Anu Chandran
மண்டலாதிபதி
ஹாய் நட்பூஸ்.....
இதோ அடுத்த பதிவு...
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க....
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி....
17
வீட்டிற்கு வந்த இரு ஜோடிகளையும் வரவேற்றாள் குழந்தை அனு...
அவளை தூக்கிக்கொண்டு அபி தன்னறைக்கு செல்ல வினயும் உடை மாற்றுவதற்காக அவனது அறைக்கு சென்றான்..
ரியாவும் ரேஷ்மியும் தாம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீரலட்சுமிக்கு காட்டுவதற்காக கடை பரப்பினர்...
அதில் வீரலட்சுமிக்கு என்று வாங்கிய பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு தத்தமது பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றனர் ரியாவும் ரேஷ்மியும்...
அந்த இடைவெளியில் வினய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்திருந்தான்...
அறையினுள் வந்த ரேஷ்மி வாங்கிய பொருட்களை ஒழுங்குபடுத்திவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்..
அவள் குளியலறைக்குள் புகுந்ததும் அறையிலிருந்து வெளியே வந்த வினய் கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலிற்கு வந்தான்...
கார் டிக்கியை திறந்து அதில் வைத்திருந்த பரிசுப்பொதியை எடுத்தவன் அதை எடுத்துக்கொண்டு வந்து தன் வாட்ரோப்பில் பார்பவர்களுக்கு தெரியாத வகையில் தன்னுடைகளுக்கு அடியில் மறைத்து வைத்தான்...
குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் தன் வேலையை விரைவாக முடித்தவன் வாட்ரோப்பில் இருந்த தன் லேப்டோப் பையினை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்...
குளியவலறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி வினயிற்கென தான் வாங்கிய சில்வர் பிரேஸ்லட் பொதியை வினயிடம் நீட்டினாள் ரேஷ்மி..
அதை வாங்கிய படி வினய்
“என்ன ஷிமி இது???”
“ஒரு சின்ன கிப்ட்...பிரித்து பார்த்து நல்லாயிருக்கானு சொல்லுங்க...” என்று ரேஷ்மி கூற தாமதிக்காது பிரித்து பார்த்தவன் அதில் இருந்த பிரேஸ்லட்டை எடுத்தான்..
அந்த பிரேஸ்லட் முழுவதும் சில்வர் நிறமாய் இருக்க நடுவில் கறுப்பு நிறத்தில் எஸ் என்ற எழுத்து பதிக்கப்பட்டிருந்தது...
அந்த பிரேஸ்லட்டை ரேஷ்மியிடமே திருப்பி கொடுத்தான் வினய்..
“ஏன் வினய் உங்களுக்கு இது பிடிக்கலையா???” என்று வருத்தம் தேய்ந்த குரலில் ரேஷ்மி கேட்க
“ஆமா பிடிக்கலை... இப்படி புருஷனுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்து அதை சும்மா கையில் கொடுத்தா யாருக்கு தான் பிடிக்கும்????”
“அப்போ வேற என்ன செய்யனும்??”
“எல்லாமே நானே தான் சொல்லனுமா ஷிமி... கொஞ்சம் ரொமென்டிக்கா இருக்க ட்ரை பண்ணுமா.. உனக்கு கிளாஸ் எடுத்தே நான் கிழவனாகிருவேன் போல...” என்றவனை முறைத்தாள் ஷிமி...
“அது என்ன வினய் ரொமேண்டிக்... எனக்கு தெரியாதே....” என்று கண்களில் குறும்புகளுடன் கேட்டவளை ரசித்தவன்
“அதுவா.... உனக்கு அந்த ஸ்ரோபரி நியாபகம் இருக்கா ஷிமி...”
“எந்த ஸ்ரோபரி வினய்...??”
“அதான் ஷிமி ஸ்வீட்டா ஹாட்டா அப்படியே கடித்து ருசித்து சாப்பிடுவாங்களே.... ஸ்ராபரி...” என்று அந்த ஸ்ராபரி என்ற வார்த்தையால் அழுத்தம் கொடுத்தான் வினய்...
