சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....
நாங்கலாம் அப்பவே அப்படி-- 10 final
ராகேஷிடம் வம்பளந்துவிட்டு திரும்புகையில் கௌதம் அங்கே இருப்பான் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் நின்றவள் பின் அவனை கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு செல்ல திரும்பினாள்.
"நாச்சியார்" என விளித்தான். முதல் முறை அவள் பேர் சொல்லி அழைக்கிறான். என்ன என்பதை போல பார்க்க
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்"
அவள் ஏதோ சொல்ல வர "நோ சொல்லாத இன்னைக்கு பேசியே ஆகனும்." விடாப்பிடியாய் நின்றான். அமைதியாக தோட்டத்திற்க்கு சென்றவளை இவன் பின்தொடர அவர்களை நிவி தொடர்ந்தாள்.
நிவியும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். இந்த வீட்டில் நாச்சியாருக்கு இருக்கும் செல்வாக்கை. நான் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய இடமது, இந்த பட்டிகாட்டிற்க்கு என்ன தெரியும். மேலும் நெருப்பை மூட்டுவது போல் கௌதமின் பார்வை இவளையே சுற்றி சுற்றி வருகிறது.
அது உணர்த்தும் செய்திதான் அவ்வளவு உவப்பானதாக இல்லை. கருணாகரன் வேறு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கௌதமின் மனதில் இடம் பிடிக்குமாறு கூறிதான் விட்டு சென்றார்.
ஆனால் எங்கே இவன் மீனாக நழுவி விடுகிறானே. முதலில் இவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும். அதுவும் அவளே தலைதெறிக்க ஓட வேண்டும்.
என்ன செய்யலாம் என பலவாறு யோசிக்கிறாள் ஆனால் ஒரு வழியும் கிடைக்கவில்லை. அதைவிட மாட்டிக்கொண்டால் தன்னுடைய கதி அதோகதிதான்.
அதனால் பொறுமையாக சந்தர்ப்பத்திர்க்காக காத்திருக்கிறாள். மறைவான ஒரு இடத்தில நின்று நடப்பதை கவனித்தாள்.
நாச்சியாரின் கைவண்ணத்தில் தோட்டம் இன்னும் மிளிர்ந்தது. பல வகையான மலர் செடிகள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.
தேவலோகத்தை போல எங்கும் பூக்களின் வாசம். ஆழ்ந்து சுவாசித்தபடி, "தோட்டம் அழகா இருக்கு, அம்மா இருந்தப்ப கூட இந்த மாதிரி இல்ல" அவன் அம்மாவை பற்றி பேசவும் வருந்துகிறானோ என பார்த்தாள். இல்லை அவன் இயல்பாகவே இருந்தான்.
இன்னும் சற்று தள்ளி இருந்த வேப்ப மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டார்கள். இன்று இவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் கௌதம் வந்திருந்தான்.
எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஒருவாறு பேச ஆரம்பித்தான்.
"சாரி அன்னைக்கு .." என தடுமாறியவன் தலையை கோதியவாறே
"அது அந்த இடத்துல...நான் வேணுன்னு பண்ணல..ஆனா தப்புன்னு இப்ப புரியுது. "
அவள் புருவத்தை சுருக்கி யோசிக்க,
"அன்னைக்கு மண்டபத்துல நடந்தது, அப்பறம் அருவிக்கரையில் நடந்தது, தப்புதான் ஆனா உன்னை பார்த்தா என்னையே மறந்துடறேன். என்னையே மறக்கறப்ப சுத்தி என்ன இருக்குன்னு எப்படி தெரியும்"
அவனை ஒரு பார்வை பார்த்தவள் "இதத்தான் சொல்ல வந்தீங்கன்னா நான் கெளம்பறேன்" என செல்ல பார்க்க,
அவள் கையை,பிடித்து நிறுத்தினான் "ப்ச் என்ன உன் பிரச்சனை , அதான் சாரி கேக்கறேன்ல"
"நீங்க சாரி கேட்டா சரியாயிடுமா அன்னைக்கு மண்டபத்துல அவன் உளறி வச்சிருந்தா என்னோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா! என் குடும்பத்த, ஊர் ஜனங்கள எந்த முகத்த வச்சி பார்ப்பேன்.
