JeyaBharathi
மண்டலாதிபதி
ஏக்க தெய்வம்
சூடமண சுகந்தந்துடன்
கறிவாசம் கலக்க..
வீரிய வேண்டுதல்களிடை
ஊர்க்கதைகள் ஊடுருவ..
பங்காளி சண்டைகளும்
பலூன்விற்கும் வண்டிகளுமாய்
ஒற்றைநாள் கொண்டாட்ட
ஊரெல்லை திருவிழாவென,
கொட்டமடித்த கூட்டம்
கொஞ்சமும் தயவின்றி
கொட்டிய குப்பை மறந்து
திசைக்கொருவராய் கலைய...
நீரில்லாத ஏரியில்
தாகம்தீராது தகிக்கும்
தாங்கவியலா சூட்டுக்கிடையே..
எதிர்சாரியில் ஊளையிடும்
சிற்றுந்து இரைச்சலுக்கிடையே...
விலையாகிப்போன
பக்கத்து விளையில்
வேகமாய் வளரும்
தொழிற்சாலை சத்தத்திற்கிடையே...
பாளம்வெடித்த ஏரியில்
பந்தடிக்கும் பாலகர்
கூச்சலிசைக்கிடையே...
வெளியூரில் வேர்பிடித்த
பேரன் காணஏங்கும்
பேரன்பு பாட்டனாய்...
இல்லாதுபோன மரங்களில்
இளைப்பார தேடிவரும்
புள்ளின மெல்லிசை தேடி..
ஏக்கத்தில்..
ஏகாந்த தவத்தில்
ஏரிக்கரை அய்யனார்...