Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்...??? அபி - ப்ரியா தான் ஜோடினு பல பேர் கண்டுபிடிச்சுருப்பீங்க...??? இந்த எபில ப்ரியாவோட லவ் ஸ்டோரிய பார்ப்போம்...???
“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு… உனக்கே தெரியும்…”
“இத தான் 5 நிமிஷமா சொல்லிட்டு இருக்கீங்க….”
“பேபி உன் பொறுமையைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… சோ இன்னும் கொஞ்ச நேரம் குட் கேர்ளா அமைதியா வந்தா உனக்கு ஒரு கிப்ட் கிடைக்கும்…”
என் பொறுமையைப் பற்றி கிண்டலடித்ததும் இனிமேல் அவனிடம் எதுவும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து வாயைக் கைகளால் மூடியபடி அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றேன். என் செய்கையைப் பார்த்து அவன் நகைப்பது கேட்டாலும் அவனிடம் பேசக் கூடாது என்று என்னையே கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.
சிறிது நிமிடங்கள் கடந்த பின் சில்லென்ற காற்று வீசி என்னை சிலிர்க்கச் செய்தது. என்னால் பூக்களின் வாசத்தை உணர முடிந்தது. அங்கு வந்ததும் அவன் மெல்ல என் கண்களைத் திறக்க, என் முன்னால் இருந்த கார்டன் டின்னர் செட்டிங்கில் மயங்கித் தான் போனேன்.
கண்கள் கூசுமளவு இல்லாமல் மிதமான வெளிச்சத்தோடு அந்த இரவை ரம்மியமாக்கியது. வழி நெடுகிலும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. அவற்றின் மீது என்னவனுடன் நடக்கும்போது பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் வாய் மூடி மெளனமாக அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
அங்கு போடப்பட்டிருந்த மேசைக்குச் சென்றோம். அது ஒரு ‘ரொமான்டிக்’ டின்னருக்காக அமைக்கப்பட்டிருந்த மேசை. ரோஜா இதழ்களும் இதய வடிவ மெழுகுவர்த்திகளும் அதை அலங்கரித்தன. இவற்றையெல்லாம் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துக்க கொண்டிருந்தேன்.
அங்கு உட்காரச் சென்றபோது என் நாற்காலியை அவனே இழுத்து என்னை அமரச் சொன்னான். இது போல அவன் செய்யும் சிறு சிறு விஷயங்களும் என்னை சிறப்பாக உணரச் செய்தது.
“எப்படி இருக்கு பேபி?”
இன்னும் அந்த அற்புதமான அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நான், “ஹான்… என்ன கேட்டீங்க?” என்று கூறினேன்.
அவனோ எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து அவனின் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான்.
‘இப்படி சிரிச்சே என்ன மயக்கிடுற???…’ இவ்வளவு நேரம் சுற்றியிருந்ததை திறந்த வாய் மூடாமல் பார்த்த நான் இப்போது அவனிடம் லயித்து விட்டேன்.
“பேபி என்ன பார்த்தது போதும்???..” என்று கண்ணடித்துக் கொண்டே, “இந்த செட்டிங் பத்தி ஒன்னுமே சொல்லையே…” புருவத்தை உயர்த்தி வினவினான். அப்போதே அவனின் புருவம் உயர்த்தும் செயலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.
“டார்லு… உனக்கு தெரியலையா நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு???… ஐயம் இன் ‘கிளௌட் நையன்’???. இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ்ஸ நான் எதிர்பார்க்கவே இல்ல…”
“அப்படியா அப்போ இந்த மொமெண்ட்ட இன்னும் மறக்கமுடியாததா மாத்திடலாமா பேபி???…” என்று கூறியபடியே அருகில் வந்தான்.
நானோ என் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். என் இதயம் படுவேகமாக துடிக்கும் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது. சிறிது வினாடிகள் கழித்தும் எதுவும் நடக்காததால் ??? கண்களைத் திறந்து பார்த்தபோது நான் இன்னமும் என் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன்.
‘ச்சே கனவு தானா???…’ என்று சலித்துக் கொண்டேன்.
