JeyaBharathi
மண்டலாதிபதி
ஐஸ்வண்டி அறைகூவலில்
பனிசுவை வாகைசூட
அடப்போர் புரிந்த
பால்ய காலங்கள்..
விழிகரைத்து மனம்கரைத்து
விருந்தாக்கிய பனிசுவையில்
விருந்தாடவந்த சளியும் ஃபுளூவும்
நெஞ்சோர நினைவுகளில் கதகதப்பாய்..
தேங்காயென நம்பி
இஞ்சி ஐஸுக்கு வஞ்சமான
பிஞ்சு பருவ நியாபகங்கள்...
சொட்டிய துளிகள் தூவி
பண்ணிய உடையலங்காரம்
பரிசளித்த அம்மா கைரேகைகள்..
இன்னும் நினைவீர பிசுபிசுப்பாய்...
கைதான சேமியா ஜவ்வரிசி
கரைதலில் விடுதலையாகி
கடவாய் பல்லுறைய
கொலையான பால்ய சம்பவங்கள்...
ஏதுமில்லா இன்றைய கீரீமி ஐஸ்..
உறிஞ்சலில்
உயிர்துறக்கும் வண்ணங்களின்
மவுனக் கரைதவத்தில்
மனமுருக்கும் நியாபக பேரிரைச்சல்..
தற்கொலை தாக்குதலாய்
உருகி கரையும்
பால்ய பயோவெப்பன் - எனினும்
தேன் நினைவுகள் சுரக்கும்
பால்ய நினைவலைகளின்
பனிக்கட்டி கருவறை..