• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Alagiyin kaadhal thavam - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
வாவ் சூப்பர்....ஓநாயும் சிங்கமும் மோதப்போகிறது அழகிய புள்ளிமானுக்காக....It's a fantastic fantasy....
வாழ்த்துக்கள் சிஸ்...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
interesting epi sis .ippo enna fasil young aayitana........... aadhi kandu pidithu vituvanafasilin puthu avatharathai .......... waiting sis
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Superb ud:) but marriage yen stop pannitanga...... Hero ku just andha one second than palaya memory vandhucha... Full ah avanuku nyabagam varalaiya:unsure: interesting:). Waiting for the next ud(y)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அவனின் உணர்வுகளை புரிந்து கொண்டவள், அவனுக்கு தான் என்ன சொல்லி தேற்றுவது என்று புரியவில்லை. சிறிது நேரம் கழித்து, ஒரு முடிவுக்கு வந்தவள் அணைத்து இருந்த அவனின் கைகளை எடுத்து, தன் கன்னத்தில் வைத்தவள் அவனின் கண்களை நேராக பார்த்து கூற தொடங்கினாள்.

“உங்களுக்கு அவனை கொல்லனும் தோணுதுன்னா, தைரியமா அவனை கொன்னுடுங்க. என்னை நீங்க நிச்சயம் காப்பாத்துவீங்க, நாம சந்தோஷமா வாழ தான் போறோம்” என்று அவன் கண்களை நேராக பார்த்து கூறினாள்.

அதுவரை கொலை செய்து விடுவோமோ, என்ற பயத்தில் இருந்தவன், தன்னவள் அவன் என்னை ஏதும் செய்ய துணிந்தால் தயங்காமல் கொன்று விடு என்று கூறவும், மனதில் உள்ள பாரம் நீங்கி சற்று லேசாக கூட உணர்ந்தான்.

அதன் பின் அவள் கீழே எல்லோரும் இருப்பதை கூறி, அவனை அங்கு அழைத்து வந்தாள். அங்கு எல்லோரும் காலை சம்பவத்தை பற்றி, அவனிடம் பேசாமல் அவனின் சிறு வயது சேட்டைகளை கூறி, அவனை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

அவனும் அந்த சம்பவத்தை எல்லாம் நினைத்து பார்த்து, அதை மதிக்கும் பகிர்ந்து கொண்டான். அந்த சூழ்நிலையில், காமாட்சியும் கூட காலை சம்பவத்தை மறந்து அவர்களுடன் உற்சாகமாக உரையாடிக் கொண்டு இருந்தார்.

இங்கே இவர்கள் இப்படி இருக்க, அங்கே பாசில் கொதிநிலையில் இருந்தான்.

“எப்படி? எப்படி இது சாத்தியம்? அவன் மறுஜென்மம் எடுத்து இருக்கிறானா? அதுவும் அவளுக்காக ஜென்மம் எடுத்து இருக்கிறான் என்றால், இந்த முறை பழி வாங்காமல் விட மாட்டான் என்று தானே அர்த்தமாகிறது” என்று யோசித்தவன், கோபத்தில் இருந்த பொருள்களை எல்லாம் உடைக்க தொடங்கினான்.

அவன் தேர்ந்தெடுத்த இரண்டு பேரின் நினைவுகளை அழித்துவிட்டு, அனுப்பி வைத்தான். சில பேரின் நினைவுகளை அழிப்பதில், அவன் வல்லுனன். இதை அவன், தன் மாமனிடம் கற்றுக் கொண்ட வித்தை.

இந்த வித்தையை அவனால் எல்லோரிடமும் பயன்படுத்த முடியாது, ஏனெனில் அவர்கள் இவனை விட அதிக சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இதை அவன் இளவரசியிடம், பயன்படுத்த நினைத்து தோற்று போனான்.

இப்பொழுது, அவன் வயதான முதியவன் போல் இருப்பதை விரும்பவில்லை. இந்த தோற்றத்தை மாற்ற வேண்டும், அதற்க்கு என்ன செய்வது என்று யோசித்தான், அவனுக்கு புலப்படவில்லை. இங்கு இருக்கும் மசூதிக்கு முதலில் செல்ல வேண்டும், என்று நினைத்து பக்கத்தில் எங்கு இருக்கிறது என்று விசாரித்து சென்றான்.

அந்த குறுகிய சந்தில் அமைந்து இருந்த, அந்த பழைய கால மசூதியை பார்த்து மலைத்தான் என்றால், அந்த தெரு முழுவதுமே இஸ்லாமியர்கள் தான் இருந்தனர்.

“என் இனத்தவர்கள்” என்று நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. மசூதிக்குள் இப்பொழுது செல்லும் பொழுது, அங்கே சுற்றும் முற்றும் பார்த்தான்.

ஆங்காங்கே, மந்திரம் ஓதி அவர்களை தேடி வந்த மக்களின் கையில் தாயத்தை கட்டி விட்டுக் கொண்டு இருந்தனர். மற்றொரு இடத்தில், உள்ளே செல்லும் முன் அங்கே போடுவதற்கு துணியை விற்றுக் கொண்டு இருந்தனர்.

