என்னை இன்று வரைக்கும் பாதிக்கும் ஒரே நபரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு... முக நூல்ல அவரப் பத்தி நான் போட்ட சில பதிவுகள்..
1
இது மருத்துவத் தோழி Murugeswari Madurai அவர்களுக்குச் சமர்ப்பணம்...
ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.. எம்.ஜி.ஆரால் சந்திர பாபுவின் வாழ்க்கை அஸ்தமனம் ஆனதாக... நீங்கள் இன்னொருவரைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.. S.A.அசோகன்! அவரும் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்ததால் நாசமானதாகக் கதையுண்டு...
நான் கேட்ட,றிந்த வரையில் சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..நான் முதன் முதலில் என் ஏழு வயதில் பார்த்த முதல் சினிமா "நீரும் நெருப்பும்" அப்பவே எனக்கு எம்.ஜி.ஆரை பிடித்து விட்டது... வக்காலி.. எல்லாரையும் காப்பாத்த எங்க இருந்தாலும் சமயத்துக்கு 'டாண்'ணு வந்துடறாரே? பதினஞ்சு வயசுல ஒம்பதாவது படிக்கறதா நடிக்கறப்ப 1979ல அவரப் பாக்கற பாக்கியம் என்.சி.சி.ல இருந்ததால கெடைச்சது..(ஜனவரி 5ஆம் தேதி பதிவைப் பார்க்கவும்)
அப்ப இருந்து ரசிகனா இல்ல... வெறியனாவே மாறினேன்... முந்தா நேத்துக் கூட நாடோடி மன்னனை அறுபதாவது தடவையா யூ டுயூப்ல பாத்தேன்
ஊடு பூரா எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரோட படம் தான்...முப்பது வயசுக்கு மேல தான் ஒரு நிதானத்துக்கு வந்தேன்...ரசிக்கத் தக்கது எதுவா இருந்தாலும் ரசிக்கறதே ரசனைங்கறதப் புரிஞ்சுக்கிட்டேன்..அது தில்லானா மோகனாம்பாள் படம் பாத்த பின்னால வந்த நிதானம்... கலைமணி என்ற புனைப் பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இரண்டு பாகங்களாக ஏறக்குறைய 1400 பக்கங்களில் எழுதியது..அதை ஏ.பி.நாகராஜன் அவர்கள் நாவலின் தன்மையை துளியும் சிதைக்காமல் படமாக்கியது மிக மிக அற்புதம்..
சிவாஜி என்னங்க சிவாஜி.. ஏ.வி.எம் ராஜன்ல இருந்து மனோரமா வரைக்கும் அந்தப் பாத்திரமாவே மாறி இருப்பாங்க... அவ்வளவு ஏன்?தவில் வித்வானாக நடிக்கும் டி.எஸ்.பாலையா தவில் வாசிக்கும் போது அதுக்கு ஏத்தாப்ல அவரோட மார்புத் தசையும் ஆடும்..
இத ஏஞ் சொல்றேன்னா ரசிக்கத் தக்கத ரசிப்பதே ரசனைங்கற கட்டத்துக்கு வந்த பின்னால எல்லாரையும் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சாலும் எம்.ஜி.ஆரத் தாண்ட முடியல... அதுக்குக் காரணம் அவரோட மனித நேயம்.. பெண்கள் மீது அவர் வைத்திருந்த மதிப்பு !
மத்தவங்க படத்துல நடிக்கற கதா நாயகிங்க,துணை நடிகைங்களுக்கு பாலியல் தொல்லை வரலாம்... ஆனா, எம்.ஜி.ஆர் படத்துல வராது.. வந்ததா அவர் காதுக்குப் போச்சுன்னா அந்தத் தயாரிப்பாளன் செத்தான்.. அதான் அவர்!!!!!
சந்திரபாபு விசயத்தில் நடந்ததும் அதுவே.. இதை வசனகர்த்தா முருகதாஸ்,எம்.ஜி.ஆருடன் எப்போதுமிருந்த ரவீந்தர் போன்றோருடன் நேரிடையாவே பேசி இருக்கிறேன்..நடந்தது இது தான்..மாடி வீட்டு ஏழை படத்தின் தயாரிப்பாளரும்,இயக்குனரும் சந்திர பாபு.. ஆனால், பைனான்சியர் இருவர்..