நீங்க ஆம்பிள உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவன் ஆசிட் ஊத்த வந்தது கூட பெருசா தெரியல, ஆனா இத சொல்ல வரும்போது வேலன் அத்தான் மட்டும் அடிக்கலைன்னா!" என இத்தனைநாள் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்ல திரும்பியவளை,
"ஆனா உனக்கு பிடிக்காத மாதிரியும் தெரியலயே"
இப்போது மானசீகமாக தலையில் அடித்துக் கொள்வது அவளது முறையாயிற்று, வெக்கம் கெட்ட மனசு, சொன்ன பேச்ச கேட்டிருந்தா இன்னைக்கு இந்த அவமானம் இல்லையா.
அவனது பேச்சால் சிவந்த முகத்தை எங்காவது புதைத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.
"என்ன பேச முடியலயா! ஏன்னு நான் சொல்லட்டா"
என அவளை நெருங்கியவன் காதோரமாய்
"நீ என்னை விரும்பற "
என ஒவ்வொரு வார்த்தையாய் கூற அவன் மூச்சுக் காற்று பட்டதில் கழுத்து முடிகள் சிலிர்த்து கொண்டு நின்றது.
நடுங்கிய கைகள் அதன் போக்கில் தாவணியை திருகி கொண்டிருந்தது. மேலும் நெருங்கி இடுப்போடு சேர்த்தனைத்தவன்
"என்ன சரியா சொன்னனா பம்ப்கின்" அவனது கிண்டலான அழைப்பில் கலைந்தவள்
"இ...ல்ல நீ..ங்க தப்..பு தப்பா பேசறீங்க, செய்யறீங்க"
அவனது கைகளை விலக்க பார்க்க
" எது முத்தம் கொடுத்தத சொல்றியா, அது தப்பில்லடா அது நான் உனக்கு கொடுக்கற பாசம்"
அவனை நோக்கி திரும்பியவள் "அய்ய போதுமே உங்க பாசம் என்ன விடுங்க, இல்ல..."
இப்போது அவன் கையணைப்பிலேயே சரளமாக பேச வந்தது.
"இல்ல...இல்லைனா என்ன பண்ணுவ பாட்டிய கூப்பிடுவியா?" இவனும் பதிலுக்கு சீண்ட
"நான் ஏன் பாட்டிய கூப்பிட போறேன் அதோ அங்க மறைஞ்சு நின்னு பாக்கறாளே உங்க மாமா பெத்த மரவள்ளி கிழங்கு அவள கூப்பிடறேன்"
"என்ன? " என்று அதிர்ச்சியாகி டக்கென்று கைகளை விலக்கியவன்
"ஏன்டி உன்னை எங்கயாவது தனியா தீவுக்குதான் தள்ளிட்டு போகனும் போல, எந்நேரமும் யாராவது ஒருத்தர் பார்த்துட்டே இருக்காங்க,
"எங்க அவ"
என்று நிவியை தேட,
"ஹலோ அவ என்னை தேடி வரல, நீங்க என் பின்னாடி வரத பார்த்து அவ உங்க பின்னாடி வேவு பாக்க வந்திருப்பா" என சரியாக கணித்தாள்.
"ஆனா எனக்கு அந்த மரவள்ளி கிழங்கவிட இந்த சக்கரவள்ளி கிழங்கதானே புடிச்சிருக்கு"
நாச்சியாருக்கு கோபமெல்லால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இப்போது இருந்ததெல்லாம் காதல் காதல் காதல் மட்டுமே.
அவன் கண்களிலே நங்கூரத்தை பாய்ச்சி ,அவன் காதலின் ஆழத்தை அறிய முயன்றாள். இருவரின் பார்வைகளும் பின்னி பினைந்து சதிராட்டம் போட, அதன் தாக்கத்தை தாள முடியாமல் நங்கையவளே முதலில் பார்வையை விலக்கினாள்.
ஏற்கனவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மங்கையின் நிறம் இப்போது இன்னும் அடர்ந்த நிறத்தில் வர்ணஜாலம் காட்டியது.
"ஹேய் என்னடி இப்படி கலர் மோட் மாத்தற" என வியந்து அவள் கன்னத்தை தடவியவாறு கேட்டான்.
அவன் கையை தட்டி விட்டவள் "ஒண்ணுமில்ல என்று முனகியவாறு கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள்"
அவள் செய்யும் செயல்களை ரசனையாக பார்த்தவாறு நின்றிருந்தான்.
இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிவியின் மனதில் எரிமலையே வெடித்தது... இவ்வளவு நெருக்கத்தை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. சொத்தாசை இருந்த இடத்தை இப்போது போட்டி பிடித்துக் கொண்டது.
