Anu Chandran
மண்டலாதிபதி
மதியம் இரண்டு மணியளவில் வினயிற்கு அழைத்தாள் ரேஷ்மி.... அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க எதிர்பார்த்ததே என்று எண்ணியவள்
“சாப்டாச்சா” என்று வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்... ப்ளூடிக் விழுந்த போதிலும் பதில் வரவில்லை...
“நான் இன்னும் சாப்பிடலை” என்று செய்தியனுப்பிய போது “ஹூ கெயாஸ்” என்று மறுமொழி வர அதில் கடுப்பானவள்
“ஆ... என் எக்ஸ் பாய்பிரண்ட் கேயார்ஸ்...” என்று பதிலனுப்ப
“அப்போ அவன்கிட்ட போய் சொல்லு...”என்று வினயிடம் இருந்து பதில் வந்தது...
“அந்த மரமண்டை, வளர்ந்து கெட்டவன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்.... ஆனா அது ஹூ கேயார்ஸ்னு கேக்குது?? பனைமரம் மாதிரி வளர்ந்தவனுக்கு கடவுள் மண்டையில் சரக்கை கொடுக்க மறந்துட்டாரு போல...” என்று வாய்ஸ் மெசேஜை பதிலாக அனுப்பினாள்...
அவளது வாய்ஜ் மெசேஜை ஹெட்செட் உதவியுடன் கேட்ட வினயிற்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை....
உரையாடலை தொடர விரும்பியவனுக்கு வேலைப்பளு தடையாக இருக்க
“நான் சாப்டேன்... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... டேக் கேயார்...” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டான்....
அவனது மெசேஜை பார்த்ததும் மனதினுள் “ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு எவ்வளவு பேச வேண்டி இருக்கு??? இப்போவே இப்படினா வீட்டுக்கு வந்ததும் நம்மாளு கோபம்னு என்னென்ன காமடி பண்ண போகுதோ...???” என்று பேசியவள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடச்சென்றாள்..
மாலை ஐந்து மணியளவில் ரியாவை பார்க்கிற்கு செல்ல அழைத்தாள் ரேஷ்மி...
“ரேஷ்மி நீ ரொம்ப டயர்டா தெரியிற..இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம்....” என்று தடுக்க
“ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்றும் இல்லை... நான் நல்லா தான் இருக்கேன்... நல்லா தூங்கி எழுந்ததால இப்போ ப்ரஸ்ஸா இருக்கு... நாம போகலாம்... அனுகிட்டயும் இன்னைக்கு போவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்... கூட்டிட்டு போகாட்டி குழந்தை ஏமாந்திடும்.. பாவம் அக்கா..”
“சரி உனக்கு உடம்புக்கு நல்லா இருந்த எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை..சரி ஒரு டென் மினிட்ஸ் தா.. நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்....” என்றவள் அனுவை அழைத்துக்கொண்டு உடைமாற்ற சென்றாள்...
உடைமாற்றி வந்த ரியாவையும் அனுவையும் அழைத்துக்கொண்டு வீரலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு மூவரும் அருகிலுள்ள பார்க்கிற்கு கிளம்பினர்....
பார்க்கிற்கு சென்றதும் அனுவை விளையாடுமாறு விட்டுவிட்டு அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்...
அப்போது ரியாவின் போன் ஒலிக்க அதை எடுத்து பேசினாள்..
பின் ரேஷ்மியிடம் அபி பார்க்கிற்கு வருவதாக கூற பத்து நிமிடங்களில் அபி அங்கிருந்தான்... அபியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிய ரியா ரேஷ்மியை அழைத்துக்கொண்டு பார்க்கின் மறுகோடிக்கு சென்றாள்...
அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்ததும்
“இப்போ சொல்லு ரேஷ்மி... என்கூட என்ன பேசனும்??”
“ரொம்ப தாங்ஸ் கா... நான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தயங்கிட்டு இருந்தேன்.... “
“புரிந்தது மா... அதான் அனு அப்பாவை வரவைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைச்சிட்டு வந்தேன்... சரி நீ சொல்லு... என்ன பேசனும் என்கிட்ட???”