‘இன்னும் லவ்வே சொல்லலையாம் அதுக்குள்ள ‘கிஸ்’ சீன் கேக்குதா…’ என்று என் மனச்சாட்சி என்னைக் கலாய்க்க…
‘ஹ்ம்ம் அவன் என் கனவுல வந்தா நான் என்ன பண்ணுவேன்…’ என்று நானும் என் மனச்சாட்சியும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, என் அம்மாவின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து சென்றேன்.
அன்று காலை லோன் விஷயமாக பேங்கிற்கு நானும் அபியும் சென்றோம். அங்கு ஏற்கனவே சாண்டியும் தாமோ அங்கிளும் எங்களுக்காக காத்திருந்தனர். மேனேஜரிடம் லோன் பற்றி ஆலோசித்தோம். பின் அவர் இன்னும் ஒரு மாதத்தில் லோன் சன்க்ஷனாகிவிடும் என்று கூறினார். பின் நாங்கள் அனைவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தோம்.
“லோன் சன்க்ஷன் ஆக 1 மந்த் ஆகும்னு சொல்றாரு… அது வரைக்கும் என்ன பண்ண…” என்று சாண்டி கேட்டாள். நானும் அதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
“லோன் கையில கிடைக்கிற வரைக்கும் உங்களுக்கு நான் பணம் தரேன்…” என்று தாமோ அங்கிள் கூறியவுடன், “வேண்டாம் அங்கிள்” என்று கூறினேன்.
“கியூட்டி நான் சொல்றத முழுசா கேளு… நான் நெனச்சா உங்கள லோன் வாங்க விடாம நானே உங்க பொடிக்குக்கு ஃபுல்லா ஃபண்ட் பண்ண முடியும்… ஆனா அப்படி ஆரம்பிச்சா அது உங்களோட பொடிக்கா இருக்காது… அதனால தான் லோன் வாங்கவே நான் சம்மதிச்சேன்… இப்போ என்ன லோன் வரவரைக்கும் நான் தரேன்… லோன் வந்ததுக்கு அப்பறம் நான் எவ்வளவு செலவு பண்ணேனோ அத திருப்பி கொடுத்துருங்க…” என்று கூறினார்.
இது எனக்கு பிடித்திருந்தது. நான் அபியைப் பார்க்க அவனும் இதற்கு சம்மதித்தான்.
“சூப்பர்… இப்போவே நாம பொட்டிக்கோட ஒர்க்ஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.
“எந்த இடத்துல வைக்க போறீங்கன்னு முடிவு பண்ணிடீங்களா…” என்றார் தாமோ அங்கிள்.
“இல்ல அங்கிள்… நாங்களும் ரெண்டு மூணு இடத்த நெட்ல தேடிப் பார்த்தோம்… பட் அங்கயெல்லாம் வாடகை காஸ்ட்லியா இருக்கு…”
அப்போது அபி அவனின் ரெஸ்டாரண்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு இடம் இருப்பதாக கூறினான். நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லும்போது அந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்து பார்த்தபோதே அந்த இடம் நன்றாக இருந்தது. எங்கள் பொடிக்கிற்கும் அது ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணியே அந்த இடத்தைப் பற்றி விசாரிக்கவில்லை.
“அபி ஆனா அந்த இடத்தோட ரெண்ட் அதிகமா இருக்கும்ல…”
“ஒரு தடவ அந்த இடத்தப் பாரு… உனக்கு பிடிச்சா மேற்கொண்டு ரெண்ட் பத்தி பேசலாம்…”
“அப்போ வாங்க இப்போவே போகலாம்…” என்று சாண்டி கூறினாள்.
அபியோ, “இருங்க அந்த இடத்தோட ஓனர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” என்று கூறிவிட்டு சென்றான்.
ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்த அவன், “அந்த ஓனர் ஊருல இல்லையாம்… சோ நம்ம அந்த இடத்தப் பாத்துட்டு பிடிச்சுருந்தா போன்ல இன்போர்ம் பண்ணிடலாம்…”
அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் எல்லாருக்கும் பிடித்திருந்தது. நான் அபியிடம் அந்த இடத்திற்கான வாடகை எவ்வளவு என்று கேட்டதும் மீண்டும் அந்த ஓனரிடம் பேசினான்.
