இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு எழ, நார்மல் மோடுக்கு வந்த வதனி, இரவு உடையை அணிந்து விட்டு படுக்க ஆயத்தமானாள்.
அவளிடம் ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணுமாக ரகு பார்த்திருந்தான்.
“வதனி.... உனக்கு தூக்கம் வந்தா ..... அந்த ரூம்ல போயி தூங்கு”
“நீங்க தூங்கலயா?”
“இன்னும் கொஞ்சம் நேரமாகும்”
“குட் நைட்”, என்றவள் ரூமை நோக்கி சென்றாள்.
"குட் நைட்", என்றவாறு அவளையே பார்த்திருந்தான்.
வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றவன், வளர்ந்தாலும் வதனி இன்னும் சிறு பிள்ளைதான் என எண்ணியவாறு, அவளுடன் படுத்து உறங்க முற்பட்டான்.
வழக்கம்போல எழுந்து பயிற்சிகளை முடித்துவிட்டு, செண்பகம் கொடுத்த டீயுடன் அன்றைய தினசரியில் மூழ்கியிருந்தவனை
“குட் மார்னிங்க்”, என்ற குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.
“குட் மார்னிங்” என்றவன் “நல்லா தூங்குனியா..வதனி.?”
“செம தூக்கம்.... படுத்ததுதான் தெரியும்...”
“இன்னிக்கு, இங்க நம்ம ஆஃபீஸ் போயிட்டு நான் ஈவ்னிங் தான் வருவேன்.... அது வரை.... ரெஸ்ட் எடு....”
“இங்க ஆஃபீஸா?”
“ம்...... சிக்ஸ் மந்த் ஆகுது....”
“எனக்கு இங்க போரடிக்கும்.... நானும் உங்களோட வரவா....”
“வித் ப்ளஷர்....அப்ப லேட் பண்ணாம சீக்கிரமா கிளம்பு”
பத்து மணிக்கு அலுவலகம் சென்று, அவளை அவனது அறையில் அமரச்செய்து விட்டு, கையில் கம்பெனி சார்ந்த கணக்குகளை அவளிடம் கொடுத்துச் சென்றவன், மதிய உணவின் போது அவளுடன் வந்து உணவருந்தி விட்டு போனான், பிறகு மாலை நான்கு மணிக்கு வந்து கிளம்பலாம் என்றான்.
கணக்கு வழக்குகளை ஒரு மணி நேரம் பார்த்தவள் பிறகு பொழுது போகாமல் நேரத்தை நெட்டித்தள்ளினாள். பிறகு தாயுடனும், மாமியாருடனும் போனில் பேசினாள்.
இருவருமே, அவளைக் கிண்டல் செய்திருந்தனர். அவன் வேலனு வந்துட்டா அப்டிதான்னு உனக்கு தெரியாம, இப்டி போயி மாட்டிகிட்டியா என அவளைக் கலாய்த்திருந்தனர்.
‘இதுக்கு தான் வேணாம்னு..... தல சொல்லிருக்கு.... அது தெரியாம....வாண்டடா வந்து வம்புல மாட்டி கம்பா போனது.... வதனி தான், ஆனாலும் எடுத்துச் சொல்லிருந்துருக்கலாம் இந்த PM’ என எண்ணியபடி வீட்டிற்கு வந்தாள்.
“எங்கயாவது வெளில போவமா......?”
“இல்ல வேணாம்..... வீட்லயே இருப்போம்..”, என்றவள் கையில் போனுடன் அமர்ந்துவிட்டாள்.
ரகு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், கடந்த முறை எடுத்து வந்து நட்டிருந்த மரம், வண்ணமலர் செடிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டான்.
மூன்று மாதத்திற்கான வளர்ச்சியைக் கண்டவன் அதை ரசித்திருந்தான். அரை மணி நேரமாக ஆளைக்காணாத ரகுவைத் தேடி அங்கு வந்த வதனி,
“என்ன பண்ணுறீங்க....”
“லாஸ்ட் டைம் கொண்டு வந்து வச்சது.... இதெல்லாம்.... எப்டியிருக்குனு பாக்க வந்தேன்.....”
அவளும் அங்கு வந்து பார்த்தவள், “இங்க நல்ல தண்ணினால எல்லாம் ஓரளவு வளந்திருக்கு.... ”
“ம்..... அதுவும் ஒரு ரீசன் தான்...”, என்றவன் “இரு.... போயி என் மொபைலை எடுத்துட்டு வரேன்.....”
“அப்டியே என்னோடதையும் எடுத்துட்டு வரீங்களா?”
“ம்..”, என்றபடி வீட்டிற்குள் சென்றிருந்தான்.
வித்தியாசமான பல செடிகள், கொடிகள் என அவ்விடம் அருமையாக காட்சி அளித்தது. அதை பார்த்தவாறு நின்றிருந்தவள், வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வந்தவனை, அவனது பார்வையை கவனிக்கவில்லை.
“ம்ஹூம்..... ம்ஹூம்...”, என்ற அவனது சப்தத்தில்,
என்ன என்பது போல் பார்க்க, கையில் அவளது மொபைலுடன் நின்றிருந்தவன்,
என்னதிது என அவளது மொபைலை காண்பித்து கேட்க, புரியாமல்...... ‘என்ன கேக்குறான்..... ஒன்னும் புரியலயே என யோசித்தபடி....’, அவனை பார்த்தாள்.
மொபைலை அவளிடம் தந்துவிட்டு, அவனது மொபைலில் யாருக்கோ கால் செய்தான்....
‘நாம ஒன்னும் பண்ணலயே...... யாருக்கு போன் பண்றான் இவன் ....’, என யோசிக்க,
அதே நேரம் அவளது போனில் அழைப்பு வந்தது..... பார்த்தவள்.... ஒரு நிமிடம்.... ஒன்றுமே பேச முயற்சிக்காமல்..... திரு திருவென விழித்தபடி..... அவனை பார்க்க.....
“நான் உனக்கு சிடுமூஞ்சியா....?”
“ம்..... அது முன்னாடி ஸ்டோர் பண்ணது.....இப்ப இல்ல”, என மிகக் குறைந்த டெசிபலில் அவள் கூற.....
“அப்ப சிடுமூஞ்சி..... இப்ப....?”
“ம்.. ஹூம்....”, என்றபடி தலை குனிந்தபடி அங்கிருந்து வீட்டிற்குள் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்தவன், அவளைக் ஹாலில் காணாமல்..... கிச்சன் சென்று பார்த்தான்..... அங்குமில்லை..... ரூமில் படுத்திருந்தவளை பார்த்தவன்,
“வதனி...”
“ம்.....”
“ஏன் இப்போ வந்து படுத்திருக்க.....”
“சும்மா தான்.....”
அவளருகில் வந்தவன் அவளைத் தன் இருகைகளில் தூக்கினான். திமிறியபடி இறங்க முயற்சித்தவளை விடாமல், கைகளில் ஏந்தியபடி ஹாலுக்கு வந்தவன் அவளுடன் சோபாவில் அமர்ந்தான்.
அவனது மடியில் கண்களை இறுக மூடியிருந்தவளை புன்னகையோடு பார்த்தவன்...... “வதனி....” என மெதுவாக அழைத்தான்.