மாடிவீட்டு தமிழரசி... நான் படிக்கிற ஷாந்தினி அவங்களோட முதல் கதை. எபி கொடுக்காம ரொம்பவே சோதிச்சிட்டாங்க. இப்ப தான் நேரம் கிடச்சது இதோ படிச்சிட்டேன்.
அழகான கிராமத்து கதை.
இயற்கையின் வர்ணனை காட்டும் நேர்த்தியான எழுத்துநடை.
கதையின் தலைப்பே வித்தியாமாய், கதையின் கரு கொஞ்சம் திடுக்கிட தான் செய்தது என்னை. 'ஐயோ, சாதி பேதம் கலப்பு காதல், கல்யாணம் பற்றிய கதையா?' யாருக்கு என்னாகுமோ என்ற பயத்துடன் தான் படிச்சேன்.
ஆனால், அழுத்தமான காட்சிகளையும் எதார்த்தமாக இலகுவாக தந்தது எனக்கு ஆசுவாசமாகவே இருந்தது.
ஆலமரத்தான் சாதி வெறியும், மேலுக்கு அவர் போட்டிருக்கும் பெரிய மனிதத்தன போர்வையையும் வெகு நேர்த்தியாக கதையில் தந்திருப்பது அருமை.
தந்தையிடம் செல்லம் கொஞ்சும் தமிழரசி, அழுக்கு சட்டை பையன் அழகு மீது ஆசை கொள்வது, அவளின் உறுதி, தெளிவு எல்லா இடங்களிலும் அழகோ அழகு.
ஐயாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் அழகேசன், அவரை மீற முடியாமலும், தமிழின் காதலை ஏற்கவும், தவிர்க்கவும் முடியாமல் தவிப்பது சுவாரஸ்யம். அன்பரசி, அழகேசன் அண்ணன், தங்கை பாசம் மனதில் நிறைகிறது.
வயலையும் இயற்கையும் ரசிக்க வந்த அமுதன், அன்பரசியின் துறுதுறுப்பில் வீழ்ந்து போவதும், அவர்களின் காதல் காட்சிகளும் எதார்த்தம்.
கிராமத்து காதல் என்றாலே அழகுதான். அதுவும் அந்த திருட்டு தனமான சந்திப்புகள் ரசனையானவை அவற்றை குறைவற்று தந்திருக்கிறார் ஆசிரியர்.
காதலில் பெண்கள் இருவரும் உறுதியாக நிற்பதும், சிலுக்கு அவரின் கதாபாத்திரமும் ஆழம்.
கதையின் முடிவு நான் நிச்சயம் எதிர்பாராதது. எதார்த்தமான நிறைவான முடிவும் கூட.
மாடிவீட்டு தமிழரசி படிக்காதவங்க படிச்சு பாருங்க ஃப்ரண்ஸ்.
வாழ்த்துக்கள் ஷாந்தினி தாஸ்
அழகான கிராமத்து கதை.
இயற்கையின் வர்ணனை காட்டும் நேர்த்தியான எழுத்துநடை.
கதையின் தலைப்பே வித்தியாமாய், கதையின் கரு கொஞ்சம் திடுக்கிட தான் செய்தது என்னை. 'ஐயோ, சாதி பேதம் கலப்பு காதல், கல்யாணம் பற்றிய கதையா?' யாருக்கு என்னாகுமோ என்ற பயத்துடன் தான் படிச்சேன்.
ஆனால், அழுத்தமான காட்சிகளையும் எதார்த்தமாக இலகுவாக தந்தது எனக்கு ஆசுவாசமாகவே இருந்தது.
ஆலமரத்தான் சாதி வெறியும், மேலுக்கு அவர் போட்டிருக்கும் பெரிய மனிதத்தன போர்வையையும் வெகு நேர்த்தியாக கதையில் தந்திருப்பது அருமை.
தந்தையிடம் செல்லம் கொஞ்சும் தமிழரசி, அழுக்கு சட்டை பையன் அழகு மீது ஆசை கொள்வது, அவளின் உறுதி, தெளிவு எல்லா இடங்களிலும் அழகோ அழகு.
ஐயாவின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் அழகேசன், அவரை மீற முடியாமலும், தமிழின் காதலை ஏற்கவும், தவிர்க்கவும் முடியாமல் தவிப்பது சுவாரஸ்யம். அன்பரசி, அழகேசன் அண்ணன், தங்கை பாசம் மனதில் நிறைகிறது.
வயலையும் இயற்கையும் ரசிக்க வந்த அமுதன், அன்பரசியின் துறுதுறுப்பில் வீழ்ந்து போவதும், அவர்களின் காதல் காட்சிகளும் எதார்த்தம்.
கிராமத்து காதல் என்றாலே அழகுதான். அதுவும் அந்த திருட்டு தனமான சந்திப்புகள் ரசனையானவை அவற்றை குறைவற்று தந்திருக்கிறார் ஆசிரியர்.
காதலில் பெண்கள் இருவரும் உறுதியாக நிற்பதும், சிலுக்கு அவரின் கதாபாத்திரமும் ஆழம்.
கதையின் முடிவு நான் நிச்சயம் எதிர்பாராதது. எதார்த்தமான நிறைவான முடிவும் கூட.
மாடிவீட்டு தமிழரசி படிக்காதவங்க படிச்சு பாருங்க ஃப்ரண்ஸ்.
வாழ்த்துக்கள் ஷாந்தினி தாஸ்