- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 11
ஐநூறு வருடங்களுக்கு முன்:
குமாரிதேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அலிகான் இப்படி ஒரு விஷயம் சொல்லிவிட்டு சென்றதில் இருந்து. மகளை அவன் திருமணம் புரிந்து இருக்க மாட்டான், என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆனால், கடத்தி சென்று இருக்கலாமே. இங்கே வைத்து கடத்துவது என்பது, முடியாத காரியம். அப்படியென்றால், மகள் யாரையோ தேடி சென்று இருக்கிறாள், இவனும் அவளை தேடி பின் தொடர்ந்து இருக்கிறான். யோசித்து பார்த்ததில், அவருக்கு இது தான் நடந்து இருக்கும் என்று புரிந்தது.
ஆனால், மகள் யாரை தேடி சென்றாள்? எதற்காக சென்றாள் என்று தெரியாமல் குழம்பினார். அப்பொழுது, அங்கே இளமாறன் அன்னையை தேடி அங்கே வந்தான்.
“தாயே! தாங்கள் சீக்கிரம், அரசர் அறைக்கு விரைந்து வாருங்கள்” என்று கூறி அவரை கையோடு அங்கே அழைத்து சென்றான்.
“மகனே இளமாரா! அரசருக்கு மீண்டும் உடல் நலக் குறைவா! இல்லை வேறு எதுவும் புது பிரச்சனையா?” என்று கேட்டுக் கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கு சென்றார்.
அலிகான்! அவர் இங்கு வரும் பொழுதே, ஒரு ஒற்றனை இங்கே நியமித்து விட்டு தான் சென்றார். அரண்மனை செய்திகளை பகிர, ஏற்கனவே ஒருவன் அங்கு இருந்தாலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இன்னொருவனும் இங்கே இருந்தால், அரசர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஆட்டமாட வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டு சென்றார்.
இவர்கள் இங்கே அரசர் அறைக்கு விரையும் பொழுதே, அந்த ஒற்றனும் யாருமறியாமல், அவர்களை பின் தொடர்ந்தான். அவனால் ஒரு எல்லைக்கு பிறகு செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு பாதுகாப்பு செய்து வைத்து இருந்தார் குமாரிதேவி.
அவன் ஏதாவது சிறு வழி தென்படுகிறதா, என்று ஆராய தொடங்கினான். அவன் பார்த்த வரை அப்படி ஏதும் இல்லை எனவும், இருவரும் வெளியே வருவதற்காக காத்து இருந்தான்.
அவரசமாக அரசர் அறைக்கு உள்ளே அழைத்து வந்த மகன், ஏதும் பேசாமல் மெளனமாக ஓரிடத்தில் கண்ணில் கோபத்துடன் அமரவும், குமாரி திடுக்கிட்டார். மகன் கோபம் கொள்வான் தான், இதுவரை பார்த்ததே இல்லாத அளவிற்கு அவன் அப்படி ஒரு கோபத்துடன் அமர்ந்து இருந்ததை பார்த்து பரிதவித்து விட்டார் குமாரிதேவி.
“மகனே! ஏன் இந்த கோபம்? யார் மீது கோபம்? உன்னை இப்படி நான் இதுவரை கண்டதே இல்லையே டா, ஏன் நீ இவ்வாறு இருக்கிறாய்?” என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு, மெதுவாக அவனை அணைத்து, தலை கோதி கேட்டார் குமாரிதேவி.
“தாயே! அந்த பாசில் என் தமக்கையை, திருமணம் செய்ய எண்ணி இருக்கிறான். இப்பொழுது தமக்கை சுதாரித்து, அவர் அந்த துறவியின் உதவி கேட்டு கால சக்கரத்திற்குள் சென்று இருக்கிறார். இதை எப்படியோ அறிந்த அந்த பாசில், பின்னோடு இப்பொழுது சென்று இருக்கிறார்” என்று அவன் அறிந்த தகவலை கூறினான்.
இதைக் கேட்ட அரசி மங்கை திடுக்கிட்டு, கலவரத்துடன் அரசர் முகம் பார்த்தார். அவரோ கண்களால் அவருக்கு ஆறுதல் அளித்துவிட்டு, மகனை அவர் படுத்து இருந்த கட்டில் அருகே அழைத்தார். அவனும் அவர் சொல்லுக்கு இணங்கி, அவர் அருகில் வந்தான்.
