Soundarya Krish
முதலமைச்சர்
ஆச்சரியத்திலிருந்து வெளிவராதவளை உலுக்கி ஓர் புடவையை அவளிடம் கொடுத்து அணிந்து வரச் சொன்னான். அவள் புரியாது விழித்தாள். அதற்கு அவனோ, "சரியா பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி எனக்காக எங்க அக்கா ஒரு விலைமதிப்பற்ற ஒரு புனிதமான மாசுமறுவில்லாத நல்ல மனசுடைய ஒரு மரகத கல்லை எனக்குப் பரிசா கொடுத்தாங்க! அதுக்கு என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு இருக்குனு சாரி சாரி.. என் வாழ்க்கையே அது தானென்று நான் இப்போது தான் புரிந்துகொண்டேன்."
"அம்மா குடுத்தாங்களா? எங்க மாமா அந்த மரகதக் கல்?"
"நீ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. நான் உனக்கு அதை காட்டுறேன்."
அதையேற்று அவளும் அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் தயாராகி வருமுன்னர் அவன் செய்ய வேண்டிய மீதி வேலைகளைச் செய்தான். அவள் அவனளித்த சேலையில் கிளம்பி வந்தாள். அவள் அழகை ரசித்தவன் மெய்மறந்தான்.
"மாமா சேலை கட்டிட்டு வந்தா அந்த மரகதக் கல்லை காட்டுவேனென்று சொன்ன! காட்டு மாமா நான் மரகத கல்லைப் பார்த்ததே இல்லை மாமா!" என்று அவனிடம் கொஞ்சினாள்.
அவள் சலுகையாய் கொஞ்சியதில் மீண்டெழுந்த விதுரன் அவளை அழைத்துச் சென்று அவளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அவளை அமர்த்தினான். பின் அவள் காலடியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்தான். பொறுமையிழந்த மாதுவோ,"மாமா நான் என்ன கேட்கிறேன்! நீ என்ன செய்துகொண்டு இருக்கிற! மாமா..." என்று படபடத்தாள்.
அவளது படபடப்பையும் ரசித்தான் அந்த காதல் கள்வன். "பொறுடா! காட்டுறேன்..." என்று அவளை அமைதி படுத்திவிட்டு அந்த மரகத பட்டுடுத்திய அழகு மரகதச் சிலை முழுதாக தெரிய அவள் காலடியில் அவன் தெரிய ஒரு சுயமியை எடுத்தான். பின் அவளிடம்,"என்னுடைய அந்த தூய்மையான மரகதக் கல் கூடத்தான் இப்போ நான் பேசிட்டுருக்கேன் டீ!" என்று கூறி அவளருகில் அவனும் அமர்ந்து ஊஞ்சலைக் காலால் உந்தி ஆட்டிவிட்டான். அவன் திடீர் செயலில் அவள் அதிர்ந்து தெளியும் முன்னரே அவளை மீண்டும் அதிரவைத்தான் விதுரன் அவள் மடியில் தலைசாய்ந்து. அதில் பதறிய மாது தன் வலது காலை கீழூன்றி ஊஞ்சலை நிறுத்த எத்தனிக்கையில் அவன் அவளை விட விரைந்து அவள் பாதத்தைப் பற்றினான் தன் வலக்கையால்.
அவன் மடி சாய்ந்ததில் அவளில் உண்டான குறுகுறுப்பு அவனின் இச்செயலில் வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்வு பிரவாகத்தால் அவளது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கூசி சிலிர்த்தது. ஆயிரம் தடவை தொட்டு பேசிய தன் மாமன்தான் என்றாலும் அவனது இந்த காதல் அவதாரத்தை ஏற்க முடியாமல் என்பதை விட ஏற்கத் தெரியாமல் தவித்தாள் அந்த பேதை. அவள் நிலை உணர்ந்த விதுரனோ அவள் மடிக்கும் பாதத்திற்கும் விடுதலை தந்து எழுந்தான்.
மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் பூக்குவியலிற்குள் கிடத்தப்பட்ட மேசையில் அழகிய கேக் வீற்றிருந்தது. அதை நோக்கி அவளை அழைத்துச் சென்று,"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி!!" என்று கூறி அவள் பிறை நுதலில் தன் காதல் சாசனம் எழுதி இதழ் ரேகை பதித்தான் மாதுவின் காதல் அடிமை. கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டத் தயக்கத்துடன் அவனை நோக்கி கேக்கைக் கொண்டு சென்றாள்.