அவன் ஸ்ராபரி என்று கூறியதுமே அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் அவனை சீண்ட எண்ணி புரியாதது போல் கேட்க அது அவளுக்கே வினையாகிபோனது...
“சரி இந்த ப்ரேஸ்லட்டை நான் என்ன செய்றது???” என்று அவனை திசை திருப்ப முயல
“அதான் சொன்னேனே ஷிமி ரொமேண்டிக்கா..” என்று இழுத்தவனை கையை காட்டி நிறுத்தியவள் பெட்டியினுள் இருந்த பிரேஸ்லட்டை எடுத்து அவன் கையில் போட்டுவிட்டவள் வினய் எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமொன்றை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவளது அதிரடிசெயலில் ஜெர்க் ஆகி இருந்தவன் தன்னிலை அடைய சில நிமிடங்கள் எடுத்தது...
தன்னிலை அடைந்தவன் ரேஷ்மியை தேட அவள் அங்கு இல்லை.. அவள் இல்லை என்ற கடுப்பில் மைண்ட் வாயிஸில் அவளை வசைப்பாடத்தொடங்கினான் வினய்....
“இவளுக்கு இதே வேலையா போச்சு... மனிஷனை உசுப்பேத்திவிட்டு அவன் அல்லாடுவதை பார்ப்பதில் இந்த பொண்ணுங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.. ரொமேண்டிக்கா கிப்டை கொடுனு சொன்னதுக்கு இப்படி இச்சடிச்சிட்டு காணாமல் போறாளே.... இவளை என்ன பண்ணுறது??? இவ தெரிந்து தான் செய்றாளா இல்லைனா புரியாமல் செய்றாளா?? காலையிலேயும் இப்படி தான் பண்ணா.. இப்பவும் இதையே பண்றா.... ஆண்டவா... இதற்கொரு முடிவே இல்லையா???” என்று தன்னுள் புலம்பியபடி இருந்தவனை கலைத்தது அபியின் குரல்.
“என்ன கவின் ஏதோ புலம்பிட்டு இருக்க மாதிரி இருக்கு..??”
“அப்போ நான் மனசுக்குள்ள புலம்பியது உனக்கும் கேட்டுச்சா??”
“அப்போ நீ புலம்பிட்டு தான் இருந்தியா???”
“அப்போ நீ சும்மா தான் கேட்டியா??”
“அப்படினு இல்லை... உன் எக்ஸ்பிரஷனை வைத்து தான் அப்படி கேட்டேன்... நாங்களும் இந்த ஸ்டேஜெல்லாம் தாண்டி வந்தவங்க தான்டா... நீ என்ன ரீசனுக்கா புலம்பிட்டு இருந்தனு நான் சொல்லவா??”
“எங்க சொல்லு பார்ப்போம்...” என்று ஆர்வமாய் கேட்க
“உன் மனைவி உனக்கு ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா... சரியா??” என்றவனின் பதிலில் அதிர்ச்சியடைந்துவிட்டான் வினய்..
“என்னடா இப்படி பார்க்குறா??? அப்போ நான் சொன்னது கரெக்டா???"
“டேய் உனக்கு எப்படிடா??” என்று வினய் அதிர்ச்சி மாறாமல் கேட்டான்...
“ஹாஹா.. கல்யாணமாகி மூன்று வருஷத்தில் இது கூட தெரியலைனா எப்படி?? அதெல்லாம் அப்படி தான்... உனக்கும் போக போக எல்லாம் புரியும்..”
“டேய் அண்ணா நீ வேற லெவல் டா...”
“சரி ரொம்ப பாராட்டாதே... நான் உன்னிடம் கேட்க வந்ததை மறந்துட்டேன் பாரு... நெக்ஸ் வீக் எங்கேயாவது அவுட்டிங் பிளான் பண்ணலாமா??”
“நெக்ஸ்ட் வீக்கா??”
“ஆமா வினய்... உன் அண்ணி அவ ஊருக்கும் போகனும்னு சொன்னா... அங்கே போய் டூ டேஸ் இருந்துட்டு வருகின்ற மாதிரி பிளான்.. அதற்கு முதலில் வேறு எங்காயாவது அவுட்டிங் போகலாம்னு உன் அண்ணி கேட்டா... அதான் நீ ப்ரீயா இருப்பியானு கேட்க வந்தேன்...”