“மகனே! துறவி இதை பற்றி, முன்பே ஒரு முறை என்னிடம் சொல்லி இருந்தார். ஆகையால் இப்பொழுது உன் தமக்கை பற்றிய கவலையை மறந்து, இப்பொழுது நாட்டை அந்த அலிகானிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி மட்டும் யோசி” என்று அவர் கூறவும், அவனுக்கும் அப்பொழுது அது தான் சரி என்று பட்டது.
உடனே அதற்கான ஏற்பாடை கவனிக்க, அவன் தந்தையிடம் இருந்தும் இரு தாயிடமும் சொல்லிக் கொண்டு அவ்வறை விட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அடுத்த நிமிடம், அந்த ஒற்றன் அவனை பின் தொடர்ந்தான்.
“அரசே! தங்களுக்கு இது பற்றி முன்பே தெரியுமா? இது பற்றி, தாங்கள் ஒரு முறை கூட சொல்லவில்லையே எங்களிடம்?” என்று மனத்தாங்கலுடன் கேட்டனர் இருவரும்.
“சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான், மகளிடம் அவளை சுற்றி இருக்கும் ஆபத்தை கூறி எச்சரித்தேன். சற்று கவனமாக இருப்பாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, அவள் உடனே துறவியை சந்திக்க சென்று விட்டாள்”.
“இனி நம் மகளை சந்திக்க போவதில்லையே என்ற வருத்தம் மனதை வாட்டி, இப்பொழுது நெஞ்சு வலியில் துடிக்கிறேன்” என்று கூறிய அரசரை திடுக்கிட்டு பார்த்தனர் இருவரும்.
“என்ன! அரசே தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்? இனி நம்மால் நம் மகளை காண முடியாதா? அவள் திரும்ப போவதில்லையா இனி?” என்று அச்சத்துடன் கேட்டார் மங்கை.
அவரோ பதில் கூறாமல், மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தார். அதை பார்த்த பின்பு அரசி மங்கை, மகளே! உன்னை காண முடியாதா இனி என்று கத்தி கதற தொடங்கினார்.
அரசி குமாரிதேவிக்கும், இந்த தகவல் அதிர்ச்சி தான். ஆனால் இப்பொழுது மூவரை தவிர, விஷயம் வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பதே உசிதம் என்று எண்ணி, உடனே அரசி மங்கையை சமாதானப்படுத்தினார்.
அவர் அழுகையை கட்டுபடுத்த முடியாத காரணத்தால், உடனே மருத்துவச்சியை அழைத்து வர செய்து மயக்க மருந்தை கொடுத்து அரசியை படுக்க வைத்தார் குமாரிதேவி. வெளியே இருப்பவர்களுக்கு, மகள் காணாமல் போனதில் இருந்து, தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறார் என்ற வரை மட்டுமே பகிரப்பட்டது.
அந்த ஒற்றன், அரசிக்கும் உடல்நிலை சரியில்லை என்பது போல் அலிகானுக்கு தகவல் கொடுக்கவும், அவர் இது தான் சரியான சந்தர்ப்பம் சூழ்ச்சி செய்து, நாட்டை இப்பொழுது தான் ஆளலாம் என்று நினைத்து அதற்க்கான செயலில் இறங்கினார்.
“மருமகனே! நீ வரும் பொழுது, மிடார நாட்டில் நம் ஆட்சியை காண்பாய்!” என்று பெருங்குரலெடுத்து சிரித்தார்.
ஆனால், அவரின் எண்ணம் ஒரு நாளும் பலிக்க போவது இல்லை என்பது போல் இங்கே அரசர், தன் மகனை முன்னிறுத்தி சில வேலைகளை செய்து முடித்து இருந்தார்.
இன்று:
பாரிஸ் நகரம், எங்கு பார்த்தாலும் காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தால் வெளிபடுத்திக் கொண்டு இருந்தனர். அழகிக்கு, அதை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருந்தது.
“அன்பை, இப்படி தான் வெளிபடுதுவதா? என்ன மனிதர்கள் இவர்கள்? யாரும் ஏன், இதை கண்டிக்கவில்லை?” என்று இப்படி பலவிதமாக, அவளின் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது.
அவள் இப்படி எண்ணிக் கொண்டே, பிரகதி உடன் நடக்க, ஆதியோ விஷ்வா உடன் சேர்ந்து லொகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தான். வெவ்வேறு இடத்தில், பாடலுக்கு ஏற்ப நடனம் ஆட இருக்கிறார்கள்.