"எனக்கு நெத்தியாலா சாப்பிடுகிற பவர்லாம் இல்லைம்மா! உன் ஆசை பட்டியலில் அதுவும் இருக்கா?" என்று பயந்ததுபோல் நடித்தான் விதுரன்.
அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மாது தன் கை அவன் நெற்றியைக் குறிவைத்திருப்பதைக் கண்டு சிரித்தாள். பின் தயங்கிய படியே அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அவள் கையை பற்றிய விதுரன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான். எதுவோ தோன்ற அவளும் அவனைப் பார்த்தாள். அவன் விழிகளில் எதை உணர்ந்தாளோ சட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்தாள்.
"என்னாச்சு டீ பொண்டாட்டி மாமா முகத்தைப் பார்க்க மாட்டிக்குற என் மூஞ்சி அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?"
"என்னன்னு தெரியலை மாமா! நீ கையை பிடிக்கும் போது உன் கையை இறுக்கிப் பிடிச்சிக்கனும்னு தோனுது ஆனால் ஏதோ ஒன்னு தடுக்கிறது! நீங்க மடியில் படுக்கும்போது உங்க தலை முடியைக் கோதி விடனுமென்றுத் தோனும் ஆனால் மறுபடியும் ஏதோ வந்து தடுக்கும். இப்போ கூடப் பாருங்க உங்க முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியலை!" என்று வருந்தினாள்.
"அடி மக்கு அது வெக்கம் டீ! இந்த மாமன் கிட்ட சொல்லிட்டைல நான் பார்த்துக்கொள்கிறேன் இனி!" என்று அவளை சமாதானம் செய்து அவள் நீட்டிக் கொண்டிருந்த கேக்கை சுவைத்தான். இடையிடையே அவள் விரல்களையும் தான்.
மாதுவின் பிறந்த நாளை இனிமையாக இருவரும் சேர்ந்தே கொண்டாடி இரண்டு வருடம் கழித்து தங்கள் மதுராக்குட்டிக்கும் பிறந்தநாள் கொண்டாடத் தயாராகினர். தன் வாழ்க்கையின் நடந்த சம்பவங்களையும் தன் மனைவி தன் வாழ்க்கையை வரமாக வளமாக மாற்றியதையும் அசைபோட்டபடியே வீடு வந்தான் விதுரன்.
ஆசையும் மகிழ்ச்சியும்
போட்டிப் போட்டுச் சாமரம் வீச...
ஆச்சரியமும் குழப்பமும்
முட்டி மோதி பதற்றம் பூச...
விரைவாய் வாசல் வந்தேன்
என்னவளிடம் காதல் பேச...
வாசலில் அழைப்பு மணியை அழுத்தும் பொழுதே ஓர் அற்புத உணர்வு வந்து அவனை ஆட்கொண்டது. ஆவலுடன் காத்திருந்தான் மனைவியின் காதல் கனிந்த முகத்தைக் காண. அவன் ஏக்கத்தைத் தீர்க்கும் காதல் தடாகமாய் வந்து கதவு திறந்தாள். வாசலில் நின்றவனைச் சிரித்த முகமாக வரவேற்றுத் தேநீரும் சிற்றுண்டியும் அளித்துவிட்டு அவனுடன் சிறிது நேரம் வழக்கமான கலகலப்புடன் பேசினாள். பின் அவனிடம் சொல்லிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். அவனும் குளித்து இளைப்பாறி வரச் சென்றான்.
குளித்து முடித்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தான். அவன் முகத்தில் மனைவி தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோய் இருந்தது. அவன் மகளும் அவனை இடித்துக்கொண்டு வந்து ஃசோபாவில் அமர்ந்தாள். மகளின் செயலை இரசித்துச் சிரித்தவன்,"என் குட்டி தங்கத்துக்கு என்ன வேணுமாம்?"என்று கொஞ்சினான்.
"டின்னர்க்கு வெளிய கூட்டிட்டுப் போங்க டாடி!" என்று கட்டளையிட்டாள் மதுரா.
