Wowwwww Semma shot and Semma scene naan apdiye stun aaitten Aathi next Baahubali range ku sound vidurane super waiting for the next udஇன்னொரு முறை என்னை கரும்புள்ளி என்று நீ அழைத்தால், அடுத்து உன் உயிர் உன்னிடம் இல்லை. இவள் என்னவள், அவள் மேல் உன் கை பட்டது என்று தெரிந்தாலே, உன்னை தொலைத்து விடுவேனடா சப்பாஹ் பாசில்!” என்று அந்த இடமே அதிரும்படி கர்ஜித்தான்.
“துறவியாரே! அப்பொழுது உமக்கு விபரம் தெரியும், நான் முதியவனாக இங்கு வருவேன் என்று. அதற்க்கான மந்திரத்தை தான், அப்பொழுது உச்சரித்து இருந்து இருக்கிறீர்” என்று மனதிற்குள் கோபம் கொண்டான்.
அப்பொழுது கூட அவன் சேகரித்த விஷயங்களை பார்க்கவில்லை, அவளின் புகைப்படம் மட்டுமே பார்த்துவிட்டு, அவளுக்கு எங்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று அறிந்து, அங்கே அழைத்து செல்லும் படி கூறினான்.
மதியை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. என்ன ஆனாலும் சரி, அவளை தன்னுடன் வைத்து, ஒவ்வொரு நாளும் துன்பம் கொடுக்கலாம் அவளுக்கு என்று எண்ணினான்.
அதற்காகவே, திருமணம் நடக்க போகும் சில மணி நேரத்திற்குள் முன்பே அவன் அங்கே வந்துவிட்டான். அங்கே மணப்பெண் கோலத்தில் மதி இறங்கியவுடன், அவளை பார்வையால் அளந்தான். அவளின் அந்த அழகில் மயங்கி, இந்த அழகியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுப்பதா, அவனால் முடியாது.
அதனால் வார்த்தைகளில் விஷம் தடவி, அவளுக்கு தானும் பின்னேயே வந்து இருப்பதை உணர்த்தினான். யார் என்று திரும்பி பார்த்தவள், அங்கே விகார சிரிப்புடன் இருந்த முதியவரை பார்த்து முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
“இவ்வளவு அலட்சியம் உமக்கு ஆகாது, இளவரசி மதியழகி. உன் கனவில் வந்த பேரழகனை, நீ பார்த்து விட்டாயா? அவனை தான் இப்பொழுது மணம் முடிக்க போகிறாயா?”
“இல்லை, உன் கற்பை பறிகொடுத்து விட்டதால், இந்த அவசர திருமணமா?” என்று கோணல் சிரிப்புடன் அவன் கேட்கவும், காதுகளை மூடிக் கொண்டாள்.
“ஒரு இளவரசியிடம், பேசிக் கொண்டு இருக்கிறோம் என்ற பயமே இல்லை உமக்கு. முதலில், என் கண் முன்னால் வராதே! வேறு எங்காவது தொலைந்து போ!” என்று கம்பீரம் குறையாமலும், அவனிடம் சிறிதும் பயமில்லாமலும் பேசிக் கொண்டு இருந்தாள்.
“ஹா ஹா! நல்ல வேடிக்கை! என்னிடம் இருந்து தப்பிப்பதற்காக தானே, நீ கால சக்கரத்தில் பயணம் செய்து இங்கே ஓடி வந்தாய். இப்பொழுது நான் கிழவனாகிட்டேன் என்று, உமக்கு பயம் போய் விட்டதா?”.
“நான் முதியவனாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இன்னும் உன் மீது அதே மோகம் எனக்கு இருக்கிறது. அதிலும், இப்பொழுது இன்னும் நளினம் கூடி, தேவலோகத்து கன்னிகை போல் இருப்பவளை ருசிக்காமல் விடுவதா” என்று கூறி, அவளை அவன் நெருங்கி வர முயற்சி செய்யவும், மதி சுதாரித்து சற்று தள்ளி நின்று கொண்டாள், அவனுக்கு அகப்படாமல்.
“சீ.. உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் இங்கு இருந்து செல். என் மன்னவன், இப்பொழுது உள்ளே இருந்து வந்து உன்னை பார்த்தால், அடித்து துவசம் செய்து விடுவார், தெரிந்து கொள்” என்று எச்சரித்தாள் மதி.
“அப்படியா! அப்படியானால், நான் அவனை தான் முதலில் பார்க்க வேண்டும், எங்கே வர சொல் அவனை பார்க்கலாம்” என்று அவன் கூறி முடிக்கவும், அங்கே ஆதி வரவும் சரியாக இருந்தது.