ஐநூறு வருடங்களுக்கு முன்:
குமாரிதேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அலிகான் இப்படி ஒரு விஷயம் சொல்லிவிட்டு சென்றதில் இருந்து. மகளை அவன் திருமணம் புரிந்து இருக்க மாட்டான், என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆனால், கடத்தி சென்று இருக்கலாமே. இங்கே வைத்து கடத்துவது என்பது, முடியாத காரியம். அப்படியென்றால், மகள் யாரையோ தேடி சென்று இருக்கிறாள், இவனும் அவளை தேடி பின் தொடர்ந்து இருக்கிறான். யோசித்து பார்த்ததில், அவருக்கு இது தான் நடந்து இருக்கும் என்று புரிந்தது.
ஆனால், மகள் யாரை தேடி சென்றாள்? எதற்காக சென்றாள் என்று தெரியாமல் குழம்பினார். அப்பொழுது, அங்கே இளமாறன் அன்னையை தேடி அங்கே வந்தான்.
“தாயே! தாங்கள் சீக்கிரம், அரசர் அறைக்கு விரைந்து வாருங்கள்” என்று கூறி அவரை கையோடு அங்கே அழைத்து சென்றான்.
“மகனே இளமாரா! அரசருக்கு மீண்டும் உடல் நலக் குறைவா! இல்லை வேறு எதுவும் புது பிரச்சனையா?” என்று கேட்டுக் கொண்டே, அவன் இழுத்த இழுப்புக்கு சென்றார்.
அலிகான்! அவர் இங்கு வரும் பொழுதே, ஒரு ஒற்றனை இங்கே நியமித்து விட்டு தான் சென்றார். அரண்மனை செய்திகளை பகிர, ஏற்கனவே ஒருவன் அங்கு இருந்தாலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் இன்னொருவனும் இங்கே இருந்தால், அரசர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஆட்டமாட வேண்டும் என்ற எண்ணத்தில் விட்டு சென்றார்.
இவர்கள் இங்கே அரசர் அறைக்கு விரையும் பொழுதே, அந்த ஒற்றனும் யாருமறியாமல், அவர்களை பின் தொடர்ந்தான். அவனால் ஒரு எல்லைக்கு பிறகு செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு பாதுகாப்பு செய்து வைத்து இருந்தார் குமாரிதேவி.
அவன் ஏதாவது சிறு வழி தென்படுகிறதா, என்று ஆராய தொடங்கினான். அவன் பார்த்த வரை அப்படி ஏதும் இல்லை எனவும், இருவரும் வெளியே வருவதற்காக காத்து இருந்தான்.
அவரசமாக அரசர் அறைக்கு உள்ளே அழைத்து வந்த மகன், ஏதும் பேசாமல் மெளனமாக ஓரிடத்தில் கண்ணில் கோபத்துடன் அமரவும், குமாரி திடுக்கிட்டார். மகன் கோபம் கொள்வான் தான், இதுவரை பார்த்ததே இல்லாத அளவிற்கு அவன் அப்படி ஒரு கோபத்துடன் அமர்ந்து இருந்ததை பார்த்து பரிதவித்து விட்டார் குமாரிதேவி.
“மகனே! ஏன் இந்த கோபம்? யார் மீது கோபம்? உன்னை இப்படி நான் இதுவரை கண்டதே இல்லையே டா, ஏன் நீ இவ்வாறு இருக்கிறாய்?” என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு, மெதுவாக அவனை அணைத்து, தலை கோதி கேட்டார் குமாரிதேவி.
“தாயே! அந்த பாசில் என் தமக்கையை, திருமணம் செய்ய எண்ணி இருக்கிறான். இப்பொழுது தமக்கை சுதாரித்து, அவர் அந்த துறவியின் உதவி கேட்டு கால சக்கரத்திற்குள் சென்று இருக்கிறார். இதை எப்படியோ அறிந்த அந்த பாசில், பின்னோடு இப்பொழுது சென்று இருக்கிறார்” என்று அவன் அறிந்த தகவலை கூறினான்.
இதைக் கேட்ட அரசி மங்கை திடுக்கிட்டு, கலவரத்துடன் அரசர் முகம் பார்த்தார். அவரோ கண்களால் அவருக்கு ஆறுதல் அளித்துவிட்டு, மகனை அவர் படுத்து இருந்த கட்டில் அருகே அழைத்தார். அவனும் அவர் சொல்லுக்கு இணங்கி, அவர் அருகில் வந்தான்.
