- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 19
அன்றிரவு சிறிது படப்படப்புடன், ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் மதியழகி. பூ அலங்காரத்துடன் காட்சி அளித்த கட்டிலை பார்த்து, வெட்கமும், பயமும் போட்டி போட்டுக் கொண்டு கால்கள் பின்ன அங்கேயே நின்றுவிட்டாள்.
கதவை திறந்து, மூடும் சத்தம் கேட்டவுடன் ஆதி அவளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான். வருவாள், வருவாள் என காத்துக் கொண்டு இருந்தவன், இன்னும் உள்ளே வராமல் இருக்கவும், என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான்.
அங்கே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட்டுக் கொண்டு சிறிது பதட்டத்துடன் நின்றுக் கொண்டு இருந்த அழகியை பார்த்து அவளை அள்ளிக் கொள்ள, அவளருகே சென்றான்.
அருகே கேட்ட காலடி சத்தத்தில், நிமிர்ந்து பார்த்தவள் ஆதி சிரிப்புடனும், கண்ணில் விஷமத்தனமும் கொண்டு அவள் அருகே வருவதை பார்த்து, நாணத்துடன் தலையை குனிந்து கொண்டு, கையில் இருந்த பால் சொம்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுகிட்டு, இருக்க போற அழகி” என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கூறியதோடு நில்லாமல், மென்மையாக அவள் காதை கடிக்கவும், அதில் அவள் உடல் சிலிர்த்து வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வை உணர்ந்தாள்.
அவன் அதோடு நிறுத்தாமல், அவளின் சேலையை சிறிது விலக்கி வெற்றிடையில் கை போட்டு, அதில் குறுகுறுப்பு மூட்டினான். அதில் பால் சொம்பை நழுவ விட்டவள், அவன் சுதாரித்து அந்த சொம்பை பிடித்துக் கொண்டான்.
“என்ன நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க?” என்று கூறி அவனிடம் இருந்து நழுவ பார்க்க, அவனோ விடாபிடியாக அவளை பிடித்து கட்டிக் கொண்டான்.
“இப்போ இப்படி எல்லாம் பண்ணல அப்படினா தான் தப்பு, தெரியுமா உனக்கு?” என்று கிசுகிசுப்பாக கூறிவிட்டு, பாலை அங்கேயே அவளை முதலில் குடிக்க வைத்து, பின் அவன் குடித்தான்.
சில சில்மிஷங்கள் செய்து, அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான். மெல்ல அவளை கைகளில் ஏந்தி, கட்டிலில் கிடத்தி அவளின் பயத்தை போக்க, மெதுவாக பேச்சு கொடுத்தான்.
அவளும், அப்பொழுது அந்த மாயக்காரனின் பேச்சில் மயங்கி அவனோடு அவளறியாமல், அவனின் ஆளுமைக்குள் வந்துவிட்டாள். அவளின் அந்த பயம் தெளிந்த பின், மெதுவாக அவளுடன் கூடினான்.
அங்கே அழகிய மலரை போல், மெதுவாக அவர்களின் தாம்பத்தியம் மலர்ந்து மனம் வீசியது.
மறுநாள் காலை பத்து மணிக்கு, அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது. நல்ல உறக்கத்தில் இருந்தவள், மெதுவாக அந்த சத்தம் கேட்டு விழித்தாள். மீண்டும் பலமாக கதவு தட்டப்படவும், வேகமாக எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது தான், பக்கத்தில் ஆதி இவளை கட்டி பிடித்து உறங்குவது தெரிந்தது.
அவனை பார்த்தவள், மெதுவாக அவனின் மீசையை நீவிக் கொண்டு இருந்தாள். நேற்று நடந்தது எல்லாம் படம் போல், அவள் கண் முன்னே விரியவும் வெட்கத்தில் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“இப்படி முகத்தை மூடிக்கிட்டா, நான் எப்படி உன்னை பார்க்கிறது அழகி” என்று அவள் காதில் கிசுகிசுத்து விட்டு, மூடி இருந்த போர்வையை விலக்கினான்.
அவளோ அவனை பார்க்க வெட்கம் கொண்டு, மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். இவனோ தன் மீசையை கொண்டு, அவள் முதுகில் குறுகுறுப்பு மூட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.
