ஹாய் தோழிஸ் அடுத்த எபிசொட் போட்டுட்டேன்.. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.. முந்துன எபிக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் இட்ட அனைவர்க்கும் நன்றிகள். silent ரீடர்ஸ் அப்படினு யாராவது இருந்தா கதை முடிய போகுது உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க தோழிஸ்... ஹாப்பி ரீடிங்...
23
23
யாதவ் வந்திருந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியுடன் அவன் இருக்கும் இடத்தை அடைந்த ஷா, அவனை பார்த்தவாறு நின்று விட்டாள்.
இந்த யாதவ் புதிதாக தெரிந்தான். என்ன வித்தியாசம் என்று கேட்டால் தெரியவில்லை? ஏதோ வித்தியாசத்தை அவனிடம் உணர்ந்தாள். என்ன மாற்றம் என்று கூர்ந்து பார்க்க, ஆம் அவன் பார்வையில் தான் ஏதோ மாற்றம். உயிர் குடிக்கும் பார்வை.
அவனிடம் எப்பொழுதும் அவள் உணர்ந்தது அவளை ஆளவே அவனது பார்வை விளையும். இப்பொழுது எதுவோ, வித்தியாசமாக, அதற்கு நேர்மாறான பார்வை, சரியாக சொல்ல வேண்டுமென்றால் அவனது பார்வை இவளை ஆராதித்துக் கொண்டிருக்கிறது.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் இப்படி தான் தனது காதலனை பார்த்திருப்பாளோ? மீரா தனது கண்ணனை பார்வையால் இப்படி தான் உயிர் பறிக்க நினைத்திருப்பாளோ??
ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற யோசனையுடன் அவன் அருகில் சென்றாள் ஆரு.
அவள் அந்த அறையின் உள்ளே நுழைந்ததில் இருந்து தன்னை வந்து அடையும் வரை ஆருவை கண் அகலாமல் பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான் யாதவ்.
தனக்கு அருகில் ஷா வரவும் எழுந்து நின்ற யாதவ் ஷாவினது கரங்களை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டான். ஷாவிற்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவே இல்லை. அமைதியாக அவனை பார்த்தவாறே தனது கரங்களை அவனது கரங்களுக்குள் கொடுத்துவிட்டு நின்றாள்.
கங்கா முழுதாக சந்திரமுகியாகிய தருணம் போல், ஷா முழுதாக ஆருவாக மாறிய தருணம் அது. அதை ஷா உணர்ந்து இருந்தாலோ என்னவோ யாதவ் முழுமையாக உணர்ந்தான்.
"ஹோல்டு மீ டைட்..!" என்று யாதவ் ஷாவின் கண்களை பார்த்துக் கூற, ஷா சிரிப்புடன் என்ன என்பது போல் அவனை பார்க்க, "ப்ளீஸ் ஹோல்டு மீ...!"என்க
யாதவை தன்னால் முடிந்தவரை இறுக அணைத்துக் கொண்டாள் ஆரு. எப்பொழுதும் போல் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் சில நாட்களுக்கு பிறகு தாயிடம் வந்து சேரும் குழந்தை எப்படி தனது தாயை வாசத்தின் மூலம் உணர துடிக்குமோ அப்படி அவளது வாசத்தை தனக்குள் கொண்டுவந்தான்.
அவளது தோளில் முகம் புதைத்துக் கொண்டு ஷாவை இறுக அணைத்தவாறு "ஆரு.."என்று யாதவ் அழைக்க,
அவனது அணைப்பில் வார்த்தையில் வடிக்க இயலா, ஒரு நிம்மதியில், ஆத்ம திருப்தியில் இருந்த ஆரு "என்ன?" என்று அவனின் முதுகில் தனது விரல்களால் கோலமிட்டவாறு கேட்க,
இன்னும் புதைந்தவாறு "எனக்கு பயமா இருக்கு ஆரு"என்று கூற,
அவனின் உடலின் நடுக்கத்தின் மூலம் யாதவ் உண்மையில் ஏதோ ஒரு பயத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொண்ட ஷா, அவனது முதுகை வருடி அவனது நடுக்கத்தை குறைத்தவள் "ஏன்?" என்று அவனது நாடியில் முத்தமிட்டு அவனது முகத்தை அண்ணாந்து பார்த்து கேட்க,
அணைப்பில் இருந்தவாறே குனிந்து அவளது முகத்தை பார்த்த யாதவ் "நீ இல்லாத இந்த மூணு நாள் நான் பட்ட அவஸ்தை வாழ் நாள் முழுக்க பட்ருவேனோனு பயமா இருக்கு ஆரு... என் வாழ் நாள் முழுக்க நீ வேணும். என் கூடவே நீ வேணும். தூங்கும் போது கட்டி பிடிச்சுக்க, காலைல ரன்னிங் போக, டீயை ரசிச்சு குடிக்க, இன்ஸ்டால அழகா ஜோடியா போஸ்ட் போட, எங்க அப்பன் ரகுவரனை லெப்ட் ரைட் வாங்க, இன்னும் என்ன என்னவோ பண்ண நீ எனக்கு வேணும். நீ மட்டும் போதும். எஸ்.. ஐ லவ் யு சோ சோ சோ சோ சோ மச்..." என்று யாதவ் ஆரம்பித்த பொழுதே சிறிது சிறிதாக அவனது அணைப்பை விலக்கி, அவன் ஐ லவ் யு சொன்ன போது முழுவதுமாக அவனை விட்டு விலகிருந்தாள் ஷா.
