ஷ்யாமளன்....பெயரே மயக்கும்...இன்றும் அவன் பெயர் கேட்டாலே தன்னை மறந்து கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்குவிடுவர் அவனின் தீவிர ரசிகைகள்.அந்த ஷ்யாமளனை எனக்கு எப்போது பிடித்தது?
ஏர்போர்ட்டில் சண்டையிட்ட மஹாவை மிர்ச்சிகுல்பி என்றானே அப்போதா!
மஹா செருப்பை விட்டெரிந்த போது கோபம் கொண்டானே அப்போதா!
மஹாவின் பாட்டில் மயங்கினானே அப்போதா!
ஹரஹர மஹாதேவ்கி என்று கூறி சிரித்தப்போதா!
சின்னஞ்சிறு சிசுவை கண்கலங்க கைகளில் ஏந்தியப்போதா!
மஹாவிற்கு ஏதோ ஆகிவிட்டதோ என கலங்கித் தவித்தப்போதா!
மூச்சுமுட்ட அவளுக்கு முத்தமிட்டப்போதா!
அவள் தன் காதலை உணரும் வரை காத்திருந்தப்போதா!
ரௌத்திரம் பொங்க பொய்க் கூறிய வரை அடித்தப்போதா!
தன்னவள் அழுவதைத் தாங்காது அவன் கோபம் கொண்டு எழுந்த போதா!
தன் கெட்டதான வீடியோக் காட்சியை தன்னவள் காட்டியபோது அருவருத்தப்போதா!
தன்னால் வளர்ந்து தனக்கே குழிப் பறித்தவனை ஓட ஓட அடித்து வீழ்த்தியப்போதா!
மஹாவைத் தேடி கலங்கித் தவித்து கண்ணீர் விட்டப்போதா!
தன் கர்வம் ஒழித்து அவளிடம் மன்னிப்பை யாசித்த போதா!
தங்கள் காதலில் கனிந்த மகளைக் கொண்டாடிய போதா!
பகைவனுக்கருள்வாய் என அவனையும் மன்னித்தப் போதா!
எப்போது என நான் அறியேன்.......கற்பனை பாத்திரம் என எண்ணாமல் அந்த ஷ்யாமளனை ஒருமுறை காணத் துடிக்கும் ரசிக்கைகளில் இனிமேல் நானும் ஒருத்தி!