“நெக்ஸ்ட் வீக் ஒன்றும் இல்லை.... சோ போகலாம்... எங்கே போகலாம்னு நீ அண்ணி கூட பேசிட்டு சொல்லு... நான் அரேன்ஜ்ட் பண்ணுறேன்...”
“ஓகேடா நான் பேசிட்டு சொல்லுறேன்... நீ ரேஷ்மிட்டயும் கேட்டுரு....”
“சரிடா..நான் அவளிடம் சொல்லுறேன்...” என்று வினய் கூற அவனிடம் விடை பெற்று சென்றான் அபி....
இவ்வாறு அன்றைய நாள் செல்ல இரவு உணவை முடித்துக்கொண்டு வந்த வினய் ரேஷ்மிக்காக காத்திருக்காது தூங்கிவிட்டான்..
அறைக்குள் வந்த ரேஷ்மி வினய் அருகே சென்று அவன் நெற்றியில் முத்தமிட்டவள் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்...
பதினொன்றரை மணியளவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரேஷ்மியின் தூக்கத்தை கலைத்தது அவளது அலைபேசி...
இருட்டில் தட்டு தடுமாறி துழாவி தன் மொபைலை எடுத்தவள் அதை அட்டன் செய்தாள்..
“ஓய் பொண்டாட்டி... கொஞ்சம் கிச்சனுக்கு வா...” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்கப்பட்டது...
ஓய் பொண்டாட்டி என்ற அழைப்பில் தூக்கம் மொத்தமாய் கலைய விளக்குகளை ஒளிற விட்டவள் வினயை தேட அவனோ அங்கு இல்லை... மறுபடியும் தன் கைபேசியை சோதித்தவள் அதில் லோக் லிஸ்டில் வினயின் பெயர் இருந்ததில் பேசியது வினய் என்று உறுதி செய்தவள் அவனது சொல்லிற்கிணங்க சமையலறைக்கு சென்றாள்..
இதோ அடுத்த பதிவு...
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க....
சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண அனைத்து நல்ல உள்ளத்திற்கும் நன்றி....
17
வீட்டிற்கு வந்த இரு ஜோடிகளையும் வரவேற்றாள் குழந்தை அனு...
அவளை தூக்கிக்கொண்டு அபி தன்னறைக்கு செல்ல வினயும் உடை மாற்றுவதற்காக அவனது அறைக்கு சென்றான்..
ரியாவும் ரேஷ்மியும் தாம் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வீரலட்சுமிக்கு காட்டுவதற்காக கடை பரப்பினர்...
அதில் வீரலட்சுமிக்கு என்று வாங்கிய பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு தத்தமது பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றனர் ரியாவும் ரேஷ்மியும்...
அந்த இடைவெளியில் வினய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்திருந்தான்...
அறையினுள் வந்த ரேஷ்மி வாங்கிய பொருட்களை ஒழுங்குபடுத்திவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்..
அவள் குளியலறைக்குள் புகுந்ததும் அறையிலிருந்து வெளியே வந்த வினய் கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசலிற்கு வந்தான்...
கார் டிக்கியை திறந்து அதில் வைத்திருந்த பரிசுப்பொதியை எடுத்தவன் அதை எடுத்துக்கொண்டு வந்து தன் வாட்ரோப்பில் பார்பவர்களுக்கு தெரியாத வகையில் தன்னுடைகளுக்கு அடியில் மறைத்து வைத்தான்...
குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் தன் வேலையை விரைவாக முடித்தவன் வாட்ரோப்பில் இருந்த தன் லேப்டோப் பையினை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்...
குளியவலறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி வினயிற்கென தான் வாங்கிய சில்வர் பிரேஸ்லட் பொதியை வினயிடம் நீட்டினாள் ரேஷ்மி..
அதை வாங்கிய படி வினய்
“என்ன ஷிமி இது???”
“ஒரு சின்ன கிப்ட்...பிரித்து பார்த்து நல்லாயிருக்கானு சொல்லுங்க...” என்று ரேஷ்மி கூற தாமதிக்காது பிரித்து பார்த்தவன் அதில் இருந்த பிரேஸ்லட்டை எடுத்தான்..
