• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Annaiyar thina valthukal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
உன்னால் நான்
ஆனால் இவ்வுலகம் என்னால் நீ என்கிறது!!!

உன்னால் பெண் என்று முழுமையாக உணர்ந்தேன்...

மலடி பட்டம் எதிரிக்கும் வேண்டாம் மகளே..

எது தாய்மை அறிந்து கொள், நாளை நீயும் ஒரு தாயாய் மிளிர்வாய் என்பதால்..

பிறர் கண்ணீர் துடைக்க முன்னேறும் ஒவ்வொரு கையும் தாய்மையின்‌ சாயல்

பிறர் பசி பொறுக்காத ஒவ்வொரு மனமும் தாய்மையின் பரிமாணம்

தவறு என்று உரிமையுடன் கண்டிக்கும் ஒவ்வொரு குரலும் தாய்மையின் தாலாட்டு

உனக்காக உண்மையாய் நேசிக்கும் ஒவ்வொரு இதயமும் தாயின் துடிப்பு..

சதை பிண்டத்தை மிருகமும் பெற்றெடுக்கும்..
அதற்கும் உண்டு தாய்மை..

ஆயினும் அவைகளைவிட ஓர் அறிவு அதிகமாய் பெற்றதால் ..
சிறு மாற்றங்கள் வேண்டாமா?

அன்பு கொண்டு நேசி,
கருணையுடன் பார்
பிறர் நோகாமல் பேசு
வருந்திய மனதுக்கு தோள் கொடு!!

அன்பு கொண்ட எவ்வுயிரும் தாய்மையின் பிம்பமே அழகே!!
இதில் ஆண்,பெண் பேதமில்லை
உனை ஈன்றவள் மட்டுமே தாய்யென்ற அர்த்தமில்லை

தாய்மை கரையல்லாத அகண்ட சமுத்திரம்
தாயன்பு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்!!!
தாய்மை என்றென்றும் திகட்டாத தித்திப்பு
தாய்மை உனை எண்ணி கர்வம் அடையுமே தவிற பொறாமை கொள்ளாது...
தாயாய் வாழ பெறும்பாக்கியம் புரிந்திருக்க வேண்டும்...
உன்னை ஈன்று நான் பெற்றது போல்..
என்னை ஈன்ற என்னவளுக்கு நான் தந்தது போல்!!!

அனைத்து தாயுள்ளத்துக்கும் என்‌ இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top