அவளின் பதிலுக்காக யாதவ் அவனது ஆருவை பார்த்தான். எதை அவள் அவன் வாயிலிருந்து கேட்க கூடாது என்று நினைத்தாளோ அதுவே கேட்டுவிட்டாள்.
ஆனால், அவளுக்கு ஒன்று புரியவில்லை கோவம் வருவதற்கு பதில் இந்த மனது ஏன் இப்படி இவ்வளவு அமைதியை தத்தெடுத்து கொண்டு இருக்கிறது என்று புரியாமல் அவனுக்கு பதில் கூட சொல்லாமல் நின்றாள் ஆரு.
அவள் யாதவை காதலிக்கிறாளா? என்றால் கிடையவே கிடையாது. இல்லை இவள் அதை உணரவில்லையா எப்படியோ இப்பொழுது இல்லை. அவள் மனது அவளுக்கே குழப்பமாக இருந்தது.
அவள் மௌனத்தை தாங்க முடியாத யாதவ் "ஆரு.."என்று அழைக்க, அவனை பார்த்தாள் ஷா. ஆனால், பதில் பேச வில்லை.
"சே சம்திங் ஆரு..?" என்று யாதவ் கண்களில் மொத்த உயிரையும் தேக்கி, குரலில் காதல் சொட்ட அவளது கரங்களை பிடித்துக் கொண்டு கெஞ்சாத குறையாக கேட்டான்.
அவனது கரத்தின் சூட்டில், உணர்வு வர பெற்றவள், இணைந்திருந்த தங்களது கரங்களை சில நொடிகள் என்னவென்று புரிந்து கொள்ள முடியாத உணர்வுடன் பார்த்தவள்; ஒரு முடிவுடன் அவனது கரத்திலிருந்து தனது கரத்தை பிரித்தெடுத்து விட்டு, பார்வையை யாதவின் கண்களுக்கு மாற்றியவள் தனது செப்பு வாய் திறந்தாள்.
"எனக்கு இந்த காதல் கருமம் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது யது.என்னால யாரையும் காதலிக்க முடியாது… உணர்வுகளை புரிஞ்சுக்க முடியாத, கையாள தெரியாத ஜடம் நான்.ப்ளீஸ் பைத்தியம் மாதிரி உளறாம கிளம்பு..." என்று கூறியவாறு ஆரு தனது வேலையை பார்க்க திரும்ப,
அவள் செய்வதெல்லாம் ஆரம்பித்திலிருந்து கவனித்து கொண்டிருந்த யாதவிற்கு அவளது தடுமாற்றம் நம்பிக்கை அளித்தது. தன்னை காதலிக்கிறாள் என்று முழுமையாக நம்பினான். இணைந்திருந்த கரங்களை பார்த்தபோது அவள் கண்கள் காட்டிய செய்தியை சரியாக புரிந்து கொண்டான்.
ஆருவின் கரத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன்
"ஏன் முடியாது? சிவாவை காதலிச்ச தானே. அப்ப உன்னால காதலிக்க முடியும். புரிஞ்சுக்க முடியும்" என்று கூற, அவனை சந்தேகமாக பார்த்தவள்
"ஆமாம் , சிவா மேட்டர் எப்படி உனக்கு தெரியும்?" என்று ஆருஷாவாக கேட்க,
"ஆமாம் அது பெரிய ராணுவ ரகசியம். அவங்க கல்யாணத்துக்கு முதல் நாள் நாம பண்ண அட்டகாசம் எல்லாம் மறந்து போச்சா? நீ தான் டி குடிச்சுட்டு உளறுன..." என்று யாதவ் கூற,
"அட ஆமாம்ல…" என்று வாய் விட்டு ஆருவாக கூறியவள், சில நொடிகளுக்கு பிறகு
"சிவா விஷயம் வேற... அவன் என்னோட பதிமூணு வயசுல இருந்து என்னை பார்த்துக்கிட்டவன். என் கூட இருந்தவன். அவன் என்னை காதலிக்கிறேன்னு என்கிட்டே வந்து ப்ரொபோஸ் பண்ணப்ப நன்றி கடனா நினைச்சு தான் அவனுக்கு ஓகே சொன்னேன். அவன் எப்பயும் என்னை விட்டு போகாம இருப்பான்னு நான் நம்பவே இல்லை. நானும் அவன் கூடவே இருப்பேன்னு எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் நீ அப்படி கிடையாது. உனக்கும் எனக்கும் செட் ஆகாது. எனக்கு காதல் அப்படினா என்னனு கூட தெரியாது"
அவளது பதிலில் இதெல்லாம் தெரிந்தது தானே என்பது போல் பார்த்தவன் "நீ என்னை காதலிக்குற ஆரு.." என்க அவளுக்கு கோவம் வந்துவிட்டது.
இவ்வளவு நேரம் உன்னிடம் இப்படி பேசியதை அதிகம் என்பது போல் இருந்தது அவளது நடவடிக்கை. ஆரு முழுதாக மீண்டும் ஷாவாக மாறிவிட்டாள். வெளியேற துடித்த ஆருவை உள்ளே அழுத்தியவள் சிரிக்க ஆரம்பித்தாள்.