இந்த கதை எனக்கு கொடுத்த உணர்வு, "பொறி பறக்க ஒரு தீபாவளி கொண்டாடியது போலிருந்தது. " கதையின் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு எதிர்பார்ப்புடன் அதிரடியாய் கதை நகர்ந்தது அருமை........நிச்சயம் இந்த மோகினியிடம் அனைவரும் மயங்கி விட்டோம்....வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி............
வெகு சூப்பரான அதிரடி கலக்கலான விறுவிறுப்பான குறுநாவல் அருமை. சமீரின் நகைச்சுவை சூப்பர். காண்டாமிருகத்திடமிருந்து சமீர் தப்பிட்டான் மாட்டினது பரி தானே. மகிழினி மிக அருமையான பெண். சின்னப் பெண்ணா இருந்தாலும் தக்க சமயத்தில் புருசனுக்காக பொங்கிட்டாளே சூப்பர். பரி ஆரம்பத்தில கெட்டவனா இருந்தாலும் மகிழ் மேல் இருந்த காதலால நல்லவனா மாறிட்டான். செளந்தர்யாவுக்கு நல்லது பண்ணிட்டான். நான் கூட பரி தான் செளந்தர்யாவை சும்மா கடத்திவைச்சிருக்கின்றான் மகியைக் கட்டுறதுக்கென்று நினைத்தேன். ஒரே பெயர் கொண்ட இருவர் சந்தர்ப்ப வசத்தால் காதல் வயப்பட்டது தெரியாதே. எல்லா பாத்திரங்களுமே அருமை. மோகினி என்றால் பயமிருக்கும் ஆனால் இந்த மோகினி பரியை மட்டுமில்லை எங்களையும் தன்வசப்படுத்தி விட்டாள். குறு நாவல் போட்டியில் தாங்கள் வெற்றி பெறமனமாற வாழ்த்துகின்றேன். நன்றி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.