“ஹே அழகி! ஏன் அங்கேயே நின்னுட்ட? ஆமா, அம்மா, பிரகதி எல்லாம் எங்கே?” என்று அவளை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தவன்,அவளிடம் வந்து நின்று கேட்டான்.
“அத்தை, பிரகதி எல்லாம் பூ கொஞ்சம் வாங்கிட்டு, சாமிக்கு மாலை சொல்லி இருந்தது வந்துச்சான்னு பார்க்க போய் இருக்காங்க வர்மா” என்று அவள் கூறினாள்.
“இப்படி உன்னை தனியா விட்டுட்டா போனாங்க? சரி வா நாம உள்ளே கோவிலுக்கு போகலாம், அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிக்கலாம்” என்று கூறிக் கொண்டே, அவள் கை பிடித்து அவளை உள்ளே அழைத்து செல்ல நினைக்கும் பொழுது, பாசில் குறுக்கே வந்தான் அவர்களுக்கு இடையில்.
“இளவரசி! தாங்கள் மணம் புரிய போவது, இவனை தானா! கரும்புள்ளி போல் இருக்கிறான், உங்கள் அருகில். இவன் தங்களுக்கு இணையா? இது சரியில்லையே?” என்று தாடையை தடவினான்.
கரும்புள்ளி! கரும்புள்ளி! அந்த வார்த்தை அதை அவன் எங்கேயோ கேட்டு இருக்கிறான், இந்த குரலும் கூட! எங்கே? எங்கே? என்று யோசித்தவனுக்கு தலை விண்ணென்று வலி எடுத்தது.
வலி கொடுக்கவும், அவள் பிடித்து இருந்த கையில் அவன் அறியாமல் அழுத்தம் கொடுத்தான். அவனின் அழுத்தத்தில், அவள் திரும்பி அவனை பார்த்தவள், ஒரு கையால் தலையை பிடித்து கொண்டு வலியில் துடித்துக் கொண்டு இருந்தான்.
“வர்மா! என்ன செய்யுது? வாங்க கோவிலுக்கு போகலாம்” என்று அவனை உள்ளே அழைத்து செல்ல பார்த்தவளை பாசில், அவள் கை பிடித்து தடுத்தான்.
“எங்கு செல்ல போகிறாய்? உனக்கு திருமணம் ஒன்று நடந்தால், அது என்னுடன் தான்” என்று கூறி அவளை பிடித்து இழுக்க தொடங்கினான்.
ஆதிக்கு, அந்த வலியிலும் தன்னவளுக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்த பின்பு, வலியை மறந்து அவளை அவன் பிடியில் இருந்து காப்பாற்ற, அவனை அவளிடம் இருந்து பிரித்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
“உமக்கு எவ்வளவு தைரியம், கரும்புள்ளி இனத்தவனே! என்னை எதிர்த்து நிற்க!” என்று கர்ஜித்தான் பாசில்.
அவன் திரும்ப, திரும்ப கூறும் கரும்புள்ளி பற்றி யோசிக்க, யோசிக்க தலை வலி வந்தாலும், எங்கு? யார் இப்படி தன்னை சொல்லி இருப்பர், என்று யோசித்து பார்த்தவனுக்கு, மங்கலாக சில நினைவு அவனை தாக்கியது.
அந்த தாக்கத்தில் அவன் இருக்கும் பொழுது தான், மீண்டும் பாசில் அவளை, அவனிடம் இருந்து பறிக்க முன் வரவும், அவனை ஓங்கி மிதித்து தள்ளினான்.
“இன்னொரு முறை என்னை கரும்புள்ளி என்று நீ அழைத்தால், அடுத்து உன் உயிர் உன்னிடம் இல்லை. இவள் என்னவள், அவள் மேல் உன் கை பட்டது என்று தெரிந்தாலே, உன்னை தொலைத்து விடுவேனடா சப்பாஹ் பாசில்!” என்று அந்த இடமே அதிரும்படி கர்ஜித்தான்.
அவனின் முழு பெயரை சொல்லி அழைப்பது, மூன்றே பேர் தான். ஒன்று அவனின் மாமா அலிகான், அடுத்து அவனின் குரு, அடுத்து அவன் எதிரி ஆதித்யவர்மா. எதிரில் இருப்பவனை, இப்பொழுது உற்று நோக்கினான் பாசில், அந்த கண்களின் தீட்சண்யம் அவன் யார் என்று காட்டிக் கொடுத்தது.
“உன்னை எத்தனை முறை கொல்வது டா, ஆதித்யவர்மா?”என்று அவனும் இப்பொழுது கண்டுவிட்ட தொனியில் பேச தொடங்கினான்.
அப்பொழுது அங்கே வந்த காமாட்சி, அவர்கள் பேசியதை கேட்டு, அவர் தான் பயந்த மாதிரியே இருவரும் சந்தித்து விட்டதோடு அல்லாமல், ஆதிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதையும் அறிந்து, அவரின் தாயுள்ளம் பரிதவித்து துடித்தது.
