- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 1
ஆரத்தி - ஒரு அறிமுகம்
ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர் வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது. ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர் மற்றும் துறவிகளின் உருவச்சிலைமுன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனை, ஆரத்தி எனப்படும். பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்கவிட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ் ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும் மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள் ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.
இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா, கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குக் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.
இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. எனவே எப்பொழுது இந்த ஆரத்தி காட்டும் முறை ஆரம்பித்தது என்று யாருக்கும் தெரியாது. பூசைகள் முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறலாம். 1909ம் ஆண்டு தான் முதன்முதலாக, பாபாவின் முன்பு மக்கள் ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டது. முதலில் நண்பகல் ஆரத்தி மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி சாவடி ஊர்வலம் ஆரம்பித்தவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது. துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி) ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.
பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட, பிறகு சம்மதித்தார். முதன் முதலாக நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவர். இவர் ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம். பாபா நேசித்த பக்தர்களில் ஒருவர். 1912ம் ஆண்டு மேகா மறைந்த நேரம் பாபா கண்ணீர் விட்டு அழுதார். அவன் உடலை தடவிக் கொடுத்து அவனது பிரேத ஊர்வலத்தில் சிறிது தூரம் கூடவே சென்றாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் (ஒOஎ)என்பவர் பாபாவிற்கு ஆரத்திகாட்ட அனுமதிக்கப்பட்டார். பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.
சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர் பீமா முக்கியமானவர். 1911 ம் ஆண்டு முதன் முதலாக சீரடிக்கு வந்து பாபாவின் கமல பாதங்களில் சரணடைந்தார். பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்தி பாடல்களை இயற்றினார். பீஷ்மா எல்லா ஆரத்தி பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார். அதன் படியே இன்று ஆரத்தி பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது. சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில் 16 பாபாவை போற்றி பாடப்பட்டவை. மீதி 14 பாடல்கள் மகாராஷ்ட்ர மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள். இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்களின் அடியவர்களால் இயற்றப்பட்டவை. உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் 2 பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தனஸ்வாமியின் ஒரு பாடல். மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷசூக்தத்திலிருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்ட்ர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.
பாபாவைப் போற்றிபாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜாலும். இயற்றப்பட்டவை. இந்தப் பன்னிரெண்டு (9+3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவுடன் கூடப் பழகிய ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள். 1905ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார். பாபா இந்தப் பாடலை, உதிபாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார். பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்றபாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல். மொத்தமுள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்க்குதத்திலும் மற்றொன்று இந்தியும் சம்ஸ்க்குதமும் கலந்தது. தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் சீரடி சாயி பாபாவின் பக்தர்கள் இந்த ஆரத்திப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் வரிக்குவரி கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று மொழி பாடல்களை அவற்றின் அர்த்தம் தெரிந்து பாடினால் அவற்றின் மீது ஒரு ஈடுபாடுவரும், இந்தக் காரணங்களுக்காகவே ஒவ்வொரு பாடலின் அர்த்தத்தையும் வரிக்கு வரி கொடுத்துள்ளோம்.
சீரடி பாபாவின் ஆரத்தி பாடல்கள் நாட்டுப்புற மெட்டுக்களில், எளிய நடையில், இனிமையான இசையில் அமைக்கப்பட்டுள்ளன. பாமரமக்களும் உணர்வு பூர்வமாக ஒன்றிப் பாடும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடல்கள் மனத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுப்பது மட்டுமின்றி மக்களின் ஆன்மீக உணர்வினை தூண்டுவதாகவும், சீரடி பாபாவுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிடவும் உதவுகின்றன.
ஆரத்தி - ஒரு அறிமுகம்
ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர் வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது. ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர் மற்றும் துறவிகளின் உருவச்சிலைமுன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனை, ஆரத்தி எனப்படும். பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்கவிட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ் ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும் மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள் ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.
இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா, கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குக் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.
இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. எனவே எப்பொழுது இந்த ஆரத்தி காட்டும் முறை ஆரம்பித்தது என்று யாருக்கும் தெரியாது. பூசைகள் முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறலாம். 1909ம் ஆண்டு தான் முதன்முதலாக, பாபாவின் முன்பு மக்கள் ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டது. முதலில் நண்பகல் ஆரத்தி மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி சாவடி ஊர்வலம் ஆரம்பித்தவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது. துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி) ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.
பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட, பிறகு சம்மதித்தார். முதன் முதலாக நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவர். இவர் ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம். பாபா நேசித்த பக்தர்களில் ஒருவர். 1912ம் ஆண்டு மேகா மறைந்த நேரம் பாபா கண்ணீர் விட்டு அழுதார். அவன் உடலை தடவிக் கொடுத்து அவனது பிரேத ஊர்வலத்தில் சிறிது தூரம் கூடவே சென்றாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் (ஒOஎ)என்பவர் பாபாவிற்கு ஆரத்திகாட்ட அனுமதிக்கப்பட்டார். பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.
சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர் பீமா முக்கியமானவர். 1911 ம் ஆண்டு முதன் முதலாக சீரடிக்கு வந்து பாபாவின் கமல பாதங்களில் சரணடைந்தார். பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்தி பாடல்களை இயற்றினார். பீஷ்மா எல்லா ஆரத்தி பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார். அதன் படியே இன்று ஆரத்தி பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது. சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில் 16 பாபாவை போற்றி பாடப்பட்டவை. மீதி 14 பாடல்கள் மகாராஷ்ட்ர மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள். இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்களின் அடியவர்களால் இயற்றப்பட்டவை. உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் 2 பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தனஸ்வாமியின் ஒரு பாடல். மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷசூக்தத்திலிருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்ட்ர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.
பாபாவைப் போற்றிபாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜாலும். இயற்றப்பட்டவை. இந்தப் பன்னிரெண்டு (9+3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவுடன் கூடப் பழகிய ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள். 1905ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார். பாபா இந்தப் பாடலை, உதிபாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார். பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்றபாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல். மொத்தமுள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்க்குதத்திலும் மற்றொன்று இந்தியும் சம்ஸ்க்குதமும் கலந்தது. தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் சீரடி சாயி பாபாவின் பக்தர்கள் இந்த ஆரத்திப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் வரிக்குவரி கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று மொழி பாடல்களை அவற்றின் அர்த்தம் தெரிந்து பாடினால் அவற்றின் மீது ஒரு ஈடுபாடுவரும், இந்தக் காரணங்களுக்காகவே ஒவ்வொரு பாடலின் அர்த்தத்தையும் வரிக்கு வரி கொடுத்துள்ளோம்.
சீரடி பாபாவின் ஆரத்தி பாடல்கள் நாட்டுப்புற மெட்டுக்களில், எளிய நடையில், இனிமையான இசையில் அமைக்கப்பட்டுள்ளன. பாமரமக்களும் உணர்வு பூர்வமாக ஒன்றிப் பாடும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடல்கள் மனத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுப்பது மட்டுமின்றி மக்களின் ஆன்மீக உணர்வினை தூண்டுவதாகவும், சீரடி பாபாவுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிடவும் உதவுகின்றன.