கவிதைகளின்காதலன் ,
என் கனவுகளின் நாயகன் ,
முறுக்கு மீசையில்
தமிழை தலை நிமிர்த்தி வைத்தவன்..
எழுத்தால்
என்ன செய்ய முடியும்
என எண்ணியவர்
முன்னிலையில் ,
எழுத்தால்
எதையும் செய்ய முடியும் என எடுத்துக் காட்டியவர் ..
அச்சம் நாணம் மடம் என அடைமொழி கொடுத்து பெண்மையை அடக்க துடித்தவர்,
மத்தியில் ,
அவை ,நாய்களுக்கு வேண்டுமாம், நங்கையே உனக்கு இல்லை என இடித்துக் கூறி,
நிமிர்ந்த நன்நடை ,
நேர்கொண்ட பார்வை
என புதுமை பெண்ணிற்கு
புது இலக்கணம் வகுத்தவர்.
சுதந்திரமே தாரக மந்திரம்
என கொண்ட
எண்ணங்கள் என்ற எண்ணை ஊற்றி,
கவிதை வேள்வி நடத்தி,
சுதந்திர தீயை,
ஆங்கிலேயரின் அடக்குமுறையில்,
அடிமைத்தளையில்
அடைபட்டுக் கிடந்த
இந்தியர்கள் நெஞ்சில் வளர்த்தவர் ..
கவிதை சாட்டைகொண்டு,
மூடநம்பிக்கையின்
முதுகுத் தோலை உரித்தவர்..
மரபின் மரங்கள்
வானுயர வளர்ந்த
கவிதை காட்டில்,
புதுக்கவிதை என்னும்
மரபணு மாற்றப்பட்ட விதைகளை வனமெங்கும் வீசிச் சென்றவர்..
உன்னை போல்
ஒரு கவிஞன்,
உன்னை போல்
ஒரு மாமனிதன்,
இந்த பூமியில் மீண்டும்,
பிறந்திட கூடுமோ????