"டின்னரா? ம்ம்ம்.. சன்டே போகலாம் குட்டி!" என்றான் விது.
"டாடி! நீங்களா கூட்டிட்டுப் போனால்தான் உங்கள் சாய்ஸ். பட் இது வந்து ஃபீஸ், உங்கள் மாதுவை உங்கள் கூட பேசவச்சதுக்காக நீங்க எனக்கு தரப்போகிற ஃபீஸ்! அதுனால நான் தான் என்றைக்கு போகனும்னு சூஸ் பண்ணுவேன்!" என்று வழக்காடினாள் மதுரா.
"பேச வச்சியா??"
"ஆமா! அதுவும் ப்ளாக் மெயில் பண்ணி!"
"ப்ளாக் மெயிலா?? என்னடா சொல்ற குட்டிமா!"
"ஆமாப்பா ப்ளாக் மெயில் தான். அன்றைக்கு ஒரு ஃபோட்டோ காட்டுனீங்களா நீங்க அதை நான் அம்மாவிடம் காட்டினேன். அதான் அம்மா உங்க கிட்ட பேசாமல் இருந்தாங்க.. அதுனால அவங்களை அப்பாகிட்டப் பேசலைனா அந்த ஃபோட்டோவ ஸ்டேடஸ் வச்சி 'மை அம்மா பை மதுரா'னு ஸ்டேட்டஸ் போடுவேனென்று மிரட்டினேன்! உடனே உங்க கிட்ட பேசிட்டாங்க! எப்படி என் ப்ளான்?" என்று மார்தட்டிச் சிரித்தாள் மதுராக்குட்டி.
"எந்த ஃபோட்டோ டா குட்டி?"
"அதான்ப்பா மாதும்மா கிராமத்தில இருக்கும் போது எடுத்தது!"
'ஹா... ஹா... ஹா... அப்போது இன்றைக்குப் பாம்பு படுக்கை கன்பார்ம்!' என்று சிரித்த மனசாட்சி விதுரனின் முறைப்பில், 'குறைந்தபட்சம், தேனீ படுத்கையாச்சு உண்டென்று நினைக்கிறேன்!' என்று கூறிவிட்டு ஓடியது.
இரவு உணவு வரை இனிதாகவே அனைவருக்கும் பொழுது கழிந்தது. சீலா தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும் விதுரனிற்கு அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. தன் அறிவுரையை முடித்துக்கொண்ட சீலா இறுதியில்,"இனிமே நீ குடிப்ப?!" என்று கேட்டார். அவர் கேட்ட மாத்திரத்தில் விதுரனின் தலை வேகமாக இல்லையெனும் விதமாக ஆடியது.
அனைவரும் உறங்கச் சென்றனர். சீலா மதுராவை தன்னுடன் படுக்க அழைத்துச் சென்றார். அறைக்குள் வந்த விதுரன் தலையணையை மட்டும் நன்றாக உதறி எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கவும் மாது உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனைக் குழப்பமாகப் பார்த்த மாது," என்ன மாமா? எங்க போறீங்க? அதுவும் தலகானியோட..." என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் விழித்த விதுரன்,"இல்லை மாதும்மா நீ பாப்புக்காக தான என்கிட்ட பேசுற! இப்போது பாப்பாதான் இல்லையே! நீயும் பாவம் சோபாவில் கஷ்டப்பட்டு படுக்கனும். அதான் நான் வேண்டுமானால் வெளியில்.." என்று கூறியவனை இடைமறித்தது மாதுவின் சிரிப்பு.
அவன் அவளைப் புரியாமல் பார்க்க அவளோ,"மாமா அன்றைக்கு எறும்பை வைத்து விளையாண்டது மாதிரி இன்றைக்கும் பண்ணுவேன் பயந்துட்டியா? அய்யோ ஆனால் உண்மையிலேயே வேறவொன்னு ப்ளான் பண்ணேன் அதை செயல்படுத்துகிறதுக் குள்ள உன் தரப்புல ஒரு திடீர் திருப்பம் வந்து தீர்ப்பு மாறிருச்சு. சோ! நீ தப்பிச்சுட்ட!" என்று கூறிக் கண் சிமிட்டினாள்.
"அப்படி என்னாச்சு?"
