என் கேள்விக்கான விடை அதை
இதயத்தில் ஏதோ ஒன்று"
என்ன ஆகும் என அறியாத வாழ்க்கையில்
ஆயிரம் சோகங்கள்"
"சோகங்களை எல்லாம் சுற்றி
கடந்திடத்தான் தவிக்கிறேன்
இருப்பினும் இதயத்தில் ஏதோ ஒன்று"
"அழுகையை அறியாத கண்கள் தான்
ஆறாய் மாறிநிற்கிறது அர்த்தமே இல்லாமல்
அதை அறிய முற்படுகையிலே
முன்னின்று தடுக்கிறது இதயத்தில் ஏதோ ஒன்று"
"கண்ணீரை மறைக்கத்தான்
கடினமாய் போராடுகிறேன்
கைகொடுக்கவில்லை என் முயற்சி
கடவுளுக்கு கூட கருணையில்லையென
என் கைகொண்டே
என் கண்களை துடைத்துவிட்டு
சிரித்து சமாளிக்கலாம் சிக்கல்களை என்று
சிந்ததனை கொண்டபோது
சிரமம் தான் அதுவும் என சிக்கிக்கொண்டேன்"
"சில வலிகள்
சிறு சோகங்கள்
வெளிபடுத்த முடியாத பிரச்சனைகள்
வேதனை தரும் நினைவுகள்
முடியாத துயரங்கள்
கடந்து சென்ற காலங்கள்
காற்றில் கரையத்துடிக்கிறேன்
என் துயரங்களை எல்லாம் துடைத்தெறிந்திட
எண்ணம் அது நிறைவேற
தடுக்கிறது தடுப்பணை போட்டு
என் இதயத்தில் ஏதோ ஒன்று"
"சோகம் அது மறையுமா?
சொர்க்கம் அது திறக்குமா?
தோள் சாய்ந்து கதறிடத் தான்
உண்மை உறவு உரிமையுடன் வந்திடுமா?"
"வினாக்களுக்கு எல்லாம் விடை கேட்டேன்
என் இதயத்திடம்
இப்பொழுதும் தோன்றுகிறது என் இதயத்தில் ஏதோ ஒன்று"
"இது பயமா?
பாசமா?
பரிதவிப்பா?
அறியா நெஞ்சின் அழுகுரலா?
ஏக்கங்களின் ஏமாற்றமா?
எண்ணங்களின் வெளிப்பாடா?
காதலா?
காத்திருக்கிறேன் காலம் அது முடியும் முன்
காலனிடம் சேரும் முன் கண்டு கொள்வேன்
என் கேள்விக்கான விடை அதை
இதயத்தில் ஏதோ ஒன்று"