• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love::love::love::love::love::love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 11
3514.jpg
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 11



செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே



அவனருகில் வந்து அமர்ந்தவளை, அவனுடைய அக்மார்க் சிரிப்புடன், பொக்கே கொடுத்து வரவேற்றான்.

“வெல்கம் மை ஏஞ்சல்...!”

‘என்னா சிரிப்பு..... கண்டிப்பா பேரு மாத்தணும் இன்னிக்கு...... CM ஐ மறக்காம PM னு மாத்திருவோம்....(சாரி.... உங்களுக்கெல்லாம் புரியாதில்ல..... சிடு மூஞ்சிய..... புன்னகை மன்னன்னு மாத்த போறேன்......)’

“தாங்க்யூ”, என்றவளிடம்

“என்ன குடிக்கிற, ஹாட் ட்ரிங்க்ஸ் ஆர் ஜுஸ்”

“ஜூஸ்....”, என்றவுடன்...... சற்று ரிலாக்சாக அமர்ந்து குடிக்க ஏதுவான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.





இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தபின், அவளின் ஹாஸ்டல் இருக்கும் வழியில் வண்டி சென்றது.

“எங்க போறீங்க?”

“உன் ஹாஸ்டலுக்குத்தான்.......போயி வகேட் பண்ணிட்டு வா.....”

“இன்னிக்கு நைட் ஊருக்கு ரிடர்னா....?”

“இல்ல....”

“வகேட் பண்ணிட்டா........ அப்ப நான் எங்க தங்குறது...? நைட்ல.....”

“அப்பவும் உன்னப்பத்தி மட்டும் யோசிக்ற.....”, என்றான் சிரித்தபடி

அதற்குள் அவளது ஹாஸ்டல் வந்திருந்தது. ‘இவனுக்கு நம்ம ஹாஸ்டல் இதுன்னு நாம சொல்லலயே?, கீத் சொல்லிருக்குமோ?’

அவளுடன் அவனும் வர..... சற்று தயங்கியவள்,

“நீங்க விசிட்டர்ஸ் ரூம்ல வயிட் பண்ணுங்க.... நான் வார்டண்ட சொல்லிட்டு..... ஃபிஃப்டீன் மினிட்ல வரேன்”

விசிட்டர் அறையில் இருந்த சேரில் ரகுவை அமரச் செய்துவிட்டு, அவளின் அறைக்குச் சென்றாள்.

பத்து நிமிடத்தில் அவளை ரெஃப்ரெஷ் செய்துகொண்டு, அவளின் இரு நாட்களுக்கு மட்டும் தேவையான லக்கேஜுடன் வார்டன் அறைக்கு சென்றாள்.

“வார்டன்.... இன்னிக்கு மார்னிங் உங்கட்ட, நாளைக்கு வகேட் பண்றதா சொன்னேன்.... ஆனா வீட்ல இருந்து இப்பவே வந்துட்டதால, நான் இப்போ வகேட் பண்ணிக்கிறேன்....”

“வீட்ல இருந்து யாரு வந்திருக்கா....?”, என இயல்பாகக் கேட்டபடி, அவளுடன் விசிட்டர் ரூமை நோக்கி வார்டனும் வந்தார்.

“என் ஹஸ்பன்ட்”

“என்ன? ...... உனக்கு மேரேஜ் ஆகிருச்சா.....”, அதில் டன் கணக்கில் ஆச்சரியம் இருந்தது.

“ஆகிருச்சு......”

“எங்கட்டல்லாம் சொல்லவே இல்ல”, என்றபடி வந்தவரிடம் ரகுநந்தனை கணவனென்று அறிமுகம் செய்தாள்.

அவனும் மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் வார்டனிடம் பேசிவிட்டு, வதனியுடன் கிளம்பிவிட்டான்.





ரெஃப்ரெஷ் செய்து பளிச்சென்று இருக்கும் தனது மனைவியின் முகத்தில் புதிதாக குடிவந்திருந்த குழப்பத்தைக் கண்டவன்.......

“ஏஞ்சலுக்கு என்ன குழப்பம்?”

“ம்..... ஒன்னுல்ல!”