மத்தியான நேரம் மாதுவும் சீலாவும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மது விளையாடிய சோர்வில் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அழைப்புமணி அழைத்தது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள் பயத்தில் வெளிறினாள்.
"அம்மா குடுத்தாங்களா? எங்க மாமா அந்த மரகதக் கல்?"
"நீ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. நான் உனக்கு அதை காட்டுறேன்."
அதையேற்று அவளும் அந்த சேலையை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் தயாராகி வருமுன்னர் அவன் செய்ய வேண்டிய மீதி வேலைகளைச் செய்தான். அவள் அவனளித்த சேலையில் கிளம்பி வந்தாள். அவள் அழகை ரசித்தவன் மெய்மறந்தான்.
"மாமா சேலை கட்டிட்டு வந்தா அந்த மரகதக் கல்லை காட்டுவேனென்று சொன்ன! காட்டு மாமா நான் மரகத கல்லைப் பார்த்ததே இல்லை மாமா!" என்று அவனிடம் கொஞ்சினாள்.
அவள் சலுகையாய் கொஞ்சியதில் மீண்டெழுந்த விதுரன் அவளை அழைத்துச் சென்று அவளுக்காக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அவளை அமர்த்தினான். பின் அவள் காலடியில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்தான். பொறுமையிழந்த மாதுவோ,"மாமா நான் என்ன கேட்கிறேன்! நீ என்ன செய்துகொண்டு இருக்கிற! மாமா..." என்று படபடத்தாள்.
அவளது படபடப்பையும் ரசித்தான் அந்த காதல் கள்வன். "பொறுடா! காட்டுறேன்..." என்று அவளை அமைதி படுத்திவிட்டு அந்த மரகத பட்டுடுத்திய அழகு மரகதச் சிலை முழுதாக தெரிய அவள் காலடியில் அவன் தெரிய ஒரு சுயமியை எடுத்தான். பின் அவளிடம்,"என்னுடைய அந்த தூய்மையான மரகதக் கல் கூடத்தான் இப்போ நான் பேசிட்டுருக்கேன் டீ!" என்று கூறி அவளருகில் அவனும் அமர்ந்து ஊஞ்சலைக் காலால் உந்தி ஆட்டிவிட்டான். அவன் திடீர் செயலில் அவள் அதிர்ந்து தெளியும் முன்னரே அவளை மீண்டும் அதிரவைத்தான் விதுரன் அவள் மடியில் தலைசாய்ந்து. அதில் பதறிய மாது தன் வலது காலை கீழூன்றி ஊஞ்சலை நிறுத்த எத்தனிக்கையில் அவன் அவளை விட விரைந்து அவள் பாதத்தைப் பற்றினான் தன் வலக்கையால்.
அவன் மடி சாய்ந்ததில் அவளில் உண்டான குறுகுறுப்பு அவனின் இச்செயலில் வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்வு பிரவாகத்தால் அவளது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கூசி சிலிர்த்தது. ஆயிரம் தடவை தொட்டு பேசிய தன் மாமன்தான் என்றாலும் அவனது இந்த காதல் அவதாரத்தை ஏற்க முடியாமல் என்பதை விட ஏற்கத் தெரியாமல் தவித்தாள் அந்த பேதை. அவள் நிலை உணர்ந்த விதுரனோ அவள் மடிக்கும் பாதத்திற்கும் விடுதலை தந்து எழுந்தான்.
மேல்மாடத்தின் ஒரு ஓரத்தில் பூக்குவியலிற்குள் கிடத்தப்பட்ட மேசையில் அழகிய கேக் வீற்றிருந்தது. அதை நோக்கி அவளை அழைத்துச் சென்று,"இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பொண்டாட்டி!!" என்று கூறி அவள் பிறை நுதலில் தன் காதல் சாசனம் எழுதி இதழ் ரேகை பதித்தான் மாதுவின் காதல் அடிமை. கேக்கை வெட்டி அவனுக்கு ஊட்டத் தயக்கத்துடன் அவனை நோக்கி கேக்கைக் கொண்டு சென்றாள்.
"எனக்கு நெத்தியாலா சாப்பிடுகிற பவர்லாம் இல்லைம்மா! உன் ஆசை பட்டியலில் அதுவும் இருக்கா?" என்று பயந்ததுபோல் நடித்தான் விதுரன்.
அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மாது தன் கை அவன் நெற்றியைக் குறிவைத்திருப்பதைக் கண்டு சிரித்தாள். பின் தயங்கிய படியே அவன் வாயருகில் கொண்டு சென்றாள். அவள் கையை பற்றிய விதுரன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தான். எதுவோ தோன்ற அவளும் அவனைப் பார்த்தாள். அவன் விழிகளில் எதை உணர்ந்தாளோ சட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்தாள்.
"என்னாச்சு டீ பொண்டாட்டி மாமா முகத்தைப் பார்க்க மாட்டிக்குற என் மூஞ்சி அவ்வளவு கேவலமாகவா இருக்கிறது?"
"என்னன்னு தெரியலை மாமா! நீ கையை பிடிக்கும் போது உன் கையை இறுக்கிப் பிடிச்சிக்கனும்னு தோனுது ஆனால் ஏதோ ஒன்னு தடுக்கிறது! நீங்க மடியில் படுக்கும்போது உங்க தலை முடியைக் கோதி விடனுமென்றுத் தோனும் ஆனால் மறுபடியும் ஏதோ வந்து தடுக்கும். இப்போ கூடப் பாருங்க உங்க முகத்தை பார்க்கனும்னு நினைக்கிறேன் ஆனால் முடியலை!" என்று வருந்தினாள்.
"அடி மக்கு அது வெக்கம் டீ! இந்த மாமன் கிட்ட சொல்லிட்டைல நான் பார்த்துக்கொள்கிறேன் இனி!" என்று அவளை சமாதானம் செய்து அவள் நீட்டிக் கொண்டிருந்த கேக்கை சுவைத்தான். இடையிடையே அவள் விரல்களையும் தான்.
மாதுவின் பிறந்த நாளை இனிமையாக இருவரும் சேர்ந்தே கொண்டாடி இரண்டு வருடம் கழித்து தங்கள் மதுராக்குட்டிக்கும் பிறந்தநாள் கொண்டாடத் தயாராகினர். தன் வாழ்க்கையின் நடந்த சம்பவங்களையும் தன் மனைவி தன் வாழ்க்கையை வரமாக வளமாக மாற்றியதையும் அசைபோட்டபடியே வீடு வந்தான் விதுரன்.
ஆசையும் மகிழ்ச்சியும்
போட்டிப் போட்டுச் சாமரம் வீச...
ஆச்சரியமும் குழப்பமும்
முட்டி மோதி பதற்றம் பூச...
விரைவாய் வாசல் வந்தேன்
என்னவளிடம் காதல் பேச...
வாசலில் அழைப்பு மணியை அழுத்தும் பொழுதே ஓர் அற்புத உணர்வு வந்து அவனை ஆட்கொண்டது. ஆவலுடன் காத்திருந்தான் மனைவியின் காதல் கனிந்த முகத்தைக் காண. அவன் ஏக்கத்தைத் தீர்க்கும் காதல் தடாகமாய் வந்து கதவு திறந்தாள். வாசலில் நின்றவனைச் சிரித்த முகமாக வரவேற்றுத் தேநீரும் சிற்றுண்டியும் அளித்துவிட்டு அவனுடன் சிறிது நேரம் வழக்கமான கலகலப்புடன் பேசினாள். பின் அவனிடம் சொல்லிவிட்டுச் சமையல் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். அவனும் குளித்து இளைப்பாறி வரச் சென்றான்.
குளித்து முடித்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தான். அவன் முகத்தில் மனைவி தன்னிடம் பேசியதில் மகிழ்ந்துபோய் இருந்தது. அவன் மகளும் அவனை இடித்துக்கொண்டு வந்து ஃசோபாவில் அமர்ந்தாள். மகளின் செயலை இரசித்துச் சிரித்தவன்,"என் குட்டி தங்கத்துக்கு என்ன வேணுமாம்?"என்று கொஞ்சினான்.
"டின்னர்க்கு வெளிய கூட்டிட்டுப் போங்க டாடி!" என்று கட்டளையிட்டாள் மதுரா.
"டின்னரா? ம்ம்ம்.. சன்டே போகலாம் குட்டி!" என்றான் விது.