“மகனே! துறவி இதை பற்றி, முன்பே ஒரு முறை என்னிடம் சொல்லி இருந்தார். ஆகையால் இப்பொழுது உன் தமக்கை பற்றிய கவலையை மறந்து, இப்பொழுது நாட்டை அந்த அலிகானிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதை பற்றி மட்டும் யோசி” என்று அவர் கூறவும், அவனுக்கும் அப்பொழுது அது தான் சரி என்று பட்டது.
உடனே அதற்கான ஏற்பாடை கவனிக்க, அவன் தந்தையிடம் இருந்தும் இரு தாயிடமும் சொல்லிக் கொண்டு அவ்வறை விட்டு வெளியேறினான். அவன் வெளியேறிய அடுத்த நிமிடம், அந்த ஒற்றன் அவனை பின் தொடர்ந்தான்.
“அரசே! தங்களுக்கு இது பற்றி முன்பே தெரியுமா? இது பற்றி, தாங்கள் ஒரு முறை கூட சொல்லவில்லையே எங்களிடம்?” என்று மனத்தாங்கலுடன் கேட்டனர் இருவரும்.
“சொல்ல வேண்டும் என்று நினைக்கும் பொழுது தான், மகளிடம் அவளை சுற்றி இருக்கும் ஆபத்தை கூறி எச்சரித்தேன். சற்று கவனமாக இருப்பாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, அவள் உடனே துறவியை சந்திக்க சென்று விட்டாள்”.
“இனி நம் மகளை சந்திக்க போவதில்லையே என்ற வருத்தம் மனதை வாட்டி, இப்பொழுது நெஞ்சு வலியில் துடிக்கிறேன்” என்று கூறிய அரசரை திடுக்கிட்டு பார்த்தனர் இருவரும்.
“என்ன! அரசே தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்? இனி நம்மால் நம் மகளை காண முடியாதா? அவள் திரும்ப போவதில்லையா இனி?” என்று அச்சத்துடன் கேட்டார் மங்கை.
அவரோ பதில் கூறாமல், மெளனமாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தார். அதை பார்த்த பின்பு அரசி மங்கை, மகளே! உன்னை காண முடியாதா இனி என்று கத்தி கதற தொடங்கினார்.
அரசி குமாரிதேவிக்கும், இந்த தகவல் அதிர்ச்சி தான். ஆனால் இப்பொழுது மூவரை தவிர, விஷயம் வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பதே உசிதம் என்று எண்ணி, உடனே அரசி மங்கையை சமாதானப்படுத்தினார்.
அவர் அழுகையை கட்டுபடுத்த முடியாத காரணத்தால், உடனே மருத்துவச்சியை அழைத்து வர செய்து மயக்க மருந்தை கொடுத்து அரசியை படுக்க வைத்தார் குமாரிதேவி. வெளியே இருப்பவர்களுக்கு, மகள் காணாமல் போனதில் இருந்து, தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறார் என்ற வரை மட்டுமே பகிரப்பட்டது.
அந்த ஒற்றன், அரசிக்கும் உடல்நிலை சரியில்லை என்பது போல் அலிகானுக்கு தகவல் கொடுக்கவும், அவர் இது தான் சரியான சந்தர்ப்பம் சூழ்ச்சி செய்து, நாட்டை இப்பொழுது தான் ஆளலாம் என்று நினைத்து அதற்க்கான செயலில் இறங்கினார்.
“மருமகனே! நீ வரும் பொழுது, மிடார நாட்டில் நம் ஆட்சியை காண்பாய்!” என்று பெருங்குரலெடுத்து சிரித்தார்.
ஆனால், அவரின் எண்ணம் ஒரு நாளும் பலிக்க போவது இல்லை என்பது போல் இங்கே அரசர், தன் மகனை முன்னிறுத்தி சில வேலைகளை செய்து முடித்து இருந்தார்.
இன்று:
பாரிஸ் நகரம், எங்கு பார்த்தாலும் காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தால் வெளிபடுத்திக் கொண்டு இருந்தனர். அழகிக்கு, அதை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருந்தது.
“அன்பை, இப்படி தான் வெளிபடுதுவதா? என்ன மனிதர்கள் இவர்கள்? யாரும் ஏன், இதை கண்டிக்கவில்லை?” என்று இப்படி பலவிதமாக, அவளின் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது.
அவள் இப்படி எண்ணிக் கொண்டே, பிரகதி உடன் நடக்க, ஆதியோ விஷ்வா உடன் சேர்ந்து லொகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தான். வெவ்வேறு இடத்தில், பாடலுக்கு ஏற்ப நடனம் ஆட இருக்கிறார்கள்.