அவன் சொன்ன வாடகையில் நாங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் மதிப்பிட்டதை விட குறைவான வாடகையை சொன்னான். இதைக் கேட்டதும் நானும் சாண்டியும் மகிழ்ந்தோம்.
அங்கிருந்து வீட்டிற்கு வந்த நான் என் அப்பாவிடம் லோன் பற்றியும் நாங்கள் பார்த்த இடம் அதன் வாடகை பற்றியும் கூறினேன். அவர் சென்றதும் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். மேலும் என் அம்மாவை வெறுப்பேத்தி கலாய்த்து விட்டே என் அறைக்குச் சென்றேன்.
என் அறைக்குச் சென்றதும் வேகமாக முகநூலிற்குள் சென்றேன். இன்று நடந்ததைக் க்ரிஷிற்கு ஒளிபரப்ப… அவன் அதைக் கேட்டதும் என்னை வாழ்த்தினான். பின் அந்த இடம் பற்றிக் கேட்டான்.
க்ரிஷ் : ஹே உனக்கு அந்த ரெண்டல் பிளேஸ் பிடிச்சுருக்கா?
நான் : சூப்பரா இருக்கு???…
ஃபர்ஸ்ட் அந்த பிளேஸ பாத்துட்டு ரெண்ட் ரொம்ப அதிகமா இருக்கும்னு நெனச்சேன்… பட் நாங்க எஸ்டிமேட் பண்ணத விட ரொம்ப கம்மியா இருந்தது… ஃபைனலி மீ வெரி ஹாப்பி…
க்ரிஷ் : ஓ… சூப்பர்…???
நான் : ஆனா பாவம் அந்த ஓனருக்கு தான் அந்த பிளேஸோட ஒர்த்தே தெரியல…???
க்ரிஷ் : ???
ஈர்ப்பு 20
“எனக்கு கண்ண கட்டிட்டு எங்க கூட்டிட்டு போறீங்க?”“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு… உனக்கே தெரியும்…”
“இத தான் 5 நிமிஷமா சொல்லிட்டு இருக்கீங்க….”
“பேபி உன் பொறுமையைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… சோ இன்னும் கொஞ்ச நேரம் குட் கேர்ளா அமைதியா வந்தா உனக்கு ஒரு கிப்ட் கிடைக்கும்…”
என் பொறுமையைப் பற்றி கிண்டலடித்ததும் இனிமேல் அவனிடம் எதுவும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து வாயைக் கைகளால் மூடியபடி அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றேன். என் செய்கையைப் பார்த்து அவன் நகைப்பது கேட்டாலும் அவனிடம் பேசக் கூடாது என்று என்னையே கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.
சிறிது நிமிடங்கள் கடந்த பின் சில்லென்ற காற்று வீசி என்னை சிலிர்க்கச் செய்தது. என்னால் பூக்களின் வாசத்தை உணர முடிந்தது. அங்கு வந்ததும் அவன் மெல்ல என் கண்களைத் திறக்க, என் முன்னால் இருந்த கார்டன் டின்னர் செட்டிங்கில் மயங்கித் தான் போனேன்.
கண்கள் கூசுமளவு இல்லாமல் மிதமான வெளிச்சத்தோடு அந்த இரவை ரம்மியமாக்கியது. வழி நெடுகிலும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தது. அவற்றின் மீது என்னவனுடன் நடக்கும்போது பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது. அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் வாய் மூடி மெளனமாக அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
அங்கு போடப்பட்டிருந்த மேசைக்குச் சென்றோம். அது ஒரு ‘ரொமான்டிக்’ டின்னருக்காக அமைக்கப்பட்டிருந்த மேசை. ரோஜா இதழ்களும் இதய வடிவ மெழுகுவர்த்திகளும் அதை அலங்கரித்தன. இவற்றையெல்லாம் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துக்க கொண்டிருந்தேன்.
அங்கு உட்காரச் சென்றபோது என் நாற்காலியை அவனே இழுத்து என்னை அமரச் சொன்னான். இது போல அவன் செய்யும் சிறு சிறு விஷயங்களும் என்னை சிறப்பாக உணரச் செய்தது.
“எப்படி இருக்கு பேபி?”
இன்னும் அந்த அற்புதமான அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நான், “ஹான்… என்ன கேட்டீங்க?” என்று கூறினேன்.
அவனோ எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து அவனின் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான்.
‘இப்படி சிரிச்சே என்ன மயக்கிடுற???…’ இவ்வளவு நேரம் சுற்றியிருந்ததை திறந்த வாய் மூடாமல் பார்த்த நான் இப்போது அவனிடம் லயித்து விட்டேன்.
“பேபி என்ன பார்த்தது போதும்???..” என்று கண்ணடித்துக் கொண்டே, “இந்த செட்டிங் பத்தி ஒன்னுமே சொல்லையே…” புருவத்தை உயர்த்தி வினவினான். அப்போதே அவனின் புருவம் உயர்த்தும் செயலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.
“டார்லு… உனக்கு தெரியலையா நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு???… ஐயம் இன் ‘கிளௌட் நையன்’???. இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ்ஸ நான் எதிர்பார்க்கவே இல்ல…”
“அப்படியா அப்போ இந்த மொமெண்ட்ட இன்னும் மறக்கமுடியாததா மாத்திடலாமா பேபி???…” என்று கூறியபடியே அருகில் வந்தான்.
நானோ என் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். என் இதயம் படுவேகமாக துடிக்கும் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது. சிறிது வினாடிகள் கழித்தும் எதுவும் நடக்காததால் ??? கண்களைத் திறந்து பார்த்தபோது நான் இன்னமும் என் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன்.
‘ச்சே கனவு தானா???…’ என்று சலித்துக் கொண்டேன்.
‘இன்னும் லவ்வே சொல்லலையாம் அதுக்குள்ள ‘கிஸ்’ சீன் கேக்குதா…’ என்று என் மனச்சாட்சி என்னைக் கலாய்க்க…
‘ஹ்ம்ம் அவன் என் கனவுல வந்தா நான் என்ன பண்ணுவேன்…’ என்று நானும் என் மனச்சாட்சியும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, என் அம்மாவின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து சென்றேன்.
அன்று காலை லோன் விஷயமாக பேங்கிற்கு நானும் அபியும் சென்றோம். அங்கு ஏற்கனவே சாண்டியும் தாமோ அங்கிளும் எங்களுக்காக காத்திருந்தனர். மேனேஜரிடம் லோன் பற்றி ஆலோசித்தோம். பின் அவர் இன்னும் ஒரு மாதத்தில் லோன் சன்க்ஷனாகிவிடும் என்று கூறினார். பின் நாங்கள் அனைவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தோம்.
“லோன் சன்க்ஷன் ஆக 1 மந்த் ஆகும்னு சொல்றாரு… அது வரைக்கும் என்ன பண்ண…” என்று சாண்டி கேட்டாள். நானும் அதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
“லோன் கையில கிடைக்கிற வரைக்கும் உங்களுக்கு நான் பணம் தரேன்…” என்று தாமோ அங்கிள் கூறியவுடன், “வேண்டாம் அங்கிள்” என்று கூறினேன்.
“கியூட்டி நான் சொல்றத முழுசா கேளு… நான் நெனச்சா உங்கள லோன் வாங்க விடாம நானே உங்க பொடிக்குக்கு ஃபுல்லா ஃபண்ட் பண்ண முடியும்… ஆனா அப்படி ஆரம்பிச்சா அது உங்களோட பொடிக்கா இருக்காது… அதனால தான் லோன் வாங்கவே நான் சம்மதிச்சேன்… இப்போ என்ன லோன் வரவரைக்கும் நான் தரேன்… லோன் வந்ததுக்கு அப்பறம் நான் எவ்வளவு செலவு பண்ணேனோ அத திருப்பி கொடுத்துருங்க…” என்று கூறினார்.
