• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
தன் குடும்பத்தை அழித்த மாணிக்கப்பெருமாளை தன்கையால் கொலை செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவுடன் இருந்த தீரா ரதுவின் வருகையால் கொஞ்சம் அந்த முடிவில் தடுமாறத்தான் செய்தான்....அவளது வருகை காதல், இப்பொது பேருகாலம் என்றவள் இருக்க...தன் முடிவு சரியா என யோசித்தான்...சில நாள் நிம்மதியற்று திருந்திருக்கிறான்...அவனது உள்மாற்றங்களை அறிந்த ரது அன்று பேசியது அவன் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.எந்தவொரு மனைவியும் தன் கணவன் தன்னோடே இருக்கவேண்டும் என்று தான் நினைப்பாள்...இப்படி ஒரு சூழலில் கணவன் இருந்தால் முதலில் அவள் கூறிவது கொலை அது இது என்பதெல்லாம் வேண்டாம்,குடும்பம் குழந்தை குட்டியென இருந்திடு விடு என்று தான் கூறுவார்கள்....ஆனால் அதற்கு மாறாக ரது கூறியதில் நிம்மதியென கொண்டாலும் அவளை நினைத்து கலங்கிதான் போனான்,....

அன்று ரது..

ஒற்றை நிலவாகினும் வான்மொத்தம் அழகு படுத்தி விடுகிறதே அவ்விரவையும்..தனித்தே நிற்பினும் காதல் நினைவுகளில் கரையும் நிலவுமகள் போல் தனித்து நின்றவன் பல எண்ணத்தில் சிக்கித்தவித்தவன்.தன்னையோ தன்னை சார்ந்தவர்களையோ எதிர்கொள்ள சிரமம் கண்டவன் தனிமையை எடுத்துகொண்டான்.. நிலவை நோக்கியவன், அதுயேனும் தனகேதும் வழி சொல்லுமா,உறுதிகொண்ட மனதும் ஆட்டம் கொள்ளுதே...மனம் இன்று குரங்காய் மாறி அங்குமிங்குமாய் தாவி கொண்டிருக்கிறதே அதைகட்டிகொள்ள கயிறற்று நிற்கிறேன் என தன்னையே சாடிக்கொண்டு இருந்தான்.....

வழக்கம் போல தன் மகளை உறங்கவைத்தவள்...தன்னவனை தேடி வர என்றும் போல வானை வெறிக்க அமர்ந்திருந்தான்..தன்வயிற்றை தள்ளிக்கொண்டு வந்தவள் அவனது தோளை அழுத்தினாள்..,நினைவு பெற்றவன் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.....

" தீரா,...ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றவள் கூறவும் பயந்தவன்.." என்ன ரதுமா வலியெதும் இருக்கா ? " என வினவ.," இல்லை தீரா..உன்மேல என்னால படுக்க முடியல அதான் கஷ்டமா இருக்கு.." என்றவளை வாஞ்சையாக பார்த்தவன்.." கொஞ்ச நாள் பொறுத்துக்க ரதும்மா அப்புறம் உங்க மூனுபேரையும் சேர்த்தே சுமப்பேன்...." என்றவனது விழிகளை கூர்ந்து நோக்கினாள்..

" ஏன் தீரா என்கிட்ட எதையும் சேர் பண்ண மாட்டிகிற உள்குள்ளையே வச்சு எத்தனை நாள் மருகிட்டே இருப்ப...."

" ரதும்மா ! அதெல்லாம் இல்லைடா...நான் எதையும் போட்டு யோசிக்கலை." என்றவனின் முகமெந்தியவள்..." என் தீராவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..உன் முகம் தெளிவில்லாம இருக்குடா...எப்பையும் ஒருவிசயத்தை போட்டு யோசிச்சுட்டே இருக்க...நான் உனக்கு வெறும் பொண்டாட்டி மட்டுமில்லை... ஒரு தாய்யும் கூடத்தான்..தாய்க்குத்தான் தன்பிள்ளை பற்றி நல்லா தெரியும் " என்வளிடம் பேசற்று இருந்தான்....

" நான் சொல்லுறேன் தீரா...நான் வந்தும் உன் முடிவுல உன்னால நிலையா இருக்க முடியல...அதானே ! " என்றதும் அவள் நெஞ்சில் முகம் புதைத்து அழுதான்.மனபாரம் குறைய அழுக விட்டவள் அவன் முகத்தை,ஏந்தினாள்..இங்க பாரு என் கூட வாழுற நீ எந்தகுறையும் இல்லாம வாழனும் நினைக்கிறேன் தீரா...காதலிக்கும் போது ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் வேற பேசுற ஆள் நான் இல்லை தீரா அப்பையும் இப்பையும் ஒன்னுதான் நான் சொல்லுவேன்...,நீ எங்க அப்பாவ தாராளமாக கொல்லு நான் எதுவும் சொல்லலை தீரா, ஜெயிலுக்கு போகனும் போயிட்டுவா உனக்காக நான் நம்ம புள்ளைங்க காத்திட்டு இருப்போம் ...நீ எனக்காக பார்த்திட்டு காலம்முழுக்க இதை நீ மனசுல குறையா வச்சிட்டு வாழாத தீரா.." என அவள் கூற வாரி முத்தமிட்டு அணைத்து அழுதான்...

" ரதும்மா...உன்னை விட்டுபிரிய போறேன் உனக்கு வருத்தமில்லையாடி...."

" வருத்தமில்லாம இருக்குமா தீரா...இருக்கத்தான் செய்து ஆன அதவிட என் புருசனோட நிம்மதி,லட்சியம் எனக்கு முக்கியம்...தீரா எனக்காக ஒன்னு செய்வீயா ? "

" சொல்லு ரதும்மா..அதுக்கு தானடி நான் இருக்கேன்..."
" எப்படியும் நீ அவரை அழிக்க திட்டம் போட்டிருப்ப..அத நம்மை பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமா அவரை கொல்லுறீயா தீரா..." என்றதும் புரியாமல் நோக்கினான்,...

" இல்ல எனக்கு வலி வரப்ப நீ ஏன் கூட இருக்கன்னும் தீரா..எனக்கு ஒன்னுனாலும் கடைசியா உன்முகத்தை பார்த்துட்டே செத்து போயிடனும் அதான்.."