தொடரும்...
Fantastic uma romba viruvirupa erugu adhi ya andha padhagan konnutana appo edhu maru pirapu pola eruku adhi ku super super very interesting ?????????????“துறவியாரே! அப்பொழுது உமக்கு விபரம் தெரியும், நான் முதியவனாக இங்கு வருவேன் என்று. அதற்க்கான மந்திரத்தை தான், அப்பொழுது உச்சரித்து இருந்து இருக்கிறீர்” என்று மனதிற்குள் கோபம் கொண்டான்.
அப்பொழுது கூட அவன் சேகரித்த விஷயங்களை பார்க்கவில்லை, அவளின் புகைப்படம் மட்டுமே பார்த்துவிட்டு, அவளுக்கு எங்கு திருமணம் நடக்க இருக்கிறது என்று அறிந்து, அங்கே அழைத்து செல்லும் படி கூறினான்.
மதியை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. என்ன ஆனாலும் சரி, அவளை தன்னுடன் வைத்து, ஒவ்வொரு நாளும் துன்பம் கொடுக்கலாம் அவளுக்கு என்று எண்ணினான்.
அதற்காகவே, திருமணம் நடக்க போகும் சில மணி நேரத்திற்குள் முன்பே அவன் அங்கே வந்துவிட்டான். அங்கே மணப்பெண் கோலத்தில் மதி இறங்கியவுடன், அவளை பார்வையால் அளந்தான். அவளின் அந்த அழகில் மயங்கி, இந்த அழகியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுப்பதா, அவனால் முடியாது.
அதனால் வார்த்தைகளில் விஷம் தடவி, அவளுக்கு தானும் பின்னேயே வந்து இருப்பதை உணர்த்தினான். யார் என்று திரும்பி பார்த்தவள், அங்கே விகார சிரிப்புடன் இருந்த முதியவரை பார்த்து முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.
“இவ்வளவு அலட்சியம் உமக்கு ஆகாது, இளவரசி மதியழகி. உன் கனவில் வந்த பேரழகனை, நீ பார்த்து விட்டாயா? அவனை தான் இப்பொழுது மணம் முடிக்க போகிறாயா?”
“இல்லை, உன் கற்பை பறிகொடுத்து விட்டதால், இந்த அவசர திருமணமா?” என்று கோணல் சிரிப்புடன் அவன் கேட்கவும், காதுகளை மூடிக் கொண்டாள்.
“ஒரு இளவரசியிடம், பேசிக் கொண்டு இருக்கிறோம் என்ற பயமே இல்லை உமக்கு. முதலில், என் கண் முன்னால் வராதே! வேறு எங்காவது தொலைந்து போ!” என்று கம்பீரம் குறையாமலும், அவனிடம் சிறிதும் பயமில்லாமலும் பேசிக் கொண்டு இருந்தாள்.
“ஹா ஹா! நல்ல வேடிக்கை! என்னிடம் இருந்து தப்பிப்பதற்காக தானே, நீ கால சக்கரத்தில் பயணம் செய்து இங்கே ஓடி வந்தாய். இப்பொழுது நான் கிழவனாகிட்டேன் என்று, உமக்கு பயம் போய் விட்டதா?”.
“நான் முதியவனாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் இன்னும் உன் மீது அதே மோகம் எனக்கு இருக்கிறது. அதிலும், இப்பொழுது இன்னும் நளினம் கூடி, தேவலோகத்து கன்னிகை போல் இருப்பவளை ருசிக்காமல் விடுவதா” என்று கூறி, அவளை அவன் நெருங்கி வர முயற்சி செய்யவும், மதி சுதாரித்து சற்று தள்ளி நின்று கொண்டாள், அவனுக்கு அகப்படாமல்.
“சீ.. உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் இங்கு இருந்து செல். என் மன்னவன், இப்பொழுது உள்ளே இருந்து வந்து உன்னை பார்த்தால், அடித்து துவசம் செய்து விடுவார், தெரிந்து கொள்” என்று எச்சரித்தாள் மதி.
“அப்படியா! அப்படியானால், நான் அவனை தான் முதலில் பார்க்க வேண்டும், எங்கே வர சொல் அவனை பார்க்கலாம்” என்று அவன் கூறி முடிக்கவும், அங்கே ஆதி வரவும் சரியாக இருந்தது.
“ஹே அழகி! ஏன் அங்கேயே நின்னுட்ட? ஆமா, அம்மா, பிரகதி எல்லாம் எங்கே?” என்று அவளை மட்டும் பார்த்துக் கொண்டே வந்தவன்,அவளிடம் வந்து நின்று கேட்டான்.
