Enakku romba piditha Bharathiyar pattu idhu.வணக்கம் தோழமைகளே, கீதாஞ்சலி ஆறாவது பதிவு வந்தாச்சு. இந்தத் தடவைக் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேனா??
எனக்குத் தாலாட்டு பாட்டுங்கவும் இந்தப் பாரதியார் பாட்டு தான் தோனுச்சு. எங்க அம்மாச்சி நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ இதைத் தான் பாடுவாங்க. அதால எனக்கு தாலாட்டுங்கவும் இதை விட சிறப்பா வேற எதுவும் தோனலை. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க.
இந்தப் பாட்டு பாரதியாரோட 'கண்ணன் பாட்டு' தொகுப்பில் வரும். ஆனா இது கண்ணனுக்காகப் பாடிய பாட்டு இல்லை. அவன் தங்கை பராசக்திக்காக எழுதிய பாடல் அப்படின்னு தான் பாரதியாரோட குறிப்புகள்ல இருக்கு. உங்களுக்காக இந்தப் பாடலோட லிங்க் இதோ…
இதுவரை லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் மூலம் என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றிகள் பலப்பல. அடுத்தப் பதிவு புதன்கிழமை அன்று. வாசகர்கள் அனைவருக்கும் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.