" ரதும்மா...வார்த்தைக்கு கூட அப்படிசொல்லாதடி,..இழந்த குடும்பத்தை உன் முலமா பார்த்துட்டு வரேன்டி....இப்படி பேசி நீயும் என்னை அனாதையாக்கன்னும் நினைக்கிறீயா.."

" இல்ல தீரா,நான் இனி அப்படி சொல்லமாட்டேன்....நீ என் கூட இருப்பேல தீரா..." என்றவளை அணைத்துகொண்டவன்...கண்டிப்பா உன் கூட இருப்பேன் ரதுமா...." என்றவளின் மென்னிதழை முத்தமிட்டு அணைத்தான்....

அன்றைய நிகழ்வையில் இன்று தனதறையில் அசைபோட்டான்....
" ரது...என்னைய மன்னிச்சிருடி..,,நீ கேட்டதை என்னால செய்ய முடியல ரதுமா ! உன்னையும் என் குழந்தையும் நான் பார்த்தா என் மனசு மாறிடும் அதுக்கு முன்னமே அந்த மாணிக்க பெருமாளை கொல்லன்னும்....என்னை மன்னிச்சிடு ரதுமா..." என்றவன் தன் போனில் கையில் எடுத்தவன் யாருக்கு அழைத்தானோ தன் திட்டத்தை முழுதாய் கூறினான்.....சிவா,அன்வர்,காளி,
கணேஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்தான்....அன்று இரவே ரதுவீட்டிற்கு சென்றான்...

" வாங்க மாப்பிள்ளை...." என வாஞ்சையாக அவனை அழைத்தார் மகா.... அவரை நேராக அவனால் காணமுடியவில்லை ஒருவித தயக்கமாய் உள்ளே வந்தான்..

" தீராப்பா...." என சம்மூ காலை கட்டிகொண்டாள்.அவளை தூக்கி கொஞ்சினான்..." சம்மூ குட்டி சாப்பிடிங்களா ? "
" ம்ம்...தீரா சாப்பிட்டேன்....தீரா,ரதும்மா வயிதுக்குள்ளே குட்டி தம்பி ரதும்மாவ எத்துறான்...வந்த அவனை என்னான்னு கேளு தீரா...." என்றாள்..

அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்..." சம்மூ குட்டி தீராப்பா,முதல் சாப்பிடட்டும் அப்புறம் தம்பி பாப்பாகிட்ட கேட்கட்டும்...." என ஷாரு கூறி தீராவை அமரவைத்து உணவை பரிமாறினாள்...." ரது சாப்பிட்டாளா அத்தை அவ எங்க ?"

" அவ சாப்பிட்டா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கிறா உள்ளே " என்றதும் அவன் எதுவும் கூறாது சாப்பிட்டான்...பின் பிரணவிடம் பேசிவிட்டு ரதுவின் அறைக்கு வந்தான்.....சம்மூவும் பிரஜனும் மகாவிடம் உறங்கினர்...ரதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தலைகோதி முத்தமிட்டான்....அவன் தீண்டலில் விழித்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்....

" தீரா....உன் புள்ளை ரொம்ப உதைக்கிறான்.சொல்லிவை அவன்கிட்ட....உன்னை போலவே குறும்பா இருக்கான்...உள்ளே இவ்வளவு சேட்டை,வெளிய வந்தான் என்ன பண்ணுவானோ.. இவனை நீ தான் பார்த்துக்கன்னும்ப்பா என்னால முடியாது...." என்றவள் கூற இதற்பின்தான் அவளோடு இருக்க போவதில்லை இதயம் வலிக்க கண்கள்வழி கண்ணீர் சுரந்திட அவள் அறியாவண்ணம் துடைத்தவன்...

" என் புள்ளை என்ன மாதிரி தான் இருப்பான்...எங்க அம்மாவும் சொல்லுவாங்க நானும் ரொம்ப சேட்டை பண்ணுவேணாம்...அப்ப அப்படிதானே என் புள்ளையும் இருப்பான்....நீ தான் எங்க மூனுபேரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னும் ரதும்மா....உன்னை நம்பிதானேநாங்க இருக்கோம்...."

" என்னசெய்ய அட்ஜஸ்ட் பண்ணித்தானே ஆகனும்...சம்மூ என் சமத்து பொண்ணு என் பேச்சை கேட்ப்பா...ஆன பெரிய தீராவும் குட்டி தீராவையும் என்ன பண்ண போறேன் தெரியல...

" அதேல்லாம் என் ரதுமா ! தனியா நின்னு சமாளிச்சிடுவா " கடைசி வரையில் அழுத்தம் கொடுக்க பேதை மகள் அறியாமல் இருந்தாள்..

" தீரா..இன்னும் இரண்டு நாள் டேட். வந்திடும்...ரொம்ப பயமா இருக்கு தீரா....." அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்..

" நான் இருக்கிற வரைக்கும் உனக்கும் ஒன்னும் ஆகாது ரதும்மா...நீ நல்லபடியா குட்டிதீராவ பெத்து தாய்யும் சேய்யுமா என்கிட்ட பத்திரமா வந்து சேருவீங்க நான் வணங்குற,அந்த சிவன் கைவிட மாட்டார் ரது " என அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவன் நெஞ்சில் முகம்,புதைத்து கொண்டாள்...அவளை உறங்கவைத்தவன்,..வெகுநேரம் உறங்காமல் இருந்தான்...
அதிகாலை விடிய யாரும் அறியா வண்ணம் வெளியேறினான்.....
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
தன் வீட்டிற்கு வந்தவன்...குளித்து முடித்து சிவபெருமானை வணங்கிவிட்டு....தனது அறையில் இரண்டு துப்பாக்கிகளை முதுகில் ஒன்னும் இடையில் ஒன்னும் சொறிகினா...அறிவாள் ஒன்றையும் வைத்துக்கொண்டான்....அங்கே யாரும் அறியாவண்ணம் கிளம்பினான்....