“ஹையோ! ப்ளீஸ்! விடுங்க கூசுது!” என்று கூறி அவனிடம் இருந்து விலக, படுக்கையை விட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“ஹையோ! அப்போ இருந்து யாரோ கதவை தட்டுறாங்க, ப்ளீஸ் போய் யாருன்னு பாருங்க, நான் குளிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடி, குளியலறைக்குள் புகுந்தாள்.
அவனோ சிரித்துக் கொண்டே, கதவை திறந்து யாரென்று பார்த்தான். அங்கே அவனின் அன்னை, அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றார்.
“என்ன மம்மி இப்படி முறைக்குறீங்க?” என்று கேட்டவனை பார்த்து, தலையில் ஒரு கொட்டு வைத்தார்.
“மணி பதினொன்னு! இன்னும் என் மருமகளை பிடிச்சு வச்சு இருக்க உள்ள, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க வேகமா” என்று கூறியவரை பார்த்து சிரித்தான்.
அவரும் சிரித்துவிட்டு, கீழே இறங்கி சென்றார். கதவை சாத்திவிட்டு, உள்ளே வந்தவன் மனைவியுடன் நேற்று கூடியதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
செல்லை எடுத்து, ஆராயும் பொழுது ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் இருக்கவும் யார் என்று பார்த்தான். பத்து மிஸ்ட் கால், விஷ்வாவிடம் இருந்தும், ஐந்து மிஸ்ட் கால் ரமணனிடம் இருந்தும் வந்து இருந்தது.
முதலில் அவனின் அண்ணன் ரமணாவிற்கு அழைத்தான். எதிர்முனையில் முதல் ரிங்கிலே ஹலோ சொல்லவும், அவன் வியந்தான்.
“என்ன டா அண்ணா, உடனே போன் எடுத்துட்ட. இல்லைனா ஒரு பத்து தடவை போட்டதுக்கு அப்புறம், சாவகாசமா தான் எடுப்ப. ஆமா என்ன விஷயம், அண்ணி நல்லா இருக்காங்களா?” என்று வினவினான் ஆதி.
“நீ சித்தப்பா ஆகிட்ட டா, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு. உங்க அண்ணி நல்லா இருக்கா, ஏன் டா இவ்வளவு நேரம் போன் எடுக்கல?” என்று விஷயத்தை கூறிவிட்டு அவனிடம் என்னவென்று கேட்டான்.
“டேய் அண்ணா! நேத்து தான் டா எனக்கு கல்யாணம் முடிஞ்சது, மறந்துட்டியா!” என்று அவன் சொன்ன பிறகு தான், அவன் மண்டையில் அது நியாபகம் வந்தது.
“ஹி! ஹி! மறந்துட்டேன் டா தம்பி, அப்புறம் பேசலாம்” என்று ஆதி அடுத்து, அவனை திட்ட வருவதற்கு முன் போனை வைத்தான் ரமணன்.
“முதல் வேலையா இவளை கூட்டிட்டு, ஹனிமூன் ஓடிடணும்” என்று அவன் எண்ணி முடிக்கையில், பாத்ரூம் கதவை திறந்து கொண்டு, தலையை துவட்டிக் கொண்டே வந்தாள் அவனின் அழகி.
ஈரம் சொட்ட சொட்ட, தலையை துவட்டிக் கொண்டு வந்த அவனின் அழகியை பார்வையால் பருகிக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை உணர்ந்தாலும், அவனை கண்டு கொள்ளாமல் அவள் புடவை மாற்ற உடை மாற்றும் அறைக்குள் சென்று விட்டாள்.
பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, அவனும் குளிக்க சென்றான். அதன் பின் இருவரும் சாப்பிட கீழே இறங்கி வரும் பொழுது, மதிய வேளை ஒரு மணியாகி இருந்தது.
“மாப்பிள்ளை சார்! சீக்கிரம் பையனோ, பொண்ணோ ரிலீஸ் பண்ண போறீங்களா?” என்று அங்கு கூடி இருந்த சில உறவுக் கூட்டம், அவர்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.
