ரகு : “ஹாய் ஏஞ்சல்”
வதனி : “என்ன?”
ரகு : “சாப்டாச்சா...”
வதனி : “ம்.... நீங்க”
ரகு : “ஆச்சு....ம்ம்.... என்ன புடிச்சு தான கல்யாணம் பண்ண....”
வதனி : “ம்...”
ரகு : “ம்ம தவிர வேற வார்த்த பேசற ஐடியா இல்லயா?”
வதனி : ‘கடவுளே என்ன சொல்ல’...... “சொல்லுங்க”
ரகு : “நீ தான் சொல்லணும்”
வதனி : “என்ன சொல்ல?”
ரகு : “அப்பத்தா கம்பெல் பண்ணாங்களா?”
வதனி : “இல்ல”
ரகு : “நீ சரினு சொன்னது.... எனக்கு இன்னும் நம்ப முடியல”
வதனி : “ஏன்?”
ரகு : “நீயே யோசி”
வதனி : “நீங்களே சொல்லிருங்க....”
ரகு : “கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, அதற்கு அப்புறமும் சரி,.....என்னைய நீ கண்டுக்கவே இல்லல.... அதான்...”
வதனி : “மாமா பையன்னு மட்டும் யோசிச்ச எங்கிட்ட...அல்ரெடி மாரேஜ் வேற பொண்ணோட ஃபிக்ஸ் ஆகியிருந்த உங்கள கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா..... நான் என்ன செய்வேன்.?”
ரகு : “அதுக்காக........ ரெண்டரை வருஷமா?”
வதனி : “இனி இவர் தான் உன் ஹஸ்பெண்ட்னு சொன்னவுடனே, ஏத்துக்கற மாதிரி லைஃப் ஸ்டைல்ல .... இப்போ நாம யாரும் வாழல.... அதுக்கு தான் அம்மாச்சிகிட்ட டைம் கேட்டேன்.... ஆனா அது இவ்வளவு நாளாகும்னு அப்ப எனக்கு தெரியாது.....”
ரகு : “அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?”
வதனி : “ஊருக்கு வந்து, மாமாகிட்ட பேசிட்டு அப்றமா முடிவு பண்ணலாம்னு நினச்சேன்”
ரகு : “அப்பவும் நான் உங்கண்ணுக்கு தெரியல?”
வதனி : “ஐயோ, அப்டில்ல.... பெரியவங்க கிட்ட கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும்..... நீயா எதுவும் டிசைட் பண்ணக்கூடாதுன்னு அம்மாதான் சொன்னாங்க.... அதனாலதான்....”
ரகு : “சரி வேற என்ன சொன்னாங்க?”
வதனி : “அவங்க நிறய சொல்லிட்டே இருப்பாங்க.... நீங்க வேற எத கேக்குறீங்க...?”
ரகு : “உனக்குன்னு யோசனை எதுவும் இல்லயா?”
வதனி : “இருக்கு... ”
ரகு : “அத சொல்லு”
வதனி : “CA முடிச்சிட்டு.... ஜென்ரல் ப்ராக்டிஸ், டேக்ஸ் கம்ப்ளையன்ஸ், அட்வைஸ் அன் ப்ளானிங்க்னு...... ஐடியா இருக்குது..... ”
ரகு : “குட்... இத தான் கேட்டேன்....”
“வேற....”
வதனி : “அவ்வளவு தான்”
ரகு : “சரி... ஒரு செல்ஃபி அனுப்பு”
வதனி : ‘இது என்னடா சோதனை’ என யோசித்தவள்
ஹாஃப் ஸ்லீவ் லைட் சாண்டல் பேஷ் யெல்லோவ் பிங்க் ஃப்ளார் டிசைன் நைட்டியில் தலை முடியை தூக்கி போட்ட கொண்டையுடன், உறக்கம் வரவா எனக் கேட்டு விழியின் வாசலில் நிற்க, தனது ஹாஃப் சைஸ் செல்ஃபியை எடுத்து அனுப்பினாள்.
ரகு : “தூக்கம் வந்துருச்சா? சரி நீ போயி தூங்கு...”
வதனி : ‘இத எங்கிட்ட கேட்ருந்தா..... நானே சொல்லியிருப்பேனே .... ... அதுக்கு எதுக்குடா செல்ஃபி’ “சரி”
ரகு : “குட் நைட்”
வதனி : ‘குட் நைட்”
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது
என்ற பாடலின் வீடியோவை அவளுக்கு அனுப்பிவிட்டு உறங்க முயற்சி செய்தான்......... ரகுநந்தன்.
அவனனுப்பிய வீடியோவை கண்ணில் உறக்கத்துடன் பார்த்தவளின்....., கண்களை விட்டு தூரம் போனது உறக்கம்.
சரியாக உறங்காததால் உண்டான அயர்வு உடலில் தெரிந்தாலும், அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள் வதனி.
ரகுநந்தன், காலையில் இறால் பண்ணை, நர்சரி பிறகு மில் என அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு, தனது தந்தையிடம் வந்தவன்,
“அப்பா அரியலூர்ல வேல இருக்கு, அத முடிச்சுட்டு அப்டியே வரும்போது வதனிய கூட்டிட்டு வந்துறேன்.....”
“சரிப்பா... புது கம்பெனி எப்டி போகுது?”
“சிக்ஸ் மந்த்ஸ்ல ஒன்னும் தெரியாதுப்பா..... ஒன் இயர் ஆனா தாம்பா சொல்லா முடியும்.....”
“ரொம்ப அலைய வேணாம்.... இங்க நான் பாத்துக்கறேன்.... நீ அங்க வேலய முடிச்சுட்டு மெதுவா வா.... ஒன்னும் அவசரமில்ல..... பாத்து போயிட்டு வா...... அங்க போயிட்டு போன் பண்ணு”
தனது தாயிடமும், வதனியின் பெற்றோரிடமும் கூறிவிட்டு மதிய உணவிற்குப் பின் வீட்டிலிருந்து கிளம்பினான்.
மதுரையில் இருந்த வேலையை முடித்துவிட்டு, திருச்சி வரும்போது...... நேரம்இரவைத்
தொட்டிருந்தது.
ஆறரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வதனி கிளம்புவதற்குள் அவளின் அலுவலகம் வந்திருந்தான். அங்கு வந்தவன் அவளின் வருகைக்காக அவனது BMW வில் காத்திருந்தான்.
அவளின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்தான்.
“வயிட்டிங் அட் யுவர் ஆஃபீஸ் என்ட்ரென்ஸ்”
பணிகளை முடித்துக்கொண்டு கிளம்பியவள் தனது பொருட்களுடன் வெளிவரும்போது சைலண்ட் மோடில் இருந்த மொபைலை நார்மல் மோடுக்கு மாற்றினாள்.
தன்னவனிடமிருந்து வந்த மெசேஜை ஆவலாக ஒபன் செய்தாள்.....
ஒரு கனம் நின்றவள்..... வாட்டர்கேனில் இருந்த நீரை எடுத்து குடித்தாள்....., ‘இன்ப அதிர்ச்சினு தெரியுமா? ....... என் சின்ன இதயத்துக்கு.... சர்ப்பிரைஸ்னு சொல்லி.... என்ன சாகடிச்சிருவான் போலயே......’ தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.
பர்பிள் நிற சந்தேரி எம்பிராய்டரி போட்ட சல்வாரில், அவனது BMWவை நோக்கி வந்து கொண்டிருந்த, தன்னவளை ஆசைதீர ஆவலோடு பார்த்திருந்தான்......