வழக்கம் போலவே சிவா அண்ணனை காணசெல்ல அங்கு அவன் இல்லை காலை முழுதும் அவன் தேட தீரா கிடைக்கவில்லை. ரதுவிடம் செல்லவோ அங்கும் அவன் எப்போது சென்றான் என்றும் அவன் எங்கு சென்றான் என தெரியாமல் இருக்க..சிவாவுடன் பிரணவ் சென்று தேடினார்கள்....ரதுவிற்கோ உதறல் ஏற்பட்டது....

" மார்ப்பை முட்டிமோதி தன்மெல்லிதழால் பாலை பருகிக்கொண்டிருந்தாள் நிசான், கேத்தீரின் இளவரசி நித்யஷேரின்....நித்யா என்பது தேவரிசியும் நாதனும் வைத்த பெயர்.... ஷேரின்,என்பது இருவரது பெயரை சேர்த்து நிசான் கூற இதை இரண்டை கேத்ரீன் இணைத்துவிட்டாள்....

ஷேரின் பாலை பருகிக்கொண்டிருந்தவள்..தன் தந்தையின் பேச்சு சத்தம் கேட்டே மெல்ல எட்டிபார்த்தாள்...." தனு,உன் பொண்ணப்பாரு உன்பேச்சு சத்தம் கேட்டதும் பால்குடிக்கிற நிருத்திட்டு உன்னை கவனிக்கிறா..அப்பனும் பிள்ளையும் சரியான கூட்டு களவானிங்க தான் " என்றாள்...குழந்தை மறைந்து விளையாட்டுகாட்டியது அவனுக்கு.அவளை தூக்கி கொண்டான் நிசான்,. தனது பொக்கை வாயால் அவன் தூக்கியதும் சிரிக்க மெல்லமாய் இதழ் பதித்து அணைத்துக்கொண்டான்...

" எனக்கு என் ஏஞ்சலுக்கும் ஆயிரம் இருக்கும் தனு நீ வரக்கூடாது எங்களுக்குள்ள..." என்றவன் குழந்தைபார்த்து கூற...

" அடப்பாவி உன் ஏஞ்சல் வந்ததும் நான் முக்கியமில்லாம போயிடேனா ? போ உன் பொண்ணை கட்டியே அழுகு..." என கூறி அவனைவிட்டு செல்ல.தன் குழந்தையை தோளில் சுமந்தவாறே அவள் கைப்பற்றியவன் தன்னருகில் இழுத்து அணைத்தவன்..." ரீனு,நீதான்டி என் முதல் ஏன்ஜல் முதல் குழந்தை..அப்பறம் தான் இந்த குட்டி ஏன்ஜல் என நெற்றியில் முத்தமிட்டான்...அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்...

நிசானின் கைப்பேசி அலற..அதை அட்டன்ட் செய்தான் அங்கு என்ன கூறப்பட்டதோ...வாட் ! முதலில் அதிர்ந்தவன்...." இதோ கிளம்பிவரேன் " என்றவன் அவர்களிடம் கூறி கிளம்பிச்சென்றான்.....

" என்னாச்சு தனு....? "

" முக்கியமான வொர்க் ரீனுநான் வரேன்...பார்த்துக்கோ " இருவருக்கும் முத்தமளித்துவிட்டு சென்றான்...

சிறைசாலை வந்தடைந்தான்.அங்கே மாணிக்கப்பெருமாள் தப்பிவிட்டதாக கூறினார்கள்...

" எப்படி தப்பிச்சிருப்பாரு....அவர் தப்பிக்க வாயிப்பில்லையே...." நிசான் கூற..நைட் நம்ம முருகேசன் சார் தான் டூயூட்டில இருந்தார்...அவரும் வார்டன் ரௌண்ட்ஸ் வர கைதிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டு அத சரிபண்ணின அந்த ஹேப்ல அவரு தப்பிச்சிருக்காரு சார்....

" ஷட்...அவர் தேடி கண்டுபிடிக்க சொல்லுங்க..." என உத்தரவிட்டான்..அதற்குள் அவனுக்குபிரணவ் அழைத்து விசயத்தை கூற....அவனுக்கு பாதி புரிந்து புரியாமல் இருந்தது....

ஒருபக்கம் போலீஸ் மாணிக்க பெருமாளை தேட....மறுபக்கம் சிவா,அந்த நாலுவரும் தீராவை தேடினர்...

நிசான் பிரணவும் தேடவே..நிசானுக்கு மும்பையிலிருந்து போன் வந்தது...வித்தேஸ் தப்பித்துவிட்டாதாக கூற,.....அதனை பிரணவ்விடம் கூற தீராவின் நிலையை குறித்து கலக்கம் கொண்டனர்...

ரது பிரணவ்விற்கு அழைத்து பேசா அவன் மாணிக்கப்பெருமாளும்,வித்தேஸ்ஸூம் ஒருசேர தப்பித்ததையும் இன்னும் தீரா கிடைக்காமல் இருப்பதையும் கூற ரது பயத்தில் மயங்கி சரிந்தாள்....

" ஐயோ !..ரது....ரது...என்னாச்சும்மா என்னாச்சு ? " என மகா அவள் கண்ணத்தை தட்டி எழுப்ப எழுவில்லை தண்ணீர் தெளித்து விழித்தாள்..

"அம்மா !...." என அழுது அவரை அணைத்தாள்..." என்னாச்சு ரதுமா ? ஏன் அழுகிற..."

" ம்மா....தீராவ காணோம்மா....அதுமட்டுமில்ல அப்பாவும்,வித்தேஸ்ஸூம் ஜெயில் இருந்து தப்பிச்சிட்டாங்கம்மா.எனக்கு பயமா இருக்கம்மா தீராக்கு எதுவும் ஆகா கூடாதும்மா..." என கத்தி அழுதாள்....

" இப்படி அழதாடா குழந்தை உள்ள இருக்கு...தீராவிற்கு ஒன்னும் ஆகாது ரதும்மா நீ அழாதடா...." என ஆறுதல் படுத்த முயன்றார்..அவளோ பதறியவள் பூஜையறைமுன்அமர்ந்து அழுது தீர்த்தாள்..

யாவரும் அவர்களை தேட..மாணிக்கப்பெருமாளின் பழைய பேக்டிரியில் அவரை கட்டி போட்டு வைத்திருந்தான் தீரா..