1
இது மருத்துவத் தோழி Murugeswari Madurai அவர்களுக்குச் சமர்ப்பணம்...
ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.. எம்.ஜி.ஆரால் சந்திர பாபுவின் வாழ்க்கை அஸ்தமனம் ஆனதாக... நீங்கள் இன்னொருவரைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.. S.A.அசோகன்! அவரும் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்ததால் நாசமானதாகக் கதையுண்டு...
நான் கேட்ட,றிந்த வரையில் சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..நான் முதன் முதலில் என் ஏழு வயதில் பார்த்த முதல் சினிமா "நீரும் நெருப்பும்" அப்பவே எனக்கு எம்.ஜி.ஆரை பிடித்து விட்டது... வக்காலி.. எல்லாரையும் காப்பாத்த எங்க இருந்தாலும் சமயத்துக்கு 'டாண்'ணு வந்துடறாரே? பதினஞ்சு வயசுல ஒம்பதாவது படிக்கறதா நடிக்கறப்ப 1979ல அவரப் பாக்கற பாக்கியம் என்.சி.சி.ல இருந்ததால கெடைச்சது..(ஜனவரி 5ஆம் தேதி பதிவைப் பார்க்கவும்)
அப்ப இருந்து ரசிகனா இல்ல... வெறியனாவே மாறினேன்... முந்தா நேத்துக் கூட நாடோடி மன்னனை அறுபதாவது தடவையா யூ டுயூப்ல பாத்தேன்
ஊடு பூரா எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரோட படம் தான்...முப்பது வயசுக்கு மேல தான் ஒரு நிதானத்துக்கு வந்தேன்...ரசிக்கத் தக்கது எதுவா இருந்தாலும் ரசிக்கறதே ரசனைங்கறதப் புரிஞ்சுக்கிட்டேன்..அது தில்லானா மோகனாம்பாள் படம் பாத்த பின்னால வந்த நிதானம்... கலைமணி என்ற புனைப் பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இரண்டு பாகங்களாக ஏறக்குறைய 1400 பக்கங்களில் எழுதியது..அதை ஏ.பி.நாகராஜன் அவர்கள் நாவலின் தன்மையை துளியும் சிதைக்காமல் படமாக்கியது மிக மிக அற்புதம்..
சிவாஜி என்னங்க சிவாஜி.. ஏ.வி.எம் ராஜன்ல இருந்து மனோரமா வரைக்கும் அந்தப் பாத்திரமாவே மாறி இருப்பாங்க... அவ்வளவு ஏன்?தவில் வித்வானாக நடிக்கும் டி.எஸ்.பாலையா தவில் வாசிக்கும் போது அதுக்கு ஏத்தாப்ல அவரோட மார்புத் தசையும் ஆடும்..
இத ஏஞ் சொல்றேன்னா ரசிக்கத் தக்கத ரசிப்பதே ரசனைங்கற கட்டத்துக்கு வந்த பின்னால எல்லாரையும் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சாலும் எம்.ஜி.ஆரத் தாண்ட முடியல... அதுக்குக் காரணம் அவரோட மனித நேயம்.. பெண்கள் மீது அவர் வைத்திருந்த மதிப்பு !
மத்தவங்க படத்துல நடிக்கற கதா நாயகிங்க,துணை நடிகைங்களுக்கு பாலியல் தொல்லை வரலாம்... ஆனா, எம்.ஜி.ஆர் படத்துல வராது.. வந்ததா அவர் காதுக்குப் போச்சுன்னா அந்தத் தயாரிப்பாளன் செத்தான்.. அதான் அவர்!!!!!
சந்திரபாபு விசயத்தில் நடந்ததும் அதுவே.. இதை வசனகர்த்தா முருகதாஸ்,எம்.ஜி.ஆருடன் எப்போதுமிருந்த ரவீந்தர் போன்றோருடன் நேரிடையாவே பேசி இருக்கிறேன்..நடந்தது இது தான்..மாடி வீட்டு ஏழை படத்தின் தயாரிப்பாளரும்,இயக்குனரும் சந்திர பாபு.. ஆனால், பைனான்சியர் இருவர்..