• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா -3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வதனியின் மைண்ட் வாய்ஸ் செம சரோ...
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
நிலவைக் கொண்டு வா – 3



மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீர் ஏனம்மா?

பூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா

சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே

சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே

இது காதல் ராகமே, புரியாத மோகமே........



வதனியின் நினைவால் உறங்காதிருந்தவன், கடந்த முறை இங்கிருந்து செல்லும்போது அவளின் ஈரம் படர்ந்த கண்களிலிருந்து, கண்ணீர் கீழே விழாமல் இருக்க, தனக்குள் மூச்சை ஆழ்ந்து இழுத்து சரி செய்ததை நினைவு கூர்ந்தபடி விடியலில் படுக்கையை விட்டு எழுந்தான்.

‘ஊரிலிருந்து அவள் இங்கு வர எப்படியும் மதியமாகி விடும்’ என எண்ணியவாறு கிளம்பினான்.

நர்சரி மற்றும் இறால் பண்ணை வரை சென்று வருவதாகத் தந்தையிடம் கூறிவிட்டு புறப்பட்டான்.

படுக்கையில் கண் விழித்தபடி, பகலவனின் வருகைக்காக காத்திருப்பது பரீட்சைக்கு படிக்க அல்ல. தன் வயதொத்த வானரங்களின் (‘இப்டி தான் அம்மாச்சி சொல்லுவாங்க’) வரவிற்காக எழுந்திருந்தாள்.

தனது தாயிற்கு தெரியாமல் அறையை விட்டு வெளி வந்தவள், பல் தேய்த்து, முகம் கழுவி அவளின் அன்றைய காலையை தனது விருப்பம்போல் விரட்ட தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீட்டின் காம்பவுண்ட் கேட் அருகே அமர்ந்து தனது வேலையினை கவனிக்க ஆரம்பித்தாள்.

‘எந்த மனுசரும் நா வெளில போற வர என்னய பாத்ரக்கூடாது.... பாத்தாலும்.... அவங்க கண்ணுக்கு நான் தெரியக்கூடாது....’

பரீட்சைக்கோ, பள்ளி நாட்களிலோ அதிகாலைப் பொழுதில் எழாதவள், இன்றைய அவர்களது முக்கிய பணியான தோப்பில் உள்ள மாங்காய்களை மரத்தில் இருந்து கல்லால் அடித்து விழ வைக்க உண்டிகோல் செய்து கொண்டிருந்தாள்.

மரம் ஏறுதல் கூடாது என வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட, அதற்கான மாற்று ஏற்பாடு தான் அவள் கைவசம் இருப்பது.

‘என்ன, இன்னும் யாரையும் காணோம், இவங்க வந்து நம்மள கூட்டிட்டு போறதுக்குள்ள, வீட்டுல இருக்கிற டான்ஸ் (Dons) எல்லாம் கோழி குஞ்சை கூடைக்குள்ள அடைக்கிற மாதிரி வீட்டுக்குள்ள போட்டு என்னய அடைக்கப்போறாங்க... கடவுளே.... பின் கட்டுல வேல சீக்கிரமா முடிஞ்சிறக்கூடாது....’

பால் கறக்க டிப்போவில் இருந்து வந்துவிடுவார்கள் என்பதால் முதலில் ராஜமனோகரி நான்கு மணிக்கு எழுந்து வெளி கேட்டை திறந்து விடுவார், அதன் பின், வீட்டில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து தத்தமது பணிகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவர் என்பதால் அவளின் அத்தை துர்காவும் எழுந்து அவர்கள் செய்ய வேண்டியதை பிரித்து கொடுப்பார்.

ஒய் வடிவ கவட்டை கம்பில் பெல்ட்டை வைத்து இறுக்கமாக கட்டி முடித்தாள், வதனா.

‘அப்பாடி, உண்டிகோலு ரெடி’

“கவகதகனா கவகதகனா..... கநா கங் கக கவ கந் கது கட் கடோ கம்... கநீ கவா....... கநே கர கமா கச் கசு”

‘அப்பாடி... வந்துட்டாய்ங்க...’

“கவ கரே கன்...”

வதனா..... வதனா..... நாங்க வந்துட்டோம்... நீ வா நேரமாச்சு என்று அழைப்பு வந்தவுடன்... அவளது அடுத்த கட்ட தேவைகளுக்குரிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

வீட்டில் தனது பெயரை அழைக்கும் சத்தம் கேட்டு அவளின் அம்மாச்சி மற்றும் அத்தை வந்தால், இன்றைய நாள் அவர்களின் நாளாகிப் போகும் என்பதால் அலார்டாக இருக்கும் வதனியின் ஏற்பாடு இது.