" அவர் மயக்கத்தில் விழித்திருந்தவர்.தன் முன்னே இருந்த தீராவை கண்டு பயந்தார்..அவரது கட்டினை அவிழ்த்தவன் நேராக அமர்ந்தான்..

" என்ன மாணிக்க பெருமாள்,ஆயுள்தண்டனை வாங்கி அப்பிடியே ஜெயிலையே செத்திடலாம் நினைச்சீயா...அதுமுடியாது,ஆயுள் கைதியா இருந்துட்டு அங்க மூனுவேல சாப்பாட்டு உறக்கம் சுகமாக இருக்கிறதெல்லாம் தண்டனையா....என் குடும்பத்தை கொன்ன உனக்கு நான் கொடுக்கபோறேன் மரண தண்டனை..

மனசாட்சியே இல்லாம கொன்னீயேடா...இதே நாள் என் மொத்த குடும்பத்தோட உடல் முழுதும் சிதறி என் கண்ணுமுன்னாடியே இறந்துகிடந்ததை பார்த்த நாள் டா இது.....இன்னைக்கு நீ அதுபோல துண்டு துண்டா உன்னை வெட்டி வீச தான்டா நான் உன்னை ஜெயில் இருந்து தப்பிக்கவிட்டேன்...உன் சாவ நேருல பார்க்க போறடா..." என்றவனை புரியாமல் பார்த்தவர்.

" தீரா, தெரியும் நீ எப்படியும் கொல்ல போறேன்னு...அத பத்தி நான் கவலை படல...அதுக்கு அப்புறமா உன் வாழ்க்கை நினைச்சு பார்த்தீயா..இப்பையும் நான் சுயநலமா தான் யோசிக்கிறேன் என் பொண்ணோட வாழ்க்கை உன் கையில தான் இருக்கு..நீ கொன்னு ஜெயிலுக்கு போயிட்டா...என் பொண்ணோட வாழ்க்கை கேள்வி குறியாகிடும்.போதும் அவ இன்னொரு மகாவா இருக்க வேணாம்...நானே உன் முன்னாடி தற்கொலை பண்ணிக்கிறேன்...,நீ என்னை கொல்லாத.... "

" ஒ....திருந்திடீயா !....ஜெயிலுக்கு போனதும் புத்திவந்திடுச்சா...நீ தியாகம் பண்ணி நான்வாழ கூடாது..பரவாயில்லை உன்னை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போக தயார்.....உன் பொண்ணே உன்னை கொல்ல அனுமதி கொடுத்திட்டா... கண்டிப்பா உன்னை கொல்லுவேன்..."

"
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
சரி,தீரா ஆன உன் ஆசைபடியே என்னை கொன்னுடு ஆன தயவு செய்து என் பொண்ணை அழைச்சிட்டு எங்கையாவது போயிடு ப்ளீஸ்...

" என்ன சொல்லுற நீ....." என புரியாமல் தீரா கேட்க..." என்னை தப்பிக்க விட்டு உன்னை கொல்ல சொன்னது வித்தேஸ்ஸோட திட்டம்...அப்படிதான் நான் முதல் நினைச்சேன் ஆன அவன் திட்டம்அது இல்லை....என்னை எப்படியும் நீ கொன்னு அதனால நீ ஜெயிலுக்கு போய் அங்க வச்சு உன்னை கொல்ல அந்த வித்தேஸ் பிளான் போட்டிருக்கான்..எப்படியும் வித்தேஸ் விசயம் தெரிஞ்சு இங்க வந்திடுவான் தீரா " என்றார்

" என்ன புதுகதை சொல்லுற நீ...வித்தேஸ் மும்பை ஜெயில் இருக்கான்..அவனால எப்படி இங்க வரமுடியும்...."

" நான்தப்பிக்கும் போது வித்தேஸோட ஆள் என்னிடம் வித்தேஸ் மும்பையிலிருந்து தப்பித்தை என்கிட்ட சொன்னாரு..ஒன்னும் உன்னைநான் கொன்ன அவன் என்ன கொல்லுவான்...நீ என்னை கொன்னா அவன் உன்னை கொல்லுவான்...அதான் சொல்லுறேன் என்கொன்னுட்டு இங்க இருந்து போ தீரா...." என கூறிக்கொண்டிருக்கும் போது...அங்கே வித்தேஸ் வந்தான்..

" உங்க இரண்டுபேரோட பகைவைத்து இருவரையும் அழிக்க நினைச்சா...நீங்க ஒருவரை ஒருவர் காப்பாத்துறீங்க போல...." என கூறி வந்தவன் கையில் துப்பாக்கி இருந்தது.....

" எனக்கு தேவை தீராவோட உயிர் தான்...அத நானே எடுத்துகிறேன்...நீங்க தேவையில்லை மிஸ்டர் மாணிக்கப்பெருமாள்...." என அவன் முன்னே துப்பாக்கியை நீட்டினான்.....துப்பாக்கியை அழுத்த அவனை தள்ளிவிட்டான் தீரா....துப்பாக்கி தூர விழுந்தது,...இருவரும் சண்டையிட்டனர்.....
மாணிக்கப்பெருமாளுக்கு என்ன செய்வதென்றே தெரியாது நின்றார்...இருவரும் சண்டையிட வித்தேஸ் துப்பாக்கியை கண்டார்...தீராவை தள்ளிவிட்டு துப்பாக்கி எடுக்க முயல அதற்குள் மாணிக்கப்பெருமாள் எடுத்து வித்தேஸ்ஸை சுட்டார்,மூன்று தோட்டாக்கள் அவனுள் இறங்கியது....

தீரா,அவரை காண.....அவரோ உன் குடும்பத்தை அழித்த பாவத்திற்கு தான் நான் குடும்பமே இல்லாம்மா அனாதையா இருக்கேன்,இப்போ அப்படியே சாக போறேன்...நான் செத்தா தான் என் பொண்ணு வாழ்க்கை நல்லாருக்கும்ன்னா நான் சாக தயார்....நீ கொன்னு நான் செத்து நீ ஜெயிலுக்க போக வேணாம்.....என் பொண்ணுக்கூடா சந்தோசமா இரு மாப்பிள்ளை " என்றவர் தன்னை தானே சுட்டுக்கொள்ள அங்கே நிசான் வந்தான்..