அவர்களின் ஒவ்வொரு கேலி, கிண்டலையும் சமாளிக்க இருவரும் திணறி விட்டனர். அழகி, அங்கு இருந்து தப்பி செல்ல நினைத்தாலும், அவர்கள் அவளை அங்கே பிடித்துக் கொண்டு, அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அங்கே வந்த விஷ்வா, ஆதியை பார்த்து முறைத்தான். அவனை பார்த்த பிறகு தான், அவன் செல்பேசியில் அழைத்தது நியாபகம் வந்தது.
“ஹி! ஹி! சாரி டா மறந்துட்டேன் போன் போட. ஆமா, எதுக்கு டா கூப்பிட்டு இருந்த?” என்று ஆதி அவன் பேசும் முன்பே அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு, அவன் அழைத்த காரணம் என்னவென்று கேட்டான்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட டா பக்கி! இன்னைக்கு அந்த படக்குழு ல இருந்தவங்களுக்கு எல்லாம், சம்பளம் கொடுக்கணும். அதுக்கு தான் உனக்கு போன் அடிச்சேன், நீ தான் எடுக்கவே இல்லையே”என்று இன்னும் கோபம் தீராமல், அவனை முறைத்துக் கொண்டே கூறவும், அவன் சாப்பிட்டு முடித்த கையோடு, விஷ்வாவை தள்ளிக் கொண்டு, வீட்டில் இருக்கும் அவன் ஆபிஸ் அறைக்கு சென்றான்.
“ரொம்ப பண்ணாத டா! சரி அப்புறம் என்ன பண்ண? யார் கிட்ட வாங்கி, நீ அவங்களுக்கு செட்டில் பண்ண?” என்று இப்பொழுது ஒரு தயாரிப்பாளராக பேச தொடங்கினான்.
அவனும் அதற்கான பதிலை சொல்லிவிட்டு, அடுத்து அடுத்து அவனுக்கு இருக்கும் schedule எல்லாம் கூற தொடங்கினான். பின் அவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு, அவன் ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து, இனி அடுத்த மாதம் தான் எந்த ஒரு படத்தையும் கமிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினான்.
“நீ நடத்து டா, அப்புறம் நீ சொன்ன மாதிரி நைட் டின்னர்க்கு நான் சோழா ஹோட்டல் ல டேபிள் புக் பண்ணிட்டேன். நான் இப்போ ஆபிஸ் கிளம்புறேன், நைட் அங்க மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு சென்றான் விஷ்வா.
மேலும் சில அலுவல் வேலையை முடித்துக் கொண்டு அவன் வெளியே வரும் பொழுது, அங்கே அவனின் அன்னை அவனிடம் மதியை அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் மருத்துவமனைக்கு ரமணனின் மகளை பார்க்க வருமாறு கூறினார்.
அவனும் சரி என்று கூறிவிட்டு, அங்கே உறவுகளிடம் சிக்கிக் கொண்டு இருந்த மனைவியை நோக்கி சென்றான்.
“என்ன அக்கா, என் பொண்டாட்டி என்ன சொல்லுறா?” என்று அவனின் பெரியம்மா மகளிடம் கேட்டுக் கொண்டே, அவளுடன் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“அட அட தம்பி! பொண்டாட்டியை காப்பாத்த ஓடி வந்த மாதிரி இருக்கே!” என்று வியந்ததோடு அல்லாமல், அவனையும் சேர்த்தே கேலி செய்ய தொடங்கினர்.
அதன் பிறகு எல்லோரும், ஓய்வு எடுக்க சென்றனர். ஆதியும், மனைவியை அழைத்துக் கொண்டு, அவர்களின் அறைக்கு சென்றான்.
“நாம தஞ்சாவூர் போகலாமா மதி, நாளைக்கு காலையில்” என்று ஆதி கேட்கவும், சட்டென்று திரும்பி பார்த்தாள் அவனை.
“தாங்கள் கூறுவது உண்மையா வர்மா? நாம் அங்கு செல்ல போகிறோமா?” என்று அவளின் ஆர்வத்தை அடக்க முடியாமல், கேட்டாள் மதியழகி.
அன்றிரவு சிறிது படப்படப்புடன், ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் மதியழகி. பூ அலங்காரத்துடன் காட்சி அளித்த கட்டிலை பார்த்து, வெட்கமும், பயமும் போட்டி போட்டுக் கொண்டு கால்கள் பின்ன அங்கேயே நின்றுவிட்டாள்.
