இந்த கவிதை நான் மிகவும் விரும்பி, ரசித்து எழுதிய ஒன்று.. எனக்கு மிக நெருக்கமான ஒன்று??.
"என்ன வேண்டி மடல் வரைய
காணாத என் காதலுக்கு!!
எப்படி தான் தொடங்கி வைப்பேன்
என்னவனே உனக்கெழுத
காதலனே எனக்கூறவா?
வேண்டாம்
காத தூரம் எனை விட்டு செல்லநேர்ந்தால்?
மன்னவனே எனக்கூறவா?
வேண்டாம்
மங்கைகள் பலர் அண்ட நேர்ந்தால்?
உயிரே எனக்கூறவா?
வேண்டாம்
ஒருநாள் எனை நீங்கிவிட்டால்?
அத்தான் எனக்கூறவா?
வேண்டாம்
அதை தான் பலரும் கூறுகின்றனரே!!
"நான்" என விளிக்கிறேன்!!!
என்னுள் நீ
உன்னால் நான்
என் வேண்டுதலை கேட்டுக்கொள்
என் விழி தீண்டா என்னவனே!!
வேண்டும் வேண்டும் உனை காணும்
நொடி விரைவில் வேண்டும்!!
உனை கண்ட நொடி என் ஊன்உயிர் உருக வேண்டும்!!
எனை காணும் உன் கண்களுக்கு நம் முன்ஜன்ம பந்தம் அதில்
தெரிய வேண்டும்!!
மாந்தரில்லா உலகம் வேண்டும்!!
அதில் நீயும் நானும் மட்டும் வேண்டும்!!
நம்மை நாம் புரிதல் வேண்டும்!!
நித்தம் நித்தம் உன் அன்பு வேண்டும்!!
கடற்கரை தனில் நாம அமர வேண்டும்!!
அங்கே பாரதி நீ படித்தல் வேண்டும்!!
உன்தோளுடன் நான் சேர வேண்டும்!!
கண்ணம்மாவாய் நான் மாற வேண்டும்!!
நாடி என் நாடி நீ பிடித்தல் வேண்டும்!!
நான் நாண உன் பார்வை வேண்டும்!!
புத்தகம் நீ படித்திட வேண்டும்!! உன்னால்
புதியன பல நான் அறிந்திட வேண்டும்!!
என் உச்சி முகர்ந்த உன் முத்தம் வேண்டும்!!
உன் இதயம் கேட்க வாகாக என் உயரம் வேண்டும்!!
காதல் பல பேசிட வேண்டும்!!
சின்ன சின்ன தீண்டல்கள் வேண்டும்!!
மனம் தனில் மகிழ்ச்சி வேண்டும்!!
மனநிறைவு அதிகம் வேண்டும்!!
திருமாங்கல்யம் நீ பூட்டிட வேண்டும்!!
வினைத்தொகையாய் உன் காதல் வேண்டும்!!
உலகத்தவர் முன் சிறந்து வாழ வேண்டும்!!
என் உலகமே நீயாக மாற வேண்டும்!!
கானம் நானும் பாடிட வேண்டும்!!
என் காதுமடல் வருடி அதை கேட்டிட வேண்டும்!!
நெஞ்சமொத்த மஞ்சம் வேண்டும்!!
அதில் காமம் மிஞ்சிய காதல் வேண்டும்!!
சின்ன சண்டை போட்டிட வேண்டும்!!
சில நொடியே அதை மறந்திட வேண்டும்!!
ஊடல் கூடிய காதல் வேண்டும்!!
உன்மத்தம் உன்மேலாகிட வேண்டும்!!
நம் சந்ததி நாம் கண்டிட வேண்டும்!!
நம் காதலால் அதை விதைத்திட வேண்டும்!!
உன்னை போல் ஒரு மகவு வேண்டும்!!
உன்னையே அதில் நான் காண வேண்டும்!!
கட்டிலில் கண்ட இறை தனை
தொட்டிலில் நாம் ஆட்டிட வேண்டும்!!
மசக்கையின் அவதியில் சிக்கும் தருணம் என்
தலையணையாய் நீ மாற வேண்டும்!!
நகரும் உயிரை ரசித்தபடி நாம்
ஆனந்த கூத்தாடிட வேண்டும்!
மறுபிறவி நான் எடுக்கையிலே மறுகணமே உன்னை நான் காண வேண்டும்!!
தாயாய் உன் ஸ்பரிசம் வேண்டும்!!
தந்தையாய் தலை கோதிட வேண்டும்!!
நம்மை போல் எத்தனை உயிர்வரினும்
உன் உள்ளம் மட்டும் எனக்கு வேண்டும்!!
அகவைகள் நாம் கடந்தாலும் உன்
அருகாமை என்றென்றும் வேண்டும்!!!
உனை இறுக்கி அணைத்து உறங்கிட வேண்டும்!!
அது நமக்கு விழிக்கா துயிலாய் அமைந்திட வேண்டும்!!
வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்!!
உன் போன்ற என்னவன் அடுத்த பிறப்பிலும் வேண்டும்!!
கண் காணாத என் கண்ணாளனே
கனவுகள் பல சுமந்து உனைத் தேடி அலைகிறேன்!!
திகட்டாத காதலுடன் உன் விழி வேண்டி காத்திருக்கும்
உன்னவள்?"