‘எதனால் இந்த கீர்த்தனாவிற்கு அவனை பிடித்ததோ.... அவனும் அவன் ரூல்ஸ்ஸும்......
அங்க ஏன் நிக்கிற..... இப்டி ஏன் ட்ரெஸ் பண்ணிருக்க..... இப்டி ஏன் கத்தி சிரிக்கிற..... எப்பொ பாரு விளையாட்டு அதுவும் சின்ன வாண்டுகளோட..... என....
ஒரு லிஸ்டே வச்சு ஒவ்வொரு முறை பார்க்கும் போதெல்லாம் எதாவது குறை சொன்னால்..... யாருக்குத்தான் பிடிக்கும்.......
ஆனா இதெல்லாம் தெரியாம வாண்டடா வந்து ஒரு ஆளு அவங்கிட்ட மாட்ட போகுது..... கீர்த்து..... நீ நினச்சது உன் வாழ்க்கைல நடந்தா..... நடாம விட்ட நாத்தா மாறிருவே’
வதனிக்கும், சிடுமூஞ்சிக்கும் எப்போதும் ஆகாது. ஆகையால், அவன் இருக்கும் இடத்தில் கூட அமரமாட்டாள்.
அப்படிப்பட்ட பெண்ணிடம் அவனது காண்டாக்ட் நம்பரைக் கேட்டாள், பாவம் வதனியும் என்ன செய்வாள்.
“வதனி, இன்னிக்காவது காண்டாக்ட் நம்பர் வாங்கித்தா.....”
‘இன்னிக்கு வசமா மாட்டிட்டியே வதனி.....’
“கீர்த்தி அக்கா, நீங்க பேசாம எங்க கீத்திட்ட கேட்ருக்கலாம்ல....”
‘எனக்கு வேற என்ன விளையாட சொன்னாலும் விளையாடுவேன், எவ்வளவு படிக்கணும்னாலும் படிப்பேன்..... இதல்லாம் ஒரு வேலயா? .....ச்சே’
“அடிப்பாவி............. வேற வினையே வேணாம்.......”
“உங்க அம்மா எப்பொ வருவாங்க..?”
‘ம்ம்ம்ம் ..... அவுங்க இங்க வரும்போது வருவாங்க’
“நாளை மறுநாள்.... ஏன் கேக்குறீங்க?”
“அதுக்குல்ல அவங்க நம்பர எனக்கு வாங்கித் தர.....”
“எங்க அம்மா நம்பராக்கா?”
“ஏய்.... என்ன நக்கலா? என் மிஸ்டர் நம்பரு தான்..... வேற யாரு நம்பரும் எனக்கு இப்போ வேணாம்”
‘பெரிய ப்ரைம் மினிஸ்டரு இவரு’
“ஹாண்ட்சம் நம்பர வாங்குற...நாளைக்கு தர.... என்ன சரியா....?”
‘அப்டியா இருக்கான்.............. உர்ராங்கோட்டான் கனக்கா இருக்கான்...... அவன போயி என்னமோ சொல்லுது இது.....’
“எப்டி வாங்க முடியும்?”
‘கடைல இருக்குற பொருளுனா கேளு......எம் பாக்கெட் மணில வாங்கி தரேன்...... இந்த வளந்து கெட்டவனோட நம்பர கேட்டா..... நான் என்ன பண்ணுவேன்......’
“நீ உனக்குன்னு கேளு”
“எனக்கு தேவையில்லயே!”
‘அவன் நம்பரு எனக்கெதுக்கு....... நாக்கு வளிக்கவா?’
“உனக்கு தேவையில்ல...... ஆனா உனக்கு கான்டாக்ட் பண்ண அவங்க நம்பர் வேணும்னு கேளு..... அத எனக்கு தந்திரு”
‘அவன கான்டாக்ட் பண்ணறதுக்கு நான் கண்ணம்மா பேட்டைக்கே போயிருவேன்’
“ட்ரை பண்றேன்”
எல்லா இறைவனையும் வேண்டியபடி அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
அவன் வந்து வழக்கம்போல் பிளாட்டைத் திறந்தபின், அவனுடைய கையில் கொண்டு வந்ததை டேபிளின் மீது வைத்துவிட்டு, ரெஃப்ரெஷ் செய்து கொள்ள சென்றான்.
எதிர் பிளாட்டில் இருந்தபடி கவனித்த வதனி, வெளியே வந்து சிடுமூஞ்சி பிளாட்டை வாசலில் நின்றபடி எட்டிப்பார்த்துவிட்டு அவனில்லாததை உறுதி செய்தவள் வீட்டினுல் சென்றாள்.
அவனது மொபைல் டேப்ளின் மீது இருந்தது. மொபைலை எடுத்து ஆன் செய்தால்.... பாஸ்வர்டு கேட்டது..... ச்சே... என்றவாறு அவளின் பிளாட்டிற்கு வந்துவிட்டாள்.
சற்று நேரத்தில் அங்கு வந்தவன்.....
“நைட் டின்னர் என்ன சாப்டலாம்?”
“எதுனாலும் ஓகே எனக்கு”
“குக் பண்ணுவியா?”
“ம்.....”, என்றாள் தலையாட்டியவாறு
“வதனி, வாயத் திறக்க மாட்டியா? வாயத் திறந்து பேசு”
“குக் பண்ணுவேன்”, சன்னமான குரலில் அவள் கூற
“அபார்ட்மெண்டே அதிர்ற மாதிரி மத்தவங்க கூட பேசுற..... எங்கிட்ட பேச என்ன பயமா உனக்கு....”
இல்ல என்பது போல தலையசைத்தாள்....
“இன்னிக்கு நான் இட்லி, தோசை மாதிரி எதாவது போயி வாங்கிட்டு வரேன்...... நாளைக்கு மார்னிங் எதாவது செய்வோம்”
“மாவு இருக்கு, அம்மா தோசை ஊத்திக்க சொன்னாங்க, சாம்பார் இருக்கு”
“உனக்கு கஷ்டமில்லனா தோசை ஊத்து....”
“ம்.... என தலையை ஆட்டியபடி கிச்சனுக்குள் சென்று, சற்று நேரத்தில் இரு ப்ளேட்களில் தோசையுடன் வந்தவள், ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள், இருவரும் டைனிங்கில் எதிரெதிரே அமர்ந்து அமைதியாக உண்டார்கள்.
“தனியா தூங்கிருவ தான...”
“ம்....” , என்றாள்
“சரி கதவ லாக் பண்ணிக்க....”, என்றவாறு அவன் கிளம்ப,
“தயக்கத்துடன்....... உங்க காண்டாக்ட் நம்பர்....” , அவள் கேட்டது அவளுக்கே கேட்கவில்லை.
அவனுக்கு கேட்டதனால் நின்றவன்............ என்ன காண்டாக்ட் நம்பரா ? என்பது போல் அவளைப் பார்த்தபடி .....
“தனியா தூங்கிருவன்னு சொன்ன....?”
“ஆமா..........எனக்கில்ல...... ”, என கோபமாக சற்று சத்தமாக கூறிவிட்டு...... நாக்கை கடித்தவள்...ஸ்.... என்றபடி ‘எல்லாம் இந்த கீர்த்தி.... குரத்தியால வந்தது...’, தலையை குனிந்து நின்றாள்.
அருகில் வந்தவன், குனிந்த தலையை அவளது தாடையை பிடித்து நிமிர்த்தினான்.
அவளது கண்களோடு கண்களை கலக்கவிட்டபடி, “ம்.... சொல்லு..யாருக்கு.....?” என்றவுடன்..... கீர்த்தி விசயத்தை சொல்லிவிட்டாள்.
வதனியை அறியாதவன் அல்ல. சிறு வயது முதலே, அறியாமல் தவறு செய்துவிட்டாலும், அதை ஒத்துக்கொள்ளும் நேர்மையை அவளிடம் கண்டிருக்கிறான். இன்றும் அதை உணர்ந்தான்.
கேட்டவன் மிக நிதானமாக, “அப்பொ என் நம்பர் உங்கிட்ட இருந்திருந்தா..... யாரு கேட்டாலும் குடுத்துருவ...... ஏன்? எதுக்குனு கேக்கமாட்ட....”
“உங்க கூட பேசத்தான கேப்பாங்க....”
“பேசனும்னு கேட்டா.... குடுப்பியா?”
“வேற என்ன செய்ய?....அவங்க ரொம்ப நச்சரிச்சாங்க”
முகத்தில் கோவம் தாண்டவமாட.......
மூச்சை ஆழ்ந்து இழுத்து தன்னை சரி செய்தவன் ,
“சரி ..... டோர் லாக் பண்ணிட்டு .... தூங்கு.....” என்று தலையை அழுந்த இரு கைகளால் கோதியவாறு....... அவள் டோர் லாக் செய்யும் வரை வயிட் செய்துவிட்டு அவன் ப்ளாட்டை நோக்கிச் சென்று விட்டான்.
‘இவனுக்கு என்னமா கோவம் வருது.. பயபுள்ள பொங்குற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்தது?.............. கடசில நம்பரத் தராம போயிட்டானே......’ என எண்ணியவாறு உறங்க சென்றாள்.