"டாடி! நீங்களா கூட்டிட்டுப் போனால்தான் உங்கள் சாய்ஸ். பட் இது வந்து ஃபீஸ், உங்கள் மாதுவை உங்கள் கூட பேசவச்சதுக்காக நீங்க எனக்கு தரப்போகிற ஃபீஸ்! அதுனால நான் தான் என்றைக்கு போகனும்னு சூஸ் பண்ணுவேன்!" என்று வழக்காடினாள் மதுரா.
"பேச வச்சியா??"
"ஆமா! அதுவும் ப்ளாக் மெயில் பண்ணி!"
"ப்ளாக் மெயிலா?? என்னடா சொல்ற குட்டிமா!"
"ஆமாப்பா ப்ளாக் மெயில் தான். அன்றைக்கு ஒரு ஃபோட்டோ காட்டுனீங்களா நீங்க அதை நான் அம்மாவிடம் காட்டினேன். அதான் அம்மா உங்க கிட்ட பேசாமல் இருந்தாங்க.. அதுனால அவங்களை அப்பாகிட்டப் பேசலைனா அந்த ஃபோட்டோவ ஸ்டேடஸ் வச்சி 'மை அம்மா பை மதுரா'னு ஸ்டேட்டஸ் போடுவேனென்று மிரட்டினேன்! உடனே உங்க கிட்ட பேசிட்டாங்க! எப்படி என் ப்ளான்?" என்று மார்தட்டிச் சிரித்தாள் மதுராக்குட்டி.
"எந்த ஃபோட்டோ டா குட்டி?"
"அதான்ப்பா மாதும்மா கிராமத்தில இருக்கும் போது எடுத்தது!"
'ஹா... ஹா... ஹா... அப்போது இன்றைக்குப் பாம்பு படுக்கை கன்பார்ம்!' என்று சிரித்த மனசாட்சி விதுரனின் முறைப்பில், 'குறைந்தபட்சம், தேனீ படுத்கையாச்சு உண்டென்று நினைக்கிறேன்!' என்று கூறிவிட்டு ஓடியது.
இரவு உணவு வரை இனிதாகவே அனைவருக்கும் பொழுது கழிந்தது. சீலா தன் மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும் விதுரனிற்கு அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. தன் அறிவுரையை முடித்துக்கொண்ட சீலா இறுதியில்,"இனிமே நீ குடிப்ப?!" என்று கேட்டார். அவர் கேட்ட மாத்திரத்தில் விதுரனின் தலை வேகமாக இல்லையெனும் விதமாக ஆடியது.
அனைவரும் உறங்கச் சென்றனர். சீலா மதுராவை தன்னுடன் படுக்க அழைத்துச் சென்றார். அறைக்குள் வந்த விதுரன் தலையணையை மட்டும் நன்றாக உதறி எடுத்துக்கொண்டு கதவைத் திறக்கவும் மாது உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனைக் குழப்பமாகப் பார்த்த மாது," என்ன மாமா? எங்க போறீங்க? அதுவும் தலகானியோட..." என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் விழித்த விதுரன்,"இல்லை மாதும்மா நீ பாப்புக்காக தான என்கிட்ட பேசுற! இப்போது பாப்பாதான் இல்லையே! நீயும் பாவம் சோபாவில் கஷ்டப்பட்டு படுக்கனும். அதான் நான் வேண்டுமானால் வெளியில்.." என்று கூறியவனை இடைமறித்தது மாதுவின் சிரிப்பு.
அவன் அவளைப் புரியாமல் பார்க்க அவளோ,"மாமா அன்றைக்கு எறும்பை வைத்து விளையாண்டது மாதிரி இன்றைக்கும் பண்ணுவேன் பயந்துட்டியா? அய்யோ ஆனால் உண்மையிலேயே வேறவொன்னு ப்ளான் பண்ணேன் அதை செயல்படுத்துகிறதுக் குள்ள உன் தரப்புல ஒரு திடீர் திருப்பம் வந்து தீர்ப்பு மாறிருச்சு. சோ! நீ தப்பிச்சுட்ட!" என்று கூறிக் கண் சிமிட்டினாள்.
"அப்படி என்னாச்சு?"
மத்தியான நேரம் மாதுவும் சீலாவும் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மது விளையாடிய சோர்வில் உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அழைப்புமணி அழைத்தது. யாரென்று பார்க்க கதவைத் திறந்தவள் பயத்தில் வெளிறினாள்.