கதவை திறந்து, மூடும் சத்தம் கேட்டவுடன் ஆதி அவளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தான். வருவாள், வருவாள் என காத்துக் கொண்டு இருந்தவன், இன்னும் உள்ளே வராமல் இருக்கவும், என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான்.
அங்கே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட்டுக் கொண்டு சிறிது பதட்டத்துடன் நின்றுக் கொண்டு இருந்த அழகியை பார்த்து அவளை அள்ளிக் கொள்ள, அவளருகே சென்றான்.
அருகே கேட்ட காலடி சத்தத்தில், நிமிர்ந்து பார்த்தவள் ஆதி சிரிப்புடனும், கண்ணில் விஷமத்தனமும் கொண்டு அவள் அருகே வருவதை பார்த்து, நாணத்துடன் தலையை குனிந்து கொண்டு, கையில் இருந்த பால் சொம்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுகிட்டு, இருக்க போற அழகி” என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கூறியதோடு நில்லாமல், மென்மையாக அவள் காதை கடிக்கவும், அதில் அவள் உடல் சிலிர்த்து வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வை உணர்ந்தாள்.
அவன் அதோடு நிறுத்தாமல், அவளின் சேலையை சிறிது விலக்கி வெற்றிடையில் கை போட்டு, அதில் குறுகுறுப்பு மூட்டினான். அதில் பால் சொம்பை நழுவ விட்டவள், அவன் சுதாரித்து அந்த சொம்பை பிடித்துக் கொண்டான்.
“என்ன நீங்க இப்படி எல்லாம் பண்ணுறீங்க?” என்று கூறி அவனிடம் இருந்து நழுவ பார்க்க, அவனோ விடாபிடியாக அவளை பிடித்து கட்டிக் கொண்டான்.
“இப்போ இப்படி எல்லாம் பண்ணல அப்படினா தான் தப்பு, தெரியுமா உனக்கு?” என்று கிசுகிசுப்பாக கூறிவிட்டு, பாலை அங்கேயே அவளை முதலில் குடிக்க வைத்து, பின் அவன் குடித்தான்.
சில சில்மிஷங்கள் செய்து, அவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான். மெல்ல அவளை கைகளில் ஏந்தி, கட்டிலில் கிடத்தி அவளின் பயத்தை போக்க, மெதுவாக பேச்சு கொடுத்தான்.
அவளும், அப்பொழுது அந்த மாயக்காரனின் பேச்சில் மயங்கி அவனோடு அவளறியாமல், அவனின் ஆளுமைக்குள் வந்துவிட்டாள். அவளின் அந்த பயம் தெளிந்த பின், மெதுவாக அவளுடன் கூடினான்.
அங்கே அழகிய மலரை போல், மெதுவாக அவர்களின் தாம்பத்தியம் மலர்ந்து மனம் வீசியது.
மறுநாள் காலை பத்து மணிக்கு, அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது. நல்ல உறக்கத்தில் இருந்தவள், மெதுவாக அந்த சத்தம் கேட்டு விழித்தாள். மீண்டும் பலமாக கதவு தட்டப்படவும், வேகமாக எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது தான், பக்கத்தில் ஆதி இவளை கட்டி பிடித்து உறங்குவது தெரிந்தது.
அவனை பார்த்தவள், மெதுவாக அவனின் மீசையை நீவிக் கொண்டு இருந்தாள். நேற்று நடந்தது எல்லாம் படம் போல், அவள் கண் முன்னே விரியவும் வெட்கத்தில் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“இப்படி முகத்தை மூடிக்கிட்டா, நான் எப்படி உன்னை பார்க்கிறது அழகி” என்று அவள் காதில் கிசுகிசுத்து விட்டு, மூடி இருந்த போர்வையை விலக்கினான்.
அவளோ அவனை பார்க்க வெட்கம் கொண்டு, மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். இவனோ தன் மீசையை கொண்டு, அவள் முதுகில் குறுகுறுப்பு மூட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.