“அப்ப நிறைய இருக்கு போலயே!......, என்னாச்சு வதனி?”

“இப்ப நாம எங்க போறோம்....?”

“வீட்டுக்கு”

“வேற வழியில போறீங்க?”

“ஆமா உன்ன கடத்திட்டு போறேன்”

“உண்மைய சொல்லுங்க”

“சிறுகனூர்ல ஒரு வீடு வாங்கிருக்கோம்..... அங்கதான் இப்போ போறோம்”



திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிறுகனுர் நோக்கி பயணித்தவர்கள், வீட்டை அடையும் போது எட்டு மணி. அவளை அழைத்துக் கொண்டு வீட்டைத் திறந்தபடியே யாருக்கோ கால் செய்திருந்தான்.

ஐந்து நிமிடத்தில் அங்கு வந்த ஆண், பெண் இருவரையும் சங்கர், செண்பகம் என வதனியிடம் அறிமுகம் செய்தான். அவர்களின் பராமரிப்பில் வீடு இருப்பதாகவும், சமையல் வேலைகளை செண்பகம் கவனிப்பதாகவும் கூறினான்.

நைட்டுக்கு எதாவது சிம்பிளா செய்திரு செண்பகம், என்றுவிட்டு அங்கிருந்த ரூமிற்குள் நுழைந்தான்.

ஹாலில் அமர்ந்த வதனி, ‘என்னடா நடக்குது இங்க’, என யோசித்தபடி போனில் மூழ்கி இருந்தாள். ஆனால், மனம் போனில் இல்லை.

அரைமணி நேரத்தில் செண்பகம் அவளின் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள். உடன் சங்கரும் கிளம்பினான்.





ஹாலில் போனுடன் இருந்தவளை பார்த்த ரகு,

“பசிச்சா சாப்டுறியா....?”

“இல்ல பசியில்ல.....”

“ஜூஸ் குடிச்சு டூ அவர்ஸ் ஆகுது..... இன்னுமா பசிக்கல....”

பேசியவாறு வெளி கேட்டை பூட்டிவிட்டு வந்தவன், அவளருகில் அமர்ந்தான்.

“என்னடா..... என்ன யோசனை?”

தலை கவிழ்ந்திருந்தவளை நோக்கிக் கேட்க, ஒன்றுமில்லை என்ற அவளது தலையசைப்பைக் கண்டவன்....

“வதனா..... என்ன பாரு....”

என்னவென நிமிர்ந்தவளை நோக்கி

“நான் உன் ஹஸ்பண்ட், அதனால் எங்கூட வந்ததுல எந்த உறுத்தலும் உனக்கு வேணாம், அது தவிர..... உங்க அம்மா, அப்பா, எங்க அம்மா, அப்பா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்..... எதுனாலும் எங்கிட்ட சொன்னாதான தெரியும்.... ஏன் இப்டி அப்செட்டா இருக்க....”

கண்களில் குழப்பத்துடன் நிமிர்ந்தவளை, நானிருக்கிறேன் என்ன விசயமானாலும் என்னிடம் சொல்லு எனும் செய்தி அவனது விழிகளில் இருக்க கண்டவள்.... எப்படி சொல்ல எனத் தயங்க.....

“என் கூட வந்தது உனக்கு பிடிக்கலயா...?”

அவசரமாக இல்லை என மறுத்தவள்,

“எங்க வார்டன்... யாரு உன்ன பிக் அப் பண்ண வந்திருக்கானு கேட்டதுக்கு, ஹஸ்பண்ட்னு சொன்னேன். உனக்கு மேரேஜ் ஆகிருச்சானு ஆச்சரியத்தோட உங்கள வந்து நேரில பாத்து பேசிட்டு போனாங்க... அத பத்தி தான் யோசிச்சேன்.....”

“சரி யோசிச்சு என்ன முடிவுக்கு வந்திருக்க...”

“இல்ல.... என் ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் எனக்கு மேரேஜ் ஆனது தெரியாது.... இது வர யாருக்கிட்டயும் நான் சொல்லல.....அத பத்தி இவ்வளவு நாள் யோசிக்கல....