“அத்தை, பிரகதி எல்லாம் பூ கொஞ்சம் வாங்கிட்டு, சாமிக்கு மாலை சொல்லி இருந்தது வந்துச்சான்னு பார்க்க போய் இருக்காங்க வர்மா” என்று அவள் கூறினாள்.
“இப்படி உன்னை தனியா விட்டுட்டா போனாங்க? சரி வா நாம உள்ளே கோவிலுக்கு போகலாம், அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிக்கலாம்” என்று கூறிக் கொண்டே, அவள் கை பிடித்து அவளை உள்ளே அழைத்து செல்ல நினைக்கும் பொழுது, பாசில் குறுக்கே வந்தான் அவர்களுக்கு இடையில்.
“இளவரசி! தாங்கள் மணம் புரிய போவது, இவனை தானா! கரும்புள்ளி போல் இருக்கிறான், உங்கள் அருகில். இவன் தங்களுக்கு இணையா? இது சரியில்லையே?” என்று தாடையை தடவினான்.
கரும்புள்ளி! கரும்புள்ளி! அந்த வார்த்தை அதை அவன் எங்கேயோ கேட்டு இருக்கிறான், இந்த குரலும் கூட! எங்கே? எங்கே? என்று யோசித்தவனுக்கு தலை விண்ணென்று வலி எடுத்தது.
வலி கொடுக்கவும், அவள் பிடித்து இருந்த கையில் அவன் அறியாமல் அழுத்தம் கொடுத்தான். அவனின் அழுத்தத்தில், அவள் திரும்பி அவனை பார்த்தவள், ஒரு கையால் தலையை பிடித்து கொண்டு வலியில் துடித்துக் கொண்டு இருந்தான்.
“வர்மா! என்ன செய்யுது? வாங்க கோவிலுக்கு போகலாம்” என்று அவனை உள்ளே அழைத்து செல்ல பார்த்தவளை பாசில், அவள் கை பிடித்து தடுத்தான்.
“எங்கு செல்ல போகிறாய்? உனக்கு திருமணம் ஒன்று நடந்தால், அது என்னுடன் தான்” என்று கூறி அவளை பிடித்து இழுக்க தொடங்கினான்.
ஆதிக்கு, அந்த வலியிலும் தன்னவளுக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்த பின்பு, வலியை மறந்து அவளை அவன் பிடியில் இருந்து காப்பாற்ற, அவனை அவளிடம் இருந்து பிரித்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
“உமக்கு எவ்வளவு தைரியம், கரும்புள்ளி இனத்தவனே! என்னை எதிர்த்து நிற்க!” என்று கர்ஜித்தான் பாசில்.
அவன் திரும்ப, திரும்ப கூறும் கரும்புள்ளி பற்றி யோசிக்க, யோசிக்க தலை வலி வந்தாலும், எங்கு? யார் இப்படி தன்னை சொல்லி இருப்பர், என்று யோசித்து பார்த்தவனுக்கு, மங்கலாக சில நினைவு அவனை தாக்கியது.
அந்த தாக்கத்தில் அவன் இருக்கும் பொழுது தான், மீண்டும் பாசில் அவளை, அவனிடம் இருந்து பறிக்க முன் வரவும், அவனை ஓங்கி மிதித்து தள்ளினான்.
“இன்னொரு முறை என்னை கரும்புள்ளி என்று நீ அழைத்தால், அடுத்து உன் உயிர் உன்னிடம் இல்லை. இவள் என்னவள், அவள் மேல் உன் கை பட்டது என்று தெரிந்தாலே, உன்னை தொலைத்து விடுவேனடா சப்பாஹ் பாசில்!” என்று அந்த இடமே அதிரும்படி கர்ஜித்தான்.
அவனின் முழு பெயரை சொல்லி அழைப்பது, மூன்றே பேர் தான். ஒன்று அவனின் மாமா அலிகான், அடுத்து அவனின் குரு, அடுத்து அவன் எதிரி ஆதித்யவர்மா. எதிரில் இருப்பவனை, இப்பொழுது உற்று நோக்கினான் பாசில், அந்த கண்களின் தீட்சண்யம் அவன் யார் என்று காட்டிக் கொடுத்தது.
“உன்னை எத்தனை முறை கொல்வது டா, ஆதித்யவர்மா?”என்று அவனும் இப்பொழுது கண்டுவிட்ட தொனியில் பேச தொடங்கினான்.
அப்பொழுது அங்கே வந்த காமாட்சி, அவர்கள் பேசியதை கேட்டு, அவர் தான் பயந்த மாதிரியே இருவரும் சந்தித்து விட்டதோடு அல்லாமல், ஆதிக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டதையும் அறிந்து, அவரின் தாயுள்ளம் பரிதவித்து துடித்தது.
தொடரும்...