நாங்கலாம் அப்பவே அப்படி-- 10 final
ராகேஷிடம் வம்பளந்துவிட்டு திரும்புகையில் கௌதம் அங்கே இருப்பான் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் நின்றவள் பின் அவனை கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு செல்ல திரும்பினாள்.
"நாச்சியார்" என விளித்தான். முதல் முறை அவள் பேர் சொல்லி அழைக்கிறான். என்ன என்பதை போல பார்க்க
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்"
அவள் ஏதோ சொல்ல வர "நோ சொல்லாத இன்னைக்கு பேசியே ஆகனும்." விடாப்பிடியாய் நின்றான். அமைதியாக தோட்டத்திற்க்கு சென்றவளை இவன் பின்தொடர அவர்களை நிவி தொடர்ந்தாள்.
நிவியும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். இந்த வீட்டில் நாச்சியாருக்கு இருக்கும் செல்வாக்கை. நான் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய இடமது, இந்த பட்டிகாட்டிற்க்கு என்ன தெரியும். மேலும் நெருப்பை மூட்டுவது போல் கௌதமின் பார்வை இவளையே சுற்றி சுற்றி வருகிறது.
அது உணர்த்தும் செய்திதான் அவ்வளவு உவப்பானதாக இல்லை. கருணாகரன் வேறு இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கௌதமின் மனதில் இடம் பிடிக்குமாறு கூறிதான் விட்டு சென்றார்.
ஆனால் எங்கே இவன் மீனாக நழுவி விடுகிறானே. முதலில் இவளை இந்த வீட்டை விட்டு துரத்த வேண்டும். அதுவும் அவளே தலைதெறிக்க ஓட வேண்டும்.
என்ன செய்யலாம் என பலவாறு யோசிக்கிறாள் ஆனால் ஒரு வழியும் கிடைக்கவில்லை. அதைவிட மாட்டிக்கொண்டால் தன்னுடைய கதி அதோகதிதான்.
அதனால் பொறுமையாக சந்தர்ப்பத்திர்க்காக காத்திருக்கிறாள். மறைவான ஒரு இடத்தில நின்று நடப்பதை கவனித்தாள்.
நாச்சியாரின் கைவண்ணத்தில் தோட்டம் இன்னும் மிளிர்ந்தது. பல வகையான மலர் செடிகள் பூத்துக் குலுங்கி கொண்டிருந்தன.
தேவலோகத்தை போல எங்கும் பூக்களின் வாசம். ஆழ்ந்து சுவாசித்தபடி, "தோட்டம் அழகா இருக்கு, அம்மா இருந்தப்ப கூட இந்த மாதிரி இல்ல" அவன் அம்மாவை பற்றி பேசவும் வருந்துகிறானோ என பார்த்தாள். இல்லை அவன் இயல்பாகவே இருந்தான்.
இன்னும் சற்று தள்ளி இருந்த வேப்ப மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டார்கள். இன்று இவளிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் கௌதம் வந்திருந்தான்.
எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. ஒருவாறு பேச ஆரம்பித்தான்.
"சாரி அன்னைக்கு .." என தடுமாறியவன் தலையை கோதியவாறே
"அது அந்த இடத்துல...நான் வேணுன்னு பண்ணல..ஆனா தப்புன்னு இப்ப புரியுது. "
அவள் புருவத்தை சுருக்கி யோசிக்க,
"அன்னைக்கு மண்டபத்துல நடந்தது, அப்பறம் அருவிக்கரையில் நடந்தது, தப்புதான் ஆனா உன்னை பார்த்தா என்னையே மறந்துடறேன். என்னையே மறக்கறப்ப சுத்தி என்ன இருக்குன்னு எப்படி தெரியும்"
அவனை ஒரு பார்வை பார்த்தவள் "இதத்தான் சொல்ல வந்தீங்கன்னா நான் கெளம்பறேன்" என செல்ல பார்க்க,
அவள் கையை,பிடித்து நிறுத்தினான் "ப்ச் என்ன உன் பிரச்சனை , அதான் சாரி கேக்கறேன்ல"
"நீங்க சாரி கேட்டா சரியாயிடுமா அன்னைக்கு மண்டபத்துல அவன் உளறி வச்சிருந்தா என்னோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா! என் குடும்பத்த, ஊர் ஜனங்கள எந்த முகத்த வச்சி பார்ப்பேன்.