இன்னிக்கு வார்டன் கேட்ட மாதிரி இன்னும் நிறய பேரு கேப்பாங்கள்ள.... மேரேஜ் அனெக்ஸ்பெக்டட நடந்ததால தான சொல்லல அப்டினு யோசிச்சேன்.... உடனே, அன்னிக்கு அம்மாச்சி கூட பேசுனது எல்லாம் ஞாபகத்துல வந்துச்சு....... அதான்...”

கலங்கிய கண்களுடன் பேசியவளைக் கண்டவன், அவளிடம் டவலைக் கொடுத்து கண்களை துடைக்கச் சொன்னான்......

“சரி....மிச்சத்த அப்றம் வந்து யோசிப்போம்.... எனக்கு செம பசி..... இப்ப வந்து சாப்டுவியாம்.....”, என்றவனிடம் சரி எனத் தலையாட்டியவள் அவனுடன் எழுந்தாள்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு எழ, நார்மல் மோடுக்கு வந்த வதனி, இரவு உடையை அணிந்து விட்டு படுக்க ஆயத்தமானாள்.

அவளிடம் ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணுமாக ரகு பார்த்திருந்தான்.

“வதனி.... உனக்கு தூக்கம் வந்தா ..... அந்த ரூம்ல போயி தூங்கு”

“நீங்க தூங்கலயா?”

“இன்னும் கொஞ்சம் நேரமாகும்”

“குட் நைட்”, என்றவள் ரூமை நோக்கி சென்றாள்.

"குட் நைட்", என்றவாறு அவளையே பார்த்திருந்தான்.



வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றவன், வளர்ந்தாலும் வதனி இன்னும் சிறு பிள்ளைதான் என எண்ணியவாறு, அவளுடன் படுத்து உறங்க முற்பட்டான்.



வழக்கம்போல எழுந்து பயிற்சிகளை முடித்துவிட்டு, செண்பகம் கொடுத்த டீயுடன் அன்றைய தினசரியில் மூழ்கியிருந்தவனை

“குட் மார்னிங்க்”, என்ற குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“குட் மார்னிங்” என்றவன் “நல்லா தூங்குனியா..வதனி.?”

“செம தூக்கம்.... படுத்ததுதான் தெரியும்...”

“இன்னிக்கு, இங்க நம்ம ஆஃபீஸ் போயிட்டு நான் ஈவ்னிங் தான் வருவேன்.... அது வரை.... ரெஸ்ட் எடு....”

“இங்க ஆஃபீஸா?”

“ம்...... சிக்ஸ் மந்த் ஆகுது....”

“எனக்கு இங்க போரடிக்கும்.... நானும் உங்களோட வரவா....”

“வித் ப்ளஷர்....அப்ப லேட் பண்ணாம சீக்கிரமா கிளம்பு”





பத்து மணிக்கு அலுவலகம் சென்று, அவளை அவனது அறையில் அமரச்செய்து விட்டு, கையில் கம்பெனி சார்ந்த கணக்குகளை அவளிடம் கொடுத்துச் சென்றவன், மதிய உணவின் போது அவளுடன் வந்து உணவருந்தி விட்டு போனான், பிறகு மாலை நான்கு மணிக்கு வந்து கிளம்பலாம் என்றான்.

கணக்கு வழக்குகளை ஒரு மணி நேரம் பார்த்தவள் பிறகு பொழுது போகாமல் நேரத்தை நெட்டித்தள்ளினாள். பிறகு தாயுடனும், மாமியாருடனும் போனில் பேசினாள்.

இருவருமே, அவளைக் கிண்டல் செய்திருந்தனர். அவன் வேலனு வந்துட்டா அப்டிதான்னு உனக்கு தெரியாம, இப்டி போயி மாட்டிகிட்டியா என அவளைக் கலாய்த்திருந்தனர்.

‘இதுக்கு தான் வேணாம்னு..... தல சொல்லிருக்கு.... அது தெரியாம....வாண்டடா வந்து வம்புல மாட்டி கம்பா போனது.... வதனி தான், ஆனாலும் எடுத்துச் சொல்லிருந்துருக்கலாம் இந்த PM’ என எண்ணியபடி வீட்டிற்கு வந்தாள்.

