இருளோடு நிலவு கூடும்
இரவு நேரத்தில்,
இமையோடு நீரும் சேரும்
கண்ணின் ஈரத்தில்,
இதயம் இருக்கும் இடத்தில்
எவரோ அழுத்தத்தை கூட்டி வைத்து,
மனமும் மூளையும் செயல் இழந்து
மரத்து போகும் நொடியில்,
நாசியில் இதமாய் பரவிய உன்
வாசத்தில் உள்ளுக்குள் கரைந்து போக,
வெளியில் மட்டும் ஏனோ
வீராப்பாய் நின்று இருக்க,
கண்ணில் காதலை கண்டாயோ?
தனியே கஷ்டத்தை அனுபவிக்காதே
உன்னோடு நான் என்றும் இருப்பேன்
என்று கூறி அணைத்தாயே!
கூறா வார்த்தைகளின்
அர்த்தம் அறிந்தாயோ?
மௌனத்தின் பாஷையில்
பிஎச்டி பெற்றாயோ?
என் கர்வம் உன் காலடி
தூசியில் அழிந்ததடா!
இரவு நேரத்தில்,
இமையோடு நீரும் சேரும்
கண்ணின் ஈரத்தில்,
இதயம் இருக்கும் இடத்தில்
எவரோ அழுத்தத்தை கூட்டி வைத்து,
மனமும் மூளையும் செயல் இழந்து
மரத்து போகும் நொடியில்,
நாசியில் இதமாய் பரவிய உன்
வாசத்தில் உள்ளுக்குள் கரைந்து போக,
வெளியில் மட்டும் ஏனோ
வீராப்பாய் நின்று இருக்க,
கண்ணில் காதலை கண்டாயோ?
தனியே கஷ்டத்தை அனுபவிக்காதே
உன்னோடு நான் என்றும் இருப்பேன்
என்று கூறி அணைத்தாயே!
கூறா வார்த்தைகளின்
அர்த்தம் அறிந்தாயோ?
மௌனத்தின் பாஷையில்
பிஎச்டி பெற்றாயோ?
என் கர்வம் உன் காலடி
தூசியில் அழிந்ததடா!