“அக்கா வினய் ஏதும் சொன்னாரா உங்ககிட்ட??”
“இல்லை மா... கவின் ஏதும் சொல்லலை... காலையில் முகம் வாடி இருந்தது... நேற்றும் நீங்க இரண்டு பேரும் வரும் போதும் உங்க இரண்டு பேர் முகமும் சரியில்லாததால் தான் என்னனு விசாரிச்சேன்...”
“ஆமா அக்கா... நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... ஒரு நல்ல மனுஷனை என்னுடைய முட்டாள் தனமான நடவடிக்கைகளால் ரொம்ப காயப்படுத்திட்டேன்...என்னை விரும்புன ஒரே காரணத்துக்காக அந்த மனுஷனும் நான் காயப்படுத்தும் போதெல்லாம் அமைதியாக இருக்காரு...” என்றவளின் குரல் கம்மியது..
“ரேஷ்மி கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுமா??”
“சொல்றேன் கா... முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்றேன்....
எனக்கு லவ்னா பிடிக்காது.... அதாவது லவ் பண்ணுறேனு சொல்லுறவங்களையே பிடிக்காது.... அதுக்கு காரணம் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டோட இறப்பு..”
“என்னாமா சொல்ற??” என்ற ரியாவின் கேள்விக்கு இவ்வளவு நாட்கள் அவள் மனதில் மறையா வடுவாக இருந்த அந்த சம்பவத்தை விபரிக்க தொடங்கினாள்...
அப்போது ரேஷ்மி ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்...
அன்று காலை ரேஷ்மியின் வீட்டில் வந்து காத்திருந்தாள் அவளது உயிர்த்தோழி நித்யா...
“ரேச்சு இன்னும் எவ்வளவு நேரம்டி?? ஸ்கூல் பெல் அடிச்சதும் தான் நீ கிளம்புவ போல... இனிமே நான் தனியா போய்க்கிறேன்.... நீயும் தனியா போய்க்கோ...” என்று கத்திக்கொண்டு நடுசாலையில் அமர்ந்து ரேஷ்மியின் அன்னை கனகா கொடுத்த பூரியையும் கிழங்கு பிரட்டலையும் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தாள் நித்யா...
ஜடையை பின்னியவாறு அறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி
“மிஸ். நித்யா இதோடு இந்த வார்த்தையை நூறு தடவைக்கு மேல சொல்லிட்டீங்க.... ஆனா செயல்படுத்துற வழியைத்தான் காணோம்..”
“ஓ உனக்கு அப்படி ஒரு கவலை இருக்கோ....??சரி இனிமே நான் தனியாவே போய்க்கிறேன்.. நீயும் தனியா வா..” என்று பதிலளித்தவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை...
“ஹா.. காமடி... எங்க அம்மா பூரி செய்வதை நிறுத்துறவரை உன் கம்பனி எனக்கு எப்பவும் உண்டு” என்றபடி கனகாவிடம் தனக்கும் ஒரு தட்டை வாங்கிக்கொண்டு நித்யாவின் அருகில் அமர்ந்தாள் ரேஷ்மி...
“அப்போ நான் இந்த அல்ப பூரிக்காக தான் வாரேன்னு சொல்லுறியா???” என்று நித்யா எகிற
“இல்லைனு சொல்லுறியா??”
“ஆன்டி பாருங்க ஆன்டி இவளை... நான் உங்க மேலே உள்ள பாசத்தில் நீங்க கொடுக்கும் பூரியை சாப்பிட்டா இவ இந்த பூரிக்காக தான் நான் இங்க வாரேன்னு சொல்லுறா...” என்று நித்யா சிணுங்க அவளை சமாதானப்படுத்தியவர் இருவரையும் பள்ளிக்கு கிளப்பினார்...
இவ்வாறு செல்ல சண்டைகளும் நட்பு பரிமாறல்களுமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் வந்தது அந்த கொடிய நாள்..
வழமை போல் பாடசாலைக்கு தயாராகி வந்த ரேஷ்மி நித்யாவிற்காக காத்திருக்க அவளோ அன்று வரவில்லை.. சரி செல்லும் வழியில் அழைத்து செல்லலாம் என்று கிளம்பியவள் நித்யாவின் வீட்டிற்கு செல்ல அவளது வீட்டு வாசலின் முன் பலர் நின்றிருந்தனர்...