“எங்கயாவது வெளில போவமா......?”

“இல்ல வேணாம்..... வீட்லயே இருப்போம்..”, என்றவள் கையில் போனுடன் அமர்ந்துவிட்டாள்.





ரகு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், கடந்த முறை எடுத்து வந்து நட்டிருந்த மரம், வண்ணமலர் செடிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டான்.

மூன்று மாதத்திற்கான வளர்ச்சியைக் கண்டவன் அதை ரசித்திருந்தான். அரை மணி நேரமாக ஆளைக்காணாத ரகுவைத் தேடி அங்கு வந்த வதனி,

“என்ன பண்ணுறீங்க....”

“லாஸ்ட் டைம் கொண்டு வந்து வச்சது.... இதெல்லாம்.... எப்டியிருக்குனு பாக்க வந்தேன்.....”

அவளும் அங்கு வந்து பார்த்தவள், “இங்க நல்ல தண்ணினால எல்லாம் ஓரளவு வளந்திருக்கு.... ”

“ம்..... அதுவும் ஒரு ரீசன் தான்...”, என்றவன் “இரு.... போயி என் மொபைலை எடுத்துட்டு வரேன்.....”

“அப்டியே என்னோடதையும் எடுத்துட்டு வரீங்களா?”

“ம்..”, என்றபடி வீட்டிற்குள் சென்றிருந்தான்.

வித்தியாசமான பல செடிகள், கொடிகள் என அவ்விடம் அருமையாக காட்சி அளித்தது. அதை பார்த்தவாறு நின்றிருந்தவள், வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வந்தவனை, அவனது பார்வையை கவனிக்கவில்லை.

“ம்ஹூம்..... ம்ஹூம்...”, என்ற அவனது சப்தத்தில்,

என்ன என்பது போல் பார்க்க, கையில் அவளது மொபைலுடன் நின்றிருந்தவன்,

என்னதிது என அவளது மொபைலை காண்பித்து கேட்க, புரியாமல்...... ‘என்ன கேக்குறான்..... ஒன்னும் புரியலயே என யோசித்தபடி....’, அவனை பார்த்தாள்.

மொபைலை அவளிடம் தந்துவிட்டு, அவனது மொபைலில் யாருக்கோ கால் செய்தான்....

‘நாம ஒன்னும் பண்ணலயே...... யாருக்கு போன் பண்றான் இவன் ....’, என யோசிக்க,

அதே நேரம் அவளது போனில் அழைப்பு வந்தது..... பார்த்தவள்.... ஒரு நிமிடம்.... ஒன்றுமே பேச முயற்சிக்காமல்..... திரு திருவென விழித்தபடி..... அவனை பார்க்க.....

“நான் உனக்கு சிடுமூஞ்சியா....?”

“ம்..... அது முன்னாடி ஸ்டோர் பண்ணது.....இப்ப இல்ல”, என மிகக் குறைந்த டெசிபலில் அவள் கூற.....

“அப்ப சிடுமூஞ்சி..... இப்ப....?”

“ம்.. ஹூம்....”, என்றபடி தலை குனிந்தபடி அங்கிருந்து வீட்டிற்குள் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்தவன், அவளைக் ஹாலில் காணாமல்..... கிச்சன் சென்று பார்த்தான்..... அங்குமில்லை..... ரூமில் படுத்திருந்தவளை பார்த்தவன்,

“வதனி...”

“ம்.....”

“ஏன் இப்போ வந்து படுத்திருக்க.....”

“சும்மா தான்.....”

அவளருகில் வந்தவன் அவளைத் தன் இருகைகளில் தூக்கினான். திமிறியபடி இறங்க முயற்சித்தவளை விடாமல், கைகளில் ஏந்தியபடி ஹாலுக்கு வந்தவன் அவளுடன் சோபாவில் அமர்ந்தான்.

அவனது மடியில் கண்களை இறுக மூடியிருந்தவளை புன்னகையோடு பார்த்தவன்...... “வதனி....” என மெதுவாக அழைத்தான்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஆஹா! புன்னகை மன்னனுக்கு இப்போதான் காதல் பொங்குதோ? ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top