ஒரு பக்கம் புனித குரான், அங்கே சிறு புத்தகமாக விற்பனைக்கு இருந்தது. அதை எல்லாம் சுவாரசியமாக பார்த்துக் கொண்டே, உள்ளே செல்ல நினைக்கும் பொழுது அங்கே பார்த்த அதே முதியவர் இவனை பார்த்து சிரிக்க தொடங்கினார்.

“என்ன முதியவரே! அப்படி என்ன சிரிப்பு உமக்கு! என்னை பற்றி தெரியும் தானே உமக்கு! இப்பொழுது, எனக்கு ஒரு வழி கூறும், என்னை இந்த முதிய தோற்றத்தில் இருந்து மாற்றும்” என்று கட்டளையிட்டான் அந்த முதியவருக்கு.

“ஹா ஹா! நீ எப்படி இருந்தாலும், உன் சாவு நிச்சயம். அல்லா உனக்கான நாளை குறித்து விட்டார், இருந்தாலும் உன் கடைசி ஆசையை இப்பொழுது நிறைவேற்றுகிறேன்” என்று கூறி அவனை அங்கு இருந்த சந்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கே வீட்டில் அவனை தியானத்தில் இருக்க செய்து, அவர் குரானில் இருந்த ஒரு முழு மந்திரத்தை ஓத தொடங்கினார். சுமார் நான்கு மணி நேர தியானமும், அவர் ஓதிய மந்திரமும் சேர்ந்து அவனை ஒரு முப்பது வயது இளைஞனாக மாற்றி அமைத்தது.

அங்கே இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவன், மிகுந்த திருப்தி அடைந்தான். அந்த முதியவரை பார்த்தவன், அவர் அடுத்து செய்த செயலில் திகைத்தான். அவர் தன்னை தானே குத்திக் கொண்டு, அல்லா என்று அழைத்து தன் உயிரை மாய்த்து இருந்தார்.

அப்பொழுது, அங்கு இருந்து தப்பிப்பது தான் அவனுக்கு உசிதமானதாக தெரிந்தது. பின் பக்க வழியில், அங்கு இருந்து தப்பிச் சென்றான்.

அந்த முதியவர், மாய்த்துக் கொண்டதற்கு காரணம் ஒரு தீயவனுக்கு உதவி செய்தது, அதுவும் அல்லாவின் உத்தரவில். அவன் வேண்டியதை கொடுத்துவிட்டு, உடனே தன்னிடம் சேர கூறி அல்லா அழைப்பு விடுத்து இருந்ததால்.

அவர் போன ஜென்மத்தில், இவனுக்கு தந்தையாக வாய்த்ததால், அவருக்கு இந்த ஜென்மத்தில் அவனின் கடைசி ஆசையை நிறைவேற்றி செல்ல வேண்டிய கட்டளை இருந்தது. அதை செவ்வன முடித்த கையோடு, அவர் தன்னை அல்லாவிடம் ஒப்படைத்து விட்டார்.

அவனின் தகப்பன் தான், என்று தெரிந்தும் அவர் கூறாமல் இருந்ததற்கு காரணம் எங்கே பிள்ளை பாசம் துளிர் விட்டு, அவனின் தீய எண்ணங்களுக்கு துணை போய் விடுவோமா என்று அஞ்சினார்.

இப்பொழுதோ, அவன் யாரோ அல்லா கொடுத்த கட்டளையை நிறைவேற்ற போகிறேன். இதை நன்றாக மனதில் இறுதிக் கொண்டு தான், அதன் பின் செயல் பட்டார் அந்த தந்தை.

பாசில் அங்கு இருந்து தப்பியவன், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் தினாறினான். ஆனால் அதன் பிறகு, ஆதியின் முகமும், மதியின் முகமும் அவனுக்குள் ஒரு ஆட்டத்தையே விதைத்தது.

“முதலில், என் இடத்திற்கு உன்னை வர வைக்கிறேன் மதி. நீ இங்கு வந்தாலே, அவன் இங்கு வந்துவிடுவான். இம்முறையும், அவனை நானே என் கையால் தோற்கடிப்பேன்” என்று சபதம் செய்து, அடுத்து செய்ய வேண்டிய, ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய தொடங்கினான்.

அவனின் திட்டப்படி, மதியை அவன் கடத்தி வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் முன்னே சீறி பாயும் சிங்கமாக நின்றான் ஆதி.

தொடரும்...
Ada paadhaga kaadathee taan ??evan mugara katta?? evan ilamaiya erundhu ennaatha pudunga poran teriyala adhiiiii vandhuteeya va va vandhu orey phoda da phodu shagattum vittudhu 7 1/2 avan peiru enna pa fazil la ? frog gu nu veichu irukanum? nannari paya ???
Nice ud uma???????
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
superb ud.......
Adhi family ellarum Madhiya purinjikkittanga so cute......Adhikum palasu theliva nyabagam illanallum madhi support fashil pali veri nyabagam vara veachurum....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top