ஒரு நபர் நுழையக்கூடிய அளவில் உள்ள பெரிய கேட்டுடன் இணைந்திருக்கும் சிறு கேட்டைத் சத்தம் வராமல் திறந்து வெளியே சென்று, மீண்டும் சத்தம் வராமல் பழையபடி வைத்துவிட்டு தனது சகாக்களுடன் சென்றாள்.

சற்று தூரம் சென்றபின், “என்ன .... இன்னிக்கு ஃப்ர்ஸ்ட் எங்க போலாம்?” என வதனி கேட்க

“ரோட்டோரமா இருக்கிற புளிய மரத்துல உதிந்திருக்ற புளியம்பழத்த பொறக்குவோம்...”

“நீங்க பொறக்கி வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க..... அத வச்சு நானென்ன செய்ய?”, என்றாள் வதனா.

“இல்ல பனங்காட்டு பக்கம் போயி நொங்கு பொறக்குவோம்..”

“தோப்புல போயி மாங்கா அடிப்போம்”

‘ஆளாளுக்கு ஒண்ணு சொல்ராய்ங்க’ என யோசித்த வதனா, “பனங்காடு மொதல்ல போவோம்”, என்றாள்.

அறுவர் கொண்ட குழு, நுங்கு எடுக்க பனங்காட்டை நோக்கி பயணித்தது.

வதனா எனும் சந்திரவதனி, கோடை விடுமுறைக்காக தனது அம்மாச்சி வீட்டிற்கு வந்திருக்கிறாள். வருடமொரு முறை அங்கு வந்து சென்றாலும், அந்த ஊரின் லேஅவுட் அவளுக்கு அத்துபடி. மேலும், அங்கு எவ்வாறு தனது பொழுதை இனிமையாகக் கழிக்கலாம் என்பதை அறிந்தவள்.

அவளது தாய் கீதாஞ்சலி, வாலில்லாத தனது மகளால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்க எண்ணி தனியாக எங்கும் அனுப்பமாட்டார். அதே போல், அவளது அத்தை துர்காவும் இவளின் அடாவடிகளை அறிந்ததால் மிகவும் கண்டிப்போடு இருப்பார்.

சந்தன நிறம், திருத்தமான வட்ட முகத்தில், வில் போன்ற அடர்த்தியான புருவங்கள், மை எழுதியது போன்ற இமைகளுக்குள் துறு, துறு கண்கள், சிவந்த நிறத்தில் செப்பு உதடு, எடுப்பான நாசி.

தோற்றம் மற்றும் ஆடைகளை வைத்தே, வெளியூரிலிருந்து அவள் வந்திருப்பதை உணர்ந்து கொள்வர், அக்கிராம மக்கள்.

அணில் கடிக்கும்பொழுது மரத்திலிருந்து கீழே தவறி விழுந்திருக்கும், நுங்குள்ள கோந்தைகளை ஆளுக்கொரு பக்கமாகச் சென்று எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்தனர்.

“போதும்பா.... எல்லாரும் வாங்க..”

“இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வந்து உக்காருவோம்”

“ஏய், ரம்யா....., நீ இங்கயே உக்காரு...”

“நான் மட்டுமா ?”

“நாங்க இன்னொரு ரவுண்டு போயிட்டு வந்தவுடனே ஆரம்பிக்கலாம்...”

“அது வரை நானென்ன செய்ய?”

“சின்ன அருவாவ வச்சு.. கண்ணுக்கு மேல லைட்டா எல்லா கோந்தையையும் சீவி வையி....”, என்றவாறு சென்றுவிட்டனர்.

கையில் ஒன்றிரண்டு கோந்தைகளுடன் அவர்கள் வர , அனைவரும் சேர்ந்து கண் தெரிந்த இடத்தில் கை பெருவிரலால் நுங்கை லாவகமாக திறந்து, பேசியபடி குடித்தனர்.

அதிகாலையில் எழுந்து ஒன்றும் குடிக்காமல், சாப்பிடாமல் வந்ததில் அனைவருக்கும் நல்ல பசி. காலை உணவாக நுங்கை சாப்பிட்டதாக பேர் செய்து விட்டு, அங்கிருந்து தோப்பை நோக்கி நடந்தனர்.
Very nice sis ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top