“ஹையோ! ப்ளீஸ்! விடுங்க கூசுது!” என்று கூறி அவனிடம் இருந்து விலக, படுக்கையை விட்டு எழுந்து கொள்ள நினைக்கும் பொழுது, மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“ஹையோ! அப்போ இருந்து யாரோ கதவை தட்டுறாங்க, ப்ளீஸ் போய் யாருன்னு பாருங்க, நான் குளிச்சிட்டு வரேன்” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து தப்பி ஓடி, குளியலறைக்குள் புகுந்தாள்.
அவனோ சிரித்துக் கொண்டே, கதவை திறந்து யாரென்று பார்த்தான். அங்கே அவனின் அன்னை, அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றார்.
“என்ன மம்மி இப்படி முறைக்குறீங்க?” என்று கேட்டவனை பார்த்து, தலையில் ஒரு கொட்டு வைத்தார்.
“மணி பதினொன்னு! இன்னும் என் மருமகளை பிடிச்சு வச்சு இருக்க உள்ள, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க வேகமா” என்று கூறியவரை பார்த்து சிரித்தான்.
அவரும் சிரித்துவிட்டு, கீழே இறங்கி சென்றார். கதவை சாத்திவிட்டு, உள்ளே வந்தவன் மனைவியுடன் நேற்று கூடியதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
செல்லை எடுத்து, ஆராயும் பொழுது ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் இருக்கவும் யார் என்று பார்த்தான். பத்து மிஸ்ட் கால், விஷ்வாவிடம் இருந்தும், ஐந்து மிஸ்ட் கால் ரமணனிடம் இருந்தும் வந்து இருந்தது.
முதலில் அவனின் அண்ணன் ரமணாவிற்கு அழைத்தான். எதிர்முனையில் முதல் ரிங்கிலே ஹலோ சொல்லவும், அவன் வியந்தான்.
“என்ன டா அண்ணா, உடனே போன் எடுத்துட்ட. இல்லைனா ஒரு பத்து தடவை போட்டதுக்கு அப்புறம், சாவகாசமா தான் எடுப்ப. ஆமா என்ன விஷயம், அண்ணி நல்லா இருக்காங்களா?” என்று வினவினான் ஆதி.
“நீ சித்தப்பா ஆகிட்ட டா, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு. உங்க அண்ணி நல்லா இருக்கா, ஏன் டா இவ்வளவு நேரம் போன் எடுக்கல?” என்று விஷயத்தை கூறிவிட்டு அவனிடம் என்னவென்று கேட்டான்.
“டேய் அண்ணா! நேத்து தான் டா எனக்கு கல்யாணம் முடிஞ்சது, மறந்துட்டியா!” என்று அவன் சொன்ன பிறகு தான், அவன் மண்டையில் அது நியாபகம் வந்தது.
“ஹி! ஹி! மறந்துட்டேன் டா தம்பி, அப்புறம் பேசலாம்” என்று ஆதி அடுத்து, அவனை திட்ட வருவதற்கு முன் போனை வைத்தான் ரமணன்.
“முதல் வேலையா இவளை கூட்டிட்டு, ஹனிமூன் ஓடிடணும்” என்று அவன் எண்ணி முடிக்கையில், பாத்ரூம் கதவை திறந்து கொண்டு, தலையை துவட்டிக் கொண்டே வந்தாள் அவனின் அழகி.
ஈரம் சொட்ட சொட்ட, தலையை துவட்டிக் கொண்டு வந்த அவனின் அழகியை பார்வையால் பருகிக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை உணர்ந்தாலும், அவனை கண்டு கொள்ளாமல் அவள் புடவை மாற்ற உடை மாற்றும் அறைக்குள் சென்று விட்டாள்.
பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, அவனும் குளிக்க சென்றான். அதன் பின் இருவரும் சாப்பிட கீழே இறங்கி வரும் பொழுது, மதிய வேளை ஒரு மணியாகி இருந்தது.
“மாப்பிள்ளை சார்! சீக்கிரம் பையனோ, பொண்ணோ ரிலீஸ் பண்ண போறீங்களா?” என்று அங்கு கூடி இருந்த சில உறவுக் கூட்டம், அவர்களை கிண்டல் செய்து கொண்டு இருந்தனர்.