அந்த பிரேஸ்லட் முழுவதும் சில்வர் நிறமாய் இருக்க நடுவில் கறுப்பு நிறத்தில் எஸ் என்ற எழுத்து பதிக்கப்பட்டிருந்தது...
அந்த பிரேஸ்லட்டை ரேஷ்மியிடமே திருப்பி கொடுத்தான் வினய்..
“ஏன் வினய் உங்களுக்கு இது பிடிக்கலையா???” என்று வருத்தம் தேய்ந்த குரலில் ரேஷ்மி கேட்க
“ஆமா பிடிக்கலை... இப்படி புருஷனுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்து அதை சும்மா கையில் கொடுத்தா யாருக்கு தான் பிடிக்கும்????”
“அப்போ வேற என்ன செய்யனும்??”
“எல்லாமே நானே தான் சொல்லனுமா ஷிமி... கொஞ்சம் ரொமென்டிக்கா இருக்க ட்ரை பண்ணுமா.. உனக்கு கிளாஸ் எடுத்தே நான் கிழவனாகிருவேன் போல...” என்றவனை முறைத்தாள் ஷிமி...
“அது என்ன வினய் ரொமேண்டிக்... எனக்கு தெரியாதே....” என்று கண்களில் குறும்புகளுடன் கேட்டவளை ரசித்தவன்
“அதுவா.... உனக்கு அந்த ஸ்ரோபரி நியாபகம் இருக்கா ஷிமி...”
“எந்த ஸ்ரோபரி வினய்...??”
“அதான் ஷிமி ஸ்வீட்டா ஹாட்டா அப்படியே கடித்து ருசித்து சாப்பிடுவாங்களே.... ஸ்ராபரி...” என்று அந்த ஸ்ராபரி என்ற வார்த்தையால் அழுத்தம் கொடுத்தான் வினய்...
அவன் ஸ்ராபரி என்று கூறியதுமே அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் அவனை சீண்ட எண்ணி புரியாதது போல் கேட்க அது அவளுக்கே வினையாகிபோனது...
“சரி இந்த ப்ரேஸ்லட்டை நான் என்ன செய்றது???” என்று அவனை திசை திருப்ப முயல
“அதான் சொன்னேனே ஷிமி ரொமேண்டிக்கா..” என்று இழுத்தவனை கையை காட்டி நிறுத்தியவள் பெட்டியினுள் இருந்த பிரேஸ்லட்டை எடுத்து அவன் கையில் போட்டுவிட்டவள் வினய் எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமொன்றை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவளது அதிரடிசெயலில் ஜெர்க் ஆகி இருந்தவன் தன்னிலை அடைய சில நிமிடங்கள் எடுத்தது...
தன்னிலை அடைந்தவன் ரேஷ்மியை தேட அவள் அங்கு இல்லை.. அவள் இல்லை என்ற கடுப்பில் மைண்ட் வாயிஸில் அவளை வசைப்பாடத்தொடங்கினான் வினய்....
“இவளுக்கு இதே வேலையா போச்சு... மனிஷனை உசுப்பேத்திவிட்டு அவன் அல்லாடுவதை பார்ப்பதில் இந்த பொண்ணுங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.. ரொமேண்டிக்கா கிப்டை கொடுனு சொன்னதுக்கு இப்படி இச்சடிச்சிட்டு காணாமல் போறாளே.... இவளை என்ன பண்ணுறது??? இவ தெரிந்து தான் செய்றாளா இல்லைனா புரியாமல் செய்றாளா?? காலையிலேயும் இப்படி தான் பண்ணா.. இப்பவும் இதையே பண்றா.... ஆண்டவா... இதற்கொரு முடிவே இல்லையா???” என்று தன்னுள் புலம்பியபடி இருந்தவனை கலைத்தது அபியின் குரல்.
“என்ன கவின் ஏதோ புலம்பிட்டு இருக்க மாதிரி இருக்கு..??”
“அப்போ நான் மனசுக்குள்ள புலம்பியது உனக்கும் கேட்டுச்சா??”