" தீரா..உனக்கு ஒன்னும் ஆகாலையே...." என அவனை கேட்க.." இல்ல நிசான், " என்றவன் அவர்களை காட்டிடா அவர்கள் இறந்துகிடந்தார்கள்....

" சரி நீ வா " என நிசான் தீராவின் கைகளை பற்றி இழுத்தவாறே தனதுபோனிலிருந்து டையல் செய்ய..."

" தீரா..." என வித்தேஸ்ஸின் அழைப்பில் தீரா திரும்ப அவனை நெஞ்சிலே சுட்டான்...அவன் தனித்து வைத்த துப்பாக்கிலிருந்து சுட்டான்...நிசான் வித்தேஸ்ஸை சுட அவன் மடிந்தான்....

" தீரா....தீரா...." என அவனழைக்க தன சுயநினைவை இழந்துகொண்டிருந்தான்...அவன் இதயத்திலிருந்து குருதி வெளியே வந்தது..ஆம்புலன்ஸ் விரைந்திட...தீராவை மருத்துவமனையில் சேர்த்தனர்....

உள்ளே தீராவிற்கு சிகிச்சை அளித்தனர்...குண்டை எடுத்துக்கொண்டிருந்தனர்...

வெளியே அனைவரும் நிற்க...ரதுவால் அதை தாங்கிக்க முடியவில்லை... அழுது அழுது,மடிந்தாள்....அவளை பார்க்க பாவமாக இருந்தது...எவ்வளவு சொல்லியும் சமாதானம் ஆகவில்லை...

ஆபிரேசன் முடிந்து டாக்டர் வெளியே வந்தார்...குண்டை எடுத்துவிட்டோம்...ஆனால்இன்னும் சீரியஸ் கண்டிசனில் தான் இருக்கிறார்....ஐ.சி.யூ மாத்திருவாங்க ஒரு ஆள் மட்டும் போய் பாருங்க.. " என்றவர் செல்ல..இன்னும் பயம் நீங்காமலே இருந்தாள் ரது..

தீராவை ஐ.சி.யூவிற்கு மாற்றினர்...உள்ளே ரதுமட்டுமே சென்றவள்...தனது நடுங்கும் விரல்களால் அவனது இதயத்தை மெல்ல வருடினாள்......அவள் தோளில் சாய்ந்தவள்....அவன் காதருகே..," தீரா.....தீரா..,,உன் ரது கூப்பிடுறேன் எந்திரிடா...இப்படி படுத்திருக்கிறது உனக்கே சரியாடா...உன் மனைவி,உன்புள்ளைவிட்டு இப்படி கிடக்கிறது சரியா ? எழுந்துவாடா...நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்க எனக்கு வலி வரும் போது என் கூட இருப்பேன்னு...,,எழுந்துவாடா.உன் குட்டி தீரா பார்க்கவாடா....என்னை சொல்லிட்டு நீ என்னை அனாதை ஆகிடாதாடா....உன்னை பிரிஞ்சு என்னால இருக்கும் முடியாது டா...நீ எங்க போறீயோ அங்க என்னையும் கூடிட்டு போடா..என்னைய தவிக்க விட்டு போயிடாதாடா...," என அழுதாள்....அவனிடம் பதிலேதுமில்லை...அவன் முன்னே அழுதுமடிந்தாள்....இரண்டுநாள் அவ்வாறே சென்றது அவனிடமிருந்து அசைவில்லை.....மூன்றாம் நாள்,அவளக்கான கொடுத்த தேதியாக இருந்து..அவன் கைகளை பிடித்து அமர்ந்து அதே போல் பேசினாள்....சிறுது நேரத்தில் அவள் வயிற்றுல் மின்னல் போல் வலிவந்து மறைந்தது.....தனது இடதுகையை வயிற்றில் வைத்தாள்....மீண்டும் அவ்வாறே வலிவந்தது....ரது வயிற்று வலியால் கத்தினாள்....அவள் எழ முயற்சிக்க அவனது கை ரதுவின் கையை இறுக்கப்பட்டிருந்தது... " தீரா,,.,தீரா...." என அழைத்தவாறே வலியில் துடித்தாள்...

அவனிடமிருந்து கைகளை கஷ்டபட்டு பிரித்தனர் அதே மருத்துவமனையில் சேர்த்தனர் அவளை...

தீரா,....மெதுவாக கண்விழித்தான் அவனை டாக்டர் பரிசோதிக்க ஆவுட் டாப் டேன்ஜர் என கூறி சென்றார்..எல்லாருக்கும் நிம்மதிவந்தது.சிவா,தீராவின்அருகில் செல்ல மெதுவாக அவன் புறம் திரும்பியவன் ரதுவை கேட்டான்...ரதுவிற்கு பிரசவலி வந்ததை கூற எழ முயற்சித்தான்... அவர்கள் அவனை தடுத்தும் எழுந்தவன் அவளது அறை நோக்கி நடந்தான்...,அவள் உள்ளே கத்திகொண்டிருந்தாள் வலியால்...அனைவரும் தடுத்து உள்ளே சென்றவன்....அவளது கைகளை பற்றினான்..

" தீராவை கண்டதும் வலியில் துடித்தவளுக்கு ஒருவித நிம்மதியே பரவியது ...அவன் கைகளை இறுக்கப்பற்றினாள்....

" ரதுமா...நான் சொன்னது போல உன் கூட இருக்கேன்டி....உன்னால முடியும் ரதுமா,....கொஞ்சம் வலிய பொறுத்துக்கோம்மா...." என கெஞ்சினான்..

" என்னால முடியல தீரா," என அழுதிக்கொண்டிருந்தாள் ரது..." ரதுமா....எனக்காக டா...எனக்கு உன்னைவிட்டா யாருமில்லை டி...ப்ளீஸ் கொஞ்சம் வலியை பொறுத்துகோ ரது..." என அவன் துணையில் வலியை பொறுத்துகொள்ள போதும்என்றே குட்டி தீரா வெளியே வந்தான்...அவள் மயங்கினாள்...

" சார் நீங்க போய் ரெஷ்ட் எடுங்க..ரொம்ப ஸ்டெரியின் பண்ணிக்காதீங்க ப்ளீஸ் " என்றதும் தன்னறைக்கு வந்தான்...