என்னவென்று புரியாது உள்ளே சென்று பார்த்தவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவில்லை...
அங்கு நடு சாலையில் நித்யாவின் குடும்பத்தார் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்..
ரேஷ்மியை கண்டதும் எழுந்த வந்து கட்டிக்கொண்டு அழுத நித்யாவின் அன்னை
“ஐயோ ரேஷ்மி நம்ம நித்யா நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா மா... என் மக இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டாலே... இனி யாருகூட நீ தினமும் ஸ்கூலுக்கு போவ.. ஐயோ ஐயோ..” என்று தன் முந்தனையால் வாயை மூடிக்கொண்டு அழ ரேஷ்மிக்கு நித்யாவின் இறப்பை ஜீரணிக்கமுடியவில்லை.... அவள் கதறியழவில்லை என்றாலும் அவளது கண்களில் இருந்து நீர் கொட்டியவண்ணமே இருந்தது....
அவளது இறப்புக்கான காரணத்தை அறியவேண்டும் என்றுகூட தோன்றாத நிலையில் இருந்தாள் ரேஷ்மி.... நித்யாவின் இறப்பை கேள்விபட்ட ரேஷ்மியின் பெற்றோரும் அங்கு வந்துவிட அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதனர் நித்யாவின் பெற்றோர்...
மதியம் பன்னிரண்டு மணியளவில் பிரேதம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது...
துக்கத்தை அடக்க முடியாத போதிலும் வந்திருந்த நட்புக்களை கவனிக்க வேண்டியிருந்ததால் வெளியே நின்றிருந்தவர்களை கவனிக்க தொடங்கினாள்...
அப்போது அங்கிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தில் யாரோ கதறி அழுவது போலவும் இடையிடையே நித்யாவின் பெயரை அந்த நபர் கூறுவதும் ரேஷ்மியின் காதுகளில் விழுந்தது.
அந்த கூட்டத்தின் அருகே சென்றவள் அவளது டியூஷன் க்ளாஸ் ஆண் நண்பர்கள் ஆறேழு பேர் சூழ்ந்திருக்க அதன் நடுவில் ஒருவன் அவர்களில் ஒருவரை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்...
அவன் “ஐயோ மச்சான்... இப்படி என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளே டா... நான் அவ கூட சண்டை போட்டுருக்க கூடாது... அய்யோ அவ சாகும் போது கூட நா அவகூட சந்தோஷமாக இருக்கலையே டா...எப்பவும் போல செல்ல சண்டைனு அவ கூட நான் போட்ட சண்டை என் கூட அவ போட்ட கடைசி சண்டையாகிருச்சே.... ஐயோ நித்யா எதுக்கு என்னை விட்டுட்டு போன??? என்னையும் உன்கூட கூட்டிட்டு போமா...இனிமே உன்கூட சண்டையே போட மாட்டேன்...” என்று அவன் அழகையூடு பிதற்ற அவன் நண்பர்கள் அவனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்கள்...
இதை கேட்ட ரேஷ்மிக்கு இது புது தகவலாக இருந்தது... தகவலுக்கு சொந்தக்காரி உயிரோடு இல்லாத போது இந்த தகவலால் என்ன பயன் என்று தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்...
மாலையில் பிரேதம் சிதையூட்டப்பட ரேஷ்மிக்கு தான் தன் உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல் இருந்தது....
எப்போதும் தன்னுடனேயே சுற்றும் ஜீவன் இன்று திரும்பி வரமுடியாத தூரத்திற்கு சென்றுவிட்டது என்ற உண்மையை அவளது மனமோ ஜீரணிக்க மறுத்தது...
ஒருவாரம் பள்ளி செல்ல மறுத்தவளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினர் ரேஷ்மியின் பெற்றோர்...
பள்ளி சென்றவளுக்கு நித்யா இல்லாத வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை... ஒருவாறு நேரத்தை நெட்டித்தள்ளியவன் பாடசாலை முடிந்து நேரே சென்றது நித்யாவின் வீட்டிற்கு...
