J
Jeyabharathi
Guest
பச்சை கம்பளம் விரித்த
கழனிகள்..
ஏரியில் நாட்டியமாடும்
நீரலைகள்..
வழியெங்கும் வரவேற்கும்
தருவினங்கள்...
படுக்க இடமின்றி
வீடு நிறைத்த
அறுவடை வைரங்கள்..
அத்தனையும்
நேற்றைய கனவின்
காட்சிப்பிழையாய்..
வான்பொழி மெல்லருவியால்
தெருவெங்கும் ஓடும்
குருநதிகள் கூடியதால்
கொள்ளளவு கூடி
கரையுடைந்த கம்மாய்கள்
இன்று
கல்லூன்றிய மனைகளாய்..
ஓடை பெருக்கெடுத்த
தெருக்களவை ,காரைபூசி
நீர் உறிஞ்சா நோயாளியாய்...
விலையான வயலதில்
விளை எல்லாம் மனையானால்
வளைக்கெங்கே வலையிட..
கவலையில் வயலெலி..
கள்ளனாய் வீடுபுகுந்து
கம்படியில் உயிர் துறக்கும்
வயலெலி விழுங்கி..
வயலில் வானந்தோண்டி
முளைவிட்ட அடுக்ககத்தில்
வயலும் வரப்பும்
வரைபடத்தில்
அலங்காரமாய்
பருத்தி விதைத்த
நன்செய் நிலத்தில்
நட்ட மின்செய் பயிரில்
கடனடைத்த உழவன்...
வயிறு வளர்க்க
பஞ்சாலை கூலியாய்..
பிரசவ வயிறென
பிதுங்கி நிரம்பிய குதிருள்
ஆக்கிரமித்த நூலாம்படையுடன்
படுக்க போரிடும்
ஒற்றை பூனை..
அறை நிறைத்த மிளகாயின்
நெடிமட்டும் மிச்சமாய்..
பேராசை மனத்தால்
மங்கிய மருதமெங்கும்
உழவனவன் விழியருவியில்
பூத்த பாலைப்பூ...
வயலாடிய உழவனுக்கும்
விலைகூடி அலைமோதும்
உண்பவனுக்கும்
களவாடும் இடையிலொருவனால்
கனமாகும் வட்டியில்
வாழ்வது கனவாகி
துறக்கும் உயிர்கள்
தீரா தீர்வுகளாய்....
கழனிகள்..
ஏரியில் நாட்டியமாடும்
நீரலைகள்..
வழியெங்கும் வரவேற்கும்
தருவினங்கள்...
படுக்க இடமின்றி
வீடு நிறைத்த
அறுவடை வைரங்கள்..
அத்தனையும்
நேற்றைய கனவின்
காட்சிப்பிழையாய்..
வான்பொழி மெல்லருவியால்
தெருவெங்கும் ஓடும்
குருநதிகள் கூடியதால்
கொள்ளளவு கூடி
கரையுடைந்த கம்மாய்கள்
இன்று
கல்லூன்றிய மனைகளாய்..
ஓடை பெருக்கெடுத்த
தெருக்களவை ,காரைபூசி
நீர் உறிஞ்சா நோயாளியாய்...
விலையான வயலதில்
விளை எல்லாம் மனையானால்
வளைக்கெங்கே வலையிட..
கவலையில் வயலெலி..
கள்ளனாய் வீடுபுகுந்து
கம்படியில் உயிர் துறக்கும்
வயலெலி விழுங்கி..
வயலில் வானந்தோண்டி
முளைவிட்ட அடுக்ககத்தில்
வயலும் வரப்பும்
வரைபடத்தில்
அலங்காரமாய்
பருத்தி விதைத்த
நன்செய் நிலத்தில்
நட்ட மின்செய் பயிரில்
கடனடைத்த உழவன்...
வயிறு வளர்க்க
பஞ்சாலை கூலியாய்..
பிரசவ வயிறென
பிதுங்கி நிரம்பிய குதிருள்
ஆக்கிரமித்த நூலாம்படையுடன்
படுக்க போரிடும்
ஒற்றை பூனை..
அறை நிறைத்த மிளகாயின்
நெடிமட்டும் மிச்சமாய்..
பேராசை மனத்தால்
மங்கிய மருதமெங்கும்
உழவனவன் விழியருவியில்
பூத்த பாலைப்பூ...
வயலாடிய உழவனுக்கும்
விலைகூடி அலைமோதும்
உண்பவனுக்கும்
களவாடும் இடையிலொருவனால்
கனமாகும் வட்டியில்
வாழ்வது கனவாகி
துறக்கும் உயிர்கள்
தீரா தீர்வுகளாய்....