" அண்ணா,அவனைகட்டிக்கொண்டு அழுதனர்..." எனக்கு ஒன்னுமில்லை டா...அதான்நான் வந்துடேன்ல அழாதீங்க டா....." என்றான்..

" ஏன் அண்ணா எங்கிட்ட சொல்லாம கூட நீங்க தனியா போனீங்க..." கணேஷ் கேட்க....." என் பகையால நீங்க பாதிக்க படகூடாது....உங்க வாழ்க்கை நல்லாருக்கன்னும் நினைச்சேன் டா...அதான்..."

" நீங்க இல்லைன்னா நாங்க ஒன்னுமில்லைண்ணா...இனி எங்களை விட்டு போகாதீங்கண்ணா " அன்வர் கூறினான்..

" எனக்கு ஒன்னுமில்லைடா நாம இனி எந்த பகை,சண்டை, கோபம், பழிவாங்கிறது எண்ணம் இதெல்லாம் இல்லாம நமக்காக வாழுவோம்டா..." என தீரா கூற மீண்டும் அணைத்தனர்...

" தீராண்ணா...இந்தாங்க உங்க குட்டி தீரா..." என மலர் அவன் கையில் குழந்தையை கொடுக்க ஆசையாய் அவனை கையில் ஏந்தினான்...அவனுக்கு வலிக்காமல் முத்தமிட்டான் ஆசை திர அவனை கண்டு களித்தான்....
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
அதன் பின் மூன்று நாட்கள் கழித்து இருவரும் வீடு திரும்ப....அவர்களை ஆலம் கரைத்து உள்ளே அழைத்து வந்தனர்....தன் அன்னையை அவள் எந்தவொரு மாற்றமின்றி இருந்தார்..,அவர் தான் முன்னமே தன் கணவனே இல்லையென்று தாலியை கழட்டி வீசிவிட்டார்...இருந்தும் அவரது இறப்பை கேட்டதும் அவருக்காக அவருடன் வாழ்ந்த நாட்களை நினைத்து அழுதார்...பின் தன் குடும்பத்தை நினைத்து தன் மகள் மருமகன் நல்லபடியாக திரும்பி வந்ததை எண்ணி மனதை தேற்றினார்...

இரவு தன் குழந்தைகளை உறங்க வைத்தவள்,.தீராவின் அருகில்,படுத்துக்கொண்டாள்...இன்னும் கட்டை அவிழ்காமல் இருக்க அதன் மேல் தனது விரல்களை வைத்து மெல்ல தடவினாள்....

" தீரா,செத்துடேன் டா...உனக்கு இப்படி ஆனதை கேட்டதும்...என் உலகமே நின்னது போல ஆச்சுடா....நீ இல்லாம என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலடா..." என அவன் மார்ப்பில் சாய்ந்து அழுதாள்,..

" அழாத ரதுமா....அதான் நான்வந்துடேல...எங்க என் குழந்தை முகத்தை பார்த்ததும் மனசு மாறிடும் தான் நான் அப்படியொரு முடிவெடுத்தேன் என் மன்னிச்சிடு ரதுமா..." என்றான்.,.

கெட்டதில்லையும் நல்லது போல உன்னால யாரும் சாகலை தீரா...நீ யாரையும் கொன்னு,பாவத்தை சம்பாதிக்கலை, ஜெயிலுக்கும் போகல என்கூடவே இருக்க போறேன் நினைக்கும் போது சந்தோசமா இருக்குடா...." அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்...இனி உன் தீராவா எந்த குறையும் இல்லாம என் வாழ்க்கை முழுவதும் உங்கமூனுபேரையும் என் நெஞ்சில சுமப்பேன்டி..." என்றவனின் நெஞ்சில் முத்தமிட்டாள்....

" இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த தீராவோட காதல் என்றும் இந்த ரதுக்கு மட்டும் தான்..,என்றும் இதே போல தீரா(து)காதலோடு வாழ்வோம் டா..." என்றவளை அணைத்துகொண்டான்....

முற்றும்.....
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தன் குடும்பத்தை அழித்த மாணிக்கப்பெருமாளை தன்கையால் கொலை செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவுடன் இருந்த தீரா ரதுவின் வருகையால் கொஞ்சம் அந்த முடிவில் தடுமாறத்தான் செய்தான்....அவளது வருகை காதல், இப்பொது பேருகாலம் என்றவள் இருக்க...தன் முடிவு சரியா என யோசித்தான்...சில நாள் நிம்மதியற்று திருந்திருக்கிறான்...அவனது உள்மாற்றங்களை அறிந்த ரது அன்று பேசியது அவன் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.எந்தவொரு மனைவியும் தன் கணவன் தன்னோடே இருக்கவேண்டும் என்று தான் நினைப்பாள்...இப்படி ஒரு சூழலில் கணவன் இருந்தால் முதலில் அவள் கூறிவது கொலை அது இது என்பதெல்லாம் வேண்டாம்,குடும்பம் குழந்தை குட்டியென இருந்திடு விடு என்று தான் கூறுவார்கள்....ஆனால் அதற்கு மாறாக ரது கூறியதில் நிம்மதியென கொண்டாலும் அவளை நினைத்து கலங்கிதான் போனான்,....

அன்று ரது..

ஒற்றை நிலவாகினும் வான்மொத்தம் அழகு படுத்தி விடுகிறதே அவ்விரவையும்..தனித்தே நிற்பினும் காதல் நினைவுகளில் கரையும் நிலவுமகள் போல் தனித்து நின்றவன் பல எண்ணத்தில் சிக்கித்தவித்தவன்.தன்னையோ தன்னை சார்ந்தவர்களையோ எதிர்கொள்ள சிரமம் கண்டவன் தனிமையை எடுத்துகொண்டான்.. நிலவை நோக்கியவன், அதுயேனும் தனகேதும் வழி சொல்லுமா,உறுதிகொண்ட மனதும் ஆட்டம் கொள்ளுதே...மனம் இன்று குரங்காய் மாறி அங்குமிங்குமாய் தாவி கொண்டிருக்கிறதே அதைகட்டிகொள்ள கயிறற்று நிற்கிறேன் என தன்னையே சாடிக்கொண்டு இருந்தான்.....