“சாப்டாச்சா” என்று வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்... ப்ளூடிக் விழுந்த போதிலும் பதில் வரவில்லை...
“நான் இன்னும் சாப்பிடலை” என்று செய்தியனுப்பிய போது “ஹூ கெயாஸ்” என்று மறுமொழி வர அதில் கடுப்பானவள்
“ஆ... என் எக்ஸ் பாய்பிரண்ட் கேயார்ஸ்...” என்று பதிலனுப்ப
“அப்போ அவன்கிட்ட போய் சொல்லு...”என்று வினயிடம் இருந்து பதில் வந்தது...
“அந்த மரமண்டை, வளர்ந்து கெட்டவன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்.... ஆனா அது ஹூ கேயார்ஸ்னு கேக்குது?? பனைமரம் மாதிரி வளர்ந்தவனுக்கு கடவுள் மண்டையில் சரக்கை கொடுக்க மறந்துட்டாரு போல...” என்று வாய்ஸ் மெசேஜை பதிலாக அனுப்பினாள்...
அவளது வாய்ஜ் மெசேஜை ஹெட்செட் உதவியுடன் கேட்ட வினயிற்கு சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை....
உரையாடலை தொடர விரும்பியவனுக்கு வேலைப்பளு தடையாக இருக்க
“நான் சாப்டேன்... நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு... டேக் கேயார்...” என்றுவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டான்....
அவனது மெசேஜை பார்த்ததும் மனதினுள் “ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு எவ்வளவு பேச வேண்டி இருக்கு??? இப்போவே இப்படினா வீட்டுக்கு வந்ததும் நம்மாளு கோபம்னு என்னென்ன காமடி பண்ண போகுதோ...???” என்று பேசியவள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடச்சென்றாள்..
மாலை ஐந்து மணியளவில் ரியாவை பார்க்கிற்கு செல்ல அழைத்தாள் ரேஷ்மி...
“ரேஷ்மி நீ ரொம்ப டயர்டா தெரியிற..இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு போகலாம்....” என்று தடுக்க
“ஐயோ அக்கா அதெல்லாம் ஒன்றும் இல்லை... நான் நல்லா தான் இருக்கேன்... நல்லா தூங்கி எழுந்ததால இப்போ ப்ரஸ்ஸா இருக்கு... நாம போகலாம்... அனுகிட்டயும் இன்னைக்கு போவோம்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்... கூட்டிட்டு போகாட்டி குழந்தை ஏமாந்திடும்.. பாவம் அக்கா..”
“சரி உனக்கு உடம்புக்கு நல்லா இருந்த எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை..சரி ஒரு டென் மினிட்ஸ் தா.. நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்....” என்றவள் அனுவை அழைத்துக்கொண்டு உடைமாற்ற சென்றாள்...
உடைமாற்றி வந்த ரியாவையும் அனுவையும் அழைத்துக்கொண்டு வீரலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு மூவரும் அருகிலுள்ள பார்க்கிற்கு கிளம்பினர்....
பார்க்கிற்கு சென்றதும் அனுவை விளையாடுமாறு விட்டுவிட்டு அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்...
அப்போது ரியாவின் போன் ஒலிக்க அதை எடுத்து பேசினாள்..
பின் ரேஷ்மியிடம் அபி பார்க்கிற்கு வருவதாக கூற பத்து நிமிடங்களில் அபி அங்கிருந்தான்... அபியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிய ரியா ரேஷ்மியை அழைத்துக்கொண்டு பார்க்கின் மறுகோடிக்கு சென்றாள்...
அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்ததும்
“இப்போ சொல்லு ரேஷ்மி... என்கூட என்ன பேசனும்??”
“ரொம்ப தாங்ஸ் கா... நான் எப்படி ஆரம்பிக்கிறதுனு தயங்கிட்டு இருந்தேன்.... “
“புரிந்தது மா... அதான் அனு அப்பாவை வரவைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைச்சிட்டு வந்தேன்... சரி நீ சொல்லு... என்ன பேசனும் என்கிட்ட???”
“அக்கா வினய் ஏதும் சொன்னாரா உங்ககிட்ட??”