நீங்க ஆம்பிள உங்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவன் ஆசிட் ஊத்த வந்தது கூட பெருசா தெரியல, ஆனா இத சொல்ல வரும்போது வேலன் அத்தான் மட்டும் அடிக்கலைன்னா!" என இத்தனைநாள் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்ல திரும்பியவளை,
"ஆனா உனக்கு பிடிக்காத மாதிரியும் தெரியலயே"
இப்போது மானசீகமாக தலையில் அடித்துக் கொள்வது அவளது முறையாயிற்று, வெக்கம் கெட்ட மனசு, சொன்ன பேச்ச கேட்டிருந்தா இன்னைக்கு இந்த அவமானம் இல்லையா.
அவனது பேச்சால் சிவந்த முகத்தை எங்காவது புதைத்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.
"என்ன பேச முடியலயா! ஏன்னு நான் சொல்லட்டா"
என அவளை நெருங்கியவன் காதோரமாய்
"நீ என்னை விரும்பற "
என ஒவ்வொரு வார்த்தையாய் கூற அவன் மூச்சுக் காற்று பட்டதில் கழுத்து முடிகள் சிலிர்த்து கொண்டு நின்றது.
நடுங்கிய கைகள் அதன் போக்கில் தாவணியை திருகி கொண்டிருந்தது. மேலும் நெருங்கி இடுப்போடு சேர்த்தனைத்தவன்
"என்ன சரியா சொன்னனா பம்ப்கின்" அவனது கிண்டலான அழைப்பில் கலைந்தவள்
"இ...ல்ல நீ..ங்க தப்..பு தப்பா பேசறீங்க, செய்யறீங்க"
அவனது கைகளை விலக்க பார்க்க
" எது முத்தம் கொடுத்தத சொல்றியா, அது தப்பில்லடா அது நான் உனக்கு கொடுக்கற பாசம்"
அவனை நோக்கி திரும்பியவள் "அய்ய போதுமே உங்க பாசம் என்ன விடுங்க, இல்ல..."
இப்போது அவன் கையணைப்பிலேயே சரளமாக பேச வந்தது.
"இல்ல...இல்லைனா என்ன பண்ணுவ பாட்டிய கூப்பிடுவியா?" இவனும் பதிலுக்கு சீண்ட
"நான் ஏன் பாட்டிய கூப்பிட போறேன் அதோ அங்க மறைஞ்சு நின்னு பாக்கறாளே உங்க மாமா பெத்த மரவள்ளி கிழங்கு அவள கூப்பிடறேன்"
"என்ன? " என்று அதிர்ச்சியாகி டக்கென்று கைகளை விலக்கியவன்
"ஏன்டி உன்னை எங்கயாவது தனியா தீவுக்குதான் தள்ளிட்டு போகனும் போல, எந்நேரமும் யாராவது ஒருத்தர் பார்த்துட்டே இருக்காங்க,
"எங்க அவ"
என்று நிவியை தேட,
"ஹலோ அவ என்னை தேடி வரல, நீங்க என் பின்னாடி வரத பார்த்து அவ உங்க பின்னாடி வேவு பாக்க வந்திருப்பா" என சரியாக கணித்தாள்.
"ஆனா எனக்கு அந்த மரவள்ளி கிழங்கவிட இந்த சக்கரவள்ளி கிழங்கதானே புடிச்சிருக்கு"
நாச்சியாருக்கு கோபமெல்லால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இப்போது இருந்ததெல்லாம் காதல் காதல் காதல் மட்டுமே.
அவன் கண்களிலே நங்கூரத்தை பாய்ச்சி ,அவன் காதலின் ஆழத்தை அறிய முயன்றாள். இருவரின் பார்வைகளும் பின்னி பினைந்து சதிராட்டம் போட, அதன் தாக்கத்தை தாள முடியாமல் நங்கையவளே முதலில் பார்வையை விலக்கினாள்.
ஏற்கனவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் மங்கையின் நிறம் இப்போது இன்னும் அடர்ந்த நிறத்தில் வர்ணஜாலம் காட்டியது.
"ஹேய் என்னடி இப்படி கலர் மோட் மாத்தற" என வியந்து அவள் கன்னத்தை தடவியவாறு கேட்டான்.
அவன் கையை தட்டி விட்டவள் "ஒண்ணுமில்ல என்று முனகியவாறு கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள்"
அவள் செய்யும் செயல்களை ரசனையாக பார்த்தவாறு நின்றிருந்தான்.
இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிவியின் மனதில் எரிமலையே வெடித்தது... இவ்வளவு நெருக்கத்தை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. சொத்தாசை இருந்த இடத்தை இப்போது போட்டி பிடித்துக் கொண்டது.
Last edited: