• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பகுதி -10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai
மறுநாள் மிருதுளா கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. ஒரே ஒரு பெட்டியோடு தான் வந்தாள். அந்த ஒரே பெட்டியோடு தான் இப்போதும் கிளம்பினாள். உடைகளையும் படிப்புச் சான்றிதழ்கள் (certificate) , பாஸ்புக் (bank pass book) தவிர வேறு பெரிய உடைமைகள் எதுவும் இல்லை. அவளுக்காக அம்மா சேர்த்து வைத்திருந்த கொஞ்சம் பணத்தையும் வங்கி வாக்குக்கு டெபாசிட் செய்து, அதில் அவளுக்கான நகைகளையும் வைத்து விட்டிருந்தான் குரு. அதனால், கையில் கனம் அதிகமில்லை. மனதில் தான் அதிக அளவில் கனமிருந்தது.


குழந்தையை விட்டுக் கிளம்பும் போது அழுதே விட்டாள்.


இதயா ,. " டோன்ட் க்ரியேட் எ சீன்" (don't create a seen) என்று அடிக்குரலில் அதட்டியவுடன் தான் சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டாள்.


தூங்கி எழுந்தவுடன் நீ இல்லாட்டி அழுது ரகளை செஞ்சுடுவா. அதனால நீ ஊருக்குப் போற விஷயத்தை பக்குவமா அவகிட்ட சொல்லிட்டே கிளம்பும்மா" என்று பாகீரதியம்மாள் சொன்னதால், இரண்டு நாட்களாகவே தான் ஊருக்குப் போகப் போவதை குழந்தையிடம் சொல்லி இருந்தாள்.


ஏன், எதற்கு, மாமா என்றாள் யார்? கல்யாணம் என்றால் என்ன என்று ஆயிரம் கேள்விகளை குழந்தை கேட்டு குடைந்து விட்டாள். எல்லாம் விளக்கமாய் எடுத்துச் சொல்லி, "நான் சீக்கிரமா திரும்பி வந்துடுவேன். நீ அதுவரை பாட்டியை படுத்தாம, சமந்தா யாழ்ம்மா கிட்ட இருக்கணும், சரியா?" என்று படித்துப் படித்து சொல்லி இருந்தாள்.


யாழ்லுவை 'யாழ்ம்மா' என்று அழைக்கப் பழக்கி இருந்தான் இதயா .


" சரி, சரி". என்று தன் குண்டு கருப்பு கன்னங்கள் அதிர, தோடு ஆட முடிக்கற்றைகள் பறக்க தலையாட்டினாள் ரக்ஷ்னா.


ஆனால், பொட்டியுடன் அவள் கிளம்பியவுடன் "ஓ" என்று அழத் துவங்கி, "நானும் உன் கூட வருவேன்" என் அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.


மிருதுளா வாரி அனைத்து சமாதானப்படுத்த முயல, இதயா பளிச்சென குழந்தையை பிடுங்கிக் கொண்டு, "ம்... நீங்க கார்ல ஏறுங்க. வண்டி போயிடும்.. குழந்தையை நான் சமாளிச்சுக்கறேன்" என்றான்.


மிருதுளாவுக் மனமே இல்லை. குழந்தை கதறக் கதறக் விட்டுச் செல்வதா என்று மனம் கரைந்தது.


பாகீரதியம்மாளிடம் கூட சொல்லிக் கொள்ள முடியாத அளவு தொண்டையை துக்கம் அடைத்தது. மெல்ல தலையாட்டிவிட்டு விருட்டென காரில் ஏறிக் கொண்டள்.


பாகீரதியம்மாளும் கண்களைத் தழைத்துக் கொண்டு கண்ணீரை வெளிக்காட்டாமல் உள்ள சென்று விட கூறும் குழந்தையை சமாளிக்க முடியாமல், இதயா சற்று திண்டாடித் தான் போனான். யாழ் ஒடி வந்து குழந்தையின் கவனம் திருப்பி, விளையாட்டுக் காட்டி ஏதாவது முயன்று அழுகையை நிறுத்துவாள் என்று எதிர்பார்த்தான். அவளோ, தனக்கு சம்பந்தமில்லா நாடகத்தை வேடிக்கை பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தாள்


அழுது சாப்பிட மறுத்து, ராகளை செய்து. குழந்தை ஒரு வழியாய் தூங்கிப் போன போது, இதயா ரொம்பவே அலுத்துப் போயிருந்தான்!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்
இதயாவுக்கு தலை இடி ஸ்டார்ட்டிங்கா?
ஹா ஹா ஹா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top