“இல்லை மா... கவின் ஏதும் சொல்லலை... காலையில் முகம் வாடி இருந்தது... நேற்றும் நீங்க இரண்டு பேரும் வரும் போதும் உங்க இரண்டு பேர் முகமும் சரியில்லாததால் தான் என்னனு விசாரிச்சேன்...”
“ஆமா அக்கா... நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... ஒரு நல்ல மனுஷனை என்னுடைய முட்டாள் தனமான நடவடிக்கைகளால் ரொம்ப காயப்படுத்திட்டேன்...என்னை விரும்புன ஒரே காரணத்துக்காக அந்த மனுஷனும் நான் காயப்படுத்தும் போதெல்லாம் அமைதியாக இருக்காரு...” என்றவளின் குரல் கம்மியது..
“ரேஷ்மி கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுமா??”
“சொல்றேன் கா... முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்றேன்....
எனக்கு லவ்னா பிடிக்காது.... அதாவது லவ் பண்ணுறேனு சொல்லுறவங்களையே பிடிக்காது.... அதுக்கு காரணம் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டோட இறப்பு..”
“என்னாமா சொல்ற??” என்ற ரியாவின் கேள்விக்கு இவ்வளவு நாட்கள் அவள் மனதில் மறையா வடுவாக இருந்த அந்த சம்பவத்தை விபரிக்க தொடங்கினாள்...
அப்போது ரேஷ்மி ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்...
அன்று காலை ரேஷ்மியின் வீட்டில் வந்து காத்திருந்தாள் அவளது உயிர்த்தோழி நித்யா...
“ரேச்சு இன்னும் எவ்வளவு நேரம்டி?? ஸ்கூல் பெல் அடிச்சதும் தான் நீ கிளம்புவ போல... இனிமே நான் தனியா போய்க்கிறேன்.... நீயும் தனியா போய்க்கோ...” என்று கத்திக்கொண்டு நடுசாலையில் அமர்ந்து ரேஷ்மியின் அன்னை கனகா கொடுத்த பூரியையும் கிழங்கு பிரட்டலையும் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தாள் நித்யா...
ஜடையை பின்னியவாறு அறையில் இருந்து வெளியே வந்த ரேஷ்மி
“மிஸ். நித்யா இதோடு இந்த வார்த்தையை நூறு தடவைக்கு மேல சொல்லிட்டீங்க.... ஆனா செயல்படுத்துற வழியைத்தான் காணோம்..”
“ஓ உனக்கு அப்படி ஒரு கவலை இருக்கோ....??சரி இனிமே நான் தனியாவே போய்க்கிறேன்.. நீயும் தனியா வா..” என்று பதிலளித்தவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை...
“ஹா.. காமடி... எங்க அம்மா பூரி செய்வதை நிறுத்துறவரை உன் கம்பனி எனக்கு எப்பவும் உண்டு” என்றபடி கனகாவிடம் தனக்கும் ஒரு தட்டை வாங்கிக்கொண்டு நித்யாவின் அருகில் அமர்ந்தாள் ரேஷ்மி...
“அப்போ நான் இந்த அல்ப பூரிக்காக தான் வாரேன்னு சொல்லுறியா???” என்று நித்யா எகிற
“இல்லைனு சொல்லுறியா??”
“ஆன்டி பாருங்க ஆன்டி இவளை... நான் உங்க மேலே உள்ள பாசத்தில் நீங்க கொடுக்கும் பூரியை சாப்பிட்டா இவ இந்த பூரிக்காக தான் நான் இங்க வாரேன்னு சொல்லுறா...” என்று நித்யா சிணுங்க அவளை சமாதானப்படுத்தியவர் இருவரையும் பள்ளிக்கு கிளப்பினார்...
இவ்வாறு செல்ல சண்டைகளும் நட்பு பரிமாறல்களுமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் வந்தது அந்த கொடிய நாள்..
வழமை போல் பாடசாலைக்கு தயாராகி வந்த ரேஷ்மி நித்யாவிற்காக காத்திருக்க அவளோ அன்று வரவில்லை.. சரி செல்லும் வழியில் அழைத்து செல்லலாம் என்று கிளம்பியவள் நித்யாவின் வீட்டிற்கு செல்ல அவளது வீட்டு வாசலின் முன் பலர் நின்றிருந்தனர்...
