• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருவேலமரம் வளர்ப்போம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மரங்களை அறிவோம்

கருவேலமரம் வளர்ப்போம்...

கருவேலமரங்களை ஒழிக்கச் சொல்லி ஊரே குரல்கொடுக்குது ...இது என்ன புதுசா ?...

நான் சொல்லப்போகிறது பல ஊடகங்களும் பலரும் நினைக்கிறமாதிரி கருவேலமரம் ஒன்றும் மோசமான தீமையான மரமில்லை மாறாக மிகுந்த மருத்துவகுணம் கொண்டது!...

நான் குறிப்பிடுவது "கருவேலமரம்"
அதாவது நாட்டுக் கருவமரம் அல்லது கருவேலமரம் அதை இந்தியில் Babul என்கிறார்கள் அது அப்படியே ஆங்கிலத்தில் Babul tree எனப்படுகிறது(இதைமூலப்பொருளாக்க் கொண்டு ஒரு பிரபல நிறுவனம் இதேபெயரில் நீண்டகாலமாக பற்பசை மற்றும் பல்பொடி தயாரித்து வருகிறது)...

தீமை என்று சொல்லப்படுவது ...
சீமைக் கருவேல மரம்,
வேலிக்காத்தான்,
சீமைக்கருவை,
டில்லிமுள்,
வேலிச்செடி,
சீமை உடை...
என பகுதிக்கு ஒரு பெயரில் இது அழைக்கப்படுகிறது....

நமது தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica),
வெளிநாட்டில் இருந்து அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும்(Prosopis juliflora) போட்டு ஒன்றாக குழப்பிக்கொள்ளக்கூடாது இந்தக் குழப்பத்தை தமிழ் பத்திரிக்கைகளே உருவாக்குகிறது என்பதுதான் கொடுமை...

இனி நமது மண்ணின் மரமான கருவேலமரத்தைப் பற்றிப் பார்ப்போம்...

கருவேல் ஒரு உறுதியான மரம். சுமார் 25 அடி முதல் 30அடி உயரம் வரை வளரக்கூடியது. தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும்,மலைகளிலும் வளரக்கூடியது. வறட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது. இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 - 12இலைகளையுடையது, காய் சுமார் 6அங்குல நீளமுடையது அதில் 8 -12கொட்டைகள் இருக்கும். இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரபட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் அடர்ந்த மரக்கலராகவும் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.

மனிதனுக்கும் மருந்தாகப் பயன்படும் இது...

கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சல் தணிக்கும்,காய்ச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல்,மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும்,கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத் துவளச்செய்யும்,சளியகற்றும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.
துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சில் பாஷண மருந்து வீறு ஆகியவை தீரும்.
இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.
இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டடு வர இரத்தக் கழிச்சல்,வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.
பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

அட வேறொன்றும் இல்லைங்க...

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"

-இதிலுள்ள வேல்தான் நம்ம கருவேல மரம்....
இதுபற்றி தெரிந்த வியாபாரிகள் இதை மூலப்பொருளாகக் கொண்டு பற்பசை,பொடிகளைத் தயாரித்து காசு பார்க்கிறார்கள்...

காய்கள் காய்ந்த பின் சலங்கைபோன்ற சப்தம் எழுப்பும்....

ஏர்கலப்பை செய்வதற்கு
இந்தமரத்தைத்தான் முக்கியமாகத் தேர்வு செய்வார்கள் ஏனெனில் நாள்பட நாள்பட இது இறுகி வலிமையாகும்....

மொத்தத்தில் தமிழரின் வாழ்வில் பிரிக்கமுடியாத மரம் இது....
IMG-20181211-WA0000.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top