இது எனக்கு பிடித்திருந்தது. நான் அபியைப் பார்க்க அவனும் இதற்கு சம்மதித்தான்.
“சூப்பர்… இப்போவே நாம பொட்டிக்கோட ஒர்க்ஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்..” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.
“எந்த இடத்துல வைக்க போறீங்கன்னு முடிவு பண்ணிடீங்களா…” என்றார் தாமோ அங்கிள்.
“இல்ல அங்கிள்… நாங்களும் ரெண்டு மூணு இடத்த நெட்ல தேடிப் பார்த்தோம்… பட் அங்கயெல்லாம் வாடகை காஸ்ட்லியா இருக்கு…”
அப்போது அபி அவனின் ரெஸ்டாரண்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு இடம் இருப்பதாக கூறினான். நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லும்போது அந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன். வெளியே இருந்து பார்த்தபோதே அந்த இடம் நன்றாக இருந்தது. எங்கள் பொடிக்கிற்கும் அது ஏற்றதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணியே அந்த இடத்தைப் பற்றி விசாரிக்கவில்லை.
“அபி ஆனா அந்த இடத்தோட ரெண்ட் அதிகமா இருக்கும்ல…”
“ஒரு தடவ அந்த இடத்தப் பாரு… உனக்கு பிடிச்சா மேற்கொண்டு ரெண்ட் பத்தி பேசலாம்…”
“அப்போ வாங்க இப்போவே போகலாம்…” என்று சாண்டி கூறினாள்.
அபியோ, “இருங்க அந்த இடத்தோட ஓனர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்…” என்று கூறிவிட்டு சென்றான்.
ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்த அவன், “அந்த ஓனர் ஊருல இல்லையாம்… சோ நம்ம அந்த இடத்தப் பாத்துட்டு பிடிச்சுருந்தா போன்ல இன்போர்ம் பண்ணிடலாம்…”
அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் எல்லாருக்கும் பிடித்திருந்தது. நான் அபியிடம் அந்த இடத்திற்கான வாடகை எவ்வளவு என்று கேட்டதும் மீண்டும் அந்த ஓனரிடம் பேசினான்.
அவன் சொன்ன வாடகையில் நாங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் மதிப்பிட்டதை விட குறைவான வாடகையை சொன்னான். இதைக் கேட்டதும் நானும் சாண்டியும் மகிழ்ந்தோம்.
அங்கிருந்து வீட்டிற்கு வந்த நான் என் அப்பாவிடம் லோன் பற்றியும் நாங்கள் பார்த்த இடம் அதன் வாடகை பற்றியும் கூறினேன். அவர் சென்றதும் என் அம்மாவைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். மேலும் என் அம்மாவை வெறுப்பேத்தி கலாய்த்து விட்டே என் அறைக்குச் சென்றேன்.
என் அறைக்குச் சென்றதும் வேகமாக முகநூலிற்குள் சென்றேன். இன்று நடந்ததைக் க்ரிஷிற்கு ஒளிபரப்ப… அவன் அதைக் கேட்டதும் என்னை வாழ்த்தினான். பின் அந்த இடம் பற்றிக் கேட்டான்.
க்ரிஷ் : ஹே உனக்கு அந்த ரெண்டல் பிளேஸ் பிடிச்சுருக்கா?
நான் : சூப்பரா இருக்கு???…
ஃபர்ஸ்ட் அந்த பிளேஸ பாத்துட்டு ரெண்ட் ரொம்ப அதிகமா இருக்கும்னு நெனச்சேன்… பட் நாங்க எஸ்டிமேட் பண்ணத விட ரொம்ப கம்மியா இருந்தது… ஃபைனலி மீ வெரி ஹாப்பி…
க்ரிஷ் : ஓ… சூப்பர்…???
நான் : ஆனா பாவம் அந்த ஓனருக்கு தான் அந்த பிளேஸோட ஒர்த்தே தெரியல…???
க்ரிஷ் : ???