• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மறுமணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
இதுவும் அதே போட்டிக்கு எழுதின கதை தான் ???
படிச்சிட்டு சொல்லுங்க ப்ரண்ட்ஸ்
71dc3fcde3064d4027f8bfd0bf2d0e9726602133.jpeg

"மாதவி கையில் இருக்குற மருதாணி சிவக்கிறதை வைத்து தான் உங்க காதலின் அளவை பார்க்கனும் மாப்பிள்ளை சார்!" என்று ராகவனை கேலி செய்தது அந்த தோழியர் பட்டாளம்.

மாதவி வீட்டில் அவர்கள் காதலை ஏற்காமல் வேறு மாப்பிள்ளைக்கு மணமுடித்து ஒரு வருடத்திலேயே விதவையாய் நின்றார் கைக்குழந்தையுடன்.

மாதவியின் பழைய காதல் கதையை முதல் வாரம் அவர் சொல்ல மறுவாரம் திருமணத்தை ஏற்பாடு செய்தனர் அவரின் பக்கத்து வீட்டிற்கு புதிதாய் வந்த கல்லூரியில் பயிலும் தோழியர் நால்வர். ராகவனும் காதல் தோல்வியில் வேறு மணமுடிக்காததால் எல்லாம் சுமூகமாக நடந்தேற, மாதவிதான் தன் மகள் சித்ரா இந்த திருமணத்தை ஏற்பாளா என்று பயத்துடனேயே ராகவன் கரங்களில் தாலியேற்றார்.

திடீரென அங்கு அழகு தேவதையாய் ஓர் சுட்டிப்பெண் இளஞ்சிவப்பு நிற பாவாடை சட்டையில் வந்து நேராக மாதவியிடம் சென்று கையிலிருந்த பரிசை நீட்டி, "ஹேப்பி மேரீட் லைஃப் அம்மம்மா!" என்று முத்தமிட முயல, மாதவி குனியும் முன்னர் அந்த வாண்டை தூக்கி முத்தமிட வைத்தார் அவளின் தாயும் மாதவியின் மகளுமான சித்ரா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top