“அப்போ நீ புலம்பிட்டு தான் இருந்தியா???”
“அப்போ நீ சும்மா தான் கேட்டியா??”
“அப்படினு இல்லை... உன் எக்ஸ்பிரஷனை வைத்து தான் அப்படி கேட்டேன்... நாங்களும் இந்த ஸ்டேஜெல்லாம் தாண்டி வந்தவங்க தான்டா... நீ என்ன ரீசனுக்கா புலம்பிட்டு இருந்தனு நான் சொல்லவா??”
“எங்க சொல்லு பார்ப்போம்...” என்று ஆர்வமாய் கேட்க
“உன் மனைவி உனக்கு ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா... சரியா??” என்றவனின் பதிலில் அதிர்ச்சியடைந்துவிட்டான் வினய்..
“என்னடா இப்படி பார்க்குறா??? அப்போ நான் சொன்னது கரெக்டா???"
“டேய் உனக்கு எப்படிடா??” என்று வினய் அதிர்ச்சி மாறாமல் கேட்டான்...
“ஹாஹா.. கல்யாணமாகி மூன்று வருஷத்தில் இது கூட தெரியலைனா எப்படி?? அதெல்லாம் அப்படி தான்... உனக்கும் போக போக எல்லாம் புரியும்..”
“டேய் அண்ணா நீ வேற லெவல் டா...”
“சரி ரொம்ப பாராட்டாதே... நான் உன்னிடம் கேட்க வந்ததை மறந்துட்டேன் பாரு... நெக்ஸ் வீக் எங்கேயாவது அவுட்டிங் பிளான் பண்ணலாமா??”
“நெக்ஸ்ட் வீக்கா??”
“ஆமா வினய்... உன் அண்ணி அவ ஊருக்கும் போகனும்னு சொன்னா... அங்கே போய் டூ டேஸ் இருந்துட்டு வருகின்ற மாதிரி பிளான்.. அதற்கு முதலில் வேறு எங்காயாவது அவுட்டிங் போகலாம்னு உன் அண்ணி கேட்டா... அதான் நீ ப்ரீயா இருப்பியானு கேட்க வந்தேன்...”
“நெக்ஸ்ட் வீக் ஒன்றும் இல்லை.... சோ போகலாம்... எங்கே போகலாம்னு நீ அண்ணி கூட பேசிட்டு சொல்லு... நான் அரேன்ஜ்ட் பண்ணுறேன்...”
“ஓகேடா நான் பேசிட்டு சொல்லுறேன்... நீ ரேஷ்மிட்டயும் கேட்டுரு....”
“சரிடா..நான் அவளிடம் சொல்லுறேன்...” என்று வினய் கூற அவனிடம் விடை பெற்று சென்றான் அபி....
இவ்வாறு அன்றைய நாள் செல்ல இரவு உணவை முடித்துக்கொண்டு வந்த வினய் ரேஷ்மிக்காக காத்திருக்காது தூங்கிவிட்டான்..
அறைக்குள் வந்த ரேஷ்மி வினய் அருகே சென்று அவன் நெற்றியில் முத்தமிட்டவள் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்...
பதினொன்றரை மணியளவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ரேஷ்மியின் தூக்கத்தை கலைத்தது அவளது அலைபேசி...
இருட்டில் தட்டு தடுமாறி துழாவி தன் மொபைலை எடுத்தவள் அதை அட்டன் செய்தாள்..
“ஓய் பொண்டாட்டி... கொஞ்சம் கிச்சனுக்கு வா...” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்கப்பட்டது...
ஓய் பொண்டாட்டி என்ற அழைப்பில் தூக்கம் மொத்தமாய் கலைய விளக்குகளை ஒளிற விட்டவள் வினயை தேட அவனோ அங்கு இல்லை... மறுபடியும் தன் கைபேசியை சோதித்தவள் அதில் லோக் லிஸ்டில் வினயின் பெயர் இருந்ததில் பேசியது வினய் என்று உறுதி செய்தவள் அவனது சொல்லிற்கிணங்க சமையலறைக்கு சென்றாள்..
Attachments
-
8.4 KB Views: 0