வழக்கம் போல தன் மகளை உறங்கவைத்தவள்...தன்னவனை தேடி வர என்றும் போல வானை வெறிக்க அமர்ந்திருந்தான்..தன்வயிற்றை தள்ளிக்கொண்டு வந்தவள் அவனது தோளை அழுத்தினாள்..,நினைவு பெற்றவன் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.....

" தீரா,...ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றவள் கூறவும் பயந்தவன்.." என்ன ரதுமா வலியெதும் இருக்கா ? " என வினவ.," இல்லை தீரா..உன்மேல என்னால படுக்க முடியல அதான் கஷ்டமா இருக்கு.." என்றவளை வாஞ்சையாக பார்த்தவன்.." கொஞ்ச நாள் பொறுத்துக்க ரதும்மா அப்புறம் உங்க மூனுபேரையும் சேர்த்தே சுமப்பேன்...." என்றவனது விழிகளை கூர்ந்து நோக்கினாள்..

" ஏன் தீரா என்கிட்ட எதையும் சேர் பண்ண மாட்டிகிற உள்குள்ளையே வச்சு எத்தனை நாள் மருகிட்டே இருப்ப...."

" ரதும்மா ! அதெல்லாம் இல்லைடா...நான் எதையும் போட்டு யோசிக்கலை." என்றவனின் முகமெந்தியவள்..." என் தீராவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..உன் முகம் தெளிவில்லாம இருக்குடா...எப்பையும் ஒருவிசயத்தை போட்டு யோசிச்சுட்டே இருக்க...நான் உனக்கு வெறும் பொண்டாட்டி மட்டுமில்லை... ஒரு தாய்யும் கூடத்தான்..தாய்க்குத்தான் தன்பிள்ளை பற்றி நல்லா தெரியும் " என்வளிடம் பேசற்று இருந்தான்....

" நான் சொல்லுறேன் தீரா...நான் வந்தும் உன் முடிவுல உன்னால நிலையா இருக்க முடியல...அதானே ! " என்றதும் அவள் நெஞ்சில் முகம் புதைத்து அழுதான்.மனபாரம் குறைய அழுக விட்டவள் அவன் முகத்தை,ஏந்தினாள்..இங்க பாரு என் கூட வாழுற நீ எந்தகுறையும் இல்லாம வாழனும் நினைக்கிறேன் தீரா...காதலிக்கும் போது ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் வேற பேசுற ஆள் நான் இல்லை தீரா அப்பையும் இப்பையும் ஒன்னுதான் நான் சொல்லுவேன்...,நீ எங்க அப்பாவ தாராளமாக கொல்லு நான் எதுவும் சொல்லலை தீரா, ஜெயிலுக்கு போகனும் போயிட்டுவா உனக்காக நான் நம்ம புள்ளைங்க காத்திட்டு இருப்போம் ...நீ எனக்காக பார்த்திட்டு காலம்முழுக்க இதை நீ மனசுல குறையா வச்சிட்டு வாழாத தீரா.." என அவள் கூற வாரி முத்தமிட்டு அணைத்து அழுதான்...

" ரதும்மா...உன்னை விட்டுபிரிய போறேன் உனக்கு வருத்தமில்லையாடி...."

" வருத்தமில்லாம இருக்குமா தீரா...இருக்கத்தான் செய்து ஆன அதவிட என் புருசனோட நிம்மதி,லட்சியம் எனக்கு முக்கியம்...தீரா எனக்காக ஒன்னு செய்வீயா ? "

" சொல்லு ரதும்மா..அதுக்கு தானடி நான் இருக்கேன்..."
" எப்படியும் நீ அவரை அழிக்க திட்டம் போட்டிருப்ப..அத நம்மை பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமா அவரை கொல்லுறீயா தீரா..." என்றதும் புரியாமல் நோக்கினான்,...

" இல்ல எனக்கு வலி வரப்ப நீ ஏன் கூட இருக்கன்னும் தீரா..எனக்கு ஒன்னுனாலும் கடைசியா உன்முகத்தை பார்த்துட்டே செத்து போயிடனும் அதான்.."

" ரதும்மா...வார்த்தைக்கு கூட அப்படிசொல்லாதடி,..இழந்த குடும்பத்தை உன் முலமா பார்த்துட்டு வரேன்டி....இப்படி பேசி நீயும் என்னை அனாதையாக்கன்னும் நினைக்கிறீயா.."

" இல்ல தீரா,நான் இனி அப்படி சொல்லமாட்டேன்....நீ என் கூட இருப்பேல தீரா..." என்றவளை அணைத்துகொண்டவன்...கண்டிப்பா உன் கூட இருப்பேன் ரதுமா...." என்றவளின் மென்னிதழை முத்தமிட்டு அணைத்தான்....

அன்றைய நிகழ்வையில் இன்று தனதறையில் அசைபோட்டான்....
" ரது...என்னைய மன்னிச்சிருடி..,,நீ கேட்டதை என்னால செய்ய முடியல ரதுமா ! உன்னையும் என் குழந்தையும் நான் பார்த்தா என் மனசு மாறிடும் அதுக்கு முன்னமே அந்த மாணிக்க பெருமாளை கொல்லன்னும்....என்னை மன்னிச்சிடு ரதுமா..." என்றவன் தன் போனில் கையில் எடுத்தவன் யாருக்கு அழைத்தானோ தன் திட்டத்தை முழுதாய் கூறினான்.....சிவா,அன்வர்,காளி,
கணேஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்தான்....அன்று இரவே ரதுவீட்டிற்கு சென்றான்...

" வாங்க மாப்பிள்ளை...." என வாஞ்சையாக அவனை அழைத்தார் மகா.... அவரை நேராக அவனால் காணமுடியவில்லை ஒருவித தயக்கமாய் உள்ளே வந்தான்..

" தீராப்பா...." என சம்மூ காலை கட்டிகொண்டாள்.அவளை தூக்கி கொஞ்சினான்..." சம்மூ குட்டி சாப்பிடிங்களா ? "
" ம்ம்...தீரா சாப்பிட்டேன்....தீரா,ரதும்மா வயிதுக்குள்ளே குட்டி தம்பி ரதும்மாவ எத்துறான்...வந்த அவனை என்னான்னு கேளு தீரா...." என்றாள்..

அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்..." சம்மூ குட்டி தீராப்பா,முதல் சாப்பிடட்டும் அப்புறம் தம்பி பாப்பாகிட்ட கேட்கட்டும்...." என ஷாரு கூறி தீராவை அமரவைத்து உணவை பரிமாறினாள்...." ரது சாப்பிட்டாளா அத்தை அவ எங்க ?"

" அவ சாப்பிட்டா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கிறா உள்ளே " என்றதும் அவன் எதுவும் கூறாது சாப்பிட்டான்...பின் பிரணவிடம் பேசிவிட்டு ரதுவின் அறைக்கு வந்தான்.....சம்மூவும் பிரஜனும் மகாவிடம் உறங்கினர்...ரதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தலைகோதி முத்தமிட்டான்....அவன் தீண்டலில் விழித்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்....

" தீரா....உன் புள்ளை ரொம்ப உதைக்கிறான்.சொல்லிவை அவன்கிட்ட....உன்னை போலவே குறும்பா இருக்கான்...உள்ளே இவ்வளவு சேட்டை,வெளிய வந்தான் என்ன பண்ணுவானோ.. இவனை நீ தான் பார்த்துக்கன்னும்ப்பா என்னால முடியாது...." என்றவள் கூற இதற்பின்தான் அவளோடு இருக்க போவதில்லை இதயம் வலிக்க கண்கள்வழி கண்ணீர் சுரந்திட அவள் அறியாவண்ணம் துடைத்தவன்...

" என் புள்ளை என்ன மாதிரி தான் இருப்பான்...எங்க அம்மாவும் சொல்லுவாங்க நானும் ரொம்ப சேட்டை பண்ணுவேணாம்...அப்ப அப்படிதானே என் புள்ளையும் இருப்பான்....நீ தான் எங்க மூனுபேரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னும் ரதும்மா....உன்னை நம்பிதானேநாங்க இருக்கோம்...."

" என்னசெய்ய அட்ஜஸ்ட் பண்ணித்தானே ஆகனும்...சம்மூ என் சமத்து பொண்ணு என் பேச்சை கேட்ப்பா...ஆன பெரிய தீராவும் குட்டி தீராவையும் என்ன பண்ண போறேன் தெரியல...

" அதேல்லாம் என் ரதுமா ! தனியா நின்னு சமாளிச்சிடுவா " கடைசி வரையில் அழுத்தம் கொடுக்க பேதை மகள் அறியாமல் இருந்தாள்..

" தீரா..இன்னும் இரண்டு நாள் டேட். வந்திடும்...ரொம்ப பயமா இருக்கு தீரா....." அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்..

" நான் இருக்கிற வரைக்கும் உனக்கும் ஒன்னும் ஆகாது ரதும்மா...நீ நல்லபடியா குட்டிதீராவ பெத்து தாய்யும் சேய்யுமா என்கிட்ட பத்திரமா வந்து சேருவீங்க நான் வணங்குற,அந்த சிவன் கைவிட மாட்டார் ரது " என அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவன் நெஞ்சில் முகம்,புதைத்து கொண்டாள்...அவளை உறங்கவைத்தவன்,..வெகுநேரம் உறங்காமல் இருந்தான்...
அதிகாலை விடிய யாரும் அறியா வண்ணம் வெளியேறினான்.....
Ivar yen ipd paraaru 🥺
Rendu perume pavam ☹🥺
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அதன் பின் மூன்று நாட்கள் கழித்து இருவரும் வீடு திரும்ப....அவர்களை ஆலம் கரைத்து உள்ளே அழைத்து வந்தனர்....தன் அன்னையை அவள் எந்தவொரு மாற்றமின்றி இருந்தார்..,அவர் தான் முன்னமே தன் கணவனே இல்லையென்று தாலியை கழட்டி வீசிவிட்டார்...இருந்தும் அவரது இறப்பை கேட்டதும் அவருக்காக அவருடன் வாழ்ந்த நாட்களை நினைத்து அழுதார்...பின் தன் குடும்பத்தை நினைத்து தன் மகள் மருமகன் நல்லபடியாக திரும்பி வந்ததை எண்ணி மனதை தேற்றினார்...

இரவு தன் குழந்தைகளை உறங்க வைத்தவள்,.தீராவின் அருகில்,படுத்துக்கொண்டாள்...இன்னும் கட்டை அவிழ்காமல் இருக்க அதன் மேல் தனது விரல்களை வைத்து மெல்ல தடவினாள்....

" தீரா,செத்துடேன் டா...உனக்கு இப்படி ஆனதை கேட்டதும்...என் உலகமே நின்னது போல ஆச்சுடா....நீ இல்லாம என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலடா..." என அவன் மார்ப்பில் சாய்ந்து அழுதாள்,..

" அழாத ரதுமா....அதான் நான்வந்துடேல...எங்க என் குழந்தை முகத்தை பார்த்ததும் மனசு மாறிடும் தான் நான் அப்படியொரு முடிவெடுத்தேன் என் மன்னிச்சிடு ரதுமா..." என்றான்.,.

கெட்டதில்லையும் நல்லது போல உன்னால யாரும் சாகலை தீரா...நீ யாரையும் கொன்னு,பாவத்தை சம்பாதிக்கலை, ஜெயிலுக்கும் போகல என்கூடவே இருக்க போறேன் நினைக்கும் போது சந்தோசமா இருக்குடா...." அவளின் நெற்றியில் முத்தமிட்டவன்...இனி உன் தீராவா எந்த குறையும் இல்லாம என் வாழ்க்கை முழுவதும் உங்கமூனுபேரையும் என் நெஞ்சில சுமப்பேன்டி..." என்றவனின் நெஞ்சில் முத்தமிட்டாள்....

" இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த தீராவோட காதல் என்றும் இந்த ரதுக்கு மட்டும் தான்..,என்றும் இதே போல தீரா(து)காதலோடு வாழ்வோம் டா..." என்றவளை அணைத்துகொண்டான்....

முற்றும்.....
Happy Ending....😍🥰❤
Lovely.....👌😊🤗
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top