அவர்களின் ஒவ்வொரு கேலி, கிண்டலையும் சமாளிக்க இருவரும் திணறி விட்டனர். அழகி, அங்கு இருந்து தப்பி செல்ல நினைத்தாலும், அவர்கள் அவளை அங்கே பிடித்துக் கொண்டு, அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அங்கே வந்த விஷ்வா, ஆதியை பார்த்து முறைத்தான். அவனை பார்த்த பிறகு தான், அவன் செல்பேசியில் அழைத்தது நியாபகம் வந்தது.
“ஹி! ஹி! சாரி டா மறந்துட்டேன் போன் போட. ஆமா, எதுக்கு டா கூப்பிட்டு இருந்த?” என்று ஆதி அவன் பேசும் முன்பே அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு, அவன் அழைத்த காரணம் என்னவென்று கேட்டான்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட டா பக்கி! இன்னைக்கு அந்த படக்குழு ல இருந்தவங்களுக்கு எல்லாம், சம்பளம் கொடுக்கணும். அதுக்கு தான் உனக்கு போன் அடிச்சேன், நீ தான் எடுக்கவே இல்லையே”என்று இன்னும் கோபம் தீராமல், அவனை முறைத்துக் கொண்டே கூறவும், அவன் சாப்பிட்டு முடித்த கையோடு, விஷ்வாவை தள்ளிக் கொண்டு, வீட்டில் இருக்கும் அவன் ஆபிஸ் அறைக்கு சென்றான்.
“ரொம்ப பண்ணாத டா! சரி அப்புறம் என்ன பண்ண? யார் கிட்ட வாங்கி, நீ அவங்களுக்கு செட்டில் பண்ண?” என்று இப்பொழுது ஒரு தயாரிப்பாளராக பேச தொடங்கினான்.
அவனும் அதற்கான பதிலை சொல்லிவிட்டு, அடுத்து அடுத்து அவனுக்கு இருக்கும் schedule எல்லாம் கூற தொடங்கினான். பின் அவற்றை எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு, அவன் ஒரு மாத விடுப்பு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து, இனி அடுத்த மாதம் தான் எந்த ஒரு படத்தையும் கமிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினான்.
“நீ நடத்து டா, அப்புறம் நீ சொன்ன மாதிரி நைட் டின்னர்க்கு நான் சோழா ஹோட்டல் ல டேபிள் புக் பண்ணிட்டேன். நான் இப்போ ஆபிஸ் கிளம்புறேன், நைட் அங்க மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு சென்றான் விஷ்வா.
மேலும் சில அலுவல் வேலையை முடித்துக் கொண்டு அவன் வெளியே வரும் பொழுது, அங்கே அவனின் அன்னை அவனிடம் மதியை அழைத்துக் கொண்டு, கோவிலுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் மருத்துவமனைக்கு ரமணனின் மகளை பார்க்க வருமாறு கூறினார்.
அவனும் சரி என்று கூறிவிட்டு, அங்கே உறவுகளிடம் சிக்கிக் கொண்டு இருந்த மனைவியை நோக்கி சென்றான்.
“என்ன அக்கா, என் பொண்டாட்டி என்ன சொல்லுறா?” என்று அவனின் பெரியம்மா மகளிடம் கேட்டுக் கொண்டே, அவளுடன் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“அட அட தம்பி! பொண்டாட்டியை காப்பாத்த ஓடி வந்த மாதிரி இருக்கே!” என்று வியந்ததோடு அல்லாமல், அவனையும் சேர்த்தே கேலி செய்ய தொடங்கினர்.
அதன் பிறகு எல்லோரும், ஓய்வு எடுக்க சென்றனர். ஆதியும், மனைவியை அழைத்துக் கொண்டு, அவர்களின் அறைக்கு சென்றான்.
“நாம தஞ்சாவூர் போகலாமா மதி, நாளைக்கு காலையில்” என்று ஆதி கேட்கவும், சட்டென்று திரும்பி பார்த்தாள் அவனை.
“தாங்கள் கூறுவது உண்மையா வர்மா? நாம் அங்கு செல்ல போகிறோமா?” என்று அவளின் ஆர்வத்தை அடக்க முடியாமல், கேட்டாள் மதியழகி.