என்னவென்று புரியாது உள்ளே சென்று பார்த்தவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று புரியவில்லை...
அங்கு நடு சாலையில் நித்யாவின் குடும்பத்தார் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்..
ரேஷ்மியை கண்டதும் எழுந்த வந்து கட்டிக்கொண்டு அழுத நித்யாவின் அன்னை
“ஐயோ ரேஷ்மி நம்ம நித்யா நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா மா... என் மக இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டாலே... இனி யாருகூட நீ தினமும் ஸ்கூலுக்கு போவ.. ஐயோ ஐயோ..” என்று தன் முந்தனையால் வாயை மூடிக்கொண்டு அழ ரேஷ்மிக்கு நித்யாவின் இறப்பை ஜீரணிக்கமுடியவில்லை.... அவள் கதறியழவில்லை என்றாலும் அவளது கண்களில் இருந்து நீர் கொட்டியவண்ணமே இருந்தது....
அவளது இறப்புக்கான காரணத்தை அறியவேண்டும் என்றுகூட தோன்றாத நிலையில் இருந்தாள் ரேஷ்மி.... நித்யாவின் இறப்பை கேள்விபட்ட ரேஷ்மியின் பெற்றோரும் அங்கு வந்துவிட அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதனர் நித்யாவின் பெற்றோர்...
மதியம் பன்னிரண்டு மணியளவில் பிரேதம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது...
துக்கத்தை அடக்க முடியாத போதிலும் வந்திருந்த நட்புக்களை கவனிக்க வேண்டியிருந்ததால் வெளியே நின்றிருந்தவர்களை கவனிக்க தொடங்கினாள்...
அப்போது அங்கிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தில் யாரோ கதறி அழுவது போலவும் இடையிடையே நித்யாவின் பெயரை அந்த நபர் கூறுவதும் ரேஷ்மியின் காதுகளில் விழுந்தது.
அந்த கூட்டத்தின் அருகே சென்றவள் அவளது டியூஷன் க்ளாஸ் ஆண் நண்பர்கள் ஆறேழு பேர் சூழ்ந்திருக்க அதன் நடுவில் ஒருவன் அவர்களில் ஒருவரை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தான்...
அவன் “ஐயோ மச்சான்... இப்படி என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளே டா... நான் அவ கூட சண்டை போட்டுருக்க கூடாது... அய்யோ அவ சாகும் போது கூட நா அவகூட சந்தோஷமாக இருக்கலையே டா...எப்பவும் போல செல்ல சண்டைனு அவ கூட நான் போட்ட சண்டை என் கூட அவ போட்ட கடைசி சண்டையாகிருச்சே.... ஐயோ நித்யா எதுக்கு என்னை விட்டுட்டு போன??? என்னையும் உன்கூட கூட்டிட்டு போமா...இனிமே உன்கூட சண்டையே போட மாட்டேன்...” என்று அவன் அழகையூடு பிதற்ற அவன் நண்பர்கள் அவனை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்கள்...
இதை கேட்ட ரேஷ்மிக்கு இது புது தகவலாக இருந்தது... தகவலுக்கு சொந்தக்காரி உயிரோடு இல்லாத போது இந்த தகவலால் என்ன பயன் என்று தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்...
மாலையில் பிரேதம் சிதையூட்டப்பட ரேஷ்மிக்கு தான் தன் உடலின் ஒரு பாகத்தை இழந்தது போல் இருந்தது....
எப்போதும் தன்னுடனேயே சுற்றும் ஜீவன் இன்று திரும்பி வரமுடியாத தூரத்திற்கு சென்றுவிட்டது என்ற உண்மையை அவளது மனமோ ஜீரணிக்க மறுத்தது...
ஒருவாரம் பள்ளி செல்ல மறுத்தவளை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பினர் ரேஷ்மியின் பெற்றோர்...
பள்ளி சென்றவளுக்கு நித்யா இல்லாத வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை... ஒருவாறு நேரத்தை நெட்டித்தள்ளியவன் பாடசாலை முடிந்து நேரே சென்றது நித்யாவின் வீட்டிற்கு...