MSharmila Velmurugan
நாட்டாமை
ok, செழியன் அவங்க அப்பா கிட்ட வருத்தமா இருக்கலாம், but கோவபடல, அதுவா சரி ஆகிடும் இருந்து இருக்கலாம். முதல்ல ஒரு விஷயம் செழியன் கதாபாத்திரத்த நான் hero என்பதை விட காதல் வந்தால் ஒரு ஆண்மகன் எப்படி நடந்து கொள்வான் என்பதை தான் பார்க்கிறேன் அதுவும் தீராத காதல், கொஞ்சம் கண்ணை மறைக்கத்தான் செய்யும்.(நான் நிஜத்தில் ஒரு நபரை அப்படி பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவும் அந்த நபர் நேர்மை அதிகம் எதிர்பார்ப்பார், மனைவி விஷயத்தில் மட்டும் கொஞ்சம் வீக்) அதனால் செழியன் துள்ளல் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அப்புறம் அர்ச்சனா, செழியன் அண்ணனாக இருந்து எதுவும் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு ஆதங்கம், கதையின் ஆரம்பத்தில் இருந்தே அவரவர் கதாபாத்திரம் அப்படியே எழுதப்பட்டுள்ளது. எங்கும் ஒரு ஹீரோஸியமோ, வில்லத்தனமோ அதிகம் இல்லை. So, செழியன் தட்டி கேட்கலாமே, திருத்தலாமே, என்பதெல்லாம் கதையின் எதார்த்தத்தை குறைத்து விடமோ என்பது என்னுடைய கருத்து. ஆனால் முதலில் கூறியது போல் தனி குடித்தனம் என்பது எனக்கு புரியவில்லை, தங்கை இல்லாமல், தம்பியாக இருந்தால் இது ok என்று தோன்றியிருக்கும். அப்புறம் அருண் சொல்லி திருத்த முடியவில்லை என்றால் விட்டு கொடுத்து போய் தான் ஆக வேண்டும் அங்கு அன்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில். கதையின் முடிவு எப்படி கொண்டு செல்ல போகிறார்கள் என்பதுதான் இப்ப இருக்கும் குழப்பமே. ஏனென்றால் மாதவியை தவிர அனைவரும் முறுக்கி கொண்டு இருக்கிறார்கள். நான் கவனித்த கருத்து சொல்லியுள்ளேன். தவறு இருந்தால் கண